RSS

டில்சானின் அதிரடியும் மத்தியூசின் அசத்தலும்

நேற்று இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் இடம் பெற்ற விறுவிறுப்பான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 1-1 என்று சமப்படுத்தியிருக்கிறது. (இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளன.)




நேற்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணித் தலைவர் MS.தோனி முதலில் துடுப்பெடுத்தாட இணங்கியதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 301 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.




இதில் கடந்த போட்டியில் இலங்கை அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சேவாக் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததன் மூலம் இந்த்திய அணியினரின் ஓட்டத்தை மட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த தோனி நிதானமாக ஆட்டத்தை ஆரம்பித்து அதிரடியாக நிறைவு செய்தார். தோனியை ஆட்டமிழக்கச் செய்ய ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அவை நழுவவிடப்பட்டன். சுமார் 5 வாய்ப்புகள் தோனிக்கு வழங்கப்பட்டன. இத்தனை வாய்ப்புகள் தோனிக்கு வழங்கப்பட்டால் அவர் 107 பெறுவது பெரிய விடயமல்ல. ரெய்னா ஆரம்ப முதலே சிறப்பாக அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தார்.




302 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிசார்பாக சிறப்பான ஆரம்பத்தை நேற்றைய போட்டியிலும் டில்சான் - தரங்க ஜோடி வழங்கியிருந்தது. அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டில்சான் 123 ஓட்டங்களைக் குவித்து அடுத்தடுத்து 2 சதங்களைப் பூர்த்தி செய்தார். தரங்க 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும் டில்சானின் அதிரடி தொடர்ந்தது.



சங்ககார, மஹேல ஆகியோர் சராசரியான ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை சற்றுத் தடுமாறியது.




டில்சானின் ஆட்டமிழப்போடு இலஙகை அணியின் வெற்றி கேள்விக்குறியாய் நிற்க இலங்கை ரசிகர்கள் எல்லோருக்கும் இருந்த ஒரே நம்பிக்கை Anjelo Methews .எல்லோருடைய நம்பிக்கையையும் வீணடிக்காமல் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி போட்டியை வெற்றியோடு நிறைவு செய்தார் Methews. உண்மையில் இலங்கை கிரிக்கட் வரலாற்றில் நான் கண்ட தலை சிறந்த அற்புதமான சகலதுறை வீரர் இவர். நுட்பமான பந்துவீச்சு, சிறந்த களத்தடுப்பு, நிதானமான துடுப்பாட்டம் இவைதான் Methews இன் அழகு.

இலங்கை அணியின் அண்மைக்கால போட்டிகளைப் பார்த்தால் டில்சான் அதிரடியாக ஆரம்பித்துவைப்பதும் அதை Methews வெற்றியாக முடித்துவைப்பதும்தான் நிகழ்கிறது.





நேற்றைய போட்டியில் 49.1 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து இலங்கை அணி வெற்றியீட்டியது.



எது எப்படியோ... அண்மைய போட்டிகளை அவதானிக்கும் போது இலங்கையின் துடுப்பாட்டம் திருப்திகரமாக இருக்கிறது. ஆனால் மஹெல, ஜயசூரிய, கபுகெதர போன்றோர் form இற்கு வந்தால் இலங்கையின் துடுப்பாட்டம் இன்னும் பலம் பெறும்.




பந்துவீச்சினைப் பொறுத்தவரை அனுபவமான பந்து வீச்சாளர்கள் இல்லாமல் சற்றுத் தடுமாறினாலும் இளம் வீரர்களின் பங்களிப்பும் ஓரளவு திருப்தியாகவுள்ளது.

லசித் மலிங்கவை அணியில் இணைத்துக் கொண்டால் பந்துவீச்சும் பலம் பெறும். (மலிங்கவை அணியில் இணைத்துக் கொள்ளாமல் இருக்கும் மர்மம்தான் என்னவோ?)




நேற்றைய போட்டியில் இலங்கை அணி சார்பாக இரு வீரர்கள் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்கள். 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றி போட்டியின் சிறந்த பந்துவீச்சாளர் விருது வென்ற சுராஜ் ரன்டீவ் (முன்னர் சுராஜ் முஹம்மட்) சிறப்பான அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.



இலங்கை அணியினரின் களத்தடுப்பு மோசமாகவுள்ளது. ஓரிரு வீரர்களைத் தவிர மற்றவர்கள் சொதப்பிவிடுகிறார்கள். அவற்றையும் திருத்திக்கொண்டால் மூன்றாவது ஒரு நாள் போட்டியும் எம்வசமே.




நம்பிக்கையோடு காத்திருப்போம்….

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

பெயரில்லா சொன்னது…

its very nice man