RSS



பூ மீது யானை பூவலியை தாங்குமோ


தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ

போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ

போராடும் அன்பில் அட ஏந்தான் காயமோ

கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே

கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிரையுதே

இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே

உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே

பூ மீது யானை பூவலியை தாங்குமோ

தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ



உடைத்துப் பார்க்கும் இதயம் உனது

படைத்து பார்ப்பதை அறியாதே

குளத்தில் விழுந்து தெரிக்கும் நிலவு

நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே..........

உடைத்துப் பார்க்கும் இதயம் உனது

படைத்து பார்ப்பதை அறியாதே

குளத்தில் விழுந்து தெரிக்கும் நிலவு

நிஜத்தில் உலகத்தில் உடையாதே

காதல் போலவே நோயும் வெள்ளையே

யாவும் உண்மை தானே

இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்

கேட்கவில்லை நானே



பூ மீது யானை பூவலியை தாங்குமோ

தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ



விலகும்போது நெருங்கும் காதல்

அருகில் போனால் விலகிடுமோ

விலங்கு மாட்டி சிறையில் பூட்டி

விருப்பம்போல் அது வலி தருமோ...ஆ..ஆ..ஆ..ஆ...

விலகும்போது நெருங்கும் காதல்

அருகில் போனால் விலகிடுமோ

விலங்கு மாட்டி சிறையில் பூட்டி

விருப்பம்போல் அது வலி தருமோ

வேறு வேறாக நினைவு போகையில்

காதல் கொள்ளுதல் பாவம்

அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே

ஆதி கால சாபம்.



பூ மீது யானை பூவலியை தாங்குமோ

தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ

போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ

போராடும் அன்பில் அட ஏந்தான் காயமோ

கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே

கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிரையுதே

இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே

உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே

பூ மீது யானை பூவலியை தாங்குமோ

தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS