RSS

வளமான எதிர்காலம் Vs நம்பிக்கைக்குரிய மாற்றம்


இலங்கை வரலாற்றிலேயே மிகவும் சிக்கலானதும், இறுக்கமானதும், சுவாரஸ்யமானதுமான தேர்தல் இம்முறைதான் இடம்பெறப்போகின்றது. அண்மைய கால நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அரசியல்வாதி முதல், வாக்களிக்கும் குடிமகன்வரை அனைவருமே மிகவும் குழம்பிப்போயிருக்கிறார்கள்.

யார் எந்தக்கட்சியில் இருக்கிறார் என்று அவருக்கே தெரியாத அளவுக்கு கட்சித்தாவல்கள் இடம்பெறுகின்றன. மக்களோ தெளிவான குழப்பத்தில்……


இம்முறை வாக்குறுதிகளை அள்ளி வீசுவதைவிட எதிர் வேட்பாளர்களின் குப்பைகளைக் கிளறும் நடவடிக்கைகளே அதிகம் இடம்பெறுகின்றன. சேறு பூசல்களுக்கு குறைவே இல்லை.



விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கான பணம் விரயமாக்கப்படுகின்றது. (யார் வீட்டுப் பணமோ..??)

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளுக்கிடையில் விளம்பரங்கள் வரும் ஆனால் இப்பொது விளம்பரங்களுக்கிடையில் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

வித்தியாசமான கூட்டணிகள்…., கொள்கையடிப்படையிலும் கடந்த கால வரலாறுகளின் அடிப்படையிலும் பரம எதிரிகளான பல கட்சிகள் தங்களுக்குள் கை கோர்த்து பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றன.


தேர்தல் ஆணையாளரே "என்னவாச்சும் பண்ணிக்கங்கப்பா.... இதோட ஆள விட்டுடுங்க" என்று விரக்தியுற்று புலம்பிக்கொண்டிருக்கும் அளவுக்கு வன்முறைகளும், தேர்தல் சட்ட மீறள்களும் பரவலாக இடம்பெறுகின்றன.

குண்டுத்தாக்குதல்களை நடத்திவிட்டு பழியைப் போடுவதட்கு இன்னொரு தரப்பு இல்லாததால் குண்டுகள் மட்டும் வெடிக்கவில்லை. இப்போது குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தால் நேரடியாகவே பழி தம்மீது விழுந்துவிடும் என்பதால் யாரும் அந்த வழியில் யோசிக்கவில்லை போல் தெரிகிறது… (முன்பென்றால் பழிபோட …………….. இருந்தார்கள் இப்போதுதான் அவர்கள் இல்லையே...)


யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்தி இலகுவாக தேர்தலில் வென்றுவிடலாம் என்று கற்பனைக் கோட்டை கட்டிய மகிந்த ராஜபக்சவுக்கு இப்படி ஒரு இடி விழும் என்று அவர் கனவிலும் எண்ணியிருக்கமாட்டார். ஃபொன்சேகா என்ற புயல் மகிந்த ராஜபக்சவின் கட்பனைக் கோட்டையை ஆட்டங்காணவைத்துவிட்டது. இதை ஏற்கனவே அறிந்திருந்தால் மீதி இரு வருடங்களையும் ஆட்சிசெய்துவிட்டு அப்புறம் பலப் பரீட்சையில் இறங்கியிருப்பார்.(உளவாளிகள் சொதப்பிவிட்டார்கள்….)


சொத்து சேகரிப்பு, குடும்ப அரசியல், ஏராளமான ஊழல்கள் என்பனவே மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளாகும்.


இலங்கை சிங்களவர்களிட்கு மட்டுமே சொந்தமானது அதில் சிறுபான்மையினர் எதனையும் உரிமை கொண்டாடக் கூடாது என்ற ஃபொன்சேகாவின் அமுத வாக்கும், யுத்தக் கைதிகள் சரணடைய வந்தவர்கள் பற்றி அவர் வெளியிட்ட கருத்துக்களும், ஆயுதக் கொள்வனவில் அவர் செய்ததாகச் சொல்லப்படும் ஊழல்களுமே ஃபொன்சேகாவிற்கு எதிராக அமைந்துள்ளன.



ஆக இருவர் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

எது எவ்வாறாக இருந்த போதும் தேர்தலில் யார் வெல்லுவார் என்பது தொடர்பில் உறுதியாக எந்த ஊகத்தையும் சொல்லிவிட முடியாதளவிற்கு மிகவும் இறுக்கமாக இருக்கிறது இந்த தேர்தல் களம்.

ஆனால் ஒன்று, தேர்தலுக்கு முன்னுள்ள காலங்களிலும் சரி தேர்தலின் பின்னர் வரும் நாட்களிலும் சரி ஏராளமான வெட்டுக்குத்துகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

தேர்தலின் பின்னர் நிறையப்பேர் வெளிநாடுகளுக்கு ஓடி ஒழிந்து கொள்ள வேண்டியுமிருக்கும் யார் ஆட்சிக்கு வந்தாலும் சரியே….

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்தலில் என்னதான் நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கின்றேன்.


இலங்கை மக்களாகிய எமக்கு இத்தேர்தலின் முடிவில் கிடைக்கப் போவது
“வளமான எதிர்காலமா” இல்லை “நம்பிக்கைக்குரிய மாற்றமா”




முடிவுக்காய் காத்திருப்போம்….

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

Riza Jaufer சொன்னது…

நல்ல கருத்துக்கள்... நிறைய படங்களோடு சொல்லி இருப்பதால் அழுப்பில்லாமல் வாசிக்க முடிகிறது.தொடர்ந்தும் எழுதுங்கள்.

aiasuhail.blogspot.com சொன்னது…

நன்றி Riza.
தொடர்ந்தும் எனது பதிவுகள் தொடர்பான உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.