RSS

என் ஒரு வருட கனவு, உழைப்பு, அர்ப்பணிப்பின் முடிவு என்ன??



கடந்த 2009 ஏப்ரலில் விண்ணப்பித்து இன்றுவரை 2 குரல் தேர்வுகள், ஒரு நேர்முகத்தேர்வு 1 1/2 மாதம் உள்ளகப் பயிற்சி 1 மாதம் கலையகப் பயிற்சி என்று எல்லாவற்றையும் வெற்றிகரமாகக் கடந்துவந்த எனக்கு.இறுதியில் வந்தது சோதனை.

எதிர்வரும் 8ம் திகதி  மாலை 2.30க்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இறுதி நேர்முகத்தேர்வு இடம்பெற இருக்கின்றது.

இது ஏற்கனவே சொல்லப்பட்ட ஒன்றுதான். அதில் பிரச்சினை இல்லை. ஆனால் நேர்முகத்தேர்வு இடம்பெறவிருக்கும் நாள்தான் பிரச்சினை.

அதேநாள் காலை 9 மணிமுதல் 11 மணிவரை பல்கலைக்கழகத்தில் பரீட்சை இருக்கிறது.(பல்கலைக் கழகத்தில் எனக்கு 2ம் வருட இறுதி செமஸ்டர் பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன). பல்கலைக்கழகத்திலிருந்து பஸ்சில் கொழும்பு போக குறைந்தது 6 மணித்தியாலங்கள்.(பஸ் சரியான நேரத்துக்கு வந்தால்...)

நான் என்ன செய்வது நண்பர்கள் சொல்கிறார்கள் பரீட்சையை விட்டுவிட்டு கொழும்பு போய் நேர்முகத் தேர்வினை முகம் கொடுத்துவிட்டு அடுத்த முறை பரீட்சை எழுதச் சொல்லி. ஆனால் இது முக்கியமான பாடம். நல்ல புள்ளி எடுக்க கூடிய பாடம். இம்முறைவிட்டல் அடுத்த முறை மிகவும் கஸ்டமாய்ப் போய்விடும்.

ஆனால் மோட்டார் சைகிளில் போனால் குறைந்தது 4 1/2 மணித்தியாலங்கள். பெற்றோர் சொல்கிறார்கள் மோட்டார் சைக்கிளில் போகச்சொல்லி. ஆனாலும் அது மிகுந்த நீண்ட தூர கடுமையான பயணம். மட்டுமல்ல எனக்கு மோட்டார் சைகிளில் கொழும்பு செல்ல பாதையும் சரியாகத் தெரியாது.நண்பர்களை அழைத்துச் செல்ல அவர்களுக்கும் அடுத்தடுத்த நாட்களில் பரீட்சைகள்.

நான் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பிப் போயிருகின்றேன். படிக்கவும் முடியவில்லை.


என் ஒரு வருட கனவு, உழைப்பு, அர்ப்பணிப்பின் முடிவு அவ்வளவுதானா??

இறைவன் விட்ட வழியென்று இருக்கின்றேன். பார்க்கலாம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS