RSS

மூணு மணியாயிடுச்சே இன்னும் கிளம்பலையா..??

என்ன கொடும சார் - பகுதி 2


காதல் புனிதமானது, அழகானது. இனிமையான உணர்வு அது. ஆனால் அந்தக் காதல் இப்போது அதே புனிதத் தன்மையோடு, அதே அழகோடு இருக்கிறதா என்றால் அது சந்தேகமே….




பருவகாலச் சீட்டு மாதிரி காலத்துக்குக் காலம் காதலிகளையும், காதலர்களையும் மாற்றிக் கொள்ளும் நாகரீகமே இப்போது அதிகம் உள்ளது.

உண்மையான காதல் என்றால் அந்தக் காதலின் காரணமாக படிப்பு வீணாவது, பெற்றோருடன் சண்டை வருவது, எதிர்காலம் கேள்விக்குறியாவது எதுவுமே இருக்கக் கூடாது.

பல மணி நேரம் ஃபோனில் பேசிப் பேசியே தங்கள் படிப்பையும், எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கிய பல காதலர்களை நான் பாத்திருக்கின்றேன். அவர்களின் அட்டகாசங்களை எனது முன்னைய பதிவில்(என்ன கொடும சார் - 1 இல்) குறிப்பிட்டுள்ளேன்.


இன்று விகாரமகா தேவிப் பூங்கா காதலர்களைப் பற்றி…………………..

அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. நம்ம நண்பர்கள் சிலரை ஒன்றாக சந்திக்க ஒரு வாய்ப்புக் கிட்டியது. எல்லோரும் சேர்ந்து மருதானையிலுள்ள சம்மாந்துறை சாப்பாட்டுக் கடையில் பகல் உணவை உண்டுவிட்டு எங்காவது போகலாம் என்று திட்டம் போட்டோம். வெயிலாக இருப்பதனால் முதலில் விகாரமகா தேவிப் பூங்கா சென்றுவிட்டு பிறகு காலிமுகத்திடல் போவதாக முடிவெடுத்தோம்.



முதலில் விகாரமகா தேவிப் பூங்கா. இரண்டு மணியளவில் விகாரமகா தேவிப் பூங்கா போயாச்சு. குச்சி ஐஸ், பஞ்சுமிட்டாய், ஐஸ்கிறீம் என்று விதவிதமா வாங்கிக் கொட்டிக்கொண்டே பார்கினை ஒரு ரவுண்ட் அடிச்சா…… சீ……அத என் வாயால சொல்லணுமா…? (வாயாலதான் சொல்லனும்)


அழகான மரங்களுக்கிடையில் அசிங்கமான காட்சிகள். யாரு பெத்த பிள்ளைகளோ வேற இடம் கிடைக்காமல் இங்கவந்து…………………. சுற்றி என்ன நடக்குது என்று தெரியாமலேயே உல்லாச உலகம் எனக்கே சொந்தம் என்ற எண்ணத்தில் உல்லாசம் கண்டுகொண்டிருந்தார்கள். வித விதமான கோணங்களில்.


(அப்போ... இதயெல்லாம் நானும் ரசிச்சனா என்டுதானே கேக்குறீங்க..?? எனக்கு வேற வேல இல்ல. நமக்கு தெரிஞ்ச யாராவது இருகாங்களா.. என்டு நம்ம நண்பர்களோட சேர்ந்து சும்மா ஒரு நோட்டம்விட்டன் அவ்வளவுதான்)

இந்த காட்சிகளைக் கண்டுகளிப்பதற்கென்றே இன்னுமொரு கூட்டம். கையில் கமராக்களுடன். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாமே இருந்தது யாருக்கு பாத்துடு போறவங்களுக்கு.



சரி இவற்றையெல்லாம் பார்க்க சகிக்காமல் ஓரிடத்தில் அமர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் சரியாக 3 மணியாகும் போது காவலர்கள் எல்லோரும் விசில் ஊதிக்கொண்டு வந்தார்கள். அப்போது புதர்களுக்குள்ளிருந்தும், மறைவான இடங்களிலிருந்தும் சோடி சோடியாக ஏராளமானோர் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். இவ்வளவு பேரும் எங்கிருந்தார்கள் என்று யோசிக்குமளவிற்கு எங்கெங்கெல்லாமிருந்தோ சாரை சாரையாக சோடிகள். வெளியே வந்தவர்களில் அனேகமானோர் பார்கினைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். சிலர் எதுவுமே நடக்காதவர்கள் போல ஆங்காங்கே அமர்ந்து கொண்டார்கள்.



எனக்கு எதுவுமே புரியவில்லை. அப்போது என் நண்பன் சொன்னான். 3 மணி ஆனால் காவலர்கள் இப்படி ஊதிக்கொண்டு வருவார்களாம் அப்போது புதருக்குள் சில்மிசங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் உடனே அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமாம். காரணம் சிறு பிள்ளைகளும், குடும்பத்தவர்களும் வரும் நேரமாம். அந்நேரத்தில் இவர்களின் லீலைகள் வருபவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடுமாம்… அதனால் அவர்களை வெளியேற்றுகின்றார்களாம்….

என்ன கொடுமை சார் இது…??


அநாச்சாரங்களுக்கும், கலாச்சார சீரழிவுகளுக்கும் ஒரு களம். அவர்களின் காம லீலைகளை அரங்கேற்ற ஒரு மேடை. தேவையா இது…. அதுவும் 3மணிவரை எதுவேண்டுமானாலும் பண்ணலாம் 3 மணிக்கு பின்னர் வெளியேறிவிட வேண்டும் என்ற கட்டுப்பாடு வேறு.. ஏன் 3 மணிக்கு முன்னர் எந்தச் சிறு பிள்ளைகளும் பார்க்கிற்கு வருவதில்லையா?? இல்லை எவரும் குடும்பத்தோடு வருவதில்லையா?



அநேகமாக குடும்பத்தோடு சுற்றுப் பயணம் வருபவர்களும், சுற்றுலா வரும் பாடசாலை மாணவர்களும் தங்கள் பகலுணவை இங்குதான் வந்து உண்பார்கள். அவர்களுக்கு இவை அசெளகரியமில்லையா?? இவர்களின் காமக் கூத்துகளைப் பார்க்கும் பிஞ்சு உள்ளங்கள் வழி கெட்டுவிடாதா?



இந்த சோடிகளுக்கு வேண்டுமானால் தனியே ஒரு காட்டினை உருவாக்கி அங்கே விதம் விதமான புதர்களையும் வளர்த்து ”மனிதர்கள் உட்செல்லத் தடை” என்று பெயர்ப்பலகையையும் கொழுவிவிட்டால் எந்த இடையூறுமில்லாமல் உல்லாசம் காணுவார்களே இந்தக் கிராதகர்கள்.



மாலை 3 மனியளவில் விகாரமகா தேவிப் பூங்கா வாசலில் நின்று கொண்டால் நிறையப் பேரின் வண்டவாளங்களை கண்டுவிடலாம்.

(அப்பாடா ஏதோ நம்மளால முடிஞ்சது… இனி நம்ம வேலையப் பாப்பம்…..)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS