RSS

எனக்குவிடுக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு சவால்.....

இலங்கையின் அரச வானொலியான தென்றலின் நாளைய நாள் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.



தென்றலின் நிகழ்சிகள் வழமையாக அதிகாலை 5 மணிக்கு தேசிய கீதத்தோடு ஆரம்பமாகும்.

அதிகாலை 5 மணிமுதல் 9 மணிவரை தொடர்ச்சியாக நான்கு மணித்தியாலங்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கவேண்டும்.
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இந் நிகழ்ச்சியை சிரேஸ்ட அறிவிப்பாளர்களுடன் இணைந்து தொகுத்திருந்தாலும் நாளை நான் தனியே கடமை புரிய வேண்டும்.


நிகழ்சிக்காக என்னை அழைத்த என் உயர் அதிகாரி..
”புதிய அறிவிப்பாளர்களில் முதன் முதலாக உங்களுக்குத்தான் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.. உங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து உங்களுக்கே தரவேண்டும் என்பதற்காகத் தந்திருக்கிறோம் முக்கியாமான நிகழ்ச்சி எனவே கவனமாகச் செய்யுங்கள்.” என்று அறிவுரை வழங்கினார்.
இதைக் கேட்ட போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் வழமையை விட பதற்றமும், பயமும் அதிகரித்திருக்கிறது...

ரொம்ப எதிர் பாக்கிறாங்களோ எனத் தோணுகிறது...


தென்றலில் பல நிகழ்ச்சிகளைத் தனியேயும், சிரேஸ்ட அறிவிப்பாளர்களுடன் இணைந்தும் தொகுத்து வழங்கியிருக்கின்றேன்...
ஆனால் என்னமோ தெரியாது இந்த முறை பதற்றமும், பயமும் அதிகமாய் இருக்கிறது....

அதிகாலையில் எழுந்து உரிய நேரத்திற்குள் சென்றுவிட வேண்டும்.... நிகழ்சியை திறம்பட தொகுக்க வேண்டும்...
இதுதான் எனக்கிருக்கும் சவால்..

எது எப்படியோ நம்பிக்கையோடு களமிறங்குகின்றேன்....

காலை 5 - 9 மணிவரை வாய்ப்பிருந்தால் கேட்டுத்தான் பாருங்ளேன்....

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS