RSS

இளவரசர் சுஹைல் நாளை நாடு திரும்புகிறார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருந்த நமது இளவரசர் சுஹைல் நாளை நாடு திரும்புகிறார். விசேட விமானம் மூலம் நாடு திரும்பும் இவர் நாளை அதிகாலை 4 மணியளவில் Green Lane விமான நிலையத்தில் வந்திறங்குவார் என அரண்மனைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இளவரசர் வருகையால் சம்மாந்துறை நகரம் விழாக் கோலம் பூணுகிறது.


மன்னர்: அமைச்சரே…. அரண்மனை வாசலில் இளம் பெண்கள் வந்து    
                 கூடி நிற்கின்றனரே என்ன காரணம்?


அமைச்சர் : ஆமாம் மன்னா நமது இளவரசர் சுஹைல் நாளை இங்கு 
                         வருகிறார் இல்லையா.. அவரைக் காணவே இளம் பெண்கள்      புத்தாடை உடுத்தி புது மணம் பூசி உற்சாகமாய் வந்திருக்கிறார்கள் மன்னா…

மன்னர்: இளவரசர் சுஹைல் இன்று இரவு 7.30க்கு புறப்பட்டு நாளை அதிகாலை 4 மணிக்குத்தானே வருவார்..

அமைச்சர் : ஆமாம் மன்னா இளவரசர் நாளை அதிகாலைதான் வருவார் என்றாலும். முன்னரே வந்துவிட்டால்தான் நெரிசல் இல்லாமல் அவர் முகம் காண முடியும் என்று இவர்கள் நேற்றே வந்துவிட்டார்கள் மன்னா….

மன்னர்.: அப்படியா அமைச்சரே.. இளவரசர் சுஹைல் என்றால் நம் இளம் பெண்களுக்கு அவ்வளவு இஸ்டமோ..??

அமைச்சர்: ஆமாம் மன்னா..

மன்னர்.: சரி அமைச்சரே இளவரசரை வரவேற்கும் ஏற்பாடுகள் எப்படிப் போகிறது. ?

அமைச்சர்: எல்லாம் ஏற்பாடாகிவிட்டது மன்னா…
                        தாள வாத்தியங்கள் இசைக்க எமது இராணுவத்தின் பேண்ட்      வாத்தியக் குழு, கடற்படை பேண்ட் வாத்தியக் குழு, விமானப் படை பேண்ட் வாத்தியக் குழு, பொலீஸ் பேண்ட் வாத்தியக் குழு எல்லோரும் தயார் மன்னா..மலர் தூவும் பெண்களும் தயார், எமது விமானப் படையினரும் 4 ஹெலிகொப்டர்களில் வந்து மலர் தூவ அனுமதி கேட்டார்கள் மன்னா… அவர்கள் ஆசையையும் கெடுப்பானேன் என்று அதற்கும் அனுமதி கொடுத்திருக்கிறேன் மன்னா. செங்கம்பளமும் தயார் மன்னா….


மன்னர் : நல்லது அமைச்சரே.. இளவரசர் சுஹைல் ஒரு வாரம் இங்கே தங்கியிருப்பார் அந்த ஒரு வாரமும் நமது நாடு திருவிழாக் காணவேண்டும்.

 அமைச்சர்: நிச்சயமாக மன்னா. மன்னா……….
                            (அமைச்சர் தலையைச் சொறிகிறார்...)

மன்னர்: என்ன அமைச்சரே.. என்ன விசயம்?

அமைச்சர் : இல்லை மன்னா….. இளவரசர் வருவதைக் கேள்விப்பட்ட அயல் நாட்டு இளவரசியர் தமன்னா, பாவனா, மீரா ஜெஸ்மின், ப்ரியா மணி, அஞ்சலி,அனுஸ்கா, அன்றியா,சமீரா ரெட்டி எல்லோரும் இளவரசர் சுஹைலைக் காண இங்கு வர அனுமதி கேற்கிறார்கள் மன்னா…

மன்னர்: அப்படியா இளவரசருக்கு இளம் பெண்களின் அன்புத் தொல்லை.. சரி சரி வரச் சொல். அப்படியே இளவரசருடன் அவர்களுக்கு இராப் போசனத்துக்கும் ஏற்பாடு செய்.

அமைச்சர்: ஆகட்டும் மன்னா…. மன்னா…
(அமைச்சர் மீண்டும் தலையைச் சொறிகிறார்...)

மன்னர்: இன்னுமென்ன அமைச்சரே..?

அமைச்சர்: எனது மகள் த்ரிசாவும் இருக்கிறாள் மன்னா..

மன்னர்: என்ன…????????????????

(அமைச்சர் தன் கோரிக்கை நிறைவேறாத கவலையில் மெதுவாக நடந்து செல்கிறார்.)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS