RSS

சம்மாந்துறை என்ற பெயர் வரக்காரணம்.

இது எனது 50வது பதிவு. எனது 50வது பதிவில் என் தாய் மண்ணைப் பற்றி பதிவிடுதில்  நான் பெருமடைகின்றேன்.

இப்பதிவு என் தாய் மண் சம்மாந்துறைக்கு சமர்ப்பணம்.


என் தாய்மண் சம்மாந்துறைக்கு அந்தப் பெயர் வரக் காரணம் என்ன. என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வந்துள்ளது. அதன்  ஒரு கட்டமாக அதனை அறிந்துகொள்ள முற்பட்டபோது.. பல சுவாரஸ்யமான வரலாறுகள் அறியக் கிடைத்தன.. அவற்றைப் பற்றியெல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன். இப்போது எனதூரைப் பற்றிய சிறு அறிமுகத்தோடு சம்மாந்துறைஎன்ற பெயர் வந்த காரணத்தைப் பார்க்கலாம்.

கிழக்கிலங்கையில் சீரும் சிறப்பும் வரலாற்றுப் பெருமையுமிக்க பழம் பெரும் பகுதிகளில் சம்மாந்துறை சிறப்பிடம் வகிக்கின்றது.
இங்கு இஸ்லாமியரும் தமிழரும் இரண்டறக்கலந்து இன ஐக்கியத்துக்கோர் எடுத்துக் காட்டாக நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர்.(முஸ்லிம்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.)

சம்மாந்துறையானது நெல் வயல்களினால் சூழப்பட்டிருப்பதால்; கிழக்கிலங்கையின் தானியக் களஞ்சியமாக ஊருக்கும், உலகுக்கும் உண்டி கொடுத்து மகிழும் உழவர் பெருமக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கின்றது. கணிசமான அளவு அரசாங்க ஊழியர்களும், வியாபாரிகளும் ஊரின் பலபாகங்களிலும் பரந்து வாழ்கின்றனர்.

சம்மாந்துறை என்ற பெயர் வரக்காரணம்.


சம்மாந்துறை கிழக்கின் பிரதான துறையாகவும்போத்துக்கீசரின் காலத்தில் கண்டி இராச்சியத்தின் பிரதான ஏற்றுமதி இறக்குமதித் துறையாகவும் விளங்கிவந்துள்ளதுஅன்று முதல் இன்றுவரை சம்மாந்துறை நெல் உற்பத்தியிலும்ஏற்றுமதியிலும் முதலிடம் வகித்துவருவதைக் கண்கூடாகக் காண்கிறோம்
சம்மாந்துறை என்ற பெயர் வந்தமைக்கு பல கதைகள் சொல்வார்கள்.

சம்மான் என்ற ஒரு குழுவினரே இவ்வூருக்கு ஓடத்துறை வழியாக முதலில்  வந்திறங்கியதால் சம்மான் வந்திறங்கிய துறை. “சம்மாந்துறை”  என்று அழைக்கப்படாலாயிற்று என்பது ஒரு கதை.

வர்த்தகர்கள் ஓடத்துறை வழியாக வந்திறங்கிய போது இப்பிரேதேசத்தின் கரையோரம் செம்மண்ணினால் செண்ணிறமாகக் காணப்பட்டதாகவும். அதனால் இது செம்மண்-துறை என்று அழைக்கப்பட்டதாகவும். பின்னர் சம்மாந்துறையாக மாற்றம் பெற்றதாகவும் சொல்கிறது இன்னுமொரு கதை.

 இப்படி பல கதைகள் உலவுகின்ற போதும். பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, சரித்திரச் சான்றுகள் உள்ள ஆதாரபூர்வமான விடயம்தான்.... கீழே வருகின்றது.

தென்னிந்திய மக்கள் தோணியை சம்மான்என்றே அழைப்பார்கள். இதனால் சம்மான்(தோணி) வந்து தரிக்கும் துறையை சம்மான்-துறை என்று அழைக்கலாயினர். இப்போதும் தோணியின் பெயரைக் கொண்டே இவ்வூரின் பெயர் சம்மாந்துறை என அழைக்கப்படுகின்றது. இக்காலப் பகுதியில்தான் முஸ்லிம்களின் வருகை இடம்பெற்றிருக்கின்றது.

இறுதியாகச் சொல்லப்பட்ட இதுதான் சம்மாந்துறை என்ற பெயர் வந்தமைக்குரிய வரலாறு என்று எமதூரின் மூத்தவர்களும், ஊரின் சரித்திரம் அறிந்தவர்களும் உறுதியாகக் கூறுகின்றனர்.

கிழக்கிலங்கையின் சொர்க்கபுரியான சம்மாந்துறை பற்றிய அழகான, சுவாரஸ்யமான வரலாறுகள் பல உள. எதிர் வரும் காலங்களில் அவற்றையும் பதிவிட ஆவலாய் உள்ளேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

ம.தி.சுதா சொன்னது…

தங்களது 50 வத பதிவிற்கு வாழ்த்துக்கள்.. தங்களின் ஊர் பெயர் காரணத்தை இன்று தான் அறிந்தேன்...

Ahamed Suhail சொன்னது…

உங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரா....

தொடர்ந்தும் இணைந்திருப்போம்..