RSS

நெத்தலி - சுறா பார்ட்-2 (ரிப்பீட்டு...)

பன் பிக்சர்ஸ் கவலையுடன் வழங்கும் அதிரடி நாயகனின் நெத்தலி(சுறா பார்ட்-2)


நெத்தலி (சுறா பார்ட்-2)

உதயபுரத்து விளையாட்டு மைதானத்தில் பெரும் சனக் கூட்டம். எல்லோருமே மைதானத்தின் அருகிலிருக்கும் காட்டினைப் பார்த்துகொண்டிருக்கின்றனர். "காலையில் கிரிக்கட் விளையாடும் போது பந்து பக்கத்துல இருந்த காட்டுகுள்ள போயிடுச்சு அத எடுக்கப் போன நம்ம நெத்தலியையும்(நெத்தலி - ஹஸ்ஸான் இவர்தான் கதையின் ஹீரோ) மத்தக் குளுவினரையும் காணல்லன்னு ஊரெல்லாம் ஒரே களேபரம்… "

பொலீசார் வந்து பற்றைகள், குட்டைகளெல்லாம் நோண்டி எப்புடியோ எல்லோரையும் கண்டுபிடிச்சு இழுத்துட்டு வந்துடாங்க…ஆனா நம்ப ஹீரோ நெத்தலிய (அதான் நம்ம ஹஸ்ஸான்) மட்டும் காணல்ல…. எல்லோருக்கும் கவல.
எல்லோரும் போய் நெத்தலிய காணல்ல எங்கிற விசயத்த நம்ம கஃபார் ஓ.ஐ.சீ கிட்ட சொல்றாங்க..

இங்கப் பாருங்கப்பா உங்கள தேடி கண்டு பிடிச்சதே ரொம்ப பெரிய விசயம், காட்டுக்குள்ள பாம்பெல்லாம் கெடக்கு திரும்ப தேடேலாது அதுமட்டுமில்ல உங்கள கூட்டிட்டு போக கைமிசினையும் வரச் சொல்லியாச்சு நெத்தலி வந்தான்னா இடம் காணாது பேசாம விட்டுட்டு வாங்க போவம்”. என்று கஃபார் ஓ.ஐ.சீ எவ்வளவோ சொல்லியும் மக்கள் கேக்கல்ல…

இல்ல சார் நாங்க நெத்தலி இல்லாம வரமாட்டம். அவனுக்கு விளையாடத் தெரியாட்டியும் நல்லா போல் ”பொறுக்கி”த் தருவான், அவந்தான் எங்களுக்கு கடைக்கு போய் சாமான் வாங்கித் தாறது, குளிக்கப் போனா முதுகு தேச்சு விடுற (என்ன லுக்கு ஆம்பிளைகளுக்கு மட்டும்…. வாயப் பொழந்துடுவீங்களே...) கால் வலிச்சா அமுக்கி விடுற (இதுவும் ஆம்பிளைக்குத்தான் சார்) அவன் எங்களுக்கு வேணும்.”

இப்புடி மக்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காட்டுக்குள் இருக்கிற பனமரத்துல சல சலப்பு. எல்லோரும் திரும்பிப் பாக்குறாங்க;

பனமரத்துல இருந்து நம்ப நெத்தலி இறங்கிவாறான். எல்லோரும் அவன நோக்கி ஓடிப்போய் கட்டிப் புடிக்குறாங்க.. நம்ப அம்ரலங்காட மனைவியும் நெத்தலிய கட்டிப் பிடிக்கப் போக ”அடிப்பாவி நானும்தான் காணம போனன் என்ன வந்து கட்டிப் பிடிச்சியாடி பாவி இரு வீட்ட போய் வெச்சுக்குறன்.” என்டு மிரட்டி தன் பக்கம் இழுத்துட்டு போயிட்டான் அம்ரலங்கா.

கஃபார் ஓ.ஐ.சீ : என்னப்பா நெத்தலி எங்க போன நீ

நெத்தலி : இல்ல சார் பந்த தேடிகிட்டே மேல பாத்தனா பனமரத்துல ஒரு பனம் பழம் இருந்திச்சி சார். நம்ப பசங்க கண்டானுங்கன்ன விடமாடனுங்க அதான் எல்லாரையும் பேசி அனுப்பிட்டு, ஒத்தருக்கும் தெரியாம நான் மட்டும் மரத்துல ஏறி பனம் பழத்த சாப்பிட்டன் சார்.

கஃபார் ஓ.ஐ.சீ : சரி நெத்தலி பனம் பழத்துல ஏதாச்சும் மிச்சமிருக்கா..?

நெத்தலி : இல்ல சார் எல்லாம் முடிஞ்சு, கையில இருந்ததையும் கூட நக்கிட்டன் சார்.

”எத்துன பனம் பழம் சாப்பிட்டாலும் கையில இருக்குறதையும் நக்குவான் இந்த நெத்தலி” பன்ச் டயலொக்(மொபிடலும்தான்)வேற.

(நம்ப கஃபார் ஓ.ஐ.சீ சூடாகிட்டார்.)

கஃபார் ஓ.ஐ.சீ : சரி எல்லாரும் கை மிசின்ல ஏறி வீட்டுக்குப் போங்கப்பா…


அடுத்த காட்சி


நம்ம வில்லனுக்கு உதய புரத்து மைதானத்துல மிச்ச நாளாவே ஒரு கண்.(மைதானத்துல மட்டுமில்ல உதய புரத்து குட்டிக மேலயும்தான்)

எப்புடியாவது உதய புரத்து கிரவ்ண்ட வளச்சிப் போட்டு கல்லுவாடி போடனுங்கிறதுதான் அவர்ட நீண்ட நாள் ஆச. (சவுதி அரேபியாவுல ஒட்டகம் கழுவி உழச்ச காச எப்புடியாவது நாசமாக்கனுமே.)


ஒரு நாள் திடீரென்டு யாரோ நம்ம நெத்திலிட தலையில நச்சின்னு பொல்லால போட்டு ஆள சாச்சிட்டு போயிட்டானுங்க. நெத்தலிக்கு ஒன்னுமே புரியல்ல.

இந்த நேரம் பாத்து யாரோ உதய புரத்து கிரவ்ண்ட வயல உழவுற மாதிரி உழுது வெச்சிருந்தானுங்க. ஊர்க்காரங்க எல்லாரும் நம்ம ஹரூஸ்தான் நித்திரக்கண்ணுல வயலுக்கும் மைதானத்துக்கும் வித்தியாசம் தெரியாம உழவு மிசின குறுக்கால விட்டிருப்பானாக்கும் எண்டு நெனச்சு கவலையோட கிரவ்ண்ட பாத்துட்டு இருந்தாங்க.



ஆனா வில்லண்ட தம்பி சரவணன் தான் யாரையும் இந்த கிரவ்ண்டுல விளையாடாம ஆக்கி அண்ணாத்தட ஆசைய நிறைவேத்தி வெக்க இப்புடி சதி செய்தான் எண்டு யாருக்குமே தெரியாது.(இதுக்குன்னே லண்டன்ல இருந்து வந்திருந்தான் படுபாவி..)


இதுக்குள்ள அங்க வந்த நம்ம வில்லன்  பெரிய இவனாட்டம் ”இங்கப் பாருங்க இனிமே இந்த கிரவ்ண்டுல உங்களால விளையாட முடியாது, நான் ஆளுக்கொரு பிளாஸ்டிக் பெட்டும், பிளாஸ்டிக் போலும் தாறன் எல்லாரும் வாங்கிட்டு செட்டவட்ட கிரவ்ண்டுல போய் விளையாடுங்க” என்டு சொல்ல;

எல்லாருக்கும் இதுதான் சரின்னு பட்டிச்சு.(ஓசில வேற பிளாஸ்டிக் பெட்டும், பிளாஸ்டிக் போலும் கிடைக்குதே விடுவாங்களா?) கொடுக்குறத வாங்கிட்டு கிளம்ப தயாரான நேரம் பாத்து நம்ம ஹீரோ நெத்தலி வந்துடான்.


எல்லாரும் பிளாஸ்டிக் பெட்டும், பிளாஸ்டிக் போலும் வாங்கிட்டு செட்டவட்ட கிரவ்ண்டுக்கு போக தயாரா நிக்குறத பாத்த நம்ம நெத்தலிக்கு மூத்…… சாறி ஆத்திரம் வந்துட்டுது.
எல்லாரும் எங்க கிளம்பிட்டீங்க? ஓசில ஏதும் கிடைச்சா வாங்கிட்டு கிளம்பிர்ரதா? யோசிக்க வேணா? செட்டவட்ட கிரவ்ண்டுக்க போனவுடனே உங்கள விளையாட விட்டிடுவாங்களா?  எல்லா களவானிப் பசங்களும் அங்கதான் இருக்கானுங்க. உங்க பிளாஸ்டிக் பெட், பிளாஸ்டிக் போல் எல்லாத்தையும் பறிச்சு உங்கள அடிச்சு விரட்டிடுவானுங்க. அப்புறம் எங்க போய் விளையாடுவீங்க? பேசாம வாங்கினத குடுத்துடுங்க; நாம இந்த கிரவ்ண்ட சரியாக்கி இங்கையே விளையாடுவம்” என்று ஆவேசமாக நெத்தலி பேச,,

எல்லாரும் வாங்கின பிளாஸ்டிக் பெட், பிளாஸ்டிக் போல் எல்லாவற்றையும் திரும்ப கொடுத்துடாங்க. இதனால கோபமடைந்த நம்ம வில்லன் நெத்தலிய தனிய கூப்பிட்டு ”இங்கப்பாரு உனக்கு வேனும்னா 2 பெட் 2 போல் எக்ஸ்ராவா தாரன், ஒரு தொப்பியும் தாரன் வாங்கிட்டு பேசாம எல்லாரையும் கூட்டிட்டு கிளம்பு” என்று சொல்ல;

நம்ம நெத்தலி ”இங்கப்பாரு என் டீமுல இருக்குறவனுங்க பிச்சக்கார பசங்கதான் அதுக்காக நீ குடுக்குறத வாங்கிட்டு போயிடுவன் எண்டு நெனச்சுடாத. உன் கண் முன்னாடியே இந்த கிரவ்ண்ட மட்டமாக்கி டீம்ல இருக்குற எல்லாருக்கும் ஆளுக்கொரு பிளாஸ்டிக் பெட், பிளாஸ்டிக் போல் வாங்கிக் குடுத்து இங்கையே விழையாடிக் காட்டுறன்” என்று சவால் விட்டான்.


காட்சி - 3

சவால்ல ஜெயிக்குறது எப்படி எண்டு நெத்தலி யோசிச்சான். பேசாம என்.ஜி.ஓ வெச்சிருக்கிற பவாஸ்கிட்ட போய் ஏதாவது உதவி கேட்டுப் பாப்பம் என்று முடிவெடுத்த நெத்தலி; பவாஸை சந்தித்து தன் தேவையைச் சொன்னான்.

போடாங் ங்கொய்யா நானே எவனாச்சும் ஏதாச்சும் கொண்டுவந்து தரமாட்டானா எண்டு பாத்திடிருக்கன்; எங்கிட்டப் போய்… போடா வேலையப் பாத்துட்டு போ…..” என்று துரத்திவிட்டான்.

நெத்தலிக்கு குழப்பம், யோசிச்சான். ஒரு முடிவெடுத்தான். அதையே செய்தும் முடித்தான்.

சரவணன் லண்டன்ல இருந்து வெள்ளக்காரன் கிட்ட சுட்டுட்டு வந்த லெப்டொப்ப நம்ம நெத்தலி சுட்டு அத வித்து முதல்ல தனக்கு ஒரு லுமாலா சைக்கிளும் அப்புறமா தனது டீம்ல இருக்கிற எல்லாருக்கும் ஆளுக்கொரு பிளாஸ்டிக் பெட், பிளாஸ்டிக் போல் வாங்கிக் கொடுத்தது மட்டுமில்லாம கிரவ்ண்டையும் சரி செய்தான்.

நெத்தலியின் இந்த வீரச் செயலுக்கு உதயபுரமே திரண்டு அவனுக்கு விழா எடுத்துக் கொண்டாடியது.

நெத்தலி எதெல்லாம் பன்றான் இதப் பண்ணமாட்டானா?
                           **********************************

படம் முடிஞ்சுது அடுத்து சேவல்காரன் சாரி காவல்காரனோட சந்திப்போம்




Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

7 comments:

KANA VARO சொன்னது…

நல்லாயிருக்குங்கண்ணா! சேவல்காரன் சாரி காவல்காரனுக்கு வெயிட்டிங்..

aiasuhail.blogspot.com சொன்னது…

@KANA VARO

நண்றிங்ங்ங்...........


சேவல்காரன் வருவான்.....


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
மீண்டும் வருக

Mohamed Rizad M.B. சொன்னது…

Supero......supero...

Mohamed Rizad M.B. சொன்னது…

Supero......supero...

aiasuhail.blogspot.com சொன்னது…

@Mohamed Rizad M.B.

நன்றி நன்றி நன்றி

ஷஹன்ஷா சொன்னது…

சூப்பர்....கொன்னுட்டீங்க............

aiasuhail.blogspot.com சொன்னது…

@“நிலவின்” ஜனகன்

நன்றி நன்றி நன்றி

மீண்டும் வருக