RSS

வானம் வந்து சொல்லும் வாழ்த்து - கவிதையாக என் குரலில்

குரு என் ஆளு திரைப்படத்தில் ஸ்ரீகாந் தேவாவின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் க்ரிஸ் பாடிய அற்புதமான பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் ஒன்று இருக்கிறது.

“வானம் வந்து சொல்லும் வாழ்த்துக்கள்” என்று ஆரம்பிக்கும் பாடல்.
அருமையான இசை, இனிமையான குரல், அற்புதமான வரிகளைக் கொண்ட இந்த பாடல் நான் அடிக்கடி கேட்கும், வானொலியில் ஒலிபரப்புபம் பாடல்களில் ஒன்று.

இந்த பாடல் வரிகளை என் குரலில் கவிதையாக வாசிக்க வேண்டும் என்று ஒரு சின்ன ஆசை எனக்குள்.
அதற்குரிய சரியான சூழல் கிடைக்கவில்லை. எப்படியோ கிடைத்த ஒரு குறுகிய நேரத்திற்குள் என் லெப்டொப், ஹெட்ஃபோன் மைக்கை பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்துவிட்டேன்...

எப்படி இருக்குன்னுதான் சொல்லுங்களேன்....(கவிதையாக என் குரலில்)


அந்தப் பாடலின் வரிகள் கீழே.


வானம் வந்து சொல்லும் வாழ்த்துக்கள்
அதிகாலை பூத்த பூக்கள் அவை கூறும் வாழ்த்துக்கள்
காற்றில் அது கொஞ்சும் வாழ்த்துக்கள்
சில பட்டாம்பூச்சி ஒன்றாய் வந்து சொல்லும் வாழ்த்துக்கள்
பூமி மடியில் நீயும் பிறந்து தவழ்ந்த நாள்தான் இன்று
மீண்டும் புதிதாய் கண்கள் மலர்வாய் பிறந்த நாள்தான் இன்று
Happy birth day too you Happy birth day too you appy birth day too you 


இன்றைய விண்வெளியில்
உலவிய மேகங்கள் உன்னை வாழ்த்தட்டும்
நாளைய உன் விழியில் 
சேரும் சொந்தங்கல் சேர்ந்தே வாழ்த்தட்டும்
உன் பாதைகள் எங்கெங்கும் பல வானவில் தங்கட்டும்
உன் கண்கள் மீதெல்லாம் தினம் சுகம் வரட்டும்
அழகே அழகாய் உன் நாட்கள் எங்கும் நந்தவன நாள்தானே.
நெஞ்சமே நெஞ்சமே உன் மேல் பூத்தூவுமே என்றென்றுமே






Happy birth day too you
Happy birth day too you
Happy birth day too you


ஒவ்வொரு ஆண்டுக்கும் வயதுகள் போனாலும் வசந்தங்கள் கூடட்டும்
ஒவ்வொரு மனசுக்கும் ஆசைகள் இருந்தாலும் நிஜமாய் மாறட்டும்
நீ ஓவிய ரோஜாப்பூ அது வாடிப்போகாது
நீ அழகிய கவிதைதான் அது தினம் புதிது
உனக்கே உனக்காய் என் மூச்சுக் காற்று வாழ்த்தும் சத்தம் கேட்டாயோ
என்றென்றும் இன்றுபோல் எங்கும் நீ வாழ்க என் வாழ்த்துக்கள்


Happy birth day too you
Happy birth day too you
Happy birth day too you 


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS