RSS

இலங்கை அணித் தேர்வும் தேர்வாளர்களின் தலையிடியும்

நடைபெறவிருக்கும் 2011 உலகக்கிண்ணக் கிரிக்கட் போட்டிகளுக்கான இலங்கை 
அணியின் 30 பேர் கொண்ட முன்னோடி அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது
எதிர்பார்கப்பட்ட பல வீரர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறார்கள்அதில் விசேடமாக 
சமிந்த வாஸ் மற்றும் சனத் ஜயசூரிய ஆகிய இலங்கையின் மூத்த சாதனை 
வீரர்களும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்இது பலருக்கு ஆச்சரியத்தை 
அளித்திருந்தாலும்என்னைப் போல் சிலர் எதிர்பார்த்ததுதான்.


சனத் மற்றும் வாஸ் இருவரும்இலங்கை அணியை பல வெற்றிகளுக்கு 
அழைத்துச் சென்ற சாதனை வீரர்கள்இருவரும் அணியினை சிறப்பாக ஆரம்பித்து 
வைப்பவர்கள்.சனத் தனது அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் பவர் பிளேஓவர்களை 
துவம்சம் செய்பவர்வாஸ் தனது ஸ்விங் பந்துகளின் மூலம் எதிரணி வீரர்களின் 
விக்கட்டுகளை ஆரம்பத்திலேயே வீழ்த்துபவர்.


ஆனால் அவ்விருவரின் நிலையும் தற்போது கேள்விக்குறியாகியிருக்கக் காரணம் 
இருவரினதும் பிந்திய பெறுபேறுகள் அவ்வளவு  சிறப்பாக இல்லை என்பதும்
அவர்களை விட தற்போதுள்ள இளையவர்கள் மிகச் சிறப்பாகச் செயற்படுவதுமே.



இருவர் தொடர்பாகவும் விரிவாக ஆராய முன் அறிவிக்கப்பட்டுள்ள 30 பேரினதும் 
விபரங்கள் வருமாறு.



Kumar Sangakkara, Tillakaratne Dilshan, Upul Tharanga, Dinesh Chandimal, Tharanga Paranavitana, 
Lahiru Thirimanne, Sanath Jayasuriya, Mahela Jayawardene, Thilan Samaraweera, Thilina Kandamby, 
Chamara Silva, Chamara Kapugedera, Angelo Mathews, Thisara Perera, Farveez Maharoof, Jeevan 
Mendis, Muttiah Muralitharan, Suraj Randiv, Rangana Herath, Malinga Bandara, Lasith Malinga, 
Ajantha Mendis, Nuwan Kulasekara, Dilhara Fernando, Suranga Lakmal, Dammika Prasad, Chaminda 
Vaas, Chanaka Welegedara, Nuwan Pradeep, Thilan Thushara





 இவர்களில் நான் எதிர்பார்க்கும் 15 பேர் கொண்ட அணி.

1.Kumar Sangakkara 2.Tillakaratne Dilshan 3.Upul Tharanga 4.Dinesh Chandimal

5.Mahela Jayawardene, 6.Dilhara Fernando 7.Chamara Silva  8.Chamara Kapugedera 


9.Angelo Mathews 10.Thisara Perera 11. Muttiah Muralitharan  12.Suraj Randiv 

13.Lasith Malinga 14.Ajantha Mendis 15.Nuwan Kulasekara

Santh அணிக்குள் வருவதாக இருந்தால் அனேகமாக சந்திமால் வெளியேறலாம்
ஆனால் நான் விரும்புவது கபுகெதர அல்லது சாமர சில்வா இருவரில் 
ஒருவர் வெளியேற வேண்டும் என்பதை.



டில்ஹாரவின் இடத்தினை வேண்டுமானால் வாஸுக்கு கொடுக்கலாம்.


அஜந்த மெண்டிசுக்குப் பதிலாக நான் ஜீவன் மெண்டிசையே     விரும்புகிறேன்


உண்மையில் சனத் மற்றும் வாஸ் இருவருமே என்னை மட்டுமல்ல 

இலங்கை கிரிக்கட்டை நேசிக்கும் அனைவரையும் கவர்ந்தவர்கள்
எப்படியும் இந்த உலகக் கிண்ணத்தோடு ஓய்வு பெறப்போகிறார்கள்
ஒரு வாய்ப்பு வழங்கி திருப்தியாக அனுப்பி வைக்கலாமே… 
என்று என் உள் மனம் சொல்கிறது
ஆனாலும்
 செண்டிமெண்ட் காட்டவும் பட்சாதாபப்படவும் நேரம் இதுவல்லவே. 

ஏனெனில் இது உலகக் கிண்ணத் தொடர்எனவே சில பல அதிரடி 
முடிவுகளை எடுத்தே ஆகாவேண்டிய நிலமை.


இருவரும் இறுதியாக விளையாடிய ஆண்டின் பெறுபேறுகள் இவை



சனத் ஜயசூரிய:

இறுதியாக விளையாடியது இந்திய - இலங்கை அணிகளுக்கிடையில் 
இந்தியாவில் இடம்பெற்ற தொடர்.


இதில்
துடுப்பாட்டத்தில் (3 இனிங்ஸ்):  5, 15,31
பந்துவீச்சில் : 76/0, 42/0


       கடந்த ஆண்டில் சனத் ஜயசூர்யவின் பெறுபேறுகள்
கடைசி ஒருநாள் போட்டிஇந்தியாவுடன் டிசம்பர் 27 2009 டெல்லி


சமிந்த வாஸ்:
இறுதியாக விளையாடிய ஒருநாள் தொடர்இலங்கை-
இந்திய அணிகளுக்கிடையிலானது.


இதில் 3 இனிங்ஸ்களில் விளையாடியிருந்தார்.:


பந்துவீச்சில் :34/1, 33/0, 40/1
துடுப்பாட்டத்தில் : 0, 17


 2008ம் ஆண்டில் வாசின் பெறுபேறுகள்
இறுதிப் போட்டி : இந்தியாவுடன் ஆகஸ்ட் 27 2008 கொழும்பு


அரவிந்த டீ சில்வா தலைமையிலான தெரிவுக் குழுவினருக்கு 
இம்முறை தலையிடியாக அமைந்துள்ள விடையங்கள்..

சிறப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் இளம் வீரர்களில்
யாரை தெரிவு செய்வது யாரை வெளியேற்றுவது
*சனா + வாசி இருவர் தொடர்பாக வரும் நேர் மற்றும் எதிர் 
அழுத்தங்களை எப்படி சமாளிப்பது.


*இறுதி அணியைத் தெரிவு செய்வதற்கு வாய்ப்பாக இருந்த
 இலைங்கை மே..தீவுகள் இடையிலான போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இது போன்ற பல தலையிடிகள்.


பார்க்கலாம் ஜனவரி 19ம் திகதி வெளிவரும் இறுதி அணி விபரத்தில் 
எல்லாம் தெளிவாகும்.

அண்மையில் இலங்கையின் தெரிவுக் குழு தலைவர் அரவிந்த டீ சில்வா 
ஊடகவியளாலர் சந்திப்பில் கூறிய விடையங்கள்


*இளமையும் அனுபவமும் கலந்த இறுதி அணியை தேர்வு செய்வதே 
எமது எதிர்பார்ப்பு.
* வாஸ் சனா இருவரினதும் ஆற்றல்கள் எமக்கு தெரியும் 
ஆனால் அவர்களின் அண்மைய பெறுபேறுகளையும் கவனத்தில் எடுக்கவேண்டியுள்ளது.
*அணியின் ஒற்றுமை மிக முக்கியமானது
அணியின் ஒற்றுமைக்குப்பங்கம் விளைவிப்பவர்கள் உடனடியாக 
அணியிலிருந்து வெளியேற்றப்படுவர்.
*மே..தீவுகள் அணியுடனான 5 போட்டிகள் கொண்ட தொடர்
ஒத்திவைக்கப்பட்டது துரதிஸ்ட்டவசமானதுஇறுதி அணியை 
தேர்வு செய்ய இந்தத் தொடரைத்தான் எதிர்பார்த்திருந்தோம்.
 இப்போதைக்கு எங்களிடமிருக்கும் அடிப்படை விடையங்களைக்
 கொண்டே அணியைத் தேர்வு செய்யவேண்டியிருக்கிறது


பல்லேகலஹம்பாந்தோட்டபுனரமைக்கப்பட்ட ஆர்.பிரேமதாச மைதானம் 
ஆகியவற்றில் இலங்கை அணியினர் பெரிதாக போட்டிகளில் விளையாடவில்லை.
எனவே இம்மைதானங்களில் இலங்கை அணியினர் விளையாடும்போது அது 
ஒரு நடுநிலையா மைதானத்தில் விழையாடுவது போன்றே  இருக்கும்.
 இது தொடர்பாக கருத்துக் கூறிய அரவிந்த டி சில்வா

"சர்வதேச மட்டத்தில் விளையாடும் ஒரு வீரருக்கு இந்த மைதானத்தில்
தான் பெரிதாக விளையாடவில்லை பழக்கப்படாத மைதானம்/ஆடுகளம்
என்று சாக்குப் போக்கு சொல்ல முடியாது
இருந்த போதும் எமது வீரர்களுக்கு இந்த மைதானங்களில் போதிய அளவு 
பயிற்சிகளை எடுத்துக்கொள்ள அவகாசம் உண்டு” என்று கூறினார்.  


** தகவல் ஆதாரம்:Cricinfo









Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 comments:

அஹமட் சுஹைல் சொன்னது…

நன்றி உங்கள் வருகைக்கும்.
தகவலுக்கும்

aiasuhail.blogspot.com சொன்னது…

@தமிழ் திரட்டி

Thnx 4 ur infrmtn

Ahamed Suhail சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.