RSS

இங்கிலாந்து தொடர் இனம் காட்டிய இலங்கையின் இளம் கிரிக்கட் நாயகர்கள்

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகள்ஒரு 20-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒரு நீண்ட தொடர் நிறைவுக்கு வந்துவிட்டது.

இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் மிக முக்கியமான தொடர்.
உலகக் கிண்ணத்தொடரின் பின்னர் இடம்பெறும் முதலாவது தொடர்.
இரு அணிகளுக்கும் புதுத் தலைவர்கள்இரு அணிகளிலும் சில சில மாற்றங்கள் சில புதுமுகங்கள் என்று இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருந்தது.

இரு தலைவர்களும் தங்களை நீருபிக்கவேண்டியிருந்ததும் இந்தத் தொடர் முக்கியாமாவதற்குக் காரணமாகும்.

இப்படியான ஒரு தொடரில் டெஸ்ட் போட்டிகளை 1-0 என்றும் ஒரு நாள் போட்டிகளை 3-2 என்றும் இங்கிலாந்து கைப்பற்ற 20-20 போட்டியை மட்டும் இலங்கை வென்றது.

இந்தத் தொடரிலே ஒரு நாள் போட்டிகளின் போதுநான் அவதானித்த சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆவல்கொள்கின்றேன்.

அணித்தலைவர் டில்சான்:

 இலங்கை அணியின் முழு நேர அணித்தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் டில்சான் தலைமைதாங்கிய முதலாவது தொடர்இந்தத் தொடர் ஒரு தலைவராகவும் அவருக்கு சிறப்பாக அமையவில்லை ஒரு துடுப்பாட்ட வீரராகவும் அவருக்கு சிறப்பாக அமையவில்லை.
போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்திலேயே ஆட்டமிழந்தார்அவர் அமைத்த களத்தடுப்பு வியூகங்களும் சாதாரண ஒரு களத்தடுப்பு வியூகமே தவிர எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக அமையவேயில்லை.

டில்ஸான்…. துடுப்பாட்டத்தில் வெற்றிகரமாக சொதப்புவதற்கு தலைமைத்துவ அழுத்தம்தான் காரணமா என எனக்குத் தெரியவில்லைஇனிவரும் தொடர்கள்தான் அதற்கு பதில் சொல்லவேண்டும்.

டில்சான் சில பல எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் தலைவராக நியமிக்கப்பட்டார்இந்த நிலையில் அவரது துடுப்பாட்ட பெறுபேறுகளும் போட்டிப் பெறுபேறுகளும் இப்படியே அவருக்கு பாதகமாக அமையுமானால் டில்சான் தனது தலைமைத்துவப் பதவியை இழப்பது நிச்சயம்இந்த போட்டிகளிலும் ஒரு போட்டியலாவது அணியின் தலைவர் ,அணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் என்ற எந்த ஒரு பொறுப்புணர்வோநிதானமோ அவரிடம் காணப்படவில்லை.

இதற்கு மாற்றமாக இங்கிலாந்து அணித்தலைவர் குக், இவர் டில்சானை விட வயது அடிப்படையிலும் போட்டிகள்அனுபவம் அடிப்படையிலும் மிக இளையவர். இவரிடம் இருக்கும் பக்குவம்பொறுமைநிதானம் டில்சானிடம் துளியும் இல்லை.
நடந்த போட்டிகளிலும் குக் பெற்றுக்கொண்ட ஓட்டங்கள் 298 டில்சான் பெற்றுக்கொண்டது வெறும் 17 ஓட்டங்கள்.

இவையெல்லாவற்றையும் வைத்து இலங்கை இங்கிலாந்து தலைவர்களை ஒப்பிட்டு  ஒரு வரியில் கூறினால்
எல்லாவகையிலும் திலகரத்ன டில்ஸான் < அலிஸ்டயர் குக்

இந்தத் தொடரில் இலங்கைக்கு பாதகமாக அமைந்த மற்றுமொரு விடையம் உபதலைவர் திலின கண்டம்பிஅவரை அணிக்குள் எடுத்ததே தவறு அதற்குள் அவரை அணியின் உபதலைவராக வேறு நியமித்தது நகைப்புக்குரியது.
 தலைவர் டில்சான் மற்றும் உபதலைவர் கண்டம்பியின் Out of form காரணமாக  துடுப்பாட்டவீரர்கள் இருந்தும் இல்லாமலேயே இலங்கை அணி ஒவ்வொரு போட்டியிலும் ஆடியது.

அடுத்தவர் நுவன் குலசேகரஒரு காலத்தில் பந்துவீச்சுத் தரப்படுத்தலில் முதலாமிடத்திலிருந்த இவருக்கு நடந்தது என்ன.? பந்துவீசில் வேகம் இல்லை பெரிதாக ஸ்விங்குமில்லைகுலசேகர சிறந்த ஃபோமிற்குத் திரும்பி தன்னை மீள நிரூபிக்காவிட்டால்  அடுத்தடுத்த தொடர்களில் அவரின் இடம் பறிபோவது உறுதி.


இவை ஒரு புறமிருக்க இந்தத் தொடர் இலங்கை கிரிக்கட்டிற்கு பல சாதகத்தன்மைகளை வெளிக்காட்டியிருக்கிறது,.
அதுதான் இலங்கை கிரிக்கட்டின் எதிர்கால நாயகர்களை,  அற்புதமான இளம் நட்சத்திரங்களை இனம் காட்டியிருக்கிறது.அவர்கள்தான்
டினேஸ் சந்திமால்,ஜீவன் மென்டிஸ்,அஞ்சலோ மெத்யூஸ் மற்றும் சுராஜ் ரந்தீவ்  கூடவே சுரங்க லக்மாலையும் இணைத்துக்கொள்ளலாம்.


ஏஞ்சலோ மெத்யூஸ்: (24 வயது ஜொலிக்கும் வைரம் எதிர்கால captain cool )


இலங்கை கிரிக்கட்டுக்கு கிடைத்த அழகான வைரம்அணிக்கு வந்த நாள் முதல் சிறந்த ஃபோமில் உள்ள ஒரு வீரர் என்றால் அது மெத்யூசாகத்தான் இருக்கும்இளமையாக இருந்தாலும் ஆட்டத்தில் ஒரு முதிர்ச்சிபொறுமைநிதானம்ஆளுமைஅதிரடிஎன்ன ஒரு அற்புதமான வீரர் இவர்என்னை மட்டுமல்ல இலங்கை கிரிக்கட் ரசிகர்களின் சூப்பர் ஸ்டார் மெத்யூஸ்தான்.  மெத்யூஸ் ஒரு சிறந்த வீரர் என்பதை இனம்காட்டிய தொடர் இதுவல்ல என்றபோதும் அவரை இன்னும் புடம்போட்டுக்காட்டியது இந்தத் தொடர்தான்.

எந்தக் கட்டத்திலும் நிதானம்,பொறுமைஉதட்டில் மெலிதான புன்முறுவல்… ம்ம் அற்புதம்.
நான் உற்பட என் பல நண்பர்கள் ஏற்றுக்கொண்ட ஒரு விடையம் இலங்கை அணியின் எதிர்கால Captain Cool ஏஞ்சலோ மெத்யூஸ்தான்"

இனிவரும் நாட்களில் ஒவ்வொரு தொடருக்கும் இலங்கைத் தெரிவாளர்கள் வீரர்களைத் தெரிவுசெய்யும் போது பிள்ளையார் சுழி போல் முதலில் மெத்யூசை தெரிவு செய்து எழுதிவிட்டுத்தான் தலைவர் உட்பட ஏனைய 14 பேரையும் தெரிவு செய்வார்கள்.

போட்டிக்குப் போட்டி தன்னை நிரூபித்து வளப்படுத்தி வரும் இந்த வைரம்நாட்கள் செல்லச்செல்ல இன்னும் பிரகாசமாய் ஒளிவீசும்.


தினேஸ்  சந்திமால்:(21 வயது லோர்ட்ஸ் நாயகன்.)

சந்திமாலுக்கு 21 வயதுதானா என்பதில் எனக்கு சந்தேகம்தான்எந்த மாதிரியான சூழ்நிலைக்கும் ஒத்துப்போகும் ஆற்றல்,  பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் அசாத்திய தைரியம், பந்துகளை விளாசும் வேகம்பந்துகளை இடிமாதிரித்தாக்கும் வலுவான அடிகள்நிதானம் கலந்த அதிரடிஇவற்றையெல்லாம் பார்க்கும் போது சந்திமாலின் வயது உண்மையிலேயே 21 தானா என்று எண்ணத் தோன்றுகின்றது.

தனது வயதையும் மீறிய ஆற்றல் அவரிடமிருக்கிறதுஇலங்கை வீரர்கள் பெரிதும் சிரமப்படும் பவுன்ஸ் பந்துகளை இவர் லாவகமாகக் கையாள்கிறார்சிறந்த களத்தடுப்பாளரும் கூட.21 வயதிலேயே கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் சிறப்பாகப் பயன்படுத்தி அற்புதமாய் ஆடும் இவருக்கு மிக நீண்டபிரகாசமான கிரிக்கட் எதிர்காலம் இருக்கிறது.

இந்தத் தொடரில் பெற்றுக்கொண்ட மிக நேர்த்தியான முக்கியமான சதம் மற்றும் அரைச்சதம்  மூலம் இவர் தன்னை சிறப்பாக நிரூபித்திருக்கிறார்இது இவரை அடுத்து வரும் பலதொடர்களுக்கு தெரிவு செய்யப்படக் காரணமாய் அமையும்இலங்கை அணியின் மத்திய வரிசையில் தனக்கான இடத்தை ஆணித்தரமாக பிடித்திருக்கும் இவர் இந்த இடத்திலிருந்து அகற்றப்படவேண்டுமானால் ஒன்றில் மிக மிக மோசமான அணித்தேர்வாளர்கள் இலங்கை அணியை தெரிவு செய்யவேண்டும்அல்லது அரசியல் காரணங்களாக இருக்கவேண்டும்.

மத்திய வரிசையில் இவரது அதிரடி கலந்த துடுப்பாட்டம் இவரை அடுத்த மஹெலவாக அல்லது மகெலவின் இடத்தை நீண்டகால அடிப்படையில் நிரப்பவந்த ஒருவராகக் காட்டியபோதும்இவர் ஒரு விக்காட் காப்பாளர் துடுப்பாட்ட வீரர் என்பதால் இவரை சங்கக்காரவிற்கு பதிலீடாகக் கருதலாம்.

 ஜீவன் மென்டிஸ்: (28 வயது புன்னகை மன்னன்)

சிறந்த துடுப்பாட்ட வீரர்சிறந்த சுழல் பந்துவீச்சாளர் அற்புதமான களத்தடுப்பாளர் என்று சகல துறை ஆற்றலையும் தன்னகத்தே கொண்டுள்ள வீரர்தனது 7-8 வருட அயராத போராட்டத்தின் பின்னர் தேசிய அணியில் கிடைத்திருக்கும் வாய்ப்பினை மிக நேர்த்தியாக பயன்படுத்திக்கொண்டார்.

லெக் ஸ்பின்கூக்லி என மாறுபட்ட பந்துவீச்சு முறைகளைக் கொண்ட இவர் பயன்மிக்க ஒரு துடுப்பாட்ட வீரரும் கூட.சுறு சுறுப்பாக மைதானத்தில் பிசியாக துடிப்பாக செயல்படுவது இவரது தனிச்சிறப்பு.

எனக்கு ஜீவன் மெண்டிசிடம் அதிகம் பிடித்தது அவரது பளிச்சிடும் சிரிப்புதனது அழகிய சிரிப்புடன் மைதானம் முழுதும் சுற்றிவருவார்பந்துவீசும் போது ஓட்டம் கொடுக்கும் போதும் சரி துடுப்பாட்டத்தில் இக்கட்டான கட்டம் என்றாலும் சரி எந்தக் கட்டத்திலும் இவரது முகம் இறுக்கமாகி நான் பார்த்ததே இல்லைஅதே அமைதியான சிரித்த முகத்துடந்தான் எப்பொழுதும் காணப்படுவார்.

துடுப்பாடும் போது பபிள் கம்மினை மென்றுகொண்டுசிரித்த முகத்துடன் (அரவிந்த டீ சில்வாவினைப் போல்துடுப்பு மட்டையை தனது தோளில் தூக்கிவைத்து களத்தடுப்பாளர்களை நோட்டமிடும் அழகே தனி.

பந்துவீச்சில் Short Length இல் பந்துவீசுவதை திருத்திக்கொண்டுவிட்டாரானால் அடுத்து வரும் 10 வருடங்களுக்கு இலங்கை அணியின் அசைக்க முடியாத லெக் ஸ்பின் வீசும் சகலதுறை ஆட்டக்காறர் இவர்தான்.

சுராஜ் ரந்தீவ் : (26 வயது -  வால்ப் பைய்யன்)

முத்தையா முரளீதரன் எனும் மாமனிதனின் இடத்தை நிரப்பவந்து மற்றுமொரு சிறந்த சுழல் பந்துவீச்சாளர் இவர்முரளியின் இடத்தை முழுவதும் நிரப்பமுடியாது என்றாலும் ஒப்பீட்டளவில் முரளியின் இடத்தை நிரப்பக்கூடிய மிகச் சிறந்த தெரிவு சுராஜ் ரந்தீவ்.

துடுப்பாட்டவீரர்களின் அசைவுகளை அவதானித்து அதற்கேற்றவாறு பந்துவீசக் கூடிய பந்துவீச்சுப் பாணிசுழலோடு சேர்த்து பெளன்ஸ் பந்துகளையும்வேகமான பந்துகளையும் வீசக்கூடிய ஆற்றல் உள்ளவர்அதற்கு அவரது உயரமும் கைகொடுக்கிறதுஇவரால் தூஸ்ரா பந்துகளையும் வீச முடியுமாயிருப்பது இன்னுமொரு சிறப்பு.

மிகச் சிறந்த களத்தடுப்பாளர்களத்தடுப்பின் முக்கியமான  பொயிண்ட்” இடத்தில் களத்தடுப்பில் சிறப்பாக ஈடுபடும் வீரர்.

துடுப்பெடுத்தாடும் ஆற்றலும் இவருக்குண்டுமுழு நேரத் துடுப்பாட்ட வீரர்களைப் போல் ஸ்டைலாக துடுப்பெடுத்தாடும் ஆற்றல் மற்றும் முக்கியமான தருணங்களில் நின்று நிதானமாக ஆடும் ஆற்றல் என்பவற்றை தன்னகத்தே கொண்ட அருமையான வீரர்.

இவரை முரளிக்கு ஒப்பிடுவதன் இன்னுமொரு காரணம் இவரும் பாடசாலை நாட்களில் வேகப்பந்து வீச்சாளராக இருந்து அணியின் பயிற்றுவிப்பாளரின் வேண்டுகோள் ஆலோசனையின்படி சுழல் பந்துவீச்சாளராக மாறியவர் என்பதுதான்.


சுரங்க லக்மால்: (24 வயது சீறும் புயல்)


சுரங்க லக்மால் இலங்கை அணிக்குக் கிடைத்த மற்றுமொரு அருமையான வேகப்பந்துவீச்சாளர்வேகம் ஸ்விங் பெளன்ஸ்  இவைதான் இவரின் சிறப்பியல்புபடிப்படியாக தன்னை முன்னேற்றிக்கொண்டு வரும் இவர்எதிர்காலத்தில் இலங்கை அணியில் நிரந்தட இடம்பிடிப்பார் என்பது திண்ணம்.


இவருக்கு உள்ள முக்கியமான ஒரு பிரச்சினை இவரால் தொடர்ச்சியாக நீண்ட நேரம் பந்துவீச முடியாது என்பதுதானாம்அப்படி பந்துவீசினால் இவர் நோய்க்கு ஆளாக வேண்டிவருமாம்அதாவது இவருக்கு குறைந்த ஊட்டச்சத்து காரணமாகத்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட அவர் தொடர்ந்தும் போராடிவருகிறார்இந்த விடயத்தில் சிறப்பான முன்னேற்றமேட்பட்டுள்ளதாகத் தெரிகிறதுஇது ஒரு ஆறுதலான செய்தி.


இவரும் எதிர்கால இலங்கை கிரிக்கட் அணியின் முக்கிய வீரராக வரக்கூடிய அனைத்து தகுதியும் உள்ளது.


இப்படிப்பட்ட இளமையும் திறமையுமிக்க வீரர்களை மற்றுமொருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டிய தொடர் கவலையோடு நிறைவுபெற்றுவிட்டதுஇந்த இளம் நாயகர்களைக் கொண்ட இலங்கை அணி எதிர்காலத்தில் எப்படிச் சாதிக்கப்போகிறது என்பதை அறிய ஆவலோடு காத்திருக்கின்றேன்.

(ஒரு சந்தேகம் சந்திமால்ஜீவன் மென்டிஸ்ரந்தீவ் போன்ற வீரர்கள் இருந்தும் அவர்களின் திறமை தெரிந்தும் அவர்களை கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தெரிவுசெய்யாதுவிட்ட மர்மம்தான் என்னவோ..?)



Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

6 comments:

Mohamed Rizad M.B. சொன்னது…

சிறந்த ஆய்வு மற்றும் எல்லோரும் ஏற்றுகொள்ளகூடிய கருத்துக்கள், பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சுகைல்....

aiasuhail.blogspot.com சொன்னது…

@Mohamed Rizad M.B.
நன்றி ரிசார்ட் Brthr.

எனது பதிவுகளுக்கான உங்கள் ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்த்திருக்கின்றேன்.

நன்றி வருகைக்கும் கருத்திற்கும்

டிலீப் சொன்னது…

சிறந்த அலசல் நண்பரே

aiasuhail.blogspot.com சொன்னது…

@டிலீப்
நன்றி சகோதரா.

Unknown சொன்னது…

அவர் யாரு,இலங்கைக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக இறங்கினார் இறுதி போட்டியில்
???
அவரும் ஒரு எதிர்கால நட்சத்திரம் தான் baas!அவரின் துணிவும்,உடல் வாகும் பறை சாற்றுகிறது!

aiasuhail.blogspot.com சொன்னது…

@மைந்தன் சிவா

திமுத் கருநாரத்ன.

இருக்கலாம் பாஸ் ஆனா அவருக்கு இந்த தொடரில் கிடைத்த ஒரு போட்டியும் சிறப்பாக அமையவில்லை.

அவர் என்னைக் கவரவுமில்லை.பார்க்கலாம் அவரின் திறமையை.

நன்றி பாஸ் வருகைக்கும் கருத்திற்கும்