RSS

என் ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும்,வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும், செய்தார்களா...?




இந்த ஃபேஸ்புக் விசித்திரமான பல விசையங்களைக் கொண்டிருக்கிறது
புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது
ஆனால் இந்த ஃபேஸ்புக் ஒன்றும் ஆச்சரியமானதல்ல
பேஸ்புக் பாவிக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல
பேஸ்புக்கிலே சர்வ சாதாரணமாக வந்துபோகும் ஜீவன்களில் நானும் ஒருவன்..

பேஸ்புக்கில் மற்றவர்கள் ஃபோட்டோக்கு நக்கலடித்தேன்,
ஃபோட்டோக்களை எடிட் பண்ணினேன்
மற்றவர்களைப் பயங்கரமாகக் கலாய்த்தேன்..
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படி எல்லாம்,
ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம்
மறுக்கப் போகிறேன் என்று
இல்லை இலவே இல்லை

பேஸ்புக்கில் மற்றவர்கள் ஃபோட்டோவை நக்கலடித்தேன் ஏன் அவர்கள் ஃபோட்டோ கூடாதென்றா? இல்லை நக்கலடிக்கும் விதமாக அவர்கள் ஃபோட்டோ போட்டார்கள் என்பதற்காக

ஃபோட்டோக்களை எடிட் [பண்ணினேன் ஏன்
அவன் ஃபோட்டோக்களை சீரழிக்க வேண்டும் என்றா?
இல்லை என் ஃபோட்டோவை எடிட் பண்ணியதற்கு பழிவாங்குவதற்காக

மற்றவர்களைப் பயங்கரமாகக் கலாய்த்தேன் ஏன் அவர்களை அவமானப்படுத்தவேண்டும் என்பதற்காகவா?
இல்லை
சும்மா கிளு கிளுப்பு கல கலப்பிற்காக

உனக்கெதற்கு கிளு கிளுப்பு யாருக்குமே கிடைக்காத கிளு கிளுப்பு
என்று கேட்பீர்கள்.
ஆமாம் தேவைப்பட்டது என் தனிமையைப் போக்க எனக்குத் தேவைப்பட்டது. எனது சுய நலத்திலே பொது நலமும் கலந்திருக்கிறது

தரப்படுத்தலில் முன்னிலை பெறவேண்டும் என்பதற்காக நலிந்து போன மேற்கிந்தியத் தீவுகள் அணியை தங்கள் நாட்டுக்கு கூப்பிட்டு அடிமேல் அடி அடித்தார்களே இந்திய கிரிக்கட் அணி அவர்களைப் போல

என்னைத் தப்பு சொல்கிறீர்களே…. எனது பேஸ்புக் பிண்ணனியை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்நான் பார்த்து வந்த அவமானங்கள் எத்தனை, வில்லங்கம் பிடித்தவர்கள் எத்தனை, பொறாமை பிடித்தவர்கள் எத்தனை என்பதனைக் கணக்குப் பார்த்திட இயலும்

நான் Barn Buddy இல் விவசாயம் செய்ததில்லை ஆனால் பலருக்கு Barn Buddy இல் விவசாயம் செய்ய உதவியிருக்கிறேன்
நான் City Ville  விளையாடியத்தில்லை ஆனால் பலர் City Ville  யில் புள்ளிகள் பெற உதவியிருக்கிறேன்..
நான் சிரித்து மகிழ்ச்சியாக இருந்ததில்லை.. ஆனால் பலர் சிரித்து மகிழ காரணமாயிருந்திருக்கிறேன்

கேளுங்கள் என் கதையை என்னைத் தப்பாக நினைப்பதற்கு முன் கேளுங்கள்

இலங்கையிலே அழகிய சம்மாந்துறையிலே பிறந்தவன் நான்
பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர்..
இலங்கையின் தலையெழுத்திற்கு நானென்ன விதிவிலக்கா?
கொழும்பு என்னை அழைத்தது
உயர்ந்தவனாக்கியது தனிமையுமாக்கியது.

தனிமையில் தனியாக உழன்றேன்..
எங்கு செல்வது என்று தவித்தேன்..
நற்புகள் இல்லாமல் பித்துப்பிடித்தவன் போல் அலைந்தேன்
இப்படி தனிமையில் அலைந்த நான் கடைசியில்
என் தனிமையைப் போக்க ஃபேஸ்புக் வந்தேன்

என் பெயரோ அஹமட் சுஹைல்.
எவ்வளவு அழகான பெயர்.
ஆனால் கையில்காசுமில்லை காதலிக்க ஆளுமில்லை

நான் மட்டும் நினைத்திருந்தால் ஃபேஸ் புக்கில் ஃபேக் அக்கெளண்ட் உருவாக்கி பலர் வாழ்க்கையைக் கெடுத்திருக்கலாம்
மாடர்ன் ஃபிகரை சட்டிங்கில் மடக்கி ப்ராக்கெட் போட்டிருக்கலாம்.
மற்றவர்களின் அக்கெளண்டை ஹெக் பண்ணீ ப்லாக் மெயில் பண்ணியிருக்கலாம்..
ஆனால் அதைத்தான் விரும்புகிறதா இந்த ஃபேஸ் புக் சமூகம்

ஸ்டேடஸ் போட்டால் கலாய்த்தார்கள் ஓடினேன்

ஃபோட்டோ போட்டால் எடிட் பண்ணீ அசிங்கப் படுத்தினார்கள் ஓடினேன்

வேண்டுமென்றே என் ஃபோஸ்ட்டுக்கு லைக் போடாமல் கொமெண்ட் போடாமல் தவிர்த்தார்கள் ஓடினேன்.

சற்றிங்கில் Hi சொன்னால் bye சொன்னார்கள் ஓடினேன்

ஃபேக் அக்கெளண்ட் வைத்து ஏமாற்றினார்கள் ஓடினேன்

குறூப்பாக சேர்ந்து காமெடி பண்ணினார்கள் ஓடினேன்

எனது சொந்த கற்பனையில் வந்த போஸ்ட்களை கொப்பி பண்ணீ அவர்கள் போஸ்ட் என்றார்கள் ஓடினேன்.

பொய்யான வதந்திகளை என் மேல் கட்டிவிட்டார்கள் ஓடினேன்

ஓடினேன் ஓடினேன்….. ரொம்பத் தூரம் ஓடினேன்
Laptop பை விட தூரம் ஓடியதால் Lap top எட்டவில்லை  அதனால் திரும்பி Laptop அருகிலே வந்துவிட்டேன்

பாவம் என் வாழ்க்கை உசைன் போல்டை விடவும் வேகமாக ஓடவேண்டியதாக மாறிவிட்டது.
என் ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும்,வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும், எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்க வேண்டும் இன்று  என்னைக் குற்றம் சொல்வோர்..

செய்தார்களா..? சப்போர்ட் பண்ணினார்களா எனக்கு...?

போட்ட ஸ்டேடஸ்களையெல்லாம் கலாய்த்தது யார் குற்றம்?
கலாய்த்த அவர்கள் குற்றமா? இல்லை அவர்கள் கலாய்க்கும் வண்ணம் போஸ்ட் போட்ட என் குற்றமா…?

என் ஃபோட்டோக்களை எடிட் பண்ணியது யார் குற்றம்?
எடிட் பண்ண உதவிய ஃபோட்டொ சொப்பின் குற்றமா? இல்லை மற்றவர்கள் பொறாமைப் பட்டு எடிட் பண்ணி அசிங்கப் படுத்த தூண்டும் வண்ணம் ரொம்ப அழகாய்ப் பிறந்த என் குற்றமா?

ஃபேக் அக்கெளண்ட் உருவாக்கியது யார் குற்றம்?
ஃபேக் அக்கெளண்ட் உருவாக்கியவர்களின் குற்றமா…? இல்லை ஃபேக் அக்கெளண்ட் உருவாக்க வாய்ப்பளித்த ஃபேஸ்புக்கின் குற்றமா?

என் போஸ்ட்களை கொப்பி பண்ணீ அவர்கள் போஸ்ட் என்று சொன்னது யார் குற்றம்?
கிட்னியை யூஸ் பண்ணீ யோசித்த என் குற்றமா? இல்லை அதை அப்பட்டமா கொப்பி அடித்த அவர்கள் குற்றமா?

இப்படியானவர்களைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்று யோசித்து
சைலண்டாக இருந்த நான் வையலண்டாக மாறினேன்..

இப்படியானவர்கள் ஃபேஸ்புக்கிலிருந்து ஒதுங்கும் வரை என்னைப் போன்ற அமைதியான அஹமட் சுஹைல்கள் ஆக்ரோசமான சுனாமிகளாகத்தான் மாறிக் கொண்டிருப்பார்கள்...




** எண்ணம்,எழுத்து  அஹமட் சுஹைல் **

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இன்னிக்கு காதலர் தினமாமே,,,,?

---- இன்னிக்கு காதலர் தினமாமே ----

எத்தனை பேர் ரோமியோ - ஜூலியட் ஆகப் போறாங்களோ....?
எத்தனை பேர் தேவதாஸ் ஆகப் போகிறார்களோ..?
எத்தனை பேர் மீராவாகப் போகிறார்களோ...?

எத்தனை முத்தங்கள் பரிமாறப்படப் போகின்றனவோ...?
எத்தனை ஜோடிகள் எந்தப் புதருக்குள் ஒதுங்கப் போகிறதோ..?
எத்தனை குடும்பங்கள் சீரியழியப் போகின்றனவோ..?

எத்தனை ஐஸ்கிரீம்கள் சாப்பிடப்பட்ப் போகின்றனவோ...?
எததனை சாராய போத்தல்கள் குடிக்கப் படப்போகின்றனவோ...?
எத்தனை விச போத்தல்கள் குடிக்கப்படப் போகின்றனவோ...?

எத்தனை மனமாற்றங்கள் நிகழப் போகின்றனவோ...?
எத்தனை மதமாற்றங்கள் நிகழப் போகின்றனவோ...?

எத்தனை காதல் திருமணத்தில் முடியப்போகிறதோ..?
எத்தனை காதல் ஓட்டத்தில் முடியப்போகிறதோ..?

எத்தனை நண்பர்கள் துரோகிகளாகப் போகிறார்களோ...?
எத்தனை நண்பர்கள் காதலர்களாகப் போகிறார்களோ...?

எத்தனை அறைகள் எத்தனை அடிகள் விழப் போகின்றனவோ...?
எத்தனை சண்டைகள் வரப்போகிறனவோ...?
எத்தனை தற்கொலைகள் நிகழப் போகின்றனவோ...?

எத்தனை பேர் பிரமச்சரியத்தை தொடரப் போகிறார்களோ...?
எத்தனை  வீட்டு அலுமாரிகள் காதலர் தின பரிசுகளால் நிறையப் போகின்றனவோ..?

எத்தனை ஆயிரங்கள் லட்சங்கள் செலவாகப் போகின்றனவோ...?
எத்தனை பொய்கள் பேசப்படப் போகின்றனவோ..?



இதையெல்லாம் யோசிச்சா நமக்கு காதல் வரும் என்றீங்க.....?
ஹி ஹி ஹி


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மீண்டும் தலைவனான மஹெலவிற்கு என் வாழ்த்துக்கள்..


இன்று இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் நடைபெறப்போகும் கிரிக்கட் போட்டி பல வழிகளில் முக்கியமான போட்டி

1.இலங்கை அணிக்கு என் அபிமான தலைவன் மஹெல   மீண்டும் தலைமை தாங்கும் முதலாவது போட்டி
2.உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியின் பின்னர் இலங்கை அணி இந்திய அணியை எதிர்கொள்ளும் முதலாவது போட்டி.
3. இலங்கை அணி புதிய பயிற்றுவிப்பாளருடன் களமிறங்கும் முதலாவது போட்டி
4.டில்சான் தலைமைத்துவ அழுத்தங்கள் அற்ற பழைய வீரராக களமிறங்கப் போகும் போட்டி
5.புதிய நிருவாகம் மற்றும் தேர்வாளர்களுடன் இலங்கை அணி களமிறங்கும் முதலாவது போட்டி
6.இரு அணிகளுக்கும் பொதுவான ஒரு ஆடுகளத்தில் நடைபெறும் போட்டி


இப்படி பல வழிகளில் நாழைய போட்டி முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் அர்ஜுனவுக்குப் பின்னர் எனக்கு ரொம்பவும் பிடித்த ஆளுமை மிக்க தலைவனான மஹெல மீண்டும் தலைமைத்துவப் பதவியை பொறுபேற்றிருப்பதும் அவரின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை அணி விளையாடவிருப்பதுமே எனக்கு அதிக ஆவலையும் எதிர்பார்ப்பையும் முக்கியதுவத்தினையும் தருகிறது.


இலங்கை அணியின் இறுதிவரை போராடும் குணம் சங்கா டில்சான் காலத்தில் காணாமல் போயிருந்தது. ஆனால் அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து இறுதிவரை போராடுவதே மஹெலவின் தனிச் சிறப்பு. மஹெலவின் வருகையோடு  இலங்கை அணியின் போராட்ட குணமும் மீண்டும் வருமென உறுதியாக நம்புகிறேன்

இலங்கை அணிக்கும் (என் அபிமான தலைவன்) மஹெலவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


அதேவேளை இக்கட்டான ஒரு கால கட்டத்தில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கி தன்னாலான பங்களிப்பைச் செய்துவிட்டு ஓய்வு பெற்ற டில்சானிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS



64th Anniversary of Independence


4th February 2012


உலகுக்கு இறைவன் கொடுத்த இயற்கைக் கொடை இலங்கை.

இது எங்கள் தாய் நாடு.

 
 
ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
 
 
ශ්‍රී ලංකා මාතා
අප ශ්‍රී....... ලංකා නමෝ නමෝ නමෝ නමෝ මාතා
සුන්‍දර සිරිබරිනී සුරැඳි අති සෝබමාන ලංකා
ධාන්‍ය ධනය නෙක මල් පලතුරු පිරි ජය භුමිය රම්‍යා
අප හට සැප සිරි සෙත සදනා ජීවනයේ මාතා
පිළිගනු මැන අප භක්‍තී පූජා
නමෝ නමෝ මාතා
අප ශ්‍රී ...... ලංකා නමෝ නමෝ නමෝ නමෝ මාතා
ඔබ වේ අප විද්‍යා
ඔබ මය අප සත්‍යා
ඔබ වේ අප ශක්‍ති
අප හද තුළ භක්‍තී
ඔබ අප ආලෝකේ
අපගේ අනුප්‍රාණේ
ඔබ අප ජීවන වේ
අප මුක්‍තිය ඔබ වේ
නව ජීවන දෙමිනේ නිතින අප පුබුදු කරන් මාතා
ඥාන වීර්‍ය වඩවමින රැගෙන යනු මැන ජය භූමී කරා
එක මවකගෙ දරු කැල බැවිනා
යමු යමු වී නොපමා
ප්‍රේම වඩා සැම හේද දුරැර දා නමෝ නමෝ මාතා
අප ශ්‍රී........ ලංකා නමෝ නමෝ නමෝ නමෝ මාතා
 
 
Mother Lanka we salute Thee!
Plenteous in prosperity, Thou,
Beauteous in grace and love,
Laden with grain and luscious fruit,
And fragrant flowers of radiant hue,
Giver of life and all good things,
Our land of joy and victory,
Receive our gratefull praise sublime,
Lanka! we worship Thee.
Thou gavest us Knowledge and Truth,
Thou art our strength and inward faith,
Our light divine and sentient being,
Breath of life and liberation.
Grant us, bondage free, inspiration.
Inspire us for ever.
In wisdom and strength renewed,
Ill-will, hatred, strife all ended,
In love enfolded, a mighty nation
Marching onward, all as one,
Lead us, Mother, to fullest freedom.
 
 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS