RSS

வந்தாள் - சென்றாள் - மீண்டும் இறந்துவந்தாள்



அவள் ஒரு அழகிய தேவதை…… பார்ப்பவரை கவர்ந்திழுக்க தேவையான அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற அழகி அவள். பாடசாலை விடுமுறை என்பதால் தன் சொந்த ஊரான சாய்ந்தமருதில் இருந்து எங்கள் ஊரிலுள்ள அவளது உறவினர்களான எங்கள் உறவினர் வீட்டுக்கு வந்திருந்தாள். அவர்களோடு எங்கள் வீட்டிற்கும் வந்திருந்தாள்…. அளவாகப் பேசினாள் ஆனால் அழகாகப் பேசினாள்எங்கள் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தாள்; சென்றுவிட்டாள்

சரியாக 2 வாரங்கள்தான் போயிருக்கும் அவள் மீண்டும் வந்தாள்இல்லை இல்லை கொண்டுவரப்பட்டாள்.. அவளது குடும்பத்தைச் சேர்ந்த 5 ஜனாசாக்களோடு ஆறாவதாய் அவளும் உழவு இயந்திரப் பெட்டியில் கொண்டுவரப்பட்டாள்….
.
அந்த அழகிய முகம் முழுவதும் சேறு….. அழகாய் அளவாய்ப் பேசிய வாய் நிறைய கடல் மணல், அற்புத அபிநயங்கள் காட்டிய கைகளிலும் உடலிலும் காயங்கள். ஆக மொத்தத்தில் பெளர்ணமி நிலவு அன்று அமாவாசையாய்க் காட்சி தந்தது. சுனாமியின் கோரப் பிடியில் அந்த தேவதையும் சிக்கிக்கொண்டாள். சிதைந்து போனாள்….

அன்று அழுதன என் கண்கள்பலர் மத்தியில் வெட்கமின்றி அழுதன என் கண்கள்..

அவள் பிரிந்து இன்றுடன் 9 வருடம் ஆனபோதும் இன்னும் நினைவில் இருக்கிறது அவள் முகம்.

எங்கோ இருந்து வந்து ஒரு நாள் பழகிய யாரோ ஒரு உறவுக்காக எனக்கே அந்த வலி அந்த கவலையென்றால்….

இந்தச் சுனாமியால் பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், சகோதரனை, சகோதரியை, உறவுகளை இழந்த உள்ளங்கள் என்ன பாடுபட்டிருக்கும்? என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கும்?
உணர முடிகிறது உணரமட்டும்தான் முடிகிறது.

இந்த சுனாமியில் உயிர்நீத்த அத்தனை உயிர்களையும் இறைவன் பொருந்திக்கொள்ளவேண்டும்….

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

sixஉ four உ செம அடி அடி


Hey Dude
Hi Antony
Whats Up? Whats Happening?
பாக்கிஸ்தான் Lost Da..
So Sad..

sixஉ four உ செம அடி அடி
sixஉ four உ செம அடி அடி
T20 மெச்சில
அடிச்சோம் பாரு ஹைட்டுல
பந்து கையில சிக்கல
ஹஃபீஸ் தம்பி புலப்புறான்

sixஉ four உ செம அடி அடி
sixஉ four உ செம அடி அடி

அஃப்ரிடி போட்ட ஸ்பின்னுக்கு
குசால் போட்டு சாத்துறான்...
போலு போட தெரியாமலே
ரன்ன வாரி இறைக்குறான்

sixஉ four உ செம அடி அடி
sixஉ four உ செம அடி அடி

போடுவான்டா பிச்சு மேல தூஸ்ரா Ball அ
சங்கா அடிச்சா அத்தனையும் கூர மேல

sixஉ four உ செம அடி அடி
sixஉ four உ செம அடி அடி

ரன் ரேட்ட பார்த்தா தல சுத்தி சுத்தி வருகுது
required rate  நினைக்கையில (பாக்கிஸ்தானுக்கு) பைத்தியம்தான் பிடிக்குது

sixஉ four உ செம அடி அடி
sixஉ four உ செம அடி அடி


---- Remix கவிஞர் Suhail ----














Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவனுங்கள நிறுத்தச்சொல் நானும் நிறுத்துறன்.


நண்பன் : விட்ருடா இந்த ஃபேஸ்புக்க விட்டுடு

நான் : செத்துருவண்டா விட்டா செத்துடுவன்

நண்பன் : அப்போ நீ கடைசிவரைக்கும் இப்படித்தான் இருக்கப்போறியா? நிறுத்தவே மாட்டியா?

நான் : நிறுத்துறன் ஆனா அவங்களையெல்லாம் நிறுத்த சொல் நானும் நிறுத்துறன்

நண்பன் : யார?

நான் : எல்லாரையும்

நண்பன் : யார??????????????

நான் : நான் போடுற ஸ்டேடஸ் நல்லா இருந்தாக் கூட (எப்பவாச்சும் ஒரு நாளைக்கு நல்லா இருக்கும்) வந்து நக்கலா கொமெண்ட் பண்ணிப் போறானே...
 அவன நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறன்.

அப்பாவிப் பையன் (நாந்தான்) என் ஃபோட்டோவ ஃபேஸ்புக்ல போட்டதும் மெசேஜ்ல சூப்பரா இருக்குனு சொல்லிட்டு கொமெண்ட்ல வந்து நக்கலடிக்கானே...
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

கிட்னியையும் மூளையையும் பாவிச்சு கஸ்ட்டப்பட்டு ஒரு ஸ்டேடஸ் யோசிச்சு போட்டா அதக் கொப்பியடிச்சு அவண்ட சொந்த போஸ்ட் மாதிரிப் போர்ரானே துரோகி...
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

விடிய விடிய ஒன்லைன் இருந்துட்டு நம்ம கூட பேசமா பொண்ணுங்ககூட கடல போட்டுட்டு காலையில கேட்டா இல்ல மச்சான் ஒன்லைன்ல போட்டுட்டு அப்டியே தூங்கிட்டண்டானு பொய்யா அள்ளி விடுறான் பார்.....
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

நாம ஒன்லைன் இருக்கும்வரை ஒழிஞ்சு இருந்துட்டு; நாம ஓஃப்லைன் போனபிறகு ஓடிவந்து நம்ம ஏரியால நமக்கு எதிரா கொமெண்ட் போறானே....
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

English சொல் ஒண்ணுக்கு கூட ஸ்பெலிங் தெரியாம இங்லிஸ்ல Status/Comment போட்டுட்டு கேட்டா அது Face book English, shortcuts அப்படின்னு பீடர் விடுவானே... அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

பக்கத்து தெருவில இருக்குற பெட்டிக் கடைக்குப் போய் சவர்க்காரம் வாங்கினாக் கூட Status I went  shopping. Sooo Tired  னு Status போட்டு படம் காட்டுறானே....
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

பக்கத்து கட்டில்ல படுத்துக்கிட்டே மச்சான் I miss you. Where are you da னு ஸ்டேடஸ் போட்டு கடுப்பேத்துவானே ரூம் மேட்.....
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

நாம என்னதான் போஸ்ட் போட்டாலும் ஒரு லைக் கூட பண்ணாம ஒரு பொண்ணு ஹாய் னு போட்டாக் கூட முதல் ஆளாப் போய் லைக் பண்ணி ஹாய் டியர்னு ஒரு கொமெண்டும் போட்டுட்டு வர்ரானே.....
அவன நிறுத்தச்சொல் நான் நிறுத்துறன்
.

நமக்கு ஒரு மேஜர் ஒப்ரேசன் இருந்து அதை ஒரு ஸ்டேடஸா போட்டாலும் அந்த ஸ்டேடசை ஸ்கிப் பண்ணிட்டு "ltl cold" னு போட்டிருக்கிற ஒரு பொண்ணு ஸ்டேடஸ்க்கு போய் “ so sad, get well soon, tc dear " நு பாசத்த பொழியுறானே பாசக்காறன் ......
அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

நம்ம லெப்டொப்பையும் நம்ம டொங்கலையும் கடன் வாங்கி நமக்கு எதிராவே ஸ்டேடஸ், கொமெண்ட் போடுவானே துரோகி....
 அவனை நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறன்.

ஃபேஸ்புல நாங்க என்ன டைம் பாசுக்கா இருக்குறம். இல்ல அதையே தொழிலாப் பண்றம். வேற தொழில் இல்லடாக் கண்ணா

நண்பன் : நெஞ்சத் தொட்டு சொல்லுடா இதெல்லாம் டைம் வேஸ்ட்னு ஒனக்குத் தெரியல? தப்பில்ல...?

நான் : இல்லதப்பில்லடா நாம பண்ற கூத்தப் பார்த்து நாலு பேர் லைக்குறாங்கண்ணா எதுவுமே தப்பில்ல

 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவள் ஓஃப்லைன் போனாளே

அவள் பறந்து போனாளே, என்னை மறந்து போனாளே..

..................Its My Remix........

அவள் ஓஃப்லைன் போனாளே ,என்னை மறந்து போனாளே
நான் ஒன்லைன் வந்ததும் வேண்டுமென்றே (அவள்) ஓஃப்லைன் போனாளே

என் ஃபோட்டோக்கு லைக்கில்லை
என் போஸ்டுக்கு கொமெண்ட் இல்லை
என்னைக் கணக்கில் எடுக்கவில்லை
என் காதலை ஏற்கவில்லை (2)

fb இல் வேறு ஒப்சனில்லை
என் பிகர் (எனக்கு) ஒன்லைனில்லை
என்னோடு சற்றுக்கு அவளில்லை
யாரும் ஆறுதல் சொல்லவில்லை (2)

அவள் ஓஃப்லைன் போனாளே, என்னை மறந்து போனாளே
நான் ஒன்லைன் வந்ததும் வேண்டுமென்றே (அவள்) ஓஃப்லைன் போனாளே

என் சற்றினை ஒன்லைன் வைத்தேன்
அவள் வரும் வரை காத்திருந்தேன்
அவள் (ஒன்லைன்) வந்ததும் பார்த்தாளே
எனக்கு ஓஃப்லைன் போட்டாலே (2)

அவள் என்னை ஒதுக்கி வைத்தாள்
நான் அவளை ஒதுக்கமாட்டேன்
என் உயிரே அவள் அல்லவா
ஏனோ ஓஃப்லைன் போட்டுச் சென்றால்.......... (2)

அவள் ஓஃப்லைன் போனாளே என்னை மறந்து போனாளே
நான் ஒன்லைன் வந்ததும் வேண்டுமென்றே (அவள்) ஓஃப்லைன் போனாளே

(ரீமிக்ஸ் கவிஞர் : சுஹைல் )

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயமும் வடிவேலு காமெடியும்.....


பூச்சியத்தால் பெருக்குதல் என்று கணிதத்தில் ஒன்று உண்டு. அதாவது நாம என்னதான் கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல், சமன்பாடுகள் என போட்டு பக்கம் பக்கமா கணக்குச் செய்தாலும் ஏதாவது ஒரு பக்கத்தால் வரும் பூச்சியம் அதனோடு பெருக்குப்பட்டு விடை பூச்சியமாகிடும்.  

அது போலத்தான் நாம என்னதான் பில்டப்பு பண்ணி பக்கம் பக்கமா வசனம் பேசினாலும் எவனாவது ஒருத்தன் ஒத்த சொல்லால நம்மள நோஸ்கட் பண்ணிட்டு போயிடுவான் இதைத்தான் பூச்சியத்தால் பெருக்குதல் என்று சொல்லுவோம்.

இதேபோலத்தான் நவநீதம் பிள்ளையின் இலங்கை வருகையை முன்னிட்டு அரசு பல தயாரிப்புகள் ஏற்பாடுகள் செய்திருந்தது. அமைச்சர்கள் எம்.பி கள் என பலராலும் பல விடயங்கள் நவநீதம் பிள்ளைக்கு கூறப்பட்டது. எப்பாகத்திற்கும் சென்று அவர் யாரையும் சந்திக்க வசதிசெய்து கொடுக்கப்பட்டது. இந்த ஐஸ்வைத்தல்கள் எல்லாம் அரசாங்கத்தின் மீது அவருக்கு நன் மதிப்பு வரவேண்டும் அரசு பற்றி நல்ல கருத்துக்களை அவர் உலகுக்கு சொல்லவேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டது. ஆனால் இதையெல்லாம் ஒரு வாரமாக அனுபவித்துவிட்டு/அவதானித்துவிட்டு; போகும் போது அம்மையார் இலங்கையில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது என்ற அறிக்கையை விடுத்துவிட்டு சென்றுவிட்டார். இது இலங்கை அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஐஸ்வைத்தல்களையும் பூச்சியத்தால் பெருக்கியதாகிவிட்டது.

இவற்றையெல்லாம் நினைக்கும் போது வடிவேலுவின் இந்தக் காமெடிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

 http://www.youtube.com/watch?feature=player_embedded&v=tPqWjIagNcE

தோசை எப்படி செய்யவேண்டும் என்ற ஒரு பெரிய விரிவுரையே வடிவேலு வெயிட்டருக்கு கொடுப்பார் எல்லாத்தையும் ஆர்வமாகக் கேட்ட வெயிட்டர் மிகச் சாதாரணமாக அண்ணனுக்கு ஒரு தோசைனு சொல்லிட்டு போவார். இங்கு வடிவேலு - இலங்கை அரசு
வெயிட்டர்
- நவநீதம் பிள்ளை
தோசை மாஸ்டர்
- சர்வதேசம் / .நா

அரசியல் ஆய்வாளர் : அஹமட் சுஹைல் (நாந்தாங்கோ..........)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தம்புள்ளை-மஹியங்கனை-கிராண்ட்பாஸ் அடுத்து.........???

நோன்புக்கு கண்டி கொழும்புனு மாறி மாறி இஃப்தார் கொடுத்தானுங்க... இப்போ கிராண்ட் பாஸ்ல மொத்தமா எல்லாரும் சேர்ந்து பெருநாள் ட்ரீட் கொடுத்துட்டானுங்க......

ஒரு குழு வந்து பள்ளிய உடைக்கும்
இன்னொரு குழு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்
அங்கவெச்சு எல்லாருமா சேர்ந்து முடிவைத் திணிப்பானுங்க...


ஆக பெளத விவகார அமைச்சும் சரி, அரசும் சரி தங்கள் ஆசையை அடக்குமுறையை மத வெறியைக் காட்ட ஏதோ ஒரு சந்தர்ப்பத்தைப் பாத்திருக்கின்றது என்பது மட்டும் 100% புலனாகிறது.

 தம்புள்ளை பள்ளியில் ஆரம்பித்து... பொது பலசேனவின் மூலம் ஹலால் பிரச்சினை ஆரம்பித்து அதனை நீக்கியாச்சு,
அடுத்து மஹியங்கனைப் பள்ளி, அதனை அடுத்து மாடு அறுப்பது, இப்போது க்ராண்ட்பாஸ் பள்ளி...

இந்தப் பிரச்சினைகளையெல்லாம் ஆரம்பிப்பது யாரோ காடையர்களாக இருந்தாலும் கடைசியில் அந்தக் காடையர்களுக்குச் சார்பாகவே முடித்துவைப்பது அரசாக இருக்கிறது.
ஆகா அந்தக் காடையர்களுக்கும் அரசுக்கும் என்ன வித்தியாசம்?
அவர்கள் அரசின் பூரண அனுசரனண பெற்றவர்கள் என்பது சிறுபிள்ளையும் விளங்கிக்கொள்ளும் வெளிப்படை  உண்மை.

அரசின் சில உயர்மட்ட அமைச்சர்களின் அறிக்கைகளை படிக்கக் கிடைத்தது. படிக்கும் போது சிரிப்பும் கூடவே ஆத்திரமும் வருகிறது.

இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் அரசிற்கு எதிரான சக்திகளின் சதி நடவடிக்கையாம், அரசிற்கு அபகீர்த்தி ஏற்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகளாம்..... #$%^&*(*&^%$

அரசுக்கு எதிரான சதிகாரர்கள்... என்றால் என்ன செய்யவேண்டும்..? அவர்களைக் கைதுசெய்து இந்து சதிகளுக்கு மூளை யார்? அவர்களின் நோக்கம் என்ன? அடுத்த இலக்கு என்ன என்று ஆராய்ந்து அவற்றைத் தடுத்து அரசிற்கு ஏற்படும் களங்கத்தைத் தீர்க்க முனைய வேண்டும். ஆனால் அதைச் செய்தார்களா இல்லை... தாக்குதலில் பங்குபற்றிய ஒருகாடையன் கூட கைது செய்யப்படவில்லை. கமராக்களில் தெளிவான காட்சிகள் இருந்தும் இன்னும் கைது செய்யப்படவில்லை. அதுவும் நாட்டில் பயங்காரவாதத் தடுப்புச் சட்டம் அமுலில் உள்ள நிலையில்.

அமைச்சர் ஒருவர் சொல்லியிருந்தார்.... மனித உரிமைப் பிரச்சினையில் அரசு மாட்டிக்கொண்டிருக்கும் தருணம், பொதுநலவாய உச்சிமாநாடு இலங்கையில் நடைபெறவிருக்கும் தருணம் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் சதி வேலையே இது என்று சொல்லியிருந்தார்.... எனக்கென்ன சந்தேகம் என்றால்.... இப்படி ஒரு காரணத்தை இலகுவாகக் கூறி தப்பித்துவிடலாம் என்ற தைரியத்தில் ஏன் இதை நீங்களே செய்திருக்கக் கூடாது...?
இதுவரை ஒருத்தனையாவது கைது செய்யாத நிலையில் அதுதான் உண்மை என எண்ணத் தோன்றுகின்றது...

அல்லாஹ்விற்கு பொய்யாக உருவம் அமைத்து அதனை எரித்தீர்கள்...
இன்று அவனது இல்லத்திலும் கைத்துவிட்டீர்கள்... அல்லாஹ்வின் கோவப் பார்வை உங்களை அழிப்பதை நாங்கள் கண்குளிரப் பார்க்கும் காலம் வெகு தூரத்திலில்லை..... அல்லாஹு  அக்பர்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இன்று 2013-ஜூலை- 31 பத்திரிகையில் வெளியாகி என்னைக் கவர்ந்த கேலிச் சித்திரம்..........



 
எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கம் நிர்மாணித்த மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், நுரைச்சோலை அனல் மின் நிலையம் என்பவற்றைக் கடுமையாக சாடியவர் தயாசிரி ஜயசேகர...
இப்போது அவர் அரசுக்குத் தாவியதும் அம்மூன்று இடங்களையும் ஜனாதிபதி அவருக்கு சுற்றிக் காட்டுகிறார் அதைப் பார்த்து தயாசிரி எப்படி தான் முதல் சொன்ன கருத்திலிருந்து  பல்டி அடிக்கிறார் என்பதே இச்சித்திரம். கடுமையாக அப்போ சாடிவிட்டு இப்போ Very Good, Realy Good, Good Good Very Good ஆம்.
 (நாய் வேசம் போட்டால் குரைக்கனும் கழுதை வேசம் போட்டால் கத்தணும்.)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தங்க மீன்கள்

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று

மகள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக்கூடாது என்ற வாழ்க்கையைத்தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்.


அப்பாக்களைப் பிரியா மகள்கள் அதிஸ்டசாலிகள்
மகள்களைப் பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்
 ஆனால் அப்படி எல்லாம் தந்துவிட வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை.


அப்பாக்களும் பிள்ளைகளும் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும்
 ஒரே இடம் பள்ளிக்கூடம் மட்டும்தான்.





Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஹலால் !!!!!!!!!!!!



ஹலால் வாபஸ் பெறப்பட்டதாக அறிந்த உடனே எழுந்து  கோபம் கவலையின் வெளிப்படுத்தியிருந்தேன்.
அதுவரையில் ரிஸ்வி முஃப்தி அவர்களின் உரையை கேட்டிருக்கவீல்லை. ஆனால் அவரின் உரையைக் கேட்டதன் பின்னர் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டேன்.

ஹலால் உணவு உற்பத்தியை உறுதிப்படுத்தும் நடவடிக்கை வாபஸ் பெறப்படவில்லை மாறாக ஹலால் இலச்சினை
பொறிப்பதைத்தான் வாபஸ் பெற்றிருக்கிறார்கள் அதுவும் முன்னர் கட்டாயமாக்கப்படிருந்த ஹலால் இலச்சினை இப்போது
விருப்பத் தேர்வாக்கப்பட்டிருக்கிறது(Optional) அதாவது விரும்பியவர்கள் பொறிக்கலாம் விருப்பம் இல்லாதவர்கள் விட்டுடலாம்.
ஆனால் ஜம்மியதுல் உலமாவின் ஹலால் ஸிஸ்ட்டம் தொடர்ந்தும் இருக்கும். ஹலால் பொருட்களை முஸ்லிம்கள் பிரித்தறிய ஜம்மியதுல் உலமாவின்
இணையத்தளம், ஹொட்லைன், எஸ்.எம்.எஸ் மூலாமாக அறிவுறுத்தப்படும். இதற்காகவென ஒரு தனி தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்படும்.

பொது பலசேனாவின் மற்றுமொரு குற்றச்சாட்டு ஹலால் சான்றிதழ் வழங்குவதன் மூலமாக சிங்களவர்களிடம் இருந்து பெறப்படும் கோடிக்கணக்கான
பணம் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது, தலிபான் அல்குவைதாவுக்கு வழங்கப்படுகின்றது என்ற மொக்குத் தனமா குற்றச்சாட்டிற்கும்
சேறு பூசும் விதமாக வழமையான கட்டண அறவீட்டையும் கைவிட்டு இலவசமாகவே அந்த நடவடிக்கை தொடரப்போகிறது.
இதற்குரிய செலவை ஏற்றுக்கொள்ள முஸ்லிம் தனவந்தகர்களும் முஸ்லிம் வர்த்தகர்களும் முன்வந்திருக்கிறார்கள்.
இதன்மூலம் பொது பலசேனாவின் இந்த குற்றச்சாட்டும் தவிடுபொடியாக்கப்படவுள்ளது.

இந்த ஹலால் சான்றிதழ் விடையத்தில் ஜம்மியதுல் உலமா சபை படிப்படியான நடவைக்கைகளையும் கைக்கொண்டிருக்கின்றது.
முதலில் 70:30 முறைமை அதாவது ஒரு பொளின் 70% மானவற்றிற்கு ஹலால் சான்றிதழ் பொறிப்பதில்லை,. 30% ஆனவற்றிற்கு ஹலால் சான்றிதழ் பொறிப்பது.
அது நடைமுறைச் சாத்தியம் குறைவானது என்பதால் அடுத்த கட்டமாக அரசாங்கத்திடம் இதனைப் பொறுப்பெடுக்கச் சொல்வது. அதனை அராசங்கம் நிராகரித்தது.
எனவே எடுக்கக் கூடிய இறுதியானதும் சிறந்ததுமான முடிவான இந்த முடிவுக்கு ஜம்மியதுல் உலமா சபை முன்வந்திருக்கின்றது.

பொது பலசேனாவின் நோக்கம் ஹலாலை அகற்றுவது என்பதைவிட முஸ்லிம் சிங்கள இனக் கலவரத்தை தூண்டுவதே அவர்களின் முக்கியமான
இலக்காக இருந்தது. அது இந்த முடிவின் மூலம் இன்று முறியடிக்கப்பட்டிருக்கின்றது.

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ஏற்றுமதியாளர்களீன் வேண்டுகோளிற்கு இணங்க ஹலால் சான்றிதழ் வழமைபோன்று
வழங்கப்படும். உள்நாட்டுச் சந்தையில் ஹலால் முத்திரை பதிக்கப்பட்ட பொருட்களை விட்கலாம் விட்காமல் விடலாம். ஆனால் எது ஹலால்
எது ஹறாம் என்பதை முன்னர் ஹலால் முத்திரை மூலம் அறியத்தந்த ஜம்மியதுல் உலமா இனி அதை அவர்களின் இணையதளம், ஹொட்லைன், எஸ்.எம்,எஸ்
மூலமாக, பள்ளிவாசல்களின் மூலமாக அறிவிக்கவுள்ளது. அவ்வளவுதான் மாற்றம். எனவே தொடர்ந்தும் ஹலால் உணவுகளை உறுதிப்படுத்தும் ஜம்மியதுல் உலமாவின்
பணி தொடர்ந்தும் நடைபெறும்.

”எப்படி லோகோவைப் பார்த்து வாங்குவதை மக்களுக்கு நாங்கதான் அறிமுகம்செய்தமோ
அதேபோல லோகோ இல்லாமலும் இதை நீங்க அடையாளம் காண்பதற்கு  இன்ஸா அலாஹ் நாங்களே உங்களுக்கு வழிகாட்டுவோம்”ரிஸ்வி முஃப்தி

ரிஸ்வி முஃப்தியின் கருத்தப்படி பெளத்த பிக்குகளுடன் கடந்த காலங்களில் இடம்பெற்றா ஹலால் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்தைகளின் போது பொது பலசேனா மட்டுமல்லாது
ஏனைய பிக்குகளும் பெளதர்களும் ஹலால் பொருட்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டினையே கொண்டிருந்தார்கள் என்பது புலனாகின்றது. எனவே ஹலால் விடையத்தில் இந்த முடிவு எடுக்கப்படாவிட்டிருந்தால்
பொது பலசேனாவிடமிருந்து மட்டுமல்ல ஏனைய பெளதர்களிடம் இருந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியிருந்திருக்கும்.

 ஆக. எங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் கொஞ்சம் இறங்கி வந்து எடுக்கப்படக்கூடிய ஒரு சிறந்த முடிவே எடுக்கப்பட்டுள்ளதாக இதனை என்னால் பார்க்க முடிகிறது.

சரி இனிவரும் காலங்களில் பொது பலசேனாவின் அடுத்தகட்ட அட்டூழியங்களை ஜம்மியதுல் உலமா சபை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் அவர்களுக்கும்
எங்களுக்கும் இருக்கப் போகும் சவால். இன்ஸா அல்லாஹ் பார்ரகலாம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வண்ணான்’ஸ் Day மருவி “வெலண்டைன்ஸ் Day” ஆச்சு

------ காதலர் தினம் --------

காதலர் தினத்தை எல்லாரும் “வெலண்டைன்ஸ் Day” அப்படின்னு சொல்லுவாங்க ஆனா அது தப்பு ”வண்ணான்’ஸ் Day” அதுதான் சரி
வண்ணான்’ஸ் Day தான் காலப்போக்கில மருவி “வெலண்டைன்ஸ் Day” ஆ மாறிப் போச்சு.

இந்த ”வண்ணான்’ஸ் Day” உருவான வரலாறு தெரியுமா உங்களுக்கு..? சொல்றன் கேளுங்க

இற்றைக்கு சில பல ஆண்டுகளுக்கு முன்னாடி ஒரு ஊர்ல ஒரு காதல் ஜோடி இருந்துச்சாம்.. அதுதான் அந்த ஊர்ல முதலாவது காதல் ஜோடியாம்.. அவங்க காதல அவங்க ரெண்டு பேர் வீட்லையும் ஏத்துக்கவே இல்லையாம்.. 

எவ்வளவோ ட்ரை பண்ணியும் வருசக் கணக்கா காத்திருந்தும் இரு வீட்டாரும் சம்மதிக்கவே இல்லையாம். பொறுமை இழந்த ரெண்டுபேரும் ஒன்னா தற்கொலை பண்ணிக்க ஆத்துல குதிக்கப் போனாங்களாம்… 
அந்த நேரமா அந்த ஆத்துல ஒரு வண்ணான் உடுப்பு துவைச்சிட்டு நின்னானாம். அந்த ஊர்லையே அவர் மட்டும்தான் வண்ணானாம் அதனால அந்த ஊர் மக்கள் வண்ணான் எண்டுதான் அவரைக் கூப்பிடுவாங்களாம்….

அவரு அந்த காதல் ஜோடிய பாத்துட்டு என்ன பண்ணப் போறீங்கன்னு கேக்க அவங்க நடந்ததையெல்லாம் சொன்னாங்களாம்… 

அதைக் கேட்டு மனமிரங்கிய அந்த வண்ணான் இந்தக் காதல் சாகக்கூடாது கண்டிப்பா வாழனும்னு சொல்லி அவர்கிட்ட இருந்த கழுதையைக் கொடுத்து இந்தாப்பா இந்தக் கழுதைல ஏறி நீங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டே ஓடிடுங்க ஓடிப்போய் எங்கையாச்சும் போய் சந்தோசமா வாழுங்கப்பா எண்டு சொல்லி தன் கழுதையக் கொடுத்து அனுப்பிவச்சாராம்

அந்த ஜோடியும்டு கழுதைல ஊரை விட்டே ஓடிப் போயிட்டாங்களாம்….

இப்படி தன்னிடமிருந்த ஒரே ஒரு கழுதையையும் கொடுத்து காதலைச் சேர்த்து வெச்ச அந்த வண்ணானிடம் இருந்த நல்ல மனசு நமக்கு இல்லாம போயிட்டேன்னு நினைச்சு ரொம்பவே வருத்தப்பட்ட அந்த ஊர் நாட்டாம ஒரு முடிவுக்கு வந்தார். 

அதாவது அந்த காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடிய நாளான பெப்ரவரி 14ஐ காதலர் தினமாக கொண்டாடவேண்டும் என்றும் அந்நாளுக்கு அந்த காதல கழுதையைக் கொடுத்து சேர்த்துவெச்ச வண்ணானின் ”வண்ணான்” எண்ட பெயர்சூட்டப்பவேண்டும் என்றும் மக்களுக்கு அறிவித்தார்..

அதாவது பெப்ரவரி 14 ”வண்ணான்’ஸ் Day”

மேலும் இந்த தினத்தில் ஊரிலுள்ள காதலர்கள் மற்றும் காதலித்து திருமணம் முடித்தவர்கள் அனைவரும் நாட்டாமை உட்காரும் ஆலமரத்தடியில் இருந்து அடுத்த ஊர் வரை ஓடி மீண்டும் நாட்டாமையின் ஆலமரத்தடிக்கு வர வேண்டும். வீட்டுக்கு தெரியாமல் காதலிப்பவர்கள் தாங்கள் இருக்கும் பார்க் பீச்சில் ஒரு ரவுண்ட் ஓடலாம்.. என்றும் உத்தரவிட்டார்……… 

இதுதான் வரலாறு…..இப்படி உருவானதுதான் இந்த ”வண்ணான்’ஸ் Day”. இதைத்தான் இப்ப உள்ளதுக கொஞ்சம் ஸ்டைல்லா வெலண்டைன்ஸ் Day னு மாத்திக்கிட்டு கொண்டாடிட்டு திரியுதுக.

(எப்புடீ….? நாங்களும் சொல்லுவோமில்ல History...)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS