RSS

--- மலரும் நினைவுகள் ----

அல்லி அர்ஜுணா படத்திலிருந்து  jaanaki, Srinivas பாடிய

எந்தன் நெஞ்சில்ல் பாஹிமாம்
உன் எண்ணம் பாஹிமாம்...
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே.....

பாடல் ஒலிக்கிறது என் மனதிலும் பாடசாலை சம்பவமொன்று நினைவு வருகிறது.

இந்தப் பாடலை O/l படிக்கும் போது பாடசாலையில் ஒரு நாள் எதேச்சையாக பாடிக்கொண்டு போனேன்.  என் பின்னால் வந்த மாணவி ஒருத்தி சீ... போடா என்று
வெட்கப்படுக்கொண்டே ஓடினாள் யாரென்று திரும்பிப் பார்த்தால் என் நண்பி பாஹிமா... ஏன் அப்படி வெட்கப்பட்டாள் அவள்? என்று யோசித்த போதுதான் புரிந்தது.
 நான் பாடிய பாடல் வரிகள்தான் காரணம் என்று

எந்தன் நெஞ்சில்ல் பாஹிமாம்
உன் எண்ணம் பாஹிமாம்... என்ற வரிகள் அவளுக்கு

எந்தன் நெஞ்சில் பாஹிமா
உன் எண்ணம் பாஹிமா

என்று கேட்டிருக்கிறது...... ஹ்ம்ம்ம்ம்ம்

அதுக்கப்புறம் விடுவமா நாங்க... பாஹிமாவை எங்க பார்த்தாலும் எந்தன் நெஞ்சில்ல் பாஹிமா
உன் எண்ணம் பாஹிமாதான்..... அவளும் முறைச்சிட்டு ஒரே ஓட்டமாய் ஓடிடுவாள்...... ஹ்ம்ம் அது ஒரு காலம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS