RSS

ஐ.நா வே வந்தாலும் உன்னை ஒன்னும் பண்ண முடியாதுடா

---- சும்மா லொலலாயி................---

இலங்கையில் ஆட்கடத்தல் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு விசாரிக்க இலங்கை வந்திருக்கு. நம்ம மன்னர், ரணில், மங்கள உட்பட எல்லோரும் பஞ்சாயத்துக்கு வந்திருக்காங்க... மகனைத் தொலைத்த கோபாலுவிடம் விசாரணை

**** பஞ்சாயத்து ஆரம்பம். ***

ஆணைக் குழு தலைவர் : கோபாலு உன் பேச்சக் கேட்டுதான் பஞ்சாயத்தக் கூட்டிருக்கம் உன் பையன யாரு கடத்தினன்னு சொல்லு அதுக்குரிய தண்டனையக் குடுத்துடுவம்

கோபாலு : அது வந்துங்க......

மகி : டேய் குர்ரா குர்ரா… ஏகே 47அ. ஏகே 47 இப்ப தேவப்படாது தேவப்பட்டா பின்னாடி வாங்கிக்குறன். எதுக்கும் லோர்ட் பண்ணி வெச்சிக்க..

மங்கள : தலைவரே இதமாதிரி நிறைய ஆளுங்க காணாம போயிருக்காங்க. கடத்தல் காறனுகள எப்டியாவது கண்டுபிடிச்சு தூக்கில போடனும்

மகி : (ஆஹா மகிந்தா ஒவ்வொருத்தனும் இருக்குற வேகத்தப் பார்த்தா உன் அரும பெருமைக்கு ஆபத்து வந்துடுப் போல இருக்குடா…. ரொம்பக் கவனமா டீல் பண்ணி ஆட்டத்தக் கலச்சிடு ராசா)
ஆ….. ஆ.. பஞ்சாயத்து நடக்கட்டும் பஞ்சாயத்து நடக்கட்டும்… யாரா இருந்தாலும் தைரியமா சொல்லப்பா நீயி… பயப்புடாத….. ம்ம்ம்ம்ம்ம் பயப்புடாதடா…………

தலைவர் :ஏண்டா தயங்குற தைரியமா சொல்லுடா

மகி : சொல்லு நீதான் தைரியமான ஆளாச்சே சொல்லு.. ம்ம்ம்.... சொல்றா…..

தலைவர் : இதுக்குப் போயி ஏண்டா பயப்புர்ர சொல்றா

மகி: அட என்ன பெருசு வெவரமில்லாம பேசிட்டு இருக்க… நம்ம ஊர்க்காரங்க குணம் தெரியாம பேசிட்டு இருக்க…. இன்னார்தான்னு கோபாலு சொன்னான்னா பின்னால ஏதும் பிரச்சின வரும்னு யோசிக்கிறான் அவன் இல்லடா கோபாலு…? அப்டித்தானே….??

தலைவர் : என்னடா கோயில் மாடுமாதிரி தலையாட்டுற பயப்புடாம சொல்லுடா

ரணில் :
தலைவரே நான் என்ன நினைக்குறன்னா…

மகி: டேய் நீ என்ன நினைக்குறது…? அவன் நினைக்கவேணாம அவன் பொண்டாட்டி பிள்ளைங்க பற்றி என்னமோ நெனைக்குறன் நொனைக்குறண்டுட்டிருக்க…..

ரணில் : அப்ப பஞ்சாயத்துல நான் ஒன்னும் சொல்லக்கூடாதா….?

மகி : சொல்லக்கூடாதுடா சொல்லக் கூடாது உனக்கு சொல்ல உரிமை கிடையாது… நீ பாட்டுக்கு ஏதாவது சொல்லிட்டுப் போயிட்டேன்னா அனுபவிக்கிறது யாரு…. ப…. ப்ப்பாஅ அவந்தானே நீ பஞ்சாயத்துல உக்காந்து கிழிச்சது போதும் போடா போ….. பெரிய மனுசங்க பேசுறப்போ பேசின குத்திடுவன்.. நீங்க பேசுங்க பெருசு.. என்னடா மொறப்பு அவன் அவன் கஸ்ட்டம் அவ அவனுக்குத்தானேடா தெரியும்….

தலைவர் : ஏண்டா பயப்புர்ரா…..

மகி : அட என்ன தலைவரே….கோபாலு என்னைமாதிரி தைரியமான ஆளா இருந்தாலும் பரவால்ல கொஞ்சம் பயந்தவந்தானே…. ஏற்கனவே நம்ம ஊர்ல ஒரு அம்மாவும் பிள்ளையும் அண்ணன காணம் அவன ராணுவம்தான் கடத்தினன்னு சொன்னப்போ நம்ம பசங்க வீடு பூந்து அம்மாவையும் மகளையும் தூக்கி அம்மாவ ஒரு ஜெயில்லையும் மகள இன்னொரு ஜெயில்லையும் போட்டாங்களா இல்லையா…? அதெல்லாம் இவன் கண்முன்னாடி வந்து போகுமா இல்லையா…. பயப்புடதானே செய்வான்… லேசு வாக்குல கேளுங்க சொன்னா சொல்லட்டும் சொல்லலன்னா உட்ருவம்….

மங்கள : தயங்காம சொல்லுப்பா நாங்க இருக்கமில….

மகி : நீ இருப்பயா அவன் இருக்க வேணாமா….?

தலைவர் : டேய் மகி நீ தேவையில்லாம குறுக்க குறுக்க பேசுற

மகி : சம்பந்தப்பட்டவன் நாந்தான்யா பேச முடியும் அவனுக்குன்னு வேற யாரு இருக்கா….?

ரணில் : மகி வந்ததுல இருந்து நானும் பாத்துட்டு இருக்கன்… நீயே பேசிட்டு இருக்க அவனையும் பேச விடுய்யா….

மகி : எப்பிர்ரா பேசுவான் எப்பிடி பேசுவான். நீங்களே ஆளாளுக்கு பேசிட்டிருந்தா அவன் எப்பிர்ரா பேசுவான் நாய்களா…? நீங்கெல்லாம் இன்னைக்கு பஞ்சாயத்த முடிச்சிட்டு கெளம்பிடுவீங்கடா… அப்புறம் அவன் தனியாதானே இந்த ஊருக்க சுத்தனும். அவனுக்கும் அவன் உசிருக்கும் என்னடா உத்தரவாதம் இருக்கு…?

தலைவர் : டேய் மகி வந்ததுலிருந்து நானும் பாத்துட்டு இருக்கன் நீயே குறுக்க குறுக்கப் பேசிட்டு இருக்க. பஞ்சாயத்து தலைவர் நான் இருக்கன் நீயார்ரா குறுக்க குறுக்கப் பேசுறதுக்கு… அடிச்சா மீசப் பிச்சிக்கிட்டுப் போயிரும். உக்கார்ரா சும்மா.. கோபாலு நீ சொல்றா….

கோபாலு : ஐயா அது வேற யாருமில்லிங்க ….

மகி : பாத்தீங்களாய்யா இன்னும் சொல்றானில்ல பாத்தீங்களாய்யா… ஐய்யா…. குர்ரா அந்த AK47 இவன இங்கையே சுட்டுப் போட்டுர்ரன்… பெரிய மனிசன் காலையில இருந்து கேட்டுட்டு இருக்கீங்க சொல்றானா அவன்.... விடுங்கைய்யா…. டேய் சொல்றா சொல்றா நீயி சொல்றா….சரியான ஆளா இருந்தா சொல்றா…. இவளவு நேரமா கேட்டுட்டு இருக்கம் சொல்றானா பாருங்க...அயோக்கியப் பயல ராஸ்கல்….

தலைவர் : இர்ரா இர்ரா நான் கேக்குறன் நீ இர்ரா…. சொல்லித் தொலையேண்டா….

கோபாலு : ஐய்ய்ய்யா........என் பையன கடத்தினது யாருன்னு தெரியல.. யாரோ கடத்துற மாதிரி கனவு கண்டன்…. பஞ்சாயத்து கூட்டினது எனது தப்பு மன்னிச்சிடுங்க……

மகி : ஆ… போ… போ…. அவனே கடத்தினது யாருன்னு தெரியலன்னுட்டான் போ போ எந்திரிச்சுப் போ... பஞ்சாயத்துன்னா உடனே கூட்டத்தப் போட்டுர்ரது… போ போய் சோத்தப் பொங்கி கொழம்பு வெச்சு சாப்பிடுட்டு வேலையப் பாரு..ஊட்டுல யாரும் காணாமப் போனா யார்டையும் சொல்லிக் கேவலப்படாம என்கிட்ட சொல்லுங்கடா.. ஆ ஊன்னா கூடிர்ரது….

** ஐ.நா வே வந்தாலும் உன்னை ஒன்னும் பண்ண முடியாதுடா மகிந்தா இப்பிடியே மெயிண்டைன் பண்ணு… ஆ.. போ…. போ…




(கதை திரைக்கதை திரைக்குப் பின்னால் கதை உல்டா ரீமேக்கியது எல்லாம் - அஹமட் சுஹைல் .)

 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS