RSS

பெருநாள் காசு இல்லனா.. அன்பாச் சொல்லிட்டு அனுப்பிடவேண்டியதுதானே.. அதுதானேய்யா ஒலக வழக்கம்


நான் சுத்தி வழைச்சுப் பேச விரும்பல
சம்பந்தப்பட்டவங்களப் பார்த்து நேரடியாவே கேக்குறன்..
பெருநாள் கொண்டாடுறீங்களா? இல்ல அராஜகம் பண்றீங்களா..?
என்ன பண்ணினான் அந்தப் பையன்? என்னையா தப்பு பண்ணீனான்?
ஏதோ ஆர்வக் கோளாறுல பெருநாள் காசு கேட்டுட்டான்...
பெருநாள் காசு இல்லனா.. சாரி காசு இல்லன்னு அன்பாச் சொல்லிட்டு அனுப்பிடவேண்டியதுதானே..
அதுதானேய்யா ஒலக வழக்கம்.
அத விட்டுப் போட்டு அம்பது பேர் முன்னாடி இந்த வயசுலையும் பெருநாள் காசு கேக்குறார்னு சொல்லி அசிங்கப்படுத்திருக்க நீயி…..
அட அசிங்கப்படுத்தினாலும் பரவால்லையா… போறவாற சின்னப் பிள்ளைங்களையெல்லாம் கூப்பிட்டு அங்கிள் கிட்ட பெருநாள் காசு கேளுங்கடான்னு கடுப்பேத்தியிருக்க நீயி...
அம்புட்டு பசங்களுக்கு பெருநாள் காசு கொடுக்குறதுக்கு இது என்ன கவர்மெண்ட் கஜானாவா இல்ல ஒலக வங்கியா?
ஏதோ அந்தப் பையன் பாடியில அவன் வீட்ல சாப்பிட்ட பலகாரம், மஸ்கட் தந்த எனர்ஜி இருந்ததனால அவன் ஓடி எஸ்கேப் ஆகிருக்கான்யா….
அப்டில்லாம அந்தப் பசங்க கிட்ட மாட்டி காசப் பறிகொடுத்திருந்தா அவன் dongle ற்கு யாரு ரீலோர்ட் பண்றது அவன் ஃபேஸ்புக் அக்கெளண்ட யாரு மெயிண்டைன் பன்றது…?
இவ்வளவு ஏன் முந்த நாள் கூட இப்டி ஒரு சம்பவம் நடந்துது.
இதே பையன் இன்னொரு சொந்தக்காரன் வீட்ட போய் பெருநாள் காசு கேட்டான்யா…
ஆனா அந்த சொந்தக்காரங்க அந்தப் பையன உன்னைய மாதிரி இம்புட்டு அசிங்கப்படுத்தல்ல..
ஒரு ஒரு மணிநேரம் ஆறுதலாப் பேசிட்டு அனுப்பிருக்காங்கையா
அதுவும் எப்டி பிள்ளைக்கு மனம் நோகக் கூடாதுங்குறதுக்காக ஃபலூடா, ஐஸ்கிறீம், அப்பிள், ஒரேஞ்னு வெராய்டி வெராய்டியா கொடுத்துட்டு. அப்புறம் பெருநாள் காசு இல்லனு நாசூக்கா சொல்லி அனுப்பிருக்காய்ங்கை..
அந்த நாகரீகம் கூட தெரியாது உனக்கு…..?
எப்டியெல்லாம் அசிங்கப்படுத்திப்போட்ட…
ஒரு பச்சத் தண்ணி கூட கொடுக்காம திருப்பி அனுப்பிருக்க நீயி…
எப்படியெல்லாம் கேட்டுப் பார்த்தான் அவன்…
கடைசிவரை ஒன்னுமே கொடுக்காம அனுப்பிருக்க..
இரக்கமில்லையா உனக்கு….?
(யாவும் கலப்படமற்ற கற்பனை )

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS