RSS

அவர்கள் அடிக்கவில்லை இவர்கள் கொடுத்தார்கள்.

வாற bats man எல்லாம் 100 அடிக்குறானுங்க.
Bowlers எல்லாம் விக்கட் எடுக்குறானுங்க… எல்லாரும் அடிச்சு பழகிக்குறானுங்க.
என்ன ஆச்சு நம்ம அணிக்கு.
உலகக் கிண்ணத் தொடருக்கு முதல் இலங்கை அணியினை முற்றாக மறுசீரமைக்க வேண்டியது மிக முக்கிய தேவை.
டில்ஹார ஃபெர்னாண்டோ, மஹ்ரூஃப், ஜீவன் மெண்டிஸ் போன்றவர்கள் மீண்டும் அணிக்கு வரவேண்டும்.
*****************************************

1996ம் ஆண்டு முதல் நான் பார்த்துவரும் இலங்கை கிரிக்கட் அணியின் மிகக் கேவலமான தொடர் இது. அதிலும் மிகக் கேவலமாக ஆடிய போட்டி இன்றைய போட்டி. இந்தத் தொடர் முழுதும் இந்தியர்கள் சிறப்பாக ஆடினார்கள் என்பதை விட இலங்கை அணியினர் ஓட்டங்களையும் விக்கட்டுக்களையும் வாரி வழங்கினர் என்பதே உண்மை.

பந்துவீச்சு எதிரணியினரை மிரட்டவில்லை.
துடுப்பாட்டத்தில் அதிரடி இல்லை.
களத்தடுப்பில் சுறு சுறுப்பு இல்லை.
ஆக மொத்தத்தில் அவர்கள் அடிக்கவில்லை இவர்கள் கொடுத்தார்கள்.

இந்த தொடர் முழுவதும் 100 அடித்த இந்திய வீரர்கள் அனைவருக்கும் இலங்கை வீரர்கள் 2, 3 வாய்புகள் வழங்கியிருந்தனர். ஏகப்பட்ட பிடிகளைத் தவற விட்டனர். இன்றைய் போட்டியில் கூட ரோஹித் சர்மா 4 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை இலகுவான பிடி ஒன்றினை திசர தவற விட்டதன் மூலம் இலக்கு 404 ஆனது.

இன்று ரோஹித் சர்மாவின் 4 பிடியெடுப்பு வாய்புகளைக் கோட்டை விட்டனர். இப்படி விட்டால் 200 என்ன 300 அடிப்பதுகூட பெரியவிடையமல்ல.(ரோஹித் சர்மாவின் திறமையினை குறைத்துமதிப்பிடவில்லை ஆனால் இதே ரோஹித் சர்மா அவுஸ்திரேலிய, இங்கிலாந்து மண்ணில் 100 ஓட்டங்கள் பெறட்டும் அவர் திறமையானவர் என ஒத்துக்கொள்கின்றேன்.)


இந்த தொடரில் இலங்கையின் மோசமான ஆட்டத்திற்கு இலங்கை கிரிக்கட் நிருவாகமே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். அவசரமான தொடருக்கு பணத்தை வாங்கொக்கிக்கொண்டு ஒத்துக்கொண்ட கிரிக்கட் நிருவாகம் உண்மையிலேயே தொடருக்காக மட்டும் பணத்தைப் பெற்றுக்கொண்டதா இல்லை தொடரினை மொத்தமாக தாரைவார்ப்பதற்கும் சேர்த்து பெற்றுக்கொண்டனரா என எண்ணத்தோணுது.

இந்தத் தொடருக்கு ஒத்துக்கொண்டதன் மூலம் இலங்கை கிரிக்கட் நிருவாகமானது…………..

இலங்கை கிரிக்கட்டுக்கு கேவலாமான வரலாற்றுப் பதிவினை உருவாக்கி விட்டனர்.
சிரேஸ்ட வீரர்களின் முறுகளையும் அதிருப்தியையும் சம்பாதித்துக்கொண்டனர்.
சிறப்பான தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.
வெற்றிகரமான ஆண்டாக இருந்த இவ்வாண்டை படுதோல்வியோடு முடித்து வைத்துவிட்டனர்.
இலங்கை வீரர்களினதும் ரசிகர்களினதும் உளவியலில் பாதிப்பினை ஏற்படுத்திவிட்டனர்.


இந்தத் தொடர் முழுவதும் இலங்கை அணியினரின் ஆட்டம் சிம்பாப்வே கென்யா அணியினரின் ஆட்டத்தை விடவும் படுமோசமாக இருக்கிறது.
நுவன் குலசேகர, அஜந்த மெண்டிஸ் ஆகியவர்களின் சரக்குத் தீர்ந்தாச்சு இனியும் அவர்கள் அணிக்கு தேவையில்லை. குசல் பெரேரா ??????
இலங்கை திருநாட்டில் குறைந்தபட்சம் 140km/h வேகத்தில் பந்துவீசும் ஒருவர் கூடவா இன்னும் பிறக்கவில்லை…?

பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு அனைத்திலும் இலங்கை அணி இந்தத் தொடர் முழுவதும் படு மோசம். அணி வீரர்கள் சோர்ந்த நிலையில் ஆடுகின்றனர். வழமையான இலங்கை அணியின் தரத்தில் 10% கூட கிடையாது.

மார்வன், வாஸ் இருவரின் பயிற்றுவிப்பும் கேள்விக்குறியாகி நிற்கின்றது. சமகாலத்தில் விளையாடிய வீரர்களை பயிற்றுவிப்பாளர்களாக அணியில் வைத்திருப்பது அணியின் திறனில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதும் அது சிறந்ததொரு வெளியீட்டினை(Out put) தராது என்பதும் எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அதுவே இப்பொழுது நடைபெறுகிறது. இலங்கை அணியினை உலக தரத்திற்குக் கொண்டுவருவதற்கான ஆற்றல், நுட்பம் மார்வனிடம் இருப்பதாக நான் நம்பவில்லை.


இந்தத் தொடர் இலங்கை கிரிக்கட்டிற்கும், கிரிக்கட் நிருவாகத்திற்கும் பல படிப்பினைகளைத் தந்திருப்பதோடு உடனடியானதும் அதிரடியானதுமான பல மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய நிலைமையினை வலிந்து உருவாக்கிவிட்டிருக்கின்றது என்பதே யதார்த்தம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS