RSS

புலியோட்டம்



    ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் சக்தி fm அறிவிப்பாளராக கடமையாற்றியிருக்கின்றேன். அந்த காலகட்டத்தில்தான் பலரது அறிமுகங்கள் எனக்குக் கிடைத்தன. என்னையும் பலர் அறிந்துகொள்ள சக்தி fm பெரிதும் உதவியது. குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் எம்மூரவர்கள் எம் நாட்டவர்களுடன் அறிமுகம்/நட்பும் புலம் பெயர் தமிழ் உறவுகளின் அறிமுகம்/நட்பும் சக்தி fm வாயிலாகத்தான் கிடைத்ததென்றால் அதுமிகையாகாது. சக்தி fm இற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


                                                         ****  ****

    சக்தி fm இல் நள்ளிரவு ராத்திரியின் சொந்தக் காரன் நிகழ்ச்சி செய்ய ஆரம்பித்து 2வது நாள். விக்கி அண்ணாவுடன் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தேன்.  நள்ளிரவு இரண்டு மணி இருக்கும் பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

    விக்கி : தம்பி 3 மணிவரை calls attend பண்ணுவம் அதுக்கு பிறகு புலியோட்டம் ஓடுவம்
    (எனக்கு புரியவில்லை.)

    நான் : என்ன அண்ணா?
    விக்கி : 3 மணிக்குப் பிறகு புலியோட்டம் போட்டால் சரி.

    எனக்கு புதியதாய் இருந்தது. இவர் என்ன சொல்கிறார். மீண்டும் கேட்க தயக்கம்; நான் வேறு புதிது; திரும்பத் திரும்ப கேட்டால் கோபப்பட்டுவிடுவாரோ என்ற தயக்கம்.

    ஆனால் அது என்ன என்று அறிந்துகொள்ள ஆர்வம். ”எதைச் சொல்லியிருப்பார்.  ஒரு வேளை செம குத்துப் பாடல்கள்/Fast beat பாடல்கள் போடுவம் என்று சொல்றாரோ…? இருக்காதே இப்பவே நாக்கு மூக்கா ரக குத்துப்பாடல்கள் தானே போட்டுட்டு இருக்கம். இதைவிடக் குத்து/fast beat கு எங்கே போறது. என்னவா இருக்கும்?” என்று சந்தேகத்துடனே நிகழ்ச்சியைத் தொடர்ந்தேன். அந்த நேரம் செல்லச் செல்ல அந்த சந்தேகமும் மறந்துவிட்டது

    பின்னாளில் நான் தனியாக நிகழ்ச்சி செய்யும்போதுதான் புலியோட்டமென்றால் என்னவென்று நானாகவே தெரிந்துகொண்டேன்.

    அதாவது வானொலிகளில் பாடல்களை ஒலிபரப்ப பயன்படுத்தும் மென்பொருளில் 3 options இருக்கிறன.

  1. Manual Play : ஒவ்வொரு பாடலையும் நாமாகவே paly பண்ணவேண்டும்
  2. Semi Auto : இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து தானாகா ஒலிக்கும் 3வது பாடலை நாம் play பண்ண வேண்டும்
  3. Fully Auto : play list இல் உள்ள அனைத்துப் பாடல்களும் ஜிங்கிள்களும் ஒன்றன் பின் ஒன்றாய் Auto ஆக Play ஆகும்.

  4. பொதுவாக நள்ளிரவு நிகழ்ச்சி செய்யும்போது நள்ளிரவு 3 மணிக்குப் பின்னர் ”Fully Auto”  போட்டுவிட்டு அறிவிப்பாளர் ஓய்வெடுப்பார்/தூங்குவார்.

    அந்த ”Fully Auto”  தான் புலி ஓட்டம்ஆகியிருக்கிறது அவரது பாணியில்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கற்றுக்கொண்ட பாடங்களும் பெற்றுக்கொண்ட படிப்பினைகளும்


இலங்கை கிரிக்கட் வரலாற்றின் மிக மோசமான தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இலங்கை வீரர்களினதும் ரசிகர்களினதும் மனதை உடைத்துவிட்ட மிக மோசமான தொடர் இது.

உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பமாக 3 மாதங்களே உள்ள நிலையில் இந்தத் தொடர் தோல்வி இலங்கை வீரர்களின் உளநிலையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமென்பது மறுக்க முடியாத உண்மை.

பல எதிர்வினைகளை இந்தத் தொடர் தோற்றுவிற்றிருந்தாலும் அவற்றை எமக்குச் சாதகமாக்கிப் பார்த்தோமானால்

இந்தத் தொடர் இலங்கைத் தெரிவாளர்களை ஆழமாக சிந்திக்க வைத்திருக்கிறது. இதன் மூலம் எழுந்தமானமான அணித் தெரிவு இல்லாமல் மிக நுணுக்கமாக ஆராய்ந்து மிகச் சரியான அணியினை தெரிவு செய்ய வேண்டிய தேவையினை அது அவர்களுக்கு உணர்த்தியுள்ளது.

இங்கிலாந்து தொடர் வெற்றி ஆசியக் கிண்ண, T20 உலகக் கிண்ண வெற்றிகள் என்று இந்த வருடத்தில் பெறப்பட்ட வெற்றிகளால் இலங்கை அணி வீரர்களுக்குள் ஏற்பட்டிருந்து over confident இனை பூசியமாக்கிவிட்டிருக்கிறது. எனவே இது அவர்களை தீவிரமான பயிற்சி மற்றும் அதீத ஈடுபாட்டோடு விளையாடுவதற்கு உந்தும். (இதனையும் சாதகமாகக் கொள்ளலாம்)

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்களை அவர்கள் முன்னதாக தாம் தீர்மானித்துவைத்திருக்கும் உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சி திட்டத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தி இன்னும் நுட்பங்களுடன் கூடிய அதிக பயிற்சிகளினை வழங்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிட்டுள்ளது.

இலங்கை அணியினர் தமது பெட்டிங் பவர் பிளே ஓவர்களை எவ்வாறு வினைத்திறனாக பயன்படுத்துவது என்பதிலும் கவனம் செலுத்தவேண்டிய தேவையினை இத்தொடர் உருவாக்கியிருக்கிறது.

இந்தத் தொடர் முழுவதும் இலங்கையின் பந்துவீச்சு, களத்தடுப்பு, துடுப்பாட்டம் என அனைத்து துறைகளும் அ School boy cricket எனும் அளவுக்கு பாடசாலை மட்டத்துக்கு ஒப்பானதாகவே இருந்தது. சர்வதேச தரத்தில் இருக்கவில்லை. எனவே இதில் அதிக கவனம் செழுத்தவேண்டிய தேவையை அணி வீரர்களுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் இந்தொடர் உணர்த்தியுள்ளது.

இந்தத் தொடர் முழுவதும் மெத்யூஸ் தனது வழமையான ஃபோர்மில் இருப்பதையும் டில்சான்,மஹெல ஆகியோர் சராசரியான ஃபோர்மில் இருப்பதையும் அவதானிக்க முடிந்தது. கிடைத்த இரு போட்டிகளிலும் அரைச் சதங்களைப் பெற்றதன் மூலம் திரிமான்ன தனது இடத்தினை சிறப்பான முறையில் தக்கவைத்துக்கொண்டுள்ளார். இவர்கள் தவிர சங்கக்கார உட்பட யாருமே இந்தத் தொடரில் சிறப்பாகச் செயட்படவில்லை. எனவே தெரிவாளர்களுக்கு தெரிவுக்கான பரப்பு பாரிய அளவில் திறந்துவிடப்பட்டிருக்கிறது.

டில்சானுக்கு சோடியாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக யாரினைக் களமிறக்குவது என்ற பாரியதோர் சிக்கல் நிலை தற்போது உருவாகியுள்ளது. காரணம் குசால் பெரேரா, தரங்க ஆகிய இருவரும் Out of form இல் இருக்கிறார்கள். இவர்கள் தமக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.   முதல் ஓரிரு ஓவர்களுக்குள்ளே முதலாவது விக்கட் வீழ்த்தப்படுவதால் ஏனைய வீரர்களுக்கு அது பாரிய அழுத்தத்தினை கொடுப்பதோடு ஓட்ட வேகத்திலும் பாதிப்பினை ஏற்படுத்திவிடுகிறது.

 எனவே என்னைப் பொறுத்தவரையில் அனுபவம் வாய்ந்த மஹெல ஜயவர்த்தன  ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக டில்சானுடன் களமிறங்க வேண்டும்.(இதுவே மஹெலவின் விருப்பமும் கூட) மத்திய வரிசையில் தரங்கவை களமிறக்குவதன் மூலம் வலுவான ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியும் மத்திய வரிசையில் சங்கா, மெத்யூஸ், திரிமான்ன, தரங்க போன்ற வீரர்களும் இருப்பதன் காரணமாக துடுப்பாட்டம் வலுப்பெறும்.

உலகக் கிண்ண இறுதி அணியில் மெத்யூஸ், மஹெல, சங்கா, டில்சான், திரிமான்ன, ஹெரத், சமிந்த இரங்க, தம்மிக பிரசாத்,(மலிங்க - பூரண குணமடைந்தால்) ஆகியோர்கள் உறுதியாகியுள்ள நிலையில் ஏனைய 7 பேரினை தெரிவு செய்யவேண்டிய தேவைதான் காணப்படுகின்றது என்பது எனது கணிப்பு. மஹ்ரூஃப், டில்ஹார ஃபெர்னாண்டோ, டில்சான் முனவீர, ஜீவன் மெண்டிஸ் போன்றவர்களையும் அணியில் மீண்டும் இணைத்துக்கொள்ள தெரிவாளர்கள் ஆர்வம் காட்டவேண்டும்.

சராசரியாக 140 km/h வேகத்தில் பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்களையும்
முரளி,ஹெரத், சசித்ர போன்று விக்கட்டுக்களைக் கைப்பற்றும் சுழல் பந்துவீச்சாளர்களையும்.  உருவாக்க வேண்டிய அவசிய தேவையினை இலங்கை கிரிக்கட் இந்தத் தொடர் மூலம் உணர்ந்திருக்கும்.

இலங்கை அணியில் மெத்யூஸ், மஹெல, திசர இவர்களைத் தவிர
ஏனைய வீரர்களுக்கு ஆறு ஓட்டங்களை விளாசும் ஆற்றல் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது, டில்சான், சங்கா ஆகியோரின் துடுப்பிலிருந்தும் ஆறு ஓட்டங்கள் கிடைப்பது மிக அரிதான ஒன்றாகவே இருக்கின்றது. எனவே ஆறு ஓட்டங்களை அதிரடியாக விளாசும் ஆற்றலையும் இலங்கை வீரர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க இந்தத் தொடரில் எமக்குக் கிடைத்த ஒரேயொரு சந்தோசம் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் பெற்றுக்கொண்ட முதலாவது சதம். அதுவும் அதிரடியான சதம்.
 பல சதங்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் கடைநிலை வீரர்கள் விக்கட்டுகளை பறிகொடுத்ததாலும் தனது தனிப்பட்ட சாதனையைவிட அணியினை முற்படுத்தியதனாலும் மெத்யூசின் பல சதங்கள் பெறும் வாய்ப்பு கை நழுவிப் போனது.
 90 என்ற இலக்கில் இருந்த கண்டம் மெத்யூசிற்கு இப்போது நீங்கியுள்ளது. இனி மெத்யூஸ் பல சதங்கள், சாதனைகளைச் சுவைப்பார் என நம்பலாம்.

முதலாவது சதத்திற்கும் இவ்வாண்டில் 1000 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற பெருமைக்கும் மற்றும் சகல துறை ஆட்டக்காரர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்றமைக்குமாகச் சேர்த்து வாழ்த்துக்கள் Anjiiii…..

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவர்கள் அடிக்கவில்லை இவர்கள் கொடுத்தார்கள்.

வாற bats man எல்லாம் 100 அடிக்குறானுங்க.
Bowlers எல்லாம் விக்கட் எடுக்குறானுங்க… எல்லாரும் அடிச்சு பழகிக்குறானுங்க.
என்ன ஆச்சு நம்ம அணிக்கு.
உலகக் கிண்ணத் தொடருக்கு முதல் இலங்கை அணியினை முற்றாக மறுசீரமைக்க வேண்டியது மிக முக்கிய தேவை.
டில்ஹார ஃபெர்னாண்டோ, மஹ்ரூஃப், ஜீவன் மெண்டிஸ் போன்றவர்கள் மீண்டும் அணிக்கு வரவேண்டும்.
*****************************************

1996ம் ஆண்டு முதல் நான் பார்த்துவரும் இலங்கை கிரிக்கட் அணியின் மிகக் கேவலமான தொடர் இது. அதிலும் மிகக் கேவலமாக ஆடிய போட்டி இன்றைய போட்டி. இந்தத் தொடர் முழுதும் இந்தியர்கள் சிறப்பாக ஆடினார்கள் என்பதை விட இலங்கை அணியினர் ஓட்டங்களையும் விக்கட்டுக்களையும் வாரி வழங்கினர் என்பதே உண்மை.

பந்துவீச்சு எதிரணியினரை மிரட்டவில்லை.
துடுப்பாட்டத்தில் அதிரடி இல்லை.
களத்தடுப்பில் சுறு சுறுப்பு இல்லை.
ஆக மொத்தத்தில் அவர்கள் அடிக்கவில்லை இவர்கள் கொடுத்தார்கள்.

இந்த தொடர் முழுவதும் 100 அடித்த இந்திய வீரர்கள் அனைவருக்கும் இலங்கை வீரர்கள் 2, 3 வாய்புகள் வழங்கியிருந்தனர். ஏகப்பட்ட பிடிகளைத் தவற விட்டனர். இன்றைய் போட்டியில் கூட ரோஹித் சர்மா 4 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை இலகுவான பிடி ஒன்றினை திசர தவற விட்டதன் மூலம் இலக்கு 404 ஆனது.

இன்று ரோஹித் சர்மாவின் 4 பிடியெடுப்பு வாய்புகளைக் கோட்டை விட்டனர். இப்படி விட்டால் 200 என்ன 300 அடிப்பதுகூட பெரியவிடையமல்ல.(ரோஹித் சர்மாவின் திறமையினை குறைத்துமதிப்பிடவில்லை ஆனால் இதே ரோஹித் சர்மா அவுஸ்திரேலிய, இங்கிலாந்து மண்ணில் 100 ஓட்டங்கள் பெறட்டும் அவர் திறமையானவர் என ஒத்துக்கொள்கின்றேன்.)


இந்த தொடரில் இலங்கையின் மோசமான ஆட்டத்திற்கு இலங்கை கிரிக்கட் நிருவாகமே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். அவசரமான தொடருக்கு பணத்தை வாங்கொக்கிக்கொண்டு ஒத்துக்கொண்ட கிரிக்கட் நிருவாகம் உண்மையிலேயே தொடருக்காக மட்டும் பணத்தைப் பெற்றுக்கொண்டதா இல்லை தொடரினை மொத்தமாக தாரைவார்ப்பதற்கும் சேர்த்து பெற்றுக்கொண்டனரா என எண்ணத்தோணுது.

இந்தத் தொடருக்கு ஒத்துக்கொண்டதன் மூலம் இலங்கை கிரிக்கட் நிருவாகமானது…………..

இலங்கை கிரிக்கட்டுக்கு கேவலாமான வரலாற்றுப் பதிவினை உருவாக்கி விட்டனர்.
சிரேஸ்ட வீரர்களின் முறுகளையும் அதிருப்தியையும் சம்பாதித்துக்கொண்டனர்.
சிறப்பான தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.
வெற்றிகரமான ஆண்டாக இருந்த இவ்வாண்டை படுதோல்வியோடு முடித்து வைத்துவிட்டனர்.
இலங்கை வீரர்களினதும் ரசிகர்களினதும் உளவியலில் பாதிப்பினை ஏற்படுத்திவிட்டனர்.


இந்தத் தொடர் முழுவதும் இலங்கை அணியினரின் ஆட்டம் சிம்பாப்வே கென்யா அணியினரின் ஆட்டத்தை விடவும் படுமோசமாக இருக்கிறது.
நுவன் குலசேகர, அஜந்த மெண்டிஸ் ஆகியவர்களின் சரக்குத் தீர்ந்தாச்சு இனியும் அவர்கள் அணிக்கு தேவையில்லை. குசல் பெரேரா ??????
இலங்கை திருநாட்டில் குறைந்தபட்சம் 140km/h வேகத்தில் பந்துவீசும் ஒருவர் கூடவா இன்னும் பிறக்கவில்லை…?

பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு அனைத்திலும் இலங்கை அணி இந்தத் தொடர் முழுவதும் படு மோசம். அணி வீரர்கள் சோர்ந்த நிலையில் ஆடுகின்றனர். வழமையான இலங்கை அணியின் தரத்தில் 10% கூட கிடையாது.

மார்வன், வாஸ் இருவரின் பயிற்றுவிப்பும் கேள்விக்குறியாகி நிற்கின்றது. சமகாலத்தில் விளையாடிய வீரர்களை பயிற்றுவிப்பாளர்களாக அணியில் வைத்திருப்பது அணியின் திறனில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதும் அது சிறந்ததொரு வெளியீட்டினை(Out put) தராது என்பதும் எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அதுவே இப்பொழுது நடைபெறுகிறது. இலங்கை அணியினை உலக தரத்திற்குக் கொண்டுவருவதற்கான ஆற்றல், நுட்பம் மார்வனிடம் இருப்பதாக நான் நம்பவில்லை.


இந்தத் தொடர் இலங்கை கிரிக்கட்டிற்கும், கிரிக்கட் நிருவாகத்திற்கும் பல படிப்பினைகளைத் தந்திருப்பதோடு உடனடியானதும் அதிரடியானதுமான பல மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய நிலைமையினை வலிந்து உருவாக்கிவிட்டிருக்கின்றது என்பதே யதார்த்தம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஃபேஸ்புக் சிட்டிசன்





மைலோர்ட் மார்க் அவர்களே ஃபேஸ்புக்ல நான் போடுற ஒவ்வொரு போஸ்ட்டும் என் இருதயக் கூட்டுக்குள்ள இன்னும் பத்திரமா இருக்கு. கொந்தளிக்குற கடல் எனக்கு வெளியில இல்ல உள்ள இருக்கு.

இந்த நீதிமன்றத்தில் ஒலிக்கும் என் குரல் பேஸ்புக்கில் பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் கடைசிக் கதறல்.
 என்னுடைய அழுகை பேஸ்புக்கில் லைக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்களின் அழுகை.
என்னுடைய ஆத்திரம் நல்ல ஸ்டேடஸ் போட்டும் லைக் கிடைக்காத ஒரு சமுதாயத்தின் ஆத்திரம்.

நான் தனி ஆள் இல்ல. நல்ல நல்ல ஸ்டேடஸ் போட்டுவிட்டு லைக் கிடைக்காதா கொமெண்ட் கிடைக்காதா என்று தினம் தினம் ஏங்கும் அத்தனைபேரினதும் ஆத்மா.

ஒரு பொண்ணு ஹாய் நு சொன்னா லைக் போடுவாங்க
Im sick னு போட்டா take care dear னு பாசத்த பொழிஞ்சிருப்பாங்க
ஆனா நாங்க I met an accident, im injured னு போட்டா என்னானு கேக்க ஒரு நாதி இல்ல.
இத தட்டிக் கேட்கதான் நான் இங்க போராடிட்டு இருக்கன்.

மார்க் : சரி அவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்…? சொல்லுங்கள்..?

கணம் நீதிபதி மார்க் அவர்களே என் ஸ்டேடஸ்க்கு லைக் போடதவர்கள், கொமெண்ட் பண்ணாதவர்கள் ஃபேஸ்புக் பாவிப்பதில் இருந்து இடைநிறுத்தப்படவேண்டும்.
இவர்களின் ஃபோட்டோ அல்பங்கள், போஸ்டுகள் அனைத்தும் தடைசெய்யப்படவேண்டும்.. ஃபேஸ்புக் பாவிக்க இவர்கள் அருகதையற்றவர்கள் என்று சொல்லி இவர்களின் பேஸ்புக் கணக்குகள் தடைசெய்யப்படவேண்டும்.

இவர்களுடைய மனைவி, காதலி,தாய்,தகப்பன், மாமன், மாமி, மகன், மகள்,
சித்தப்பன், பெரியப்பன், பேரன், பேத்தி
இவர்களுக்கு பெண் கொடுத்தோர். பெண் எடுத்தோர், பிள்ளைக்குப் பெண் கொடுத்தோர், அவர்களுக்கு பெண் கொடுத்தோர் என்று அனைவரின் பேஸ்புக் அக்கெளண்டுகளும் சேர்த்து தடைசெய்யப்படவேண்டும்.
இவர்களது ட்விட்டர் கணக்குகளும் தடைசெய்யப்படவேண்டும்.

இது என் ஸ்டேடஸ்க்கு லைக் அல்லது கொமெண்ட் பண்ணாத கூட்டத்திற்கு ஒரு எச்சரிக்கை....
இது உடனே நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இந்த தண்டனைகள் உடனே நிறைவேற்றப்படவேண்டும்.

The fb accounts of the all the acquits and the relatives should be canceled without mercy

- அஹமட் சுஹைல் -

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS