RSS

ஸாக்கிர் நாயக்

ஸாக்கிர் அப்துல் கரிம் நாயக் (ஸாக்கிர் நாயக்) 1965ம் வருடம் ஒக்டோபர் 18ம் திகதி மும்பாயில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை St. Peter's High School இலும் அதன்பின்னர் Kishinchand Chellaram College இலும் தொடர்ந்தார். வைத்தியரான இவர் தனது மருத்துவக் கல்வியை Topiwala National Medical College and Nair Hospital இல் கற்றார். MBBS பட்டத்தினை University of Mumbai இல் பெற்றுக் கொண்டார்.




மறைந்த மா மேதை அஹ்மட் தீதாத் அவர்களின் தஃவாப் பணியினால் உந்தப்பட்ட ஸாகிர் நாயக் அவர்கள் 1991 ம் ஆண்டிலிருந்து தன்னையும் தஃவாத் துறையில் ஈடுபடுத்தத் தொடங்கினார். 45 வயதாகும் ஸாக்கிர் நாயக் அவர்கள் இஸ்லாம் தொடர்பாக மற்றவர்கள் கொண்டுள்ள தப்பபிப்பிராயங்களை நீக்குவதில் அயராது பாடுபடுகின்றார். இஸ்லாத்தினை அல்குர்ஆன், அல்-ஹதீஸ் அடிப்படையில் தெளிவாக விளக்குவதோடு தர்க்க ரீதியிலும் விஞ்ஞான அடிப்படையிலும் இவர் வழங்கும் விரிவுரைகள் அற்புதமானவை.



நேயர்களின் நேரடிக் கேள்விகளுக்கு உடனடியாகவும் தெளிவாகவும் விளக்கமளிப்பது இவரது தனிச்சிறப்பு. அனைத்து மத நூல்களையும் படித்து மனனமிட்டுள்ள இவர் நொடிப் பொழுதில் அனைத்து நூல்களினையும் அத்தியாயம் வரிகளோடு ஆதாரமாகக் குறிப்பிட்டு விளக்கமளிப்பதால் இவரது உரை உலகப் புகழ்மிக்கதாகத் திகழ்கின்றது. இவரது ஞாபக சக்தி அபரிமிதமானது.



இவரது அற்புதமான விளக்கத்தினால் இவர் உரை நிகழ்த்தும் அதே சபையில் பலர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றார்கள்.



Indian Express பத்திரிகையானது 2009ம் வருடம் பெப்ரவரி 22ம் திகதி வெளியிட்ட “100 Most Powerful Indians in 2009” என்ற தரப்படுத்தலில் ஸாக்கிர் நாயக் அவர்களுக்கு 82ம் இடம் வழங்கப்பட்டிருந்தது. அதேபோன்று

"Top 10 Spiritual Gurus of India" என்ற விசேட தரப்படுத்தலில் ஸாக்கிர் நாயக் அவர்களுக்கு 3வது இடம் வழங்கப்பட்டிருந்தது.



ஸாக்கிர் நாயக் அவர்கள் உலகின் பல பாகங்களிலும் புகழ்பெற்ற பல விவாதங்களில் பங்குபற்றியிருக்கின்றார்.

இவற்றுள் 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிக்காக்கோவில் Dr. William Campbell அவர்களுடன் "The Qur'an and the Bible: In the Light of Science" என்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதமும், 2006ம் வருடம்ஜனவரி 21ல் Sri Sri Ravi Shankar அவர்களுடன் God in Islam and Hinduism என்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதத்தையும் சிறப்பாகக் குறிப்பிடலாம். இதில் ஏறத்தாழ 50,000 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

2006 செப்டம்பரில் 16வது போப் பெனடிக் அவர்களை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஸாக்கிர் நாயக் அவர்கள் அழைத்த போதும் 16வது போப் பெனடிக் அதனை நிராகரித்துவிட்டார்.

உலகெங்கிலுமுள்ள பல பிரபலமான பல்கலைக் கழகங்களில் இஸ்லாம் தொடர்பாக பல முக்கிய விரிவுரைகளையும், விவாதங்களையும் ஸாக்கிர் நாயக் நிகழ்த்தியிருக்கிறார்.

2007 நவம்பர் மாதத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் டெல்லியில் ஸாக்கிர் நாயக் அவர்கள் தனது தலைமையில் 10 நாள் சமாதான மாநாட்டினை நடாத்தி வருகின்றார். இதில் உலகெங்கிலுமிருந்து பல மார்க்க அறிஞ்சர்கள் கலந்து மார்க்க சொற்பொழிவினை நிகழ்த்திவருகின்றார்கள்.

IRF (Islamic Research Foundation) என்ற அமைப்பின் நிறுவனத் தலைவரான இவர் இதன் மூலம் பல தாயீக்களை உருவாக்கி வருகின்றார். Pease TV என்ற தொலைக்காட்சி ஒலிபரப்பின் மூலம் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இவர் தனது தஃவாப் பணியினைத் தொடர்கின்றார்.



ஸாக்கிர் நாயக்கிற்கு எதிராக பல விமர்சனங்கள் வெளிவந்தாலும் அவற்றையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்து தனது தஃவாப் பணியில் தொடர்ந்தும் பயணிக்கின்றார்.

இப்படி பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட ஸாக்கிர் நாயக் அவர்கள் இன்று மாலை 6.45 மணிக்கு கொழும்பு சுகததாச திறந்த வெளியரங்கில் "Peace Through Religion" என்ற தலைப்பில் மாபெரும் சொற்பொழிவினை நிகழத்தவிருக்கின்றார். சொற்பொழிவின் முடிவில் பார்வையாளர்களின் நேரடிக் கேள்விகளுக்கும் பதிலளிக்கக் காத்திருக்கின்றார்.



எனவே இஸ்லாம் தொடர்பாக உங்களுக்குள்ள சந்தேகங்களையும், தெளிவின்மையையும் போக்கிக் கொள்ள இந்த அற்புதமான நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன். விசேடமாக முஸ்லிம் அல்லாத நண்பர்களை இஸ்லாம் தொடர்பான தெளிவான விளக்கத்தினை பெற்றுக் கொள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றேன்.



ஸாக்கிர் நாயக் அவர்களின் தஃவாப் பணி வெற்றிகரமாகத் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது உலக சாதனை

நான் கட்டாயம் இத சொல்லியே ஆகனும்....

வழமையாக மாலை வேளையில் நான் எங்கள் பாடசாலை மைதானத்தில் கிரிக்கட் விளையாடுவது வழக்கம். அவ்வாறு இன்று விழையாடும் போதுதான் நான் அந்த சாதனையை நிகழ்த்தினேன்.

அதற்கு முதல் என்னைப் பற்றி ஒரு பில்ட்-அப்பினை உங்களுக்கு தருவது மிக முக்கியம். வலதுகை துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளரான நான் துடுப்பாட்டத்தில் மஹெல ஜயவர்த்தன, மாவன் அத்தபத்து போன்று ஆடக்கூடியவன், அதாவது Touch Player என்று சொல்வார்களே அப்படித்தான். பந்துவீச்சில் இரண்டுவிதமான பந்துவீச்சு முறையைக் கையாள்கின்றேன். ஒன்று சமிந்த வாஸ் போன்று High arm action மற்றையது லசித் மலிங்க போன்று Side Arm action அந்த வகையில் இன்று நான் Side Arm action ஐத்தான் பயன்படுத்தினேன். காரணம் காற்று பந்து வீசும் திசைக்கு எதிர்த் திசையில் வீசியமையினால் காற்றை எதிர்த்து வேகமாகப் பந்து வீச இம்முறையைப் பயன்படுத்தினேன். சரி பில்ட்-அப் போதும் மேட்டருக்கு வரலாம்.





இன்று நான் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கட்டுகளைக் கைப்பற்றி லசித் மலிங்கவின் உலக சாதனையைச் சமப்படுத்தியிருக்கின்றேன்.

 ஒருவர் 3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசலாம். எனது 3வது ஓவரில்தான் இந்த சாதனை நிகழ்ந்தது.

முதலாவது பந்து அகலப் பந்து. இரண்டாவது பந்தில் அஸ்லம் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அதற்கடுத்த பந்தில் சலாம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார், அதற்கடுத்த பந்தில் சியான் பிடிகொடுத்து ஆட்டமிழந்த போது ஹெட்ரிக்கினைப் பூர்த்தி செய்தேன். அடுத்த பந்துக்கு நெளசாட் விக்கட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்ததன் மூலம் நான்கு பந்துகளில் தொடர்ச்சியாக நான்கு விக்கட்டுகளைக் கைப்பற்றி மலிங்கவின் சாதனையைச் சமப்படுத்தினேன். அடுத்த பந்திலும் அழகான ஆட்டமிழப்பொன்றுக்குரிய வாய்ப்பிருந்தது. நேராக நடு விக்கட்டுக்கு நான் வீசிய பந்தை ஃபர்ஹான் விக்கட்டினை மறைத்து ஆடினான் மிகவும் அழகான LBW ஆட்டமிழப்பது. இருந்தும் எங்கள் விழையாட்டில் LBW ஆட்டமிழப்பை கொடுப்பதில்லை என்பதால் அவ்வாட்டமிழப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இறுதிப் பந்தில் ஓட்டமெதுவும் கொடுக்கவில்லை. இதன் படி அந்த ஓவரில் 1 ஓட்டம் மட்டுமே கொடுத்து 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினேன்.

இன்றைய நாளில் மொத்தமாக நான் வீசிய 3 ஓவர்களில் 15 ஓட்டங்கள் கொடுத்து 7 விக்கட்டுக்களைக் கைப்பற்றினேன்.

எப்புடி…..? நாங்க யாரு…?

இப்படிப்பட்ட சாதனையை தரம் 7ல் படிக்கும் போதும் நிகழ்த்தியிருந்தேன். ஆனாலும் அக்கால கட்டத்தில் தொழில்நுட்ப வசதிகள் பெரிதாக இல்லாததால் அவை சரியான முறையில் வெளி உலகுக்கு எத்திவைக்கப் படவில்லை. ஆனால் இம்முறை அதை நானாகவே வெளி உலகுக்கு எடுத்துரைக்கின்றேன்.


இச்சாதனையின் மூலமாக இலங்கை கிரிக்கட் தேர்வாளர்களுக்கு ஒரு செய்தியை சொல்லிவைக்க ஆசைப்படுகின்றேன்.

நீங்கள் வீரர்களைத் தேர்வு செய்யும் போது கொழும்பையும் அதனை அண்மித்த பிரதேசங்களிலுள்ளவர்களையும் மட்டுமே தேர்வு செய்கின்றீர்கள். ஆனால் கொழுப்பிலிருந்து வெகு தொலைவிலுள்ள பிரதேசங்களிலும் என் போன்ற திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். எனவே 2011 உலகக் கிண்ணத்தை வெல்லும் எண்ணமிருந்தால் என்னையும் அணியில் இணைத்துக் கொள்ளுங்கள்.


(இந்த சாதனையைப் பற்றி ஃபேஸ் புக்கிலும், வலைப் பதிவிலும் போட ஆலோசனை கூறிய நம்ம நண்பர் வஹாபிற்கு நன்றிகள்.)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1

ம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ் தனது குடிசையில் குடிசை ஓவியர் ஓமக்குட்டனுடன் ஏதோ செய்துகொண்டிருக்கின்றார். இந்த நேரம் பார்த்து நம் அமைச்சர் மங்குனிப் பாண்டியன் அங்கே வருகிறார்.


அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: மன்னா என்ன இது கொடுமை.

இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: எது அமச்சரே?

அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: இல்லை மன்னா இங்கே உங்கள் பட்டுப்போன உடல் மறைக்கப்பட்டிருகிறது; அங்கே அவனின் தலை மறைக்கப் பட்டிருக்கிறது எனக்கொன்றும் புரியவில்லை மன்னா.


இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: இந்த தேய்ந்து போன றப்பர் செருப்பு போன்ற என் தலை அந்த கட்டுமஸ்தான உடலோடு இணையப்போகின்றது.



அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: அப்படியென்றால் கொலையா மன்னா.

இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: உனக்கு ஒரு எ…………….. புரியாது என்கூடவே இருந்தால் உனக்கும் என் மக்குப் புத்திதானே வரும்.
அமைச்சரே நானொரு மொள்ளமாரி, கேப்மாரி என்பது ஒரு புறமிருக்கட்டும். எனது இந்த நசுங்கிப் போன உடம்பை எதிர்கால சந்ததியினர் பார்த்தார்களேயானால் காறித் துப்பிவிடுவார்கள். காலில் போட்டிருப்பதைக் கொண்டு அடித்துவிடுவார்கள். ஆடு,மாடுகள் கூட என்மேல் கழிந்துவிடும். வாழும் போதும் அடிவாங்கி மாண்ட பிறகும் அடிவாங்க இந்த உடம்பால் முடியாது அமைச்சரே…..

அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: ஆமாம் மன்னா. இப்பொழுதே உங்கள் உடம்பு மலேரியா வந்த மண்புழு மாதிரித்தான் இருக்கிறது……


இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: ம்ம்…………………….(ஆஹா நம்ம வீக்னஸ்ஸ விபரமாச் சொல்றானேய்யா..?)
இப்படி வராலாற்றில் அடிவாங்கியே காலம் தள்ளும் மானங்கெட்டவனாய் நான் இருக்க விரும்பவில்லை. அதானால் என்ன செய்யலாம் என்று களிவறையில் உட்கார்ந்து யோசித்தபோது பாழாய்ப்போன என்மனதில் உதித்ததுதான் இத்திட்டம். இதைப் பார்த்தாவது நம் வருங்காலச் சந்ததியினர் இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ் என்பவன் இந்த உலகமே அசிங்கப்படுத்தும் ஒரு மடையன், ஒரு கிறுக்கன் என்று நம்பிவிடுவார்களில்லையா…..? ஹஹ்ஹா
எப்படி என் திட்டம். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே……

அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: ஆமாம் மன்னா நீங்கள் ஒரு சொங்கி என்பது இந்த மக்களுக்கு தெரியவா போகிறது.?
சரி மன்னா எதற்காக இவனது உடலை உங்கள் உடலோடு சேர்த்து வரைகிறீர்கள்.

இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்:  நீயொரு மங்குனி அமச்சர் என்பதை மணிக்கொருமுறை நிரூபித்துக் கொண்டிருக்கிறாய். (அது சரி என்கூட இருந்தா அவன் புத்தி இப்படித்தானேயிருக்கும்.)

இவன் யார் தெரியுமா? நானொரு பெண்ணின் பின்னால்(கலைப்பீடம்) சுற்றி அலைந்தது உனக்குத் தெரியும்தானே.



அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: ஆமாம் மன்னா. ஒன்றாக சேர்ந்து அடியும் வாங்கினோமே….. என்னா... அடி. அத மறப்பனா மன்னா?

இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: அடேய்… அரச ரகசியத்தை அம்பலப்படுத்தாதடா சோமாரி.

அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: ஸ்ஸ்ஸ்சாரி மன்னா, நீங்கள் கூறுங்கள்.

இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: (மன்னர் அமைச்சரின் காதில் மெதுவாக சொல்கிறார்.) அன்று நம்மிருவரையும் அடித்து மிதித்து, சாக்கடைக்குள் முக்கி எடுத்தானே அவன்தாண்டா இவன்.

அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: அவனா இவன். ஐய்யோ ஆளைவிடுங்கள் மன்னா.

(அமைச்சர் ஓடத் துவங்குகிறார். மன்னர் அமைச்சரின் கையைப் பிடித்து ஏதோ ரகசியமாகச் சொல்கிறார்.)





மன்னர் என்ன சொன்னார் அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பிறகு சொல்கிறேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS