RSS

ஹலால் !!!!!!!!!!!!



ஹலால் வாபஸ் பெறப்பட்டதாக அறிந்த உடனே எழுந்து  கோபம் கவலையின் வெளிப்படுத்தியிருந்தேன்.
அதுவரையில் ரிஸ்வி முஃப்தி அவர்களின் உரையை கேட்டிருக்கவீல்லை. ஆனால் அவரின் உரையைக் கேட்டதன் பின்னர் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டேன்.

ஹலால் உணவு உற்பத்தியை உறுதிப்படுத்தும் நடவடிக்கை வாபஸ் பெறப்படவில்லை மாறாக ஹலால் இலச்சினை
பொறிப்பதைத்தான் வாபஸ் பெற்றிருக்கிறார்கள் அதுவும் முன்னர் கட்டாயமாக்கப்படிருந்த ஹலால் இலச்சினை இப்போது
விருப்பத் தேர்வாக்கப்பட்டிருக்கிறது(Optional) அதாவது விரும்பியவர்கள் பொறிக்கலாம் விருப்பம் இல்லாதவர்கள் விட்டுடலாம்.
ஆனால் ஜம்மியதுல் உலமாவின் ஹலால் ஸிஸ்ட்டம் தொடர்ந்தும் இருக்கும். ஹலால் பொருட்களை முஸ்லிம்கள் பிரித்தறிய ஜம்மியதுல் உலமாவின்
இணையத்தளம், ஹொட்லைன், எஸ்.எம்.எஸ் மூலாமாக அறிவுறுத்தப்படும். இதற்காகவென ஒரு தனி தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்படும்.

பொது பலசேனாவின் மற்றுமொரு குற்றச்சாட்டு ஹலால் சான்றிதழ் வழங்குவதன் மூலமாக சிங்களவர்களிடம் இருந்து பெறப்படும் கோடிக்கணக்கான
பணம் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது, தலிபான் அல்குவைதாவுக்கு வழங்கப்படுகின்றது என்ற மொக்குத் தனமா குற்றச்சாட்டிற்கும்
சேறு பூசும் விதமாக வழமையான கட்டண அறவீட்டையும் கைவிட்டு இலவசமாகவே அந்த நடவடிக்கை தொடரப்போகிறது.
இதற்குரிய செலவை ஏற்றுக்கொள்ள முஸ்லிம் தனவந்தகர்களும் முஸ்லிம் வர்த்தகர்களும் முன்வந்திருக்கிறார்கள்.
இதன்மூலம் பொது பலசேனாவின் இந்த குற்றச்சாட்டும் தவிடுபொடியாக்கப்படவுள்ளது.

இந்த ஹலால் சான்றிதழ் விடையத்தில் ஜம்மியதுல் உலமா சபை படிப்படியான நடவைக்கைகளையும் கைக்கொண்டிருக்கின்றது.
முதலில் 70:30 முறைமை அதாவது ஒரு பொளின் 70% மானவற்றிற்கு ஹலால் சான்றிதழ் பொறிப்பதில்லை,. 30% ஆனவற்றிற்கு ஹலால் சான்றிதழ் பொறிப்பது.
அது நடைமுறைச் சாத்தியம் குறைவானது என்பதால் அடுத்த கட்டமாக அரசாங்கத்திடம் இதனைப் பொறுப்பெடுக்கச் சொல்வது. அதனை அராசங்கம் நிராகரித்தது.
எனவே எடுக்கக் கூடிய இறுதியானதும் சிறந்ததுமான முடிவான இந்த முடிவுக்கு ஜம்மியதுல் உலமா சபை முன்வந்திருக்கின்றது.

பொது பலசேனாவின் நோக்கம் ஹலாலை அகற்றுவது என்பதைவிட முஸ்லிம் சிங்கள இனக் கலவரத்தை தூண்டுவதே அவர்களின் முக்கியமான
இலக்காக இருந்தது. அது இந்த முடிவின் மூலம் இன்று முறியடிக்கப்பட்டிருக்கின்றது.

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ஏற்றுமதியாளர்களீன் வேண்டுகோளிற்கு இணங்க ஹலால் சான்றிதழ் வழமைபோன்று
வழங்கப்படும். உள்நாட்டுச் சந்தையில் ஹலால் முத்திரை பதிக்கப்பட்ட பொருட்களை விட்கலாம் விட்காமல் விடலாம். ஆனால் எது ஹலால்
எது ஹறாம் என்பதை முன்னர் ஹலால் முத்திரை மூலம் அறியத்தந்த ஜம்மியதுல் உலமா இனி அதை அவர்களின் இணையதளம், ஹொட்லைன், எஸ்.எம்,எஸ்
மூலமாக, பள்ளிவாசல்களின் மூலமாக அறிவிக்கவுள்ளது. அவ்வளவுதான் மாற்றம். எனவே தொடர்ந்தும் ஹலால் உணவுகளை உறுதிப்படுத்தும் ஜம்மியதுல் உலமாவின்
பணி தொடர்ந்தும் நடைபெறும்.

”எப்படி லோகோவைப் பார்த்து வாங்குவதை மக்களுக்கு நாங்கதான் அறிமுகம்செய்தமோ
அதேபோல லோகோ இல்லாமலும் இதை நீங்க அடையாளம் காண்பதற்கு  இன்ஸா அலாஹ் நாங்களே உங்களுக்கு வழிகாட்டுவோம்”ரிஸ்வி முஃப்தி

ரிஸ்வி முஃப்தியின் கருத்தப்படி பெளத்த பிக்குகளுடன் கடந்த காலங்களில் இடம்பெற்றா ஹலால் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்தைகளின் போது பொது பலசேனா மட்டுமல்லாது
ஏனைய பிக்குகளும் பெளதர்களும் ஹலால் பொருட்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டினையே கொண்டிருந்தார்கள் என்பது புலனாகின்றது. எனவே ஹலால் விடையத்தில் இந்த முடிவு எடுக்கப்படாவிட்டிருந்தால்
பொது பலசேனாவிடமிருந்து மட்டுமல்ல ஏனைய பெளதர்களிடம் இருந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியிருந்திருக்கும்.

 ஆக. எங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் கொஞ்சம் இறங்கி வந்து எடுக்கப்படக்கூடிய ஒரு சிறந்த முடிவே எடுக்கப்பட்டுள்ளதாக இதனை என்னால் பார்க்க முடிகிறது.

சரி இனிவரும் காலங்களில் பொது பலசேனாவின் அடுத்தகட்ட அட்டூழியங்களை ஜம்மியதுல் உலமா சபை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் அவர்களுக்கும்
எங்களுக்கும் இருக்கப் போகும் சவால். இன்ஸா அல்லாஹ் பார்ரகலாம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வண்ணான்’ஸ் Day மருவி “வெலண்டைன்ஸ் Day” ஆச்சு

------ காதலர் தினம் --------

காதலர் தினத்தை எல்லாரும் “வெலண்டைன்ஸ் Day” அப்படின்னு சொல்லுவாங்க ஆனா அது தப்பு ”வண்ணான்’ஸ் Day” அதுதான் சரி
வண்ணான்’ஸ் Day தான் காலப்போக்கில மருவி “வெலண்டைன்ஸ் Day” ஆ மாறிப் போச்சு.

இந்த ”வண்ணான்’ஸ் Day” உருவான வரலாறு தெரியுமா உங்களுக்கு..? சொல்றன் கேளுங்க

இற்றைக்கு சில பல ஆண்டுகளுக்கு முன்னாடி ஒரு ஊர்ல ஒரு காதல் ஜோடி இருந்துச்சாம்.. அதுதான் அந்த ஊர்ல முதலாவது காதல் ஜோடியாம்.. அவங்க காதல அவங்க ரெண்டு பேர் வீட்லையும் ஏத்துக்கவே இல்லையாம்.. 

எவ்வளவோ ட்ரை பண்ணியும் வருசக் கணக்கா காத்திருந்தும் இரு வீட்டாரும் சம்மதிக்கவே இல்லையாம். பொறுமை இழந்த ரெண்டுபேரும் ஒன்னா தற்கொலை பண்ணிக்க ஆத்துல குதிக்கப் போனாங்களாம்… 
அந்த நேரமா அந்த ஆத்துல ஒரு வண்ணான் உடுப்பு துவைச்சிட்டு நின்னானாம். அந்த ஊர்லையே அவர் மட்டும்தான் வண்ணானாம் அதனால அந்த ஊர் மக்கள் வண்ணான் எண்டுதான் அவரைக் கூப்பிடுவாங்களாம்….

அவரு அந்த காதல் ஜோடிய பாத்துட்டு என்ன பண்ணப் போறீங்கன்னு கேக்க அவங்க நடந்ததையெல்லாம் சொன்னாங்களாம்… 

அதைக் கேட்டு மனமிரங்கிய அந்த வண்ணான் இந்தக் காதல் சாகக்கூடாது கண்டிப்பா வாழனும்னு சொல்லி அவர்கிட்ட இருந்த கழுதையைக் கொடுத்து இந்தாப்பா இந்தக் கழுதைல ஏறி நீங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டே ஓடிடுங்க ஓடிப்போய் எங்கையாச்சும் போய் சந்தோசமா வாழுங்கப்பா எண்டு சொல்லி தன் கழுதையக் கொடுத்து அனுப்பிவச்சாராம்

அந்த ஜோடியும்டு கழுதைல ஊரை விட்டே ஓடிப் போயிட்டாங்களாம்….

இப்படி தன்னிடமிருந்த ஒரே ஒரு கழுதையையும் கொடுத்து காதலைச் சேர்த்து வெச்ச அந்த வண்ணானிடம் இருந்த நல்ல மனசு நமக்கு இல்லாம போயிட்டேன்னு நினைச்சு ரொம்பவே வருத்தப்பட்ட அந்த ஊர் நாட்டாம ஒரு முடிவுக்கு வந்தார். 

அதாவது அந்த காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடிய நாளான பெப்ரவரி 14ஐ காதலர் தினமாக கொண்டாடவேண்டும் என்றும் அந்நாளுக்கு அந்த காதல கழுதையைக் கொடுத்து சேர்த்துவெச்ச வண்ணானின் ”வண்ணான்” எண்ட பெயர்சூட்டப்பவேண்டும் என்றும் மக்களுக்கு அறிவித்தார்..

அதாவது பெப்ரவரி 14 ”வண்ணான்’ஸ் Day”

மேலும் இந்த தினத்தில் ஊரிலுள்ள காதலர்கள் மற்றும் காதலித்து திருமணம் முடித்தவர்கள் அனைவரும் நாட்டாமை உட்காரும் ஆலமரத்தடியில் இருந்து அடுத்த ஊர் வரை ஓடி மீண்டும் நாட்டாமையின் ஆலமரத்தடிக்கு வர வேண்டும். வீட்டுக்கு தெரியாமல் காதலிப்பவர்கள் தாங்கள் இருக்கும் பார்க் பீச்சில் ஒரு ரவுண்ட் ஓடலாம்.. என்றும் உத்தரவிட்டார்……… 

இதுதான் வரலாறு…..இப்படி உருவானதுதான் இந்த ”வண்ணான்’ஸ் Day”. இதைத்தான் இப்ப உள்ளதுக கொஞ்சம் ஸ்டைல்லா வெலண்டைன்ஸ் Day னு மாத்திக்கிட்டு கொண்டாடிட்டு திரியுதுக.

(எப்புடீ….? நாங்களும் சொல்லுவோமில்ல History...)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2012 டிசெம்பர் 21ல் உலகம் அழியப்போகுதாமே...?

2012 டிசெம்பர் 21ல் உலகம் அழியப்போகிறது.. முழு மனித இனமும் செத்து மடியப்போகின்றது என்று அண்மைய நாட்களில் பலராலும் பரவலாகப் பேசப்படுகின்றது.என்றோ ஒரு நாள் உலகம் அழியும் என்பது உண்மை ஆனால் இந்த 2012 டிசெம்பர் 21 அன்றுடன் உலகம் அழியப் போகின்றது என்பதில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் டிசம்பர் மாதத்தில் முன்னர் இடம்பெற்ற சுனாமி போன்று இயற்கையின் கோரத் தாண்டவங்கள் நிகழலாம். எதிர்பார்க்காத ஒரு புறத்தால் அழிவுகள் வரலாம் வராமலும் விடலாம் ஆனால் உலகம் அழியும் என்பதை ஏற்கமுடியவில்லை 

 2012 டிசெம்பர் 21 அன்றுடன் உலகம் அழியப் போகின்றது என்று வாதிடுபவர்கள் அதற்காக சொல்லும் காரணங்களில் முக்கியமான இரண்டு
 1.நிபிறு பிரளயம்
2.மாயன் நாட்காட்டி 2012.12.21 அன்றுடன் முடிவடைதல்
இவை இரண்டு தொடர்பாகவும் அறிய எனக்கு ஆர்வமேற்பட்டு இணையத்தில் தேடியதில் கிடைத்த முக்கிய/ சுவாரஸ்ய தகவல்களை இங்கே பகிர்கிறேன். 

நிபிறு பிரளயம்:   
சூரியத்தொகுதியை போலவுள்ள பல்லாயிரக்கணக்கான தொகுதியில் ஒரு தொகுதியிலிருந்து நிபிறு எனும் கோள் 3600 வருடங்களுக்கொரு முறை பூமியை அண்மிக்கும் இதன் போது நிபிறுவின் துணைக்கோள்களுடன் சேர்த்து மொத்தமாக 6 கோள்கள் பூமியை பாதிப்புக்குள்ளாக்கும்.

இதனால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் சுனாமி, பூமியதிர்ச்சி, எரிமலை வெடிப்புக்கள் மற்றும் நிலங்கள் பல துண்டுகளாக பிளவடையும் இதனைத் தொடர்ந்து சுமார் 2 வருடங்களில் படிப்படியாக மிக மெதுவான முறையில் பூமி தன்னை மீளமைக்கும். இதற்கிடையில் பூமியிலுள்ள மனிதர்களில் 23 பங்கினருக்கு மேல் அழிந்துவிடுவார்கள். இதுவே 'நிபிறு பிரளயம்' என்று சொல்லப்படுகிறது. 

மாயன் நாட்காட்டி.
பிரளயம், கிரங்கள் தாக்குதல் நட்சத்திரங்கள் மோதுதல் என்பது முன்னரே  கேள்விப்பட்ட விடையங்கள் என்பதால் அதில் அதிக ஆர்வம் வரவில்லை. இந்த மாயன் நாட்காட்டி என்ன? , யார் இந்த மாயன்கள் என்பதை அறிவதிலேயே அதிக ஆர்வம் ஏற்பட்டது அந்த வகையில் தேடியதில்….. 

மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களே. கி.மு. 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது 

மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர் மிக விசாலமான, நுனுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது. 

அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடுங்கியியது. ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாச்சார பேரழிவிற்கு காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார் ஆறு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது. 

மாயா காலக்கணக்கு முறை என்பது கொலம்பசுக்கு முந்திய இடையமெரிக்காவின் மாயா நாகரிக மக்களும்; குவாத்தமாலா, மெக்சிக்கோவின் ஒவாக்சக்கா ஆகியவற்றின் மேட்டுநிலப் பகுதியில் வாழும் தற்கால மாயா சமூக மக்களும் பயன்படுத்திய காலக்கணக்கு முறை. இது, காலக்கணக்கு முறைகளையும், நாள்கோள் விவரங்களையும் உள்ளடக்கியது.

மாயா காலக்கணக்கு முறையின் முக்கிய அம்சங்கள், இடையமெரிக்கப் பகுதி முழுதும், குறைந்தது கிமு 5 ஆம் நூற்றாண்டில் இருந்தாவது பொதுப் பயன்பாட்டில் இருந்த முறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்த முறை சப்போட்டெக், ஒல்மெக் போன்ற முந்திய இடையமெரிக்க நாகரிகங்களும்; மிக்சுட்டெக், அசுட்டெக் போன்ற சமகால அல்லது பிந்திய நாகரிகங்களும் பயன்படுத்திய காலக்கணக்கு முறைகளின் அம்சங்கள் பலவற்றையும் உள்ளடக்கி இருந்தது 

இடையமெரிக்கக் காலக்கணக்கு முறையை மாயாக்கள் தோற்றுவிக்கவில்லை எனினும், அவர்கள் செய்த விரிவாக்கங்களும், மெருகூட்டலுமே அக் காலக்கணக்கு முறைக்குச் உயர்நயத் தன்மையைக் கொடுத்தது. மாயா காலக்கணக்கு முறை உரிய முறையில் ஆவணப்படுத்தப்பட்டதும், முழுமையாக விளங்கிக்கொள்ளப் பெற்றதுமான ஒரு காலக்கணிப்பு முறை.

மாயாக்களின் தொன்ம மரபுகள், குடியேற்றவாதக் காலத்தில் ஆவணப்படுத்திய யுக்காடிய விவரிப்புகள், பிந்திய செந்நெறிக்காலத்தையும் பின்செந்நெறிக் காலத்தையும் சேர்ந்த கல்வெட்டுக்கள் போன்றவை, காலக்கணிப்பு முறை பற்றிய அறிவையும், எழுத்து, பண்பாட்டின் பிற அடிப்படையான அம்சங்களையும், இட்சாம்னா என்னும் கடவுள் மாயர்களின் முன்னோருக்குக் கொடுத்ததாகச் சொல்கின்றன. 

மாயன்களின் எண்முறை: 
20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.

மாயன் எண்முறை இலகுவில் விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. இது மூன்று குறியீடுகளை மாத்திரமே கொண்டிருக்கின்றது.

      Ѳ கண் போன்ற ஒரு உருவம் பூச்சியத்தைக் குறிக்கின்றது.
      ஒன்றையும்
      ஐந்தையும் குறிக்கின்றது.

       
    இந்த அடிப்படையில் பார்க்கும் போது 20 என்ற இலக்கம் வெறும் 4 கிடைக்கோடுகளை மாத்திரமே கொண்டிருக்கும் என நினைக்கின்றேன்
    20 - நான்கு கிடைக்கோடுகள்
    21 - நான்கு கிடைக்கோடுகளின் மேல் ஒரு புள்ளி
    22 - நான்கு கிடைக்கோடுகளின் மேல் இரு புள்ளிகள்
    30 - 5 கிடைக்கோடுகள்
    என்று செல்லும் என நினைக்கின்றேன். ஆனால் 19 ற்குப் பிறகு எந்த இலக்கத்தின் உருவத்தினையும் அறிய முடியவில்லைஎப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை 

    Among their other accomplishments, the ancient Mayas invented a calendar of remarkable accuracy and complexity. At right is the ancient Mayan Pyramid Chichen Itza, Yucatan, Mexico. The Pyramid of Kukulkan at Chichén Itzá, constructed circa 1050 was built during the late Mayan period, when Toltecs from Tula became politically powerful. The pyramid was used as a calendar: four stairways, each with 91 steps and a platform at the top, making a total of 365, equivalent to the number of days in a calendar year.
    The Maya calendar was adopted by the other Mesoamerican nations, such as the Aztecs and the Toltec, which adopted the mechanics of the calendar unaltered but changed the names of the days of the week and the months. An Aztec calendar stone is shown above right.
    The Maya calendar uses three different dating systems in parallel, the Long Count, the Tzolkin (divine calendar), and the Haab (civil calendar). Of these, only the Haab has a direct relationship to the length of the year.

    What is the Long Count?
    The Long Count is really a mixed base-20/base-18 representation of a number, representing the number of days since the start of the Mayan era. It is thus akin to the Julian Day Number.
    The basic unit is the kin (day), which is the last component of the Long Count. Going from right to left the remaining components are:

      uinal
      (1 uinal = 20 kin = 20 days)
      tun
      (1 tun = 18 uinal = 360 days = approx. 1 year)
      katun
      (1 katun = 20 tun = 7,200 days = approx. 20 years)
      baktun
      (1 baktun = 20 katun = 144,000 days = approx. 394 years)


    முழுமையான வாசிப்புக்கு
    Maya Cycles of Time


      Mayan Calendar animation until December 21, 2012


      Diagnosis2012 Calendar Converter and Calculator


      நன்றி:
    1. http://www.webexhibits.org/calendars/calendar-mayan.html
    2. http://mathdl.maa.org/images/cms_upload/MayaTimeCycles2-143624.pdf
    3. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
    4. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
    5. http://www.virakesari.lk/article/feature.php?vid=51

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS