RSS

-- அன்னக் கொடியும் நானும் --

*** நாட்குறிப்பில் ஒரு பக்கம்…***



2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துக்கொண்டிருந்த காலம்.
அப்பொழுது நான் பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தென்றலில் பகுதிநேர அறிவிப்பாளராக கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.

ஒரு நாள் காலையில் உல்லாச வேளை நிகழ்ச்சி செய்துகொண்டிருந்தேன். நிகழ்ச்சியில் 45வது நிமிடத்தில் தங்கப் புதையல் என்று ஒரு பகுதி அதில் பழைய பாடல் போடவேண்டும். நான் MGR இன் விவசாயி படத்தில் ”கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி” என்னும் பாடலை தெரிவு செய்து ஒலிக்கவிட்டிருந்தேன்.

பாடல் ஒலித்துக்கொண்டிருக்கையில் அவசர அவசரமாக சிரேஸ்ட்ட அறிவிப்பாளர்கள் இருவர் ஒலிபரப்பு உதவியாளரின் பகுதிக்குள் நுழைந்து ஒலிபரப்பு உதவியாளரோடு ஏதோ பேசினர். உடனே ஒலித்துக்கொண்டிருந்த பாடல் நிறுத்தப்பட்டு வேறொரு பழைய பாடல் ஒலிபரப்பானது.

எனக்குப் புரியவே இல்லை. அறிவிப்பாளர் பகுதியில் இருந்து கண்ணாடியினூடாக அதனை அவதானித்துக்கொண்டிருந்த நான் ஒ.ப.உதவியாளரின் பகுதிக்குச் சென்று ”ஏன் பாட்டை மாற்றினீர்கள்” என்று கேட்டேன்.
அப்பொழுது அங்கிருந்த இரு சிரேஸ்ட அறிவிப்பாளர்கள் இருவரும். ”தம்பி நாங்கதான் அந்தப் பாடலை மாற்றச் சொன்னோம். நல்ல பாடல்தான் நல்ல தெரிவுதான் ஆனால் நாடு இப்போதிருக்கும் சூழலில் இந்த அரசியல் சூழலில் இந்தப் பாடல் பொருத்தமற்றது.  இந்தப் பாடல் முழுதும் ஒலிபரப்பானால் உங்களுக்குதான் பிரச்சினை வரும். உங்ககிட்ட Explanation  கேட்பாங்க. அதான் நிறுத்தினோம். இல்லன்னா உங்களுக்கும் பிரச்சினை எங்களுக்கும் பிரச்சினை. இனி தேர்தல் முடியும்வரை இவ்வாறான அரசியல் கருத்துப்பாடல்களை ஒலிபரப்பாதீங்க”. என்றனர்.

எனக்கு அந்தப் பாடல் ஒலிபரப்ப எந்த உள்நோக்கமும் இருக்கவில்லை. பிடித்த பாடல் என்பதால் ஒலிபரப்பியிருந்தேன்.
“அப்டி என்ன அண்ணா இருக்கு அந்தப் பாட்டுல.?” கேட்டேன்.

”அந்தப் பாடலை இறுதிவரை தனியாகக் கேட்டுப் பாருங்கள் புரியும்” என்று சொல்லிட்டுப் போயினர்.
அந்தப் பாடலை Preview இல் ஒலிக்கவிட்டுக் கேட்டேன்.
சர்ச்சைக்குரிய அந்த வரிகள் இவைதான்.

//இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக் கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேணும் எங்கும் ஒரே சின்னக் கொடி -அது
பஞ்சம் இல்லை என்னும் அன்னக் கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக் கொடி//

குறிப்பு : அப்பொழுது ஜனாதிபதிக்கெதிராக போட்டியிட்ட சரத் ஃபொன்சேகாவின் தேர்தல் சின்னம் “அன்னம்”

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புலியோட்டம்



    ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் சக்தி fm அறிவிப்பாளராக கடமையாற்றியிருக்கின்றேன். அந்த காலகட்டத்தில்தான் பலரது அறிமுகங்கள் எனக்குக் கிடைத்தன. என்னையும் பலர் அறிந்துகொள்ள சக்தி fm பெரிதும் உதவியது. குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் எம்மூரவர்கள் எம் நாட்டவர்களுடன் அறிமுகம்/நட்பும் புலம் பெயர் தமிழ் உறவுகளின் அறிமுகம்/நட்பும் சக்தி fm வாயிலாகத்தான் கிடைத்ததென்றால் அதுமிகையாகாது. சக்தி fm இற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


                                                         ****  ****

    சக்தி fm இல் நள்ளிரவு ராத்திரியின் சொந்தக் காரன் நிகழ்ச்சி செய்ய ஆரம்பித்து 2வது நாள். விக்கி அண்ணாவுடன் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தேன்.  நள்ளிரவு இரண்டு மணி இருக்கும் பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

    விக்கி : தம்பி 3 மணிவரை calls attend பண்ணுவம் அதுக்கு பிறகு புலியோட்டம் ஓடுவம்
    (எனக்கு புரியவில்லை.)

    நான் : என்ன அண்ணா?
    விக்கி : 3 மணிக்குப் பிறகு புலியோட்டம் போட்டால் சரி.

    எனக்கு புதியதாய் இருந்தது. இவர் என்ன சொல்கிறார். மீண்டும் கேட்க தயக்கம்; நான் வேறு புதிது; திரும்பத் திரும்ப கேட்டால் கோபப்பட்டுவிடுவாரோ என்ற தயக்கம்.

    ஆனால் அது என்ன என்று அறிந்துகொள்ள ஆர்வம். ”எதைச் சொல்லியிருப்பார்.  ஒரு வேளை செம குத்துப் பாடல்கள்/Fast beat பாடல்கள் போடுவம் என்று சொல்றாரோ…? இருக்காதே இப்பவே நாக்கு மூக்கா ரக குத்துப்பாடல்கள் தானே போட்டுட்டு இருக்கம். இதைவிடக் குத்து/fast beat கு எங்கே போறது. என்னவா இருக்கும்?” என்று சந்தேகத்துடனே நிகழ்ச்சியைத் தொடர்ந்தேன். அந்த நேரம் செல்லச் செல்ல அந்த சந்தேகமும் மறந்துவிட்டது

    பின்னாளில் நான் தனியாக நிகழ்ச்சி செய்யும்போதுதான் புலியோட்டமென்றால் என்னவென்று நானாகவே தெரிந்துகொண்டேன்.

    அதாவது வானொலிகளில் பாடல்களை ஒலிபரப்ப பயன்படுத்தும் மென்பொருளில் 3 options இருக்கிறன.

  1. Manual Play : ஒவ்வொரு பாடலையும் நாமாகவே paly பண்ணவேண்டும்
  2. Semi Auto : இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து தானாகா ஒலிக்கும் 3வது பாடலை நாம் play பண்ண வேண்டும்
  3. Fully Auto : play list இல் உள்ள அனைத்துப் பாடல்களும் ஜிங்கிள்களும் ஒன்றன் பின் ஒன்றாய் Auto ஆக Play ஆகும்.

  4. பொதுவாக நள்ளிரவு நிகழ்ச்சி செய்யும்போது நள்ளிரவு 3 மணிக்குப் பின்னர் ”Fully Auto”  போட்டுவிட்டு அறிவிப்பாளர் ஓய்வெடுப்பார்/தூங்குவார்.

    அந்த ”Fully Auto”  தான் புலி ஓட்டம்ஆகியிருக்கிறது அவரது பாணியில்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கற்றுக்கொண்ட பாடங்களும் பெற்றுக்கொண்ட படிப்பினைகளும்


இலங்கை கிரிக்கட் வரலாற்றின் மிக மோசமான தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இலங்கை வீரர்களினதும் ரசிகர்களினதும் மனதை உடைத்துவிட்ட மிக மோசமான தொடர் இது.

உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பமாக 3 மாதங்களே உள்ள நிலையில் இந்தத் தொடர் தோல்வி இலங்கை வீரர்களின் உளநிலையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமென்பது மறுக்க முடியாத உண்மை.

பல எதிர்வினைகளை இந்தத் தொடர் தோற்றுவிற்றிருந்தாலும் அவற்றை எமக்குச் சாதகமாக்கிப் பார்த்தோமானால்

இந்தத் தொடர் இலங்கைத் தெரிவாளர்களை ஆழமாக சிந்திக்க வைத்திருக்கிறது. இதன் மூலம் எழுந்தமானமான அணித் தெரிவு இல்லாமல் மிக நுணுக்கமாக ஆராய்ந்து மிகச் சரியான அணியினை தெரிவு செய்ய வேண்டிய தேவையினை அது அவர்களுக்கு உணர்த்தியுள்ளது.

இங்கிலாந்து தொடர் வெற்றி ஆசியக் கிண்ண, T20 உலகக் கிண்ண வெற்றிகள் என்று இந்த வருடத்தில் பெறப்பட்ட வெற்றிகளால் இலங்கை அணி வீரர்களுக்குள் ஏற்பட்டிருந்து over confident இனை பூசியமாக்கிவிட்டிருக்கிறது. எனவே இது அவர்களை தீவிரமான பயிற்சி மற்றும் அதீத ஈடுபாட்டோடு விளையாடுவதற்கு உந்தும். (இதனையும் சாதகமாகக் கொள்ளலாம்)

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்களை அவர்கள் முன்னதாக தாம் தீர்மானித்துவைத்திருக்கும் உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சி திட்டத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தி இன்னும் நுட்பங்களுடன் கூடிய அதிக பயிற்சிகளினை வழங்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிட்டுள்ளது.

இலங்கை அணியினர் தமது பெட்டிங் பவர் பிளே ஓவர்களை எவ்வாறு வினைத்திறனாக பயன்படுத்துவது என்பதிலும் கவனம் செலுத்தவேண்டிய தேவையினை இத்தொடர் உருவாக்கியிருக்கிறது.

இந்தத் தொடர் முழுவதும் இலங்கையின் பந்துவீச்சு, களத்தடுப்பு, துடுப்பாட்டம் என அனைத்து துறைகளும் அ School boy cricket எனும் அளவுக்கு பாடசாலை மட்டத்துக்கு ஒப்பானதாகவே இருந்தது. சர்வதேச தரத்தில் இருக்கவில்லை. எனவே இதில் அதிக கவனம் செழுத்தவேண்டிய தேவையை அணி வீரர்களுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் இந்தொடர் உணர்த்தியுள்ளது.

இந்தத் தொடர் முழுவதும் மெத்யூஸ் தனது வழமையான ஃபோர்மில் இருப்பதையும் டில்சான்,மஹெல ஆகியோர் சராசரியான ஃபோர்மில் இருப்பதையும் அவதானிக்க முடிந்தது. கிடைத்த இரு போட்டிகளிலும் அரைச் சதங்களைப் பெற்றதன் மூலம் திரிமான்ன தனது இடத்தினை சிறப்பான முறையில் தக்கவைத்துக்கொண்டுள்ளார். இவர்கள் தவிர சங்கக்கார உட்பட யாருமே இந்தத் தொடரில் சிறப்பாகச் செயட்படவில்லை. எனவே தெரிவாளர்களுக்கு தெரிவுக்கான பரப்பு பாரிய அளவில் திறந்துவிடப்பட்டிருக்கிறது.

டில்சானுக்கு சோடியாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக யாரினைக் களமிறக்குவது என்ற பாரியதோர் சிக்கல் நிலை தற்போது உருவாகியுள்ளது. காரணம் குசால் பெரேரா, தரங்க ஆகிய இருவரும் Out of form இல் இருக்கிறார்கள். இவர்கள் தமக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.   முதல் ஓரிரு ஓவர்களுக்குள்ளே முதலாவது விக்கட் வீழ்த்தப்படுவதால் ஏனைய வீரர்களுக்கு அது பாரிய அழுத்தத்தினை கொடுப்பதோடு ஓட்ட வேகத்திலும் பாதிப்பினை ஏற்படுத்திவிடுகிறது.

 எனவே என்னைப் பொறுத்தவரையில் அனுபவம் வாய்ந்த மஹெல ஜயவர்த்தன  ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக டில்சானுடன் களமிறங்க வேண்டும்.(இதுவே மஹெலவின் விருப்பமும் கூட) மத்திய வரிசையில் தரங்கவை களமிறக்குவதன் மூலம் வலுவான ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியும் மத்திய வரிசையில் சங்கா, மெத்யூஸ், திரிமான்ன, தரங்க போன்ற வீரர்களும் இருப்பதன் காரணமாக துடுப்பாட்டம் வலுப்பெறும்.

உலகக் கிண்ண இறுதி அணியில் மெத்யூஸ், மஹெல, சங்கா, டில்சான், திரிமான்ன, ஹெரத், சமிந்த இரங்க, தம்மிக பிரசாத்,(மலிங்க - பூரண குணமடைந்தால்) ஆகியோர்கள் உறுதியாகியுள்ள நிலையில் ஏனைய 7 பேரினை தெரிவு செய்யவேண்டிய தேவைதான் காணப்படுகின்றது என்பது எனது கணிப்பு. மஹ்ரூஃப், டில்ஹார ஃபெர்னாண்டோ, டில்சான் முனவீர, ஜீவன் மெண்டிஸ் போன்றவர்களையும் அணியில் மீண்டும் இணைத்துக்கொள்ள தெரிவாளர்கள் ஆர்வம் காட்டவேண்டும்.

சராசரியாக 140 km/h வேகத்தில் பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்களையும்
முரளி,ஹெரத், சசித்ர போன்று விக்கட்டுக்களைக் கைப்பற்றும் சுழல் பந்துவீச்சாளர்களையும்.  உருவாக்க வேண்டிய அவசிய தேவையினை இலங்கை கிரிக்கட் இந்தத் தொடர் மூலம் உணர்ந்திருக்கும்.

இலங்கை அணியில் மெத்யூஸ், மஹெல, திசர இவர்களைத் தவிர
ஏனைய வீரர்களுக்கு ஆறு ஓட்டங்களை விளாசும் ஆற்றல் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது, டில்சான், சங்கா ஆகியோரின் துடுப்பிலிருந்தும் ஆறு ஓட்டங்கள் கிடைப்பது மிக அரிதான ஒன்றாகவே இருக்கின்றது. எனவே ஆறு ஓட்டங்களை அதிரடியாக விளாசும் ஆற்றலையும் இலங்கை வீரர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க இந்தத் தொடரில் எமக்குக் கிடைத்த ஒரேயொரு சந்தோசம் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் பெற்றுக்கொண்ட முதலாவது சதம். அதுவும் அதிரடியான சதம்.
 பல சதங்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் கடைநிலை வீரர்கள் விக்கட்டுகளை பறிகொடுத்ததாலும் தனது தனிப்பட்ட சாதனையைவிட அணியினை முற்படுத்தியதனாலும் மெத்யூசின் பல சதங்கள் பெறும் வாய்ப்பு கை நழுவிப் போனது.
 90 என்ற இலக்கில் இருந்த கண்டம் மெத்யூசிற்கு இப்போது நீங்கியுள்ளது. இனி மெத்யூஸ் பல சதங்கள், சாதனைகளைச் சுவைப்பார் என நம்பலாம்.

முதலாவது சதத்திற்கும் இவ்வாண்டில் 1000 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற பெருமைக்கும் மற்றும் சகல துறை ஆட்டக்காரர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்றமைக்குமாகச் சேர்த்து வாழ்த்துக்கள் Anjiiii…..

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS