RSS

என் கட்டார் கணவா!

கட்டார் கணவா என்னும் இக்கவிதை வெளிநாடு சென்றுவிட்ட கணவனுக்காக தன் இழைமையோடு ஏங்கும் ஓர் இளம் மனைவியின் உளக் கிடக்கையை அப்படியே வெளிக்கொணருகிறது. இதை வாசிக்கும் போது என்னுள் என் மனதில் இனம் புரியாத பாரம். மனம் கனக்கிறது. அவளின் நிலைக்காக மனதில் பரிதாபம் மிகைக்கிறது. 
நீங்களும் வாசித்துப் பாருங்களேன். அவ்வாறான ஒரு உணர்வு நிச்சயம் உங்களுக்குள் ஏற்படும்


என் கட்டார் கணவா!


எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்….
என் கட்டார் கணவா! 
கணவா… – எல்லாமே கனவா…….?
கணவனோடு இரண்டு மாதம்… கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா…?

12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ …
5 வருடமொருமுறை ஒலிம்பிக்….
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்… …
2 வருடமொருமுறை கணவன் …
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்! இது வரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்…. முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை… கண்ணாடி தடுக்குமா கணவா?



நான் தாகத்தில் நிற்கிறேன் – நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் – நீ விசாவை காட்டுகிறாய்



திரும்பி வந்துவிடு என் கட்டார் கணவா…
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்


விட்டுகொடுத்து… தொட்டு பிடித்து… தேவை அறிந்து… சேவை புரிந்து…
உனக்காய் நான் விழித்து… எனக்காக நீ உழைத்து…
தாமதத்தில் வரும் தவிப்பு… தூங்குவதாய் உன் நடிப்பு…

வாரவிடுமுறையில் பிரியாணி… காசில்லா நேரத்தில் பட்டினி…
இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும்
நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்



இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!


தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?



விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்… இலங்கை வங்கி ! பாசம் தருமா?



நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது
என் இதயம் அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு…
நீ தங்கம் தேடி கட்டார் சென்றாயே?


பாலையில் நீ... வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன…
பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் கட்டார் தேடுதலில்… தொலைந்து போனது -
என் வாழ்க்கையல்லவா..?

விழித்துவிடு கணவா! விழித்து விடு -
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்… கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே
கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
(இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )

திரும்பி வந்துவிடு என் கட்டார் கணவா… வாழ்வின் அர்த்தம் புரிந்து 

வாழலாம்….






குறிப்பு :
1. இது எனது சொந்த ஆக்கமல்ல. எனது நண்பரொவர் அவரின் ஃபேஸ்புக் சுவரில் பத்தித்துவிட்டது. எனக்கு ரொம்ப பிடித்துவிட்டதால் இங்கே பதிவேற்றியிருக்கின்றேன்.
உண்மையில் இந்த கற்பனைக்கு சொந்தக்காரர் யாரென்று எனக்கும் தெரியாது, என் நண்பனுக்கும் தெரியாது.


2.இக்கவிதையை எழுதியவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். 
வெளிநாட்டிலுள்ள கணவனைப் பிரிந்து வாழும் மனைவியின் உளக்கிடக்கையை இதைவிட சிறப்பாக வெளிப்படுத்தமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. அருமை


3.தொழிலுக்காக நாடு கடந்து சென்று உழைக்கும் பல்லாயிரக்கனக்கானோர் தங்கள் நிலையை கவிதையாய் வடிக்கும் போது அவை உருக்கமாகவும், உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகவும், அவர்களின் இயல்பு நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாகவும் அமைந்துவிடுகிறது. அந்தவகையில் அமைந்த ஒரு கவிதைதான் அயல்தேசத்து ஏழை இதை நான் நீண்ட நாட்களுக்கு முன்னர் பதிவிட்ட இக்கவிதையும் படித்துப்பாருங்களேன்.
(இதுவும் என்னுடைய சொந்த ஆக்கமல்ல)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தலைப் பிறை நாள். ஐ மிஸ் யூ...

தலைப்பை பாத்துட்டு தம்பி ஏதோ நோன்பு பத்தி சீரியசா சொல்லவாறான் அப்படின்னு நெனச்சா சாறீ.கொம்.
இது சும்மா மலரும் நினைவுகள் மட்டுமே.

ரமழான் மாதம் தலைப்பிறைபார்க்கும் நாளிலிருந்து ஒரு புதுவித அனுபவம் ஆரம்பிக்கும்.  அதை நான் இப்போ ரொம்பவே மிஸ் பன்றன்ரமழான் காலத்தில் நான் ஊரிலிருக்கும் போது நடக்கும் சுவாரஸ்யமான விடயங்களை நான் இப்போ ஊருக்கு வெளியே இருந்துகொண்டு ரொம்பவே மிஸ்பண்றன்கல்விக்காக ஊரைவிட்டு வெளியே வந்திருக்கும் எனக்கு அவற்றையெல்லாம் இப்போ மலரும் நினைவாக நினைக்க முடியுதே தவிர அனுபவிக்க முடியல.  என் ஆறுதலுக்காக அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இப்பதிவுஇப்பதிவு தொடர்ச்சியாக வரும்.


தலைப்பிறை காண வீட்டு வாசலில் என் தாய்அன்ரிமாரோடு (தாயின் சகோதரிமார்) அமர்ந்து கதச்சுக்கொண்டிருப்பாவா..? அந்த நேரம் இடையில புகுந்து நானும் ஏதாவது பகடியா கதைச்சுட்டிருக்கும் போதே
என் தாயை சீண்டிவிட எனக்குத் தெரிந்த யாராவது ஒரு பெண்ணை அல்லது என் பாடசாலை நண்பியைப் பற்றி இடைக்கிடையே அவள் நல்ல அழகு, என்கூட அன்னைக்கு அப்படி கதைச்சுது, இப்படி கதைச்சுது, என் மேல அந்தப் பிள்ளைக்கு சின்ன லைனொண்டு இருக்கு அப்படி சொன்னாப் போதும்….

அவ(என் தாய்) …. அதெல்லாம் படிச்சு முடிச்சுட்டு அப்புறம் பாத்துக்கலாம், இப்போ படிக்குற வேலைய மட்டும் பாருங்கவாப்பா.  யாரு பிள்ள அது இரு நாளைக்கு ஸ்கூல்ல அந்த பிள்ளைய சந்திச்சு விசாரிக்கன் என்று சொல்ல. நானும் சரி இப்போ சொல்லி வெக்குறன் அப்புறம் பாத்து முடிச்சி வெய்ங்க அப்படி சொல்லிஇன்னும் இன்னும் சீண்டிவிட அப்புறம் என் தாய், அண்ரி மார் எல்லாரும் சேர்ந்து எனக்கு அட்வைஸ் பண்ண.. ஐய்யோ இந்த டீச்சர்ரா மகனா இருந்துட்டு நான் பர்ர பாடு, உம்மா, அன்ரிமார் படிப்பிக்குற ஸ்கூல்ல நானும் படிக்குறதால  ஒரு பிள்ளைக்கு நிம்மதியா லைன்விட முடியல அப்படி சொல்லிக்கிட்டே அங்கிருந்து கிளம்பும் அனுபவம்..
ஹைய்யோ அது ஒரு அற்புத உணர்வு சார் அது..
(இத ரொம்பவே மிஸ்பண்றன்)

அப்படியே அங்கே இருந்து எஸ்கேப்பாகி நண்பர்களோட நகர்வலம் போகும் அனுபவம் ஹைய்யோ அது சூப்பரோ சூப்பர்.
ஒரு சைக்கிள்ள ரெண்டுபேர் வீதம் பல சைக்கிள்கள். சைக்கிள ஓடுரவனுக்கு சப்போர்ட்டாக கால் போட்டுக்கிட்டு எல்லா ரோட்டுலையும் வலம். அதுல நம்ம ஸ்கூல் ஃபிகருங்க ஏரியாப் பக்கமா போய் அந்த பிகரு பெயர சொல்லி சத்தம் போட்டுட்டே போற அனுபவம் இருக்கே…. ஆஹாஆஆ......
யாராவது நம்ம ஸ்கூல் பிகருங்க ரோட்ல நின்னா சைகிள மெதுவா ஓடிகிட்டே சைக்கில் பெல்ல அடிசிக்கிட்டு ஸ்கூல்ல அந்த பிகரு சம்பந்தமான ஜோக்க சொல்லிகிட்டு, ஏதாவது பாட்டுப் பாடிகிட்டே போற சுகம்….. ம்ம்ம்
(அதென்னமோ தெரியல சார் ஃபிகருங்கள கண்டாலேஜோக்குகளும், நக்கல்களும்,நையாண்டிகளும் அதுவா டைமிங்ல ரைமிங்கா வருது சார்...)
(அந்த டைமிங் ரைமிங் எல்லாத்தையும் ரொம்ப மிஸ் பண்றன்)

அப்படித்தான் ஹாயா பாட்டு படிசிகிட்டே போகையில யாராவது ஒரு பிகருட உம்மா அந்த டீச்சர்ட மகனா புள்ள அது எண்டு கேட்டு என் ஃபியூசப் புடிங்கின வரலாறுகள நான் என்னெண்டு சொல்ல.
(என் கூட எத்துனையோ பசங்க வருவானுங்க அவனுகளையெல்லாம் விட்டுட்டு நம்ம மேலயேஏஏ குறியா இருப்பாய்ங்க. அந்த இருட்டுலையும் நம்ம அவளவு பிரகாசமோ…??)

இப்படியே அந்த மாலை (7 மணியளவில்) வேளையில் ஊரைச் சுற்றிவரும் போது எல்லார் வீட்டிலும் வானொலிப் பெட்டி அதிலும் முஸ்லிம் சேவைதான் சத்தமா ஒலிக்கும்.

கொழும்பு பெரியபள்ளி வாயிலின் தலைப்பிறை அறிவிப்பைக் கேட்க ஆவலாய் வானொலிப் பெட்டியின் சத்தத்தை கூட்டி வெச்சிட்டு வீட்டு வாசலில் உற்கார்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டும் தெரிந்தவர்களிடம் பிறை கண்டாச்சாமா? நாளைக்கு நோன்பாமா? என்று விசாரிச்சுக் கொண்டும் பெண்கள் இருக்க..; ஆண்களோ சந்தியிலும் பள்ளிவாயிலிலும் பிறை அறிவிப்புக்கு காத்துக் கொண்டிருக்கும்காட்சிகள்  காண்பதற்கு அழகானவை.
(அந்த அழகான காட்சிகளை நான் ரொம்ப மிஸ் பண்றன்)

வயசானவங்க உற்காந்து எங்கட காலத்துல அப்படியாச்சு, இப்படியாச்சு. ஒருமுறை நாளைக்கு நோம்பில்லன்னு சொல்லிட்டு இரவு 12 / 1 மணிமட்டுல திரும்ப நாளைக்கு நோன்புன்னு அறிவிச்சாங்க அப்படின்னு சொல்லி அவங்க காலத்து கதைகள கதைச்சிட்டிருக்கும் போது..
மூத்தம்மா அதெல்லாம் உங்க காலம் இப்ப அப்படியெல்லாம் இல்ல பிற தெரியலனா மேகத்த கிழிச்சுகிட்டு ராக்கெட்ல போயாவது பிற கண்டுபிடிச்சிட்டு வருவம் எண்டு சொல்லி அவங்கள கலாச்சிகிட்டு போற அந்த நாட்கள நான் ரொம்பவே மிஸ் பண்றன்.

இதையெல்லாம் ரசிச்சிகிட்டே வீதியில் ஓடியாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களுக்கிடையே போகும் போது. யாராவது ஒரு குட்டிப் பயலப் பிடிச்சி என்ன மச்சினன் நோம்புக்கு ரெடியா?, ராத்தா பிற பாக்குறல்லியாம? எங்கடா ஆளக் காணோம்? ரோட்டுல வந்து நிக்கச் சொல்லுடா... எண்டு அந்தக் குட்டிப் பைய்யன்களிடம் கோரசா விசாரிக்கும் போது. அதுல சில குட்டிச் சாத்தான்கள் வில்லங்கமா கொடுக்குற பதில்களால ஐய்யோ வடபோச்சே... அப்படி ஃபீல் பண்ணிகிட்டு.... சில நேரம் அவனுங்க ஏசுற ஏச்ச தாங்க முடியாம சைக்கிள விட்டு இறங்கி அந்த குட்டிச்  சாத்தான துரத்துரத்திக் கொண்டுபோக... அவன் வீட்டுக்குள்ள ஓட…. அப்புறம் அந்த இடத்தோட வாபஸ் வாங்கிட்டு எங்கள் நகர்வலத்த தொடரும் அனுபவம் இருக்கே…. அத அனுபவிக்கனும் சார்.
(அந்த அனுபவத்தையும் நான் ரொம்ப மிஸ் பண்றன்)
 
நானே ராஜா மத்த நண்பர்களெல்லாம் மந்திரிகள் எண்டு ஜாலியா  போய்க்கொண்டிருக்குற நேரம் நம்ம மூத்த சகோதரர்களோ நெருங்கிய உறவுக்காரங்களோ அந்த ஏரியாவுல நின்னா
ரூட்ட மாத்து…….. அப்படி சொல்லி அடுத்த ரூட்டுக்கு மாறும் போதும் சரி. அவங்களுக்கு முன்னாடி எதுவுமே பண்ணாத தொத்த பபா மாதிரி அமைதியா போகும் போதும் சரி எங்க நடிப்பு இருக்கே…?? சிவாஜி எங்ககிட்ட கடன் வாங்கனும். அப்படி ஒரு நடிப்பு.
(அப்படி நடித்த நாட்கள ரொம்ப மிஸ் பண்றன் சார்)

இப்படி நகர் வலம் போய்க்கொண்டிருக்கும் நேரம் பாத்து எங்காவது பிறை தென்பட்டா பள்ளிலையும், வானொலியிலையும் ஒரே நேரத்துல அறிவிப்பாங்க. அதக் கேட்ட உடனே எங்க நகர்வலத்த நிறுத்திட்டு எங்க வீடுகள நோக்கி வேக வேகமா வருவோம்ல அந்த நேரம் பசங்க பட்டாசு கொழுத்தி சந்தோசமா இருப்பாங்.(இப்போ இந்த பட்டாசு நாகரீகம் ரொம்பவே குறஞ்சுடுச்சு. ) 
அந்த கூட்டத்துல நாங்களும் சங்கமமாகி…. சில பல பட்டாசுகள கொழுத்திப் போட்டுட்டு அதுல சிலத அள்ளிகிட்டுப் போய் நமக்கு ரொம்ப பிடிச்ச(??) பயபுள்ளைங்க, நல்லா(????) படிப்பிக்குற வாத்தியாருங்க வீட்டுல நைசாப் போட்டுட்டு நாசூக்கா எஸ்கேப்பாகுற டெக்னிக் இருக்கே…. ஹி ஹி... (கேளுங்க சொல்லித்தாரன்)
அந்த பட்டாசு அவிங்க வீட்டுல விழுந்து வெடிக்குற சத்தமிருக்கே…. அதக் கேக்குறப்போ ஹைய்யோ....ஆர்.ரஹ்மான்ட இசையில ஸ்ரேயா கோசல் பாடினா எப்பிடி இருக்கும் அப்பிடி இன்பமா இருக்கும். அனுபவிச்சுப் பாருங்க சார்.
(அந்த இன்பத்தையும் நான் ரொம்பவே மிஸ்பண்றன் சார்.)

சில வானவெடிகள (ரொக்கட்) வீராப்பா கையில பிடிச்சு  விடுறப்போ சில பல நேரங்கள்ள இலக்குத் தவறி எவன் வீட்டு கூரையிலையாவது விழுந்துடும். அந்த வீட்டுக்காரணும் எவண்டா அவன் சின்னப் பிள்ளைகள் தூங்குற வீட்டுல வெடிலப்போட்டது எண்டு வெறியோட வர்ரப்போ நாங்களும் அநியாயத்த தட்டிக்கேக்குற தன்மானச் சிங்கங்கள் மாதிரி கோரசா யார்ராவன் வெடிலப்போட்டது பிடிடா அவன எண்டு சொல்லிகிட்டு யாருமே இல்லாத திசையாப்பாத்து சும்மா துரத்திக்கு ஓடுராப்போல ஓடி எஸ்கேப்பாகுவமே... அந்த டைமிங்க என்னன்னு சொல்றது.
அந்த இனிமையான நாற்களக்கூட இந்த முறையும் மிஸ்பண்றன் சார்.



இப்படியே ஊர ரணகளப்படுத்திட்டு எதுவுமே பண்ணாத அப்பாவி மாதிரி இந்தப் பாவி வீட்ட வருவானே... அப்போ யாரும் சொல்லுவாங்க…. இவனாடா அவன்னூ…? ம்ஹும் யாருமே சொல்லமாட்டாங்க.
அவ்ளோஓஓஓஓஓ  நல்ல பிள்ள நானு.


அப்படியே வீட்ட வந்தா நம்ம தாயார் பெரிய லிஸ்ட்டோட வெயிட் பண்ணுவா  எங்க ராசா போய் சுத்திட்டு வர்ர…. அவசரமா போய் இந்தசாமானெல்லாம் வாங்கிவான்னு லிஸ்ட்ட குடுப்பாவா?
சரி டெடிட மோட்டார் சைக்கிள தந்தாதான் போவன் எண்டு கண்டிசன் போட்டு மோட்டார் சைகிள எடுத்துட்டுப் போவனே அதையும் இந்த முற மிஸ் பண்ணுறன். அப்படி அலேக்கா மோட்டார் சைகிள எடுத்துட்டுப் போற நேரமாப் பாத்து மூத்த நானா கெதியாவா நானும் வெளியில போகனும் அப்படின்னு ஒரு அலர்ட் குடுப்பாரு... பாப்பம் கடையில சனமில்லாட்டி கெதியா வருவன் இல்லனா எனக்குத்தெரியாப்பா அப்படி சொல்லிகிட்டு உள்ளுகுள்ள சிரிச்சிகிட்டே போவனே அது சூப்பர் அனுபவம் சார்
 அந்த சூப்பரான அனுபவத்தையும் இந்தமுற மிஸ் பண்றன்.

அப்படியே  கடைக்குப் போனா அங்க பெரிய சனம் நிக்கும். நம்மட செல்வாக்கப் பயன்படுத்தி கடைக் கதவ திரந்துட்டு போய் கடக்காரர்கிட்ட பொஸ் இதெல்லாம் போட்டு வெய்ங்க ஒரு பத்து நிமிசத்துல வாரன் அப்படி சொல்லிட்டு மோட்டார்  சைக்கிள எடுத்துட்டு ஒரு ரெளண்ட் போய். நம்ம பசங்க வீட்டுவாசல்ல நின்னு கலர்ஸா ஹோர்ன் பண்ணினா பயபுள்ள வருவான். மச்சான் ஏறுடா ஒரு ரெளண்ட் போய் வருவம் எண்டு சொல்லி அவன அள்ளிகிட்டு மத்த சகாக்கள்ட வீட்டுகெல்லாம் போய். மக்கள் நாளைக்கு 11 மணி மட்டுல வீட்ட வா. கரம்போர்ட் விளையாடுவம் சரியா. டேய் நேரத்தோட எழும்பிட்டாய்ண்டு சொல்லி 11 மணிக்கு முன்னாடி வீட்டுப் பக்கம் வந்தியோ…??? நோம்புண்டும் பாக்கமாட்டன்கொல உழும் சரியா 11 மணிக்குப் பிறகுவா
 (பின்ன என்ன சார் அவனுங்க பாட்டுக்கு நேரத்தோட வீட்டுக்கு வந்துட்டானுங்கன்னா நம்ம தூக்கத்த கெடுத்துடுவானுக..)

அப்படி ஒரு அலர்ட் குடுத்துட்டு அப்படியே
அந்த ரெளண்ட முடிச்சிட்டு பின்னால மங்கி மாதிரி  ஒரு சொங்கி குந்தினிருக்குமே அதக் கொண்டுபோய் அதுட வீட்டுல களட்டி விட்டுட்டு அப்படியே கடைக்கு வந்தா நம்மாளு எல்லாம் கரெக்டா போட்டு வெச்சிருப்பாரு அதையும் தூக்கிட்டு வீட்ட வரும்போது எப்படியும் ஒரு மணித்தியாலம் போயிருக்கும்.

நம்ம அண்ணாத்த இவ்வளவு நேரம் என்னடா செஞ்ச அப்படின்னு சொல்லி கோவத்தோட கேப்பாரா? நானும் அந்தக் கடையில சரியான கிரெளட்; போலின்ல நிண்டு முட்டி மோதி வாங்கிட்டுவாறன் என்று சொல்லும் போது அண்ணாத்த மொறச்சிட்டே ஒரு லுக்குவிடுவாரு நானும் அத பாக்காதமாதிரி தலைய குனிஞ்சிட்டு உள்ள போயிடுவன்(ஹி ஹி ஹி)
அந்த அனுபவம் சூப்பரோ சூப்பர். அதையும் மிஸ்பண்றன்.

ஒருவேள எங்க ஊர்லையே தலைப் பிறை தென்பட்டாஒரு சுவாரஸ்யமான சண்டை ஒன்னு என்னால எங்க வீட்ட நடக்கும்.இந்த இடத்துல அதையும் சொல்லியாகனும்

பொதுவா தலைப் பிறையப்  பாத்துட்டு அப்படியே முன்னாடி நிக்குற ஒருத்தருக்கு சலாம் கொடுப்பாங்கநான் அங்க இங்க ஓடித் திரியிரதால பெருச வீட்டுல இருக்குறதில்ல அப்போ என் தாயார் என் ரெண்டாவது சகோதரர கூப்பிட்டு பிறையப் பாத்துடு சலாம் கொடுப்பாஅப்போ நான் போய் சண்ட பிடிப்பன்ஓ அவரு மட்டும்தான் உங்க பிள்ள அவருக்குதான் சலாம் கொடுங்க எங்களுக்கெல்லாம் வேணா அப்படி சொல்லிட்டே கோவிச்சிட்டு வந்துடுவன்அப்புறம் என் தாயார் என் பின்னாலயே வந்து என் கையப் பிடிச்சி வாசலுக்கு இழுத்துவந்து
(உதைப்பா அப்படின்னு நினைக்குறீங்களா சீ சீ...)
 பிறையப் பாத்துட்டு எனக்கும் சலாம் கொடுத்துட்டு என் நெற்றியில் அழகாய் ஒரு முத்தமிட்டுட்டு சொல்லுவா அவருக்கு சலாம் மட்டும்தான் கொடுத்தன் உனக்கு முத்தமும் சேர்த்துக் கொடுத்திருக்கன் சரியா??அப்படி சொல்லுவாநானும் சந்தோசத்துல நம்ம அண்ணாத்தையப் பாத்து சேர்ட் கொலற தூக்க்கிவிட்டுட்டே எப்புடீ…??????? அப்படின்னு கேட்டுட்டே போவனே 
அந்த முத்தம், அந்த நாட்களை இம்முறையும் ரொம்பவே மிஸ் பண்றன் சார்

நம்ம அன்ரிமார் வீடு பக்கத்துல பக்கதுலையே இருக்குறதால எல்லார் வீட்டையும் போய் காலையில(சஹருக்கு) என்ன சாப்பாடு? எண்டு விசாரிச்சு நமக்கு பிடிச்ச கறி இருந்தா சரி காலையில வீட்டுக்கு இந்தக் கறிய அனுப்பி வெய்ங்க எண்டு ஒரு ஓடரப் போட்டுட்டு வீட்ட வந்தா என் தாய் பெற்ற அன்புச் செல்வங்கள் எல்லாருமே வீட்ல இருப்பாங்க. எல்லாருமா சேர்ந்து இரவுச்சாப்பாட்ட கும்மு கும்முன்னு கும்மிட்டு அவரவர் ரூமுக்குப் போய் தூங்கிடுவம். சாப்பிடும் போது கறிக்கு சண்ட, அவருக்கு கறி கூட எனக்கு குறைய அப்படியெல்லாம் சண்ட பிடிச்சு ஜாலியா சாப்பிடும் அந்த இனிமையான நாற்களையெல்லாம் நான் ரொம்பவே மிஸ் பண்றன்.


ரமழானின் தலைப் பிறை நாள் அன்றே இவளவு சந்தோசம்னா மொத்தம் 30 நாளும் எவ்ளோ சந்தோசமிருக்கும். அதையெல்லாம் இம்முறையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றன்.
அவற்றையும் அடுத்தடுத்த பதிவுல உங்களோட பகிர்ந்துக்கலாமெண்டிருக்கன். உங்க கொமென்ஸ் & வோர்ட்லதான் இருக்கு. பகிர்ந்துகுறதா இல்லையா எங்குறது.
So commets & vote plzzzzzzzzzzzzzz



Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மோசடிப் பேர்வழி சக்விதி ரணசிங்க கைது."

(சனிக்கிழமை போடவேண்டிய இந்தப் பதிவ சில பல மூட்-அவுட்களாலும் சில பல வேலைப்பழுக்களாலும் பப்லீஸ் பண்ண முடியல ஃப்ரென்ட்ஸ்.)

வழமை போல கடந்த வெள்ளிக் கிழமையும்  நான் இங்லீஸ் பேப்பர்கள் பக்கம் என் பார்வைய திருப்பினனா(அடேய் யாருடா அது.. பேப்பரா? இல்ல இங்லீஸ் படமான்னு கேக்குறது… ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்………பேப்பர்தான்.)
எல்லாப் பேப்பர்கள்லையும் 
The most wanted fraudster Sakvithi Ranasinghe arrested
 என்பதுதான் பிரதான தலைப்புச் செய்தி. சரி மத்த தமிழ் சிங்களப் பேப்பர்கள்ள ஏதும் இருக்கான்னு பாத்தா தமிழ் பேப்பர் கிடைக்கல்ல சிங்களப் பேப்பர்கள்ளையும் அதே தலைப்பு ஆனா என்ன அதுல சிங்களத்துல போட்டிருந்தாங்க. .  

 "பிரபல நிதி மோசடிப் பேர்வழி சக்விதி ரணசிங்க கைது." 
                                                                                                                                                        
   Abhaya Ranasinghe Mudiyanselage Chandana Weera Kumara alias Sakvithi Ranasinghe
இதுதான்அண்ணாத்தட முழுப் பெயர். சக்விதி ரணசிங்க என்பது அண்ணாத்தட செல்லப் பெயர்.


 அண்ணாத்த இன்னா பண்ணினாரா…?????????? குத்து மதிப்பா ஒரு ரெண்டு வருசதுக்கு முன்னாடி… @@@@@ இன்னாங்குறீங்க….??? 
ஒரு கோடி ரெண்டு கோடியில்லீங்க மொத்தமா 1400 கோடி ரூபாய் (யெம்மாடீஈஈஈஈஈஈஈஈஈஈ… எம்புட்டுக் காசு.)சில பேப்பர்கள்ள 1433 கோடி எண்டுறாங்க. சில பேப்பர்கள்ள 1400 சிலதுகள்ள 1040 எண்டுறாங்க. சரி உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ரெளண்டா 1400 கோடின்னே வெச்சுக்குவம்

அம்புடு காசையும் சுட்டுட்டு அண்ணாத்த தலைமறைவாகிட்டாருல்ல…. இம்புடு காசு எங்க இருந்து எடுத்தாகன்னுதானே கேக்குறீக… அட  போங்க சார். அண்ணாத்த பெரிய இங்கிலீசு டீச்சராமுல்ல…….. இலகுவில் ஆங்கிலம் கற்கலாம் வாங்க அப்படின்னு அண்ணாத்த டீவில இங்கிலீசு படிப்பிச்சாராமில்ல..டிவில அண்ணாத்தட இங்கிலீசப் பாத்துட்டு தொர நல்லாத்தான் இங்கிலீஸு பேசுதுன்னு தொரக்கிட்ட டியூசன் போயிருக்குக. அதுல சில பல லட்சங்கள அண்ணாத்த அபேஸ் பண்ணிகினாரு


 அண்ணாத்த இங்லீஸு படிப்பிக்குற அழகே தனிதான் பாருங்களேன்... 



அது மட்டுமா Shakthi Building Construction & Man power company (Pvt)Ltd., Success institute & IT Solution center
அப்படின்னு அண்ணாத்த சில பல கம்பனிகள போட்டுத்தாக்கி பல லட்சங்கள் பல கோடிகள  அபேஸ் பண்ணிகினாரு.

அண்ணாத்தட பிஸ்னஸ்லையே மாஸ்டர் பீஸ் என்ன தெரியுமோ???? சக்விதி நிதி முதலீட்டு நிறுவனம் (Shakvithi Investment company)  

அப்படின்னா இன்னான்னு கேக்குறீகளா..?? அதாங்க அது பணத்தாச பிடிச்ச பயபுள்ளைங்க கோர்ட்டு சூட்டு மாட்டிகினு பொட்டி நெறைய பணத்த போட்டுகுனு ஒரு கம்பெனில கொண்டு பணத்தையெல்லாம் குட்த்துட்டு ஜாலியா வருவாங்க.. அப்புறம் கொஞ்ச நாளுக்கப்புறம் அதே பயபுள்ளைங்க கிளிஞ்ச பனியனும் கிளியாத வேடியும் போட்டுகினு அதே கம்பெனிகளுக்கு முன்னாடி தலைல துண்டப் போட்டுகுனு குந்தினு கிடப்பானுகளே… இந்தியாவுலையெல்லாம் அடிக்கடி நடக்குமே…. தமிழ் படங்கள்ளையெல்லாம் காட்டுவாங்களே… ஆஆ அதேதான்..


அதுதான் அண்ணாத்தட மாஸ்டர் பீசு. அது மூலமாத்தான் அண்ணாத்த பல பல கோடிகள் அமத்தினாரு. அம்புடு காச எப்புடி சேத்துகினாறுன்னுதானே யோசிக்குறீங்க. அத ஏங்க கேக்குறீங்க???? பணத்தாச பிடிச்ச பயபுள்ளைங்க யாருதானில்ல…..??அண்ணாத்த வேற.. நல்ல பிஸ்னஸ் டெக்னிக் தெரிஞ்சவரா…. நல்ல யூஸ் பண்ணிகினாரு.. சும்மா இல்லீங்க அண்ணாத்த என்ன செஞ்சாரு தெரியுமா?? தண்ட கம்பனில முதலீடு செய்ரபயபுள்ளைங்களுக்கு பத்துல்ல பதினைஞ்சுல்ல 72% வட்டி எண்டு போட்டாரே ஒரு போடு… ஆஆஆஆஆஆஆஆஆஆஆ………… ஆ…. அப்படித்தான் எல்லாருமே வாயப் பொளந்தாய்ன்ங்க.


அப்புறம் சொல்லவா வேணும்.. பணத்தையெல்லாம் கொண்டுபோய் அணாத்தகிட்ட குடுத்துடானுங்க. அதுமட்டுமில்ல பணம் கொடுத்த சிலருக்கு சொன்னமாதிரியே 72% வட்டி கொடுத்து பைசல் பண்ணிட்டாரு. அந்த பயபுள்ளைகளும் அண்ணாத்தட அருமை பெருமைகள ஊர்ல அள்ளிவிட அண்ணாத்தட காட்டுல மழையோ மழ. எல்லா பயபுள்ளைங்களும் அந்த பேங் இந்த பேங்ல போட்ட காசையெல்லாம் எடுத்து அண்ணாத்தகிட்ட நீட்டினாங்க. அண்ணாத்தையும் எல்லாருக்குமே சேர்த்து பெருசா நீட்டினாரு……. கம்பிய.(இதுல என்ன காமெடின்னா 25க்கு மேற்பட்ட பொலீஸ் அதிகாரிங்க, கிரிக்கட் வீரனுங்க, படிச்ச பக்கிகதான் பணம் போட்டு ஏமாந்ததுலே அதிகம்)


 இதுக்கிடையில சில பேங் காரங்களும் என்னை மாதிரி உசார் பார்ட்டிங்களும் அண்ணாத்த ஏதோ தில்லுமுல்லு பண்றாருன்னு போலீசுக்கும்,மத்திய வங்கிக்கும். அலேர்ட் கொடுத்திருக்காங்க. அந்த அதிகாரிங்களும் வெளிக்கிட்டு மேக்கப் போட்டு, லிஃப்ஸ்டிக் போட்டு வாறதுக்கிடையில அண்ணாத்த நாட்டை விட்டே கிரேட் எஸ்க்கேப். அப்புறம் என்ன அண்ணாத்தட கம்பெனிகள்ள மிச்ச சொச்ச ஆபீசருங்கள அள்ளிகிட்டு பொலீஸ் போச்சு. அண்ணாத்தைய பிடிக்குறதுக்கு சர்வதேச பொலீசுக்கும் ஒரு அலர்ட் குடுத்து வெச்சிருந்தாங்க நம்ம பொலீஸ்.எல்லார் கண்ணுலையும் மண்ணத் தூவிட்டு தலை மறைவா இருந்தாரு நம்ம அண்ணாத்த

                                         எப்புடி இருந்த அண்ணாத்த இப்புடி ஆகிட்டாரே....


 கத இப்புடி இருக்குறப்போ கிட்டத்தட்ட 2 வருசத்துக்கப்புறமா அண்ணாத்தட மனைவிட வீட்டுப்பக்கம் அவர்ட மனைவி புதுசா வந்திருக்காகக….. இத சந்தேகப்பட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருத்தர் பொலீசுக்கு ஃபோனப் போட்டு சொல்ல.. உடனடியா அங்கு வந்த அவசரப் போலீஸ் வீட்ட சுத்தி வளச்சு அண்ணாத்தட மனைவிய கைது செஞ்சப்போ; அங்க புதுசா ஒருத்தன் கோவா படத்துல ப்ரேஜ்ஜி அமரன் வெச்சிருந்த அதே தாடியோட. யார்ரா இவன் அப்படின்னு விசாரிச்சா…. அட நம்மாளு.. யாரு?? நம்ம்ம சக்விதி ரணசிங்க அண்ணாத்ததான். பயபுள்ள இங்கினைக்குள்ளையே சில மாசமா சுத்தீனு இருந்திருக்கு. அதுவும் தமிழ் பெயரொண்டோட. இந்தியாவிலிருந்துதான் கடைசியா வந்திருக்காக.


அண்ணாத்தைய கண்ட சந்தோசத்துல நம்ம பொலீஸ்காரங்களுக்கு படு குசி.செல்லம் லவ்யூ….. வாடாச் செல்லம் ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்க. இது இடம் சரியில்ல வா மாமியா வீடு இருக்கு அங்கன போய் நல்ல ராஜமரியாதையோட நலம் விசாரிப்பம் வா…. வாடாச் செல்லம் வா.. அப்படின்னு அள்ளிகின்னு போயிட்டாங்க. அண்ணாத்தட மனைவியையும்தான்.


அதுகுள்ள பொலீஸ் காரங்க சீ..டீ க்கு ஃபோனப்போட்டு மச்சான் நம்ம சக்விதி மாட்டிருக்கான் ஃப்ரீயா இருந்தா வாங்கடா மாப்புளகளா. அப்படின்னு சொல்ல அதுக்கு நம்ம சீ..டீ...  இல்லடா மாப்புள கொஞ்சம் பிசியா இருக்கம்…செல்லத்த இங்க அனுப்புங்க நாங்க நல்லா நலம் விசாரிக்குறம். அப்படின்னு சொல்ல இப்போ அண்ணாத்டைய பொலீஸ் வண்டியில ஏத்தி சீ..டீ கிட்ட அனுப்பிடாங்க. அண்ணாத்த இப்போ சீ..டீகிட இருக்காரு.


இன்னைக்கு நம்ம Police Big Principel என்ன சொல்றாரெண்டாஎன்னது……?? Police Big Principel என்றால் யாரா???? ஐய்யோ எல்லாருக்கும் இங்லீஸ் ரொம்ப வீக். அதான் சார் பொலீஸ் மா அதிபர். அவரத்தான் இங்லீஸ்ல சொன்னன்.(ஹி ஹி ஹிஎன்ன சொல்லிருக்காருன்னா சக்விதி அண்ணாத்த மேல யாருக்கும் ரொம்ப லவ் எண்டால் (ஹி ஹி முறைப்பாடு செய்யவிரும்பினால்) அது சம்பந்தமான தகவல்களப் கேட்டுக்குறதுக்கு 011 2422176 என்கிற நம்பருக்கு ஃபோனப் போட்டு தகவல்கள தெரிஞ்சிகொள்ளட்டாம் எண்டு சொல்லிகினாரா.. 

நான் என்ன பண்ணினன் தெரியுமா. உடனே இந்த நம்பருக்கு ஒரு ஃபோனப் போட்டு சார் நானும் அந்தாள்கிட்ட ரெண்டரைக் கோடி காசு குடுத்தன் சார்.. எனக்கு அந்த அரைக் கோடி வேணாம் சார் அத வேணும்னா நீங்களே வெச்சுகுங்க.. அந்த ரெண்டு கோடிய மட்டும் வாங்கித் தந்துடுங்க சார். அப்படின்னு சும்மா அடிச்சு விட்டிருக்கன், நீங்களும் ரெளண்டா ஒரு அமெளண்ட அடிச்சு விடுங்க. லம்பா ஒரு அமெளண்ட் கெடச்சாலும் கெடைக்கும்மலேசியாவுல ஒரு பழமொழி சொல்லுவாங்க ம….. கட்டி மலைய இழுப்பம் வந்தா மல போனா ம…….. நீங்களும் சும்மா அடிச்சு விடுங்க


இந்த நேரத்துல நம்ம சக்விதி அண்ணாத்தகிட்ட அவரு நாக்கப் புடிங்குக்குற மாதிரி ஒரு 4 கேள்வி கேக்கப்போறன்

1. அன்னாத்த ஏன் உனக்கு இம்புட்டு ஆச…??
 2.பாத்தியா அண்ணாத்த காச அடிக்கும் போதும் நிம்மதியில்ல அடிச்ச பொறவும் அனுபவிக்க முடியல பாத்தியா?
3.அந்த காச வெச்சு ஒரு 2 வருசமாவது சந்தோசமா இருந்திருப்பியா?
 4.அண்ணாத்த… இம்புடு காச அடிச்சிகின்னு மறுபடியும் இலங்கைக்கு வந்திருக்கியே உனக்கு அறிவில்லையா..??

ஒரு அட்வைஸ் சொல்றன் கேட்டுக்க அண்ணாத்த... பெரியஅமெளண்ட் அடிச்சிருக்குற… அதுல ஒரு அமெளண்ட நம்ம மாண்பு மிகு தலைவர்களுக்கு குடுத்து கரெக்ட் பண்ணீக்கினியெண்டா அப்புறம் நீ எஸ்கேப்தான். ட்ரை பண்ணிப் பாரு அண்ணாத்த... ஒரு வேள வேர்கெளடாகும். நீ செய்யக் கூடிய ஆள்தானே.. செஞ்சுபாரு...


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS