RSS

ரவுண்டபோர்ட் சகாஃப்

நம்ம பக்கத்து ஊர்ல ஒருத்தர் இருந்தார். அவர் பெயர் சகாஃப்கொஞ்சம் புத்தி சுயாதீனம் குறைஞ்சவர்ஆனா அவர் புத்தி சுயாதீனமற்றவர் என்று இலகுவில் யாருக்கும் தெரிஞ்சிடாது. தெளிவான பைத்தியம் அப்படி சொல்லலாம்..

சகாஃப் எண்டு சொன்னா யாருக்குமே விளங்காது. ஏன் அவருக்கே புரியாது. அவர ரவுண்டபோர்ட் சகாஃப் என்று சொன்னால்தான் எல்லாருக்குமே தெரியும்.
அந்த பெயர் வந்த காரணத்த முதல்ல சொல்லிகிடுவம்.
அந்த ஊர் பிரதான வீதியில ஒரு ரவுண்டபோர்ட் இருக்கு அது நடுவுல ஒரு மணிக்கூண்டு கோபுரம். அதுதான் நம்ம சகாஃப் காக்காட நிரந்தர வாசஸ்த்தலம். அதனாலதான் அவர் ரவுண்டபோர்ட் சகாஃப் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படலானார்.

சரி மேட்டருக்கு வரலாம்.
ஒரு முறை பொதுத் தேர்தல் சூடு பிடித்திருந்த காலம். நம்ம ரவுண்டபோர்ட் சகாஃப் காக்கா என்ன பண்ணினார்….. அந்த மணிக்கூண்டு கோபுரத்துல இருக்குற கட்டொன்றில் ஏறி நின்று ஆழும் கட்சிக்கு எதிராகவும் எதிர்க்கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யத் தொடங்கிட்டார்.

அன்பான வாக்காளர் பெருமக்களேஇந்த தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல், அராஜகம் புரியும் அரசை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல். நமதூரில் ………………கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டிய ……………………………. இவன் நமதூருக்கு என்ன செய்தான்? லஞ்சம், பந்தம் வாங்கி தன் குடும்பத்தை மட்டுமே அபிவிருத்தி செய்தான். வெறும் 5ம் ஆண்டுகூட படிக்காத அவண்ட தம்பிய வோர்ட்டர் போர்ட் தவிசாளராக்கினான். தன் அடியாட்களுக்கு மட்டுமே வேலை வாங்கிக் கொடுத்தான்……………………………………………………………………………………………………. இப்படிபட்ட இந்த அராஜகமான ஆளை நாங்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்க அருமையான வாய்ப்பு இது

இப்படி நம்ம ரவுண்டபோர்ட் சகாஃப் காக்காட பேச்சு சும்மா ஏறிப் போகுது. இவர்ட பேச்சக் கேட்க சுற்றி ஏராளமானோர் குவிஞ்சுட்டாங்க. கரகோசங்களும், விசில் சத்தங்களும் வானைப்பிளக்குது.

அந்த நேரம் பாத்து அந்த பக்கமா வந்த ஆளும் கட்சியின் தீவிர ஆதரவாளர் காதுல இதெல்லாம் விழுந்துட்டு.
ஆஹா... பைத்தியாம இருந்தாலும் ரொம்ப தெளிவாப் பேசுறானய்யா…., தலைவர்ர சீக்கிரட்ட சிக்கனமா அவுத்துவிடுரானே…”
அப்படி யோசிச்ச அந்தாளு உடனே கட்சிக் கிளைக்கு ஓடிப் போய் மேட்டர சொல்லி அங்கிருந்த குண்டர்களையெல்லாம் கூட்டிட்டு வந்துட்டான்.

மிக ஆவேசமா அனல்பறக்க பேசிட்டிருந்த நம்ம பிரச்சார பீரங்கி ரவுண்டபோர்ட் சகாஃப் ஆளும் கட்சி குண்டர்கள்  தடிகள், ஆயுதங்களோட ஆக்ரோசமா வர்ரத கண்டுட்டாரு.
ஆகா.. வேலில போன ஓணான பிடிச்சி வேட்டிகுள்ள விட்டுடோமோ….” அப்படின்னு நெனச்சிட்டிருக்குற நேரம் குண்டர்களும் நெருங்கி வந்துடாங்க. அப்போ நம்மாளு போட்டாரு பாருங்க ஒரு போடு.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இதக்கேட்ட கூடிநின்னவங்க மட்டுமில்ல அடிக்கவந்த குண்டர்களுக்கும் சிரிப்ப அடக்க முடியல. சிரிச்சிகிட்டே திரும்பிப் போயிட்டாங்க.

நம்ம ரவுண்டபோர்ட் சகாஃப் காக்காவும் சபா…….. இப்பவே கண்ணக்கட்டுதேஅப்படின்னு சொல்லிகிட்டே நைசா நடையக் கட்டிட்டாரு.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கிரிக்கட் வாழும் வரை முரளியின் சாதனைகளும், புகழும் நிச்சயம் வாழும்.

1992 முதல் 2010 வரையிலான 19 வருட டெஸ்ட் வரலாற்றில் முரளி 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கட்டுகள். ஒரு போட்டிக்கு சாராசரியாக 6 விக்கட்டுகள். இனி யாரால் முடியும்?

சாதனைச் சக்கரவர்த்தி சுழல் பந்து மாயாவி.. முத்தையா முரளீதரன் டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுத்துவிட்டார். ஒரு நாள் + T20 போட்டிகளில் முரளியின் பயணம் தொடர்கிறது.கண்ணீரோடு வழியனுப்பும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களோடு நானும் இணைந்துகொள்கின்றேன்.

800 விக்கட்டுகள் என்ற மைல் கல்லை அடைய இறுதிப் போட்டியில் 8 விக்கட்டுகள் தேவை. 800 விக்கட்டுகள் எடுத்தே ஆகுவேன் என்ற வைராக்கியத்துடன் களமிறங்கினார் முரளி.  எப்படித்தான் அவளவு உறுதியாக நம்பினாரோ...? அந்த நம்பிக்கைக்கும் தைரியத்துக்கும் என் உளம் கனிந்த பாராட்டுக்கள். களமிறங்கினார்.. சாதித்தும் காட்டினார்.

இன்றைய நாள் முரளி மைதானம் நுழையும் போது செங்கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.... எப்படி கெளரவம் என் ஹீரோவுக்கு...?

இன்று காலை 10.45 முதல் முரளியின் 800வது விக்கட் என்ற அந்த வரலாற்று நிமிடத்தினைக் பார்த்து மகிழ பல்கலைக் கழக உணவு விடுதியில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் நான் காத்துக் கிடந்தேன். என்னுடன் பல நண்பர்களும் இணைந்திருந்தார்கள். 800வது விக்கட்டின்னை இலகுவாக, விரைவாகப் பெற்றுவிடுவார் என நம்பிக்கையோடு காத்திருந்தேன்ம்ஹும்அந்த ஒரு விக்கட்டுக்காக பல மணி நேரம் காத்திருக்கவேண்டியிருந்தது.

லக்ஸ்மன் + இசாந் சர்மா ஜோடி என்னை மட்டுமல்ல முரளி ரசிகர்கள் அனைவரையும் கடுப்பேத்திக் கொண்டே இருந்தார்கள்.அவர்கள் இருவருக்கும் நம்ம நண்பர்கள் திட்டிய  திட்டுக்களும், பேசிய பேச்சுக்களும் ஐய்யைய்யோ சிங்களத்தில் இவளவு கெட்ட வார்த்தைகள் இருக்கா…?(இன்னைக்குத்தானே தெரியும்...) இத மட்டும் இசாந் சர்மா லக்ஸ்மன் கேட்டிருந்தா சூசைட் பண்ணிருயிருப்பாங்க..

பொறுமை இழந்த நண்பர்கள் சென்றுவிட்ட போதும் நான் தொடர்ந்தும் பொறுமையுடன்(??) காத்திருந்தேன்.. (உனக்கு வேற வேலை இல்லையா எண்டு கேக்குறீங்களா..? அப்படி இல்ல உண்மையில நிறைய வேலை இருந்ததுஆனாலும்..)என் வாழ்நாள் ஹீரோக்களில் ஒருவரான முரளியின் ஓய்வுக்கு முன்னரான ஒவ்வொரு கனங்களையும் அனுபவிக்க காத்திருந்தேன். உணர்ச்சி பூர்வமான அந்த கனங்களை மைதானத்தில் நேரடியாக காண முடியாவிட்டாலும் அதே உணர்வோடு பார்க்க ஆசைப்பட்டேன்.

பிரார்த்தனைகளோடு அந்த தருணத்திற்காகக் காத்திருந்தேன்மறுபுறத்தில் மலிங்க விக்கட்டுகளைச் சரித்துக் கொண்டிருக்கின்றார்ரன்-அவுட் வாய்ய்ப்புகள் என்னாகுமோ? முரளிக்கு 800வது விக்கட் கிடைக்குமா..? மலிங்க ஓவர் பண்ணவே கூடாதுரன் - அவுட் வரவே கூடாது….. பிரார்த்தனை தொடர்ந்தது

இடையில் டில்சானின் பந்துவீச்சில் இசாந் சர்மா ஸ்டம் செய்யப் படுகிறார் ஆட்டமிழந்தாரா..? 3ம் நடுவரிடம் கோரப்படுகிறதுஅது ஆட்டமிழப்பாக இருக்கவே கூடாது இதுதான் நான் உற்பட அனைத்து இலங்கை + முரளீ ரசிகர்களின் பிரார்த்தனையாகவிருக்கின்றது. நடுவரின் தீர்ப்பு சர்மா ஆட்டமிழக்கவில்லை. அரங்கு நிறைந்த கரகோசம்.நானும் என்னை மறந்து கரகோசம் செய்கின்றேன். என்னோடு இருந்த நண்பர்களும் கரகோசம் செய்கிறார்கள்.  இப்படி ஒரு சந்தர்ப்பத்தை நம்ப முடிகிறதா..?  இலங்கையின் தீவிர ரசிகர்கள் இந்திய வீரரொருவர் ஆட்டமிழக்கவில்லை என்பதை சந்தோசமாகக் கொண்டாடுகிறார்கள்.. நம்ப முடிகிறதா….?
அதுதான் முரளி
அந்த விக்கட்டினை முரளி கைப்பற்ற வேண்டும்.. வீரத் திருமகனை 800 விக்கட் என்ற மைல் கல் சாதனையோடு வழியனுப்பி வைக்கவேண்டும் என்ற அவாதான் அது.

நீண்ட நேரத்தின் பின்னர்…. முரளி + நான் + முரளியின் குடும்பம் + இலங்கை கிரிக்கட் வீரர்கள் + முரளி ரசிகர்கள் + கிரிக்கட் ஆர்வலர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தக்  கனம் வந்ததுபிரகயன் ஒஜாவின் விக்கட்டினைக் கைப்பற்றியதன் மூலம் 800 விக்கட்டுக்கள் என்ற மாபெரும் மைல்கல்லை முரளி அடைந்தார்.

அந்தக் கனம் யாருமே தன்னிலை மறந்து குறைந்த பட்சம் கரகோசமாவது செய்திருப்பார்கள். காலி மைதானமே அதிர்ந்ததுபல்கலைக் கழக உணவுச் சாலையும்தான். அனைவருமே எழுந்து நின்று எம் வீரத் திருமகனை கரகோசம் செய்து பாராட்டிய காட்சியை என்னென்று வர்ணிப்பது. சானக வெலகெதரவும், ஏஞ்சலோ மெத்தியூசும் முரளியை தம் தோளில் தூக்கி வரும்போது அவ்விருவரில் ஒருவராக நான் இருந்திருக்கக் கூடாதா என்று எனக்குள் கவலை மேலிட்டது...

முரளி 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கட்டுகள். முரளிக்கு அடுத்த படியாக 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கட்டுக்களுடன் சேன் வோர்ன் இருக்கின்றார். முரளிக்கு கீழுள்ள அதிக விக்கட் கைப்பற்றிய முதல் 10 பேரில் யாருமே இப்போது விளையாடவில்லை. அனைவருமே ஓய்வுபெற்றுவிட்டார்கள்மீதமிருப்பவர்களில் ஹர்பஜான் சிங்(355)  , டேனியல் விட்டொரி(325), ப்ரெட் லீ(310) இவர்களில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு இருக்கின்றது.. ஆனாலும் இந்த மைல் கல்லை அடைய பல வருடங்கள் செல்லும். அதுவரை இவர்கள் தாக்குபிடிப்பார்களா என்பது சந்தேகமே.. அதிலும் விட்டோரி அவளவு காலம் கஸ்ட்டம். ஆக முரளியின் இந்த பிரமாண்ட சாதனை இன்னும் பல வருடங்கள் நின்று நிலைக்கப் போகிறது
சிலவேளை இதுவே உடைக்கப்படாத சாதனையாகவும் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…. அப்படியே இருந்துவிடாதா இறைவா..?

முரளியை விடைகொடுத்தனுப்ப ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகை தந்திருந்தார்காலி மைதானம் நிறைந்த ரசிகர்கள், முரளியின் மனைவி, பிள்ளை, பெற்றோர், மாமியார், சகோதரர்கள், பாடசாலைப் பயிற்றுவிப்பாளர், முரளியின் பாடசாலையான சென்/அந்தனீஸ் மாணவர்கள், அதிபர் என்று ஏராளாமானோர் வருகை தந்திருந்தார்கள்.

தன் 19 வருட டெஸ்ட் கிரிக்கட் வாழ்க்கைக்கு உறுதுணையாய் வந்த அனைவருக்கும் முரளி நன்றி தெரிவித்தார்

சில நடுவர்களால் உங்கள் பந்துவீச்சில் குறை காணப்பட்டபோது எவ்வாறு உணர்ந்தீர்கள் என்று கேற்கப்பட்டபோது… ”கிரிக்கட் ஒரு விளையாட்டு அதனை விளையாட்டாகவே பார்க்கின்றேன். தொழில் நுட்பம் + விஞ்ஞான் அடிப்படையில் என்னை நான் நிரூபித்திருக்கின்றேன். அந்த வேளையில் எனக்கு உறுதுணையாகவிருந்த அனைவருக்கும் விசேடமாக அர்ஜுன ரணதுங்கவிற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.” என்று கூறினார்.

முரளியின் எதிர்கால கிரிக்கட் வாழ்க்கை பற்றிக் கேற்கப்பட்டபோது..”தேர்வாளர்களுடன் பேசியிருக்கின்றேன், அவர்கள் விரும்பினால் தொடர்ந்து உலகக் கிண்ணப் போட்டிகள் வரை ஒரு நாள் போட்டிகளிலும் T-20 போட்டிகளிலும் விளையாட ஆர்வமாய் உள்ளேன் என்றும் கூறினார்.

சாதனைகள் பல படைத்தும் அவரின் குழந்தைத் தனம், அந்த அழகான குழந்தைச் சிரிப்புதன்னடக்கம், பெருந்தன்மை, அவைக்கூச்சம் இன்னும் அப்படியே இருக்கிறது. தலைக்கனம், தற்பெருமை, மேதாவித் தனம் எதுவுமே இல்லாத மனிதர். யாராலும் விரும்பப்படக் கூடிய அற்புத மனிதர், மனிதநேசர். வாழ்நாள் ஹீரோ முரளி என்றால் அது மிகையாகாது.

முரளியின் ஓய்வு என்னைப் போன்ற அவரது தீவிர ரசிகர்களுக்கு மிகுந்த கவலைதான். என்றாலும் அவரது இம்முடிவும் சரியானதே…. சரியான தருணத்தில் சரியான முடிவு. கெளரவமாக ஒதுங்கிக் கொண்டார். ஆனாலும் முரளியின் ஓய்வு இலங்கைக் கிரிக்கட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.


முரளியை சங்கா உட்பட அனைத்து வீரர்களும் தங்கள் தோளில் சுமந்து மைதானத்தை சுற்றி வந்த அழகு.... ஐய்யோ எனக்குள் என்னமோ பண்ணியது.. வரலாற்றுப் பதிவுகள் அவை.

என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீராவது வந்துவிடக் கூடாது என்று எவ்வளவோ போராடியும் இறுதியில் நான் தோற்றுதான் போனேன்….

முரளியின் எதிர்காலம், அவர்தம் குடும்ப வாழ்க்கை, அனைத்தும் மகிழ்சிகரமானதாகவும் அவரின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமானதாகவும் அமைய என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.
முரளி வாழ்நாள் சாதனையாளர்கிரிக்கட் வாழும் வரை முரளியின் சாதனைகளும்புகழும் நிச்சயம் வாழும்.
                                     Murali We Miss U Lot. Specialy I Miss U Lot.



மு.கு: முரளியின் வாழ்க்கைக் குறிப்பு அவரின் சாதனைகளை உள்ளடக்கிய முழுமையான பதிவொன்றை இட ஆவலாய் உள்ளேன். முடிந்தவரை விரைவாகப் பதிவிட முயற்சிக்கின்றேன்.



Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சம்மாந்துறை என்ற பெயர் வரக்காரணம்.

இது எனது 50வது பதிவு. எனது 50வது பதிவில் என் தாய் மண்ணைப் பற்றி பதிவிடுதில்  நான் பெருமடைகின்றேன்.

இப்பதிவு என் தாய் மண் சம்மாந்துறைக்கு சமர்ப்பணம்.


என் தாய்மண் சம்மாந்துறைக்கு அந்தப் பெயர் வரக் காரணம் என்ன. என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வந்துள்ளது. அதன்  ஒரு கட்டமாக அதனை அறிந்துகொள்ள முற்பட்டபோது.. பல சுவாரஸ்யமான வரலாறுகள் அறியக் கிடைத்தன.. அவற்றைப் பற்றியெல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன். இப்போது எனதூரைப் பற்றிய சிறு அறிமுகத்தோடு சம்மாந்துறைஎன்ற பெயர் வந்த காரணத்தைப் பார்க்கலாம்.

கிழக்கிலங்கையில் சீரும் சிறப்பும் வரலாற்றுப் பெருமையுமிக்க பழம் பெரும் பகுதிகளில் சம்மாந்துறை சிறப்பிடம் வகிக்கின்றது.
இங்கு இஸ்லாமியரும் தமிழரும் இரண்டறக்கலந்து இன ஐக்கியத்துக்கோர் எடுத்துக் காட்டாக நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர்.(முஸ்லிம்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.)

சம்மாந்துறையானது நெல் வயல்களினால் சூழப்பட்டிருப்பதால்; கிழக்கிலங்கையின் தானியக் களஞ்சியமாக ஊருக்கும், உலகுக்கும் உண்டி கொடுத்து மகிழும் உழவர் பெருமக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கின்றது. கணிசமான அளவு அரசாங்க ஊழியர்களும், வியாபாரிகளும் ஊரின் பலபாகங்களிலும் பரந்து வாழ்கின்றனர்.

சம்மாந்துறை என்ற பெயர் வரக்காரணம்.


சம்மாந்துறை கிழக்கின் பிரதான துறையாகவும்போத்துக்கீசரின் காலத்தில் கண்டி இராச்சியத்தின் பிரதான ஏற்றுமதி இறக்குமதித் துறையாகவும் விளங்கிவந்துள்ளதுஅன்று முதல் இன்றுவரை சம்மாந்துறை நெல் உற்பத்தியிலும்ஏற்றுமதியிலும் முதலிடம் வகித்துவருவதைக் கண்கூடாகக் காண்கிறோம்
சம்மாந்துறை என்ற பெயர் வந்தமைக்கு பல கதைகள் சொல்வார்கள்.

சம்மான் என்ற ஒரு குழுவினரே இவ்வூருக்கு ஓடத்துறை வழியாக முதலில்  வந்திறங்கியதால் சம்மான் வந்திறங்கிய துறை. “சம்மாந்துறை”  என்று அழைக்கப்படாலாயிற்று என்பது ஒரு கதை.

வர்த்தகர்கள் ஓடத்துறை வழியாக வந்திறங்கிய போது இப்பிரேதேசத்தின் கரையோரம் செம்மண்ணினால் செண்ணிறமாகக் காணப்பட்டதாகவும். அதனால் இது செம்மண்-துறை என்று அழைக்கப்பட்டதாகவும். பின்னர் சம்மாந்துறையாக மாற்றம் பெற்றதாகவும் சொல்கிறது இன்னுமொரு கதை.

 இப்படி பல கதைகள் உலவுகின்ற போதும். பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, சரித்திரச் சான்றுகள் உள்ள ஆதாரபூர்வமான விடயம்தான்.... கீழே வருகின்றது.

தென்னிந்திய மக்கள் தோணியை சம்மான்என்றே அழைப்பார்கள். இதனால் சம்மான்(தோணி) வந்து தரிக்கும் துறையை சம்மான்-துறை என்று அழைக்கலாயினர். இப்போதும் தோணியின் பெயரைக் கொண்டே இவ்வூரின் பெயர் சம்மாந்துறை என அழைக்கப்படுகின்றது. இக்காலப் பகுதியில்தான் முஸ்லிம்களின் வருகை இடம்பெற்றிருக்கின்றது.

இறுதியாகச் சொல்லப்பட்ட இதுதான் சம்மாந்துறை என்ற பெயர் வந்தமைக்குரிய வரலாறு என்று எமதூரின் மூத்தவர்களும், ஊரின் சரித்திரம் அறிந்தவர்களும் உறுதியாகக் கூறுகின்றனர்.

கிழக்கிலங்கையின் சொர்க்கபுரியான சம்மாந்துறை பற்றிய அழகான, சுவாரஸ்யமான வரலாறுகள் பல உள. எதிர் வரும் காலங்களில் அவற்றையும் பதிவிட ஆவலாய் உள்ளேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஷாமினாமினா..ஏ..ஏ... வக்கா வக்கா..ஏ..ஏ..

உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பித்த நாள் தொட்டு அனைவரினதும் உதடுகள் உச்சரிக்கும் பாட்டும், பலரது ஃபோனின் ரிங்டோனாகவும், ரிங்கிங் டோனாகவும் மாறியிருப்பது
Give me freedom, give me fire மற்றும் samina mina, eh eh  Waka waka, eh eh என்ற பாடலும்தான்.

அருமையான பாடல்கள். மொழி விளங்குகிறதோ இல்லையோ...  ரசிக்கும் விதமாக இருக்கிறது.
காட்சியமைப்பு, நடனம், எடிடிங், இசை எல்லாமே அற்புதம். அருமை.

அந்த இரண்டு பாடல்களும் என் வலைப் பதிவில் இல்லாவிட்டால் என் வலைப்பூவே அழகொடிந்து விடும் போலிருக்கிறது.

அதற்காகத்தான் நான் ரசித்த, நாம் எல்லோருமே ரசித்த அந்த இரண்டு பாடல்களையும் எனக்காகவும்,உங்களுக்காகவும் வீடியோ மற்றும் பாடல் வரிகளுடன் பதிவிடுகின்றேன். வாருங்கள் ரசிக்கலாம்.


                         Give me freedom, Give me fire


Give me freedom, Give me fire


Ooooooh Wooooooh

Give me freedom, give me fire, give me reason, take me higher
See the champions, take the field now, you define us, make us feel proud
In the streets are, heads are liftin , as we lose our inhabition,
Celebration its around us, every nation, all around us

Singin forever young, singin songs underneath that sun
Lets rejoice in the beautiful game.
And together at the end of the day.

WE ALL SAY

When I get older I will be stronger
They'll call me freedom Just like a wavin' flag
And then it goes back
And then it goes back
And then it goes back

When I get older I will be stronger
They'll call me freedom
Just like a wavin' flag
And then it goes back
And then it goes back
And then it goes

Oooooooooooooh woooooooooohh hohoho

Give you freedom, give you fire, give you reason, take you higher
See the champions, take the field now, you define us, make us feel proud
In the streets are, heads are liftin, every loser in ambition,
Celebration, its around us, every nations, all around us

Singin forever young, singin songs underneath that sun
Lets rejoice in the beautiful game.
And together at the end of the day.



                           Tsamina mina, eh eh  Waka waka, eh eh



Tsamina mina, eh eh  Waka waka, eh eh


Oooeeeeeeeeeeeeeeeehh

You're a good soldier
Choosing your battles
Pick yourself up
And dust yourself off
Get back in the saddle

You're on the front line
Everyone's watching
You know it's serious
We are getting closer
This isn't over

The pressure is on
You feel it
But you got it all
Believe it

When you fall get up, oh oh
If you fall get up, eh eh
Tsamina mina zangalewa
Cuz this is Africa
Tsamina mina, eh eh
Waka waka, eh eh
Tsamina mina zangalewa
This time for Africa

Listen to your God
This is our motto
Your time to shine
Don't wait in line
Y vamos por todo

People are raising
Their expectations
Go on and feed them
This is your moment
No hesitations

Today's your day
I feel it
You paved the way
Believe it

If you get down get up, oh oh
When you get down get up, eh eh
Tsamina mina zangalewa
This time for Africa
Tsamina mina, eh eh
Waka waka, eh eh
Tsamina mina zangalewa
Anawa a a
Tsamina mina, eh eh
Waka waka, eh eh
Tsamina mina zangalewa
This time for Africa

Awela Majoni Biggie Biggie Mama One A To Zet
Athi sithi LaMajoni Biggie Biggie Mama From East To West
Bathi . . . Waka Waka Ma Eh Eh Waka Waka Ma Eh Eh
Zonke zizwe mazi buye
Cuz this is Africa

Voice: Tsamina mina, Anawa a a
Tsamina mina
Tsamina mina, Anawa a a

Tsamina mina, eh eh
Waka waka, eh eh
Tsamina mina zangalewa
Anawa a a
Tsamina mina, eh eh
Waka waka, eh eh
Tsamina mina zangalewa
This time for Africa

Django eh eh
Django eh eh
Tsamina mina zangalewa
Anawa a a

Django eh eh
Django eh eh
Tsamina mina zangalewa
Anawa a a

 This time for Africa
This time for Africa

 We're all Africa
 We're all Africa

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஜெனெரேட்டர் பூட்டி என் வாழ்க்கையையே இருட்டாக்கிட்டாங்க.

நேத்து Lecture ல் இருந்து சீரியசா படிச்சிட்டிருந்தன். நான் சீரியசா படிச்சதால என்னவோ கரண்ட் அடிக்கடி கட் ஆகி கட் ஆகி வந்துது. எனக்கு பயங்கர கோவம்.பின்ன என்னங்க எவளவு சீரியசா படிச்சிட்டிருக்கும் போது இப்படி பண்ணினா நல்லா படிக்குற பிள்ள எனக்கு(??) எவளவு கோவம் வரும்.

அப்பதான் நம்ம Lecturer சொன்னார். கெம்பஸுக்கு  40 மில்லியன் செலவில் புதுசா ஒரு ஜெனெரேட்டர் வாங்கி வந்திருக்காங்களாம். அத போட்டு செக் பண்ணிட்டிருக்காங்களாமாம்.
 (ஆஹா……….. )  எனக்கு இன்னும் கோவம் கூடிட்டு..

ஏன் கோவம் எண்டுதானே கேக்குறீங்க. சொல்றன்..
நம்ம கெம்பஸ்ல கரண்ட் கட்டான Projector பாவிச்சு படிப்பிக்குற பாடங்கள்,  Computer Practical எல்லாம்  நடக்காது…. கரண்ட் கட்டான நமக்கு ஜாலிதான்..

சில நேரங்கள்ள போரடிக்குற பாடங்கள் நடந்திட்டிருக்கும்போது ஒரு மிஸ் கோல் குடுத்தா கரண்ட் கம்பத்துக்கு சைக்கிள் செயின் எறிஞ்சு கரண்ட கட் பன்றதுக்கெல்லாம் ஆள் வெச்சிருந்தன். சில நேரங்கள்ள நானே  Lectures  போகாம சைக்கிள் செயின் எறிஞ்சு Lecture நடக்காம ஆக்கியிருக்கன்.

இப்படியெல்லாம் பிளான் பண்ணி செய்திட்டிருக்கும் போது.. இப்படி ஜெனெரேட்டர் பூட்டி என் வாழ்க்கையையே இருட்டாக்கிட்டாங்க. இப்ப சொல்லுங்க என் கோவம் நியாயமானதுதானே….?

சரி ஜெனெரேட்டர் பொருத்துறத உடனே நிறுத்தியாகனும் எண்டு வேகமா அது பொருத்துர இடத்த தேடிப் போனன்.  படுபாவிங்க சரியா டீன் (பீடாதிபதி) அலுவலகத்துக்கும் செக்கியூரிட்டி போஸ்ட்டுக்கும் இடையில பொருத்திட்டு இருந்தாங்க.

உங்களுக்கு இத பொருத்துரத்துக்கு வேற இடமே இல்லையா எண்டு சாபமிட்டுகிட்டே.. ஜெனெரேட்டர் பொருத்திட்டு இருக்குற ஆள தேடினன். பயபுள்ள என்னாமா உடம்ப வளத்து வெச்சிருக்கான். அவன் உடம்ப பாத்த உடனே கோவமெல்லாம்……………??      
சமத்தா அவர் பக்கத்துல போய் தெரிஞ்ச அரைகுறை சிங்களத்துல பேச்சுக் குடுத்தன்.

நான்: என்ன அண்ண செய்திட்டிருக்கீங்க..?

அவர் : ஆ பாத்தா தெரியல….??

நான் : பாத்தா தெரியுது ஆனாலும் எல்லாரும் இப்படித்தான் ஆரம்பிப்பாங்க. அதான் நானும் அந்த ஸ்டைல்ல ஆரம்பிச்சன்.

அவர் : (புன் முறுவல்) ஜெனெரேட்டர் பொருத்திட்டு இருக்கன்.

நான் : ஓ இதான் ஜெனரேட்டரா..? இதப் பத்தி கொஞ்சம் சொல்றது…..

அவர் : இது …………நாட்டு தயாரிப்பு. ………………தொழில் நுட்பத்துலதான் இயங்குது. இதனால இந்த கெம்பஸ் முழுதும் எல்லா ரூமுக்கும் ஏசீ வசதி குடுத்து, கணனி வசதி குடுத்து எல்லாத்தையும் இயங்கவைத்தால் கூட 6 மணித்தியாலங்களுக்கு மேல் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கலாம். அப்ப கூட ஏராளமான அளவு மின்சாரம் மீதமாகும்….
(அப்படி சொல்லிட்டே போறாரு…...)

நான் : சரி அண்ண இத கட்டாயம் பொருத்தித்தான் ஆகனுமா? வேற எங்காவது மின்சாரம் இல்லாத கிராம மக்களுக்கு இதால மின்சாரம் குடுக்கலாம் தானே…. இங்க பொருத்துறது அனியாயம் தானே..? (அப்படி என்னுடைய சமூகப் பொறுப்ப வெளிக்காட்டினன்.)

அவர் : இல்ல தம்பி இது அவசரத் தேவைகளுக்கு மட்டும்தான் பயன்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் பாவிக்க முடியாது ரொம்ப செலவாகும். 6 மணித்தியாலம் பாவிச்சா 36000/= செலவாகும்.
ஏன் கெம்பசுக்கும் கட்டாயம் தேவைதானேகரண்ட் இல்லாட்டி உங்களுக்கு பாடங்கள் நடத்த கஸ்டமாம், அன்றைய நாள் முழுவதும் பாடங்கள் எல்லாத்தையும் கேன்சல் செய்யவேண்டி வருது எண்டுதானே இத பொருத்துறாங்க…. ?

நான் : ஆமாண்ணே கரண்ட் கட்டானா பாடம் நடக்கக் கூடாது. நாங்க ஜாலியா இருக்கனும் எங்குறதுக்குதான்னே  சொல்றன்.

அப்படி சொன்னதும் அந்தாள் முகத்தப் பாக்கனுமேஐய்யோ என்னா ஒரு லுக்குஅடுத்தது அவர்ட கையில இருக்குற ஸ்கூட் ரைவர் நம்ம தலைக்குத்தான் வரும் என்டு புரிஞ்சு போச்சு….
ஆஹா எஸ்கேப்பாகனுமே..

வழமை மாதிரி ஃபோனத் தூக்கி காதுல வெச்சிகிட்டு ஆ சொல்லுடா மச்சான் லெக்சர் தொடங்கிட்டா இதோ வாரன்அண்ணா லெக்சர் தொடங்கிட்டாம் நான் போறன் அண்ணா  

ஹி ஹி நான் எஸ்கேப்..


இப்போ இந்த ஜெனெரேட்டர எப்படி வேல செய்யாம ஆக்குறது எண்டு ரொம்ப ஆளமா யோசிச்சிட்டிருக்கன். இப்போதைக்கு  ஒரு 40 அடி ஆளத்துக்கு போய்த்தான் யோசிச்சிருக்கன். இது போதாது இன்னும் ஆளமா போகனும்.

எவளவு ஆளத்துக்குப் போயென்டாலும் ஒரு முடிவெடுக்காம விடமாட்டன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பரமுக்கு நடந்தது என்ன…..?

நம்ம நண்பர் பரமுக்கு நடந்தது என்ன…..?

இந்த வாரம் முழுவது நம்ம ரூம் மெட் பரமுக்கு ஏகப்பட்ட குடைச்சல்கள்..


"அதென்ன பரம்; அப்படி ஒரு பெயரா..?" எண்டெல்லாம் கேக்கப்படாது. ஏன்னா பெயர ஓபனா சொல்லிட்டு ஓப்பன் பிளேஸ்ல அடிவாங்க என்னால ஏலாது… அதுக்காக பாவிக்கிற பெயர்தான் இது ஆனாலும் இதிலும் ஒரு காரணம் இருக்கு…..அது கெம்பஸ் ரகசியம்.

சரி மேட்டருக்கு வரலாம்…

நம்ம நண்பர் பரம்ட ஃபோட்டோவ வெச்சு யாரோ ஒருத்தன் அவர்ட பெயர்லயே வேற ஒரு ஃபேஸ்புக் அக்கெளண்ட் உருவாக்கி அவருக்கே Request அனுப்பியிருக்கான். அத பாத்தவுடனேயே.. ஏய் இது அதுல்ல என்று குழம்பிப்போன நம்ம பரம் யாரு இத செஞ்சிருப்பான் எண்டு செம கடுப்புல இருக்காரு.

அந்த அக்கெளண்டுல அவர்ர ஃபோட்டோவ காமெடியா போட்டு அவரப்பத்தி அவரே கேவலமா சொல்றமாதிரி போட்டிருக்குறது மட்டுமில்லாம அவர்ட நண்பர்கள் எல்லாருக்கும் Request போகுது. இதுதான் நம்ம பரமுக்கு செம கடுப்பு.


அதுல ஒரு கொடும என்னன்னா…? முதல் இணைஞ்சு கொண்ட ரெண்டு ஃப்ரென்ஸ்ல நானும் நம்ம சுண்டெலி ஹஸ்ஸானும் இருக்குறதால எங்க ரெண்டுபேர் மேலையும் அண்ணாத்தைக்கு பயங்கர சந்தேகம். எப்ப பேஸ்புக் வந்தாலும் பின்னால ரகசியமா வந்து எட்டிப்பாக்குறாரு.
அப்பகூட ஒரு துப்பும்கிடைக்கல்ல நம்ம அண்ணாத்தைக்கு.
(ஹி ஹி நாங்க யாரு... புறாவுக்கே பெல்லடிச்சவைங்க எங்ககிட்டேவா…?)
யார சந்தேகப்படுறது என்று தெரியாம பரிதாபமா குந்தின்னிருக்காரு.

                           
இந்த விசயத்துல தனக்கு நீதி கிடைக்கனும், குற்றவாளி தண்டிக்கப்படனும் எங்குறதுல பரம் உறுதியா இருக்காரு…

தனக்கு நீதி பெற்றுத்தரனும்னு கேட்டு ஜனாதிபதிகிட்ட மனு குடுக்கப் போயிருக்காரு. அதுலையும் ஒரு சிக்கல். அதுல என்ன சிக்கல்னா இவர் ஜனாதிபதிய சந்திக்க போறதுக்கு முண்ணாடியே இவர் தேர்தல் காலங்கள்ள ஜனாதிபதிக்கு எதிரா அனுப்பின எஸ்.எம்.எஸ்கள யாரோ ஒரு நலன் விரும்பி ஜனாதிபதிக்கே Forward பண்ணியுட்டான். இது எப்படியோ பரம் காதுல விழுந்துட்டு… ஆஹா இப்போ போயி ஜனாதிபதிய சந்திச்சா ஸ்ரைட்டா நாலாம் மாடிதான் எண்டு புரிஞ்சுகொண்ட பரம் அந்த மனுவ மெனுவா மாத்தி முழுங்கிட்டாரு…..

அதுக்கப்புறம் இந்த விசயத்துல உதவுமாறு ரகசிய பொலீசாரிடம் முறையிட போயிருக்காரு. அங்கபோனா வோண்டட் லிஸ்ட்டுல தண்ட ஃபோட்டோ இருக்குறதப்பாத்து ஆள் பின் கதவு வழியா எகிறிக் குதிச்சு எஸ்கேப்.

இது இப்படி இருக்க… புதுசா ஒரு பிரச்சின. என்னடா அப்படின்னு பாத்தா இந்தமுறை அவர்ட ஒரிஜினல் அக்கெளண்டையே ஒருத்தன் ஹெக் பண்ணி ரொம்ப கேவலமா ஸ்டேடஸ் போட்டிருக்கான். ஆஹா நம்மளையே வெச்சு காமெடி பண்றாய்ங்களே..எண்டு கவலப்பட்ட பரம் தலையில துண்டப்போடுட்டு கூரையப் பாத்துட்டிருந்தாரு..

வெறுத்துப் போன பரம் இனியும் தான் பொறுத்திருக்க முடியாதுன்னு முடிவெடுத்து… ஸ்கொட்லாந்யார்ட் பொலீசாரை உதவிக்கு கூப்பிட்டிருக்காரு. அதுக்கு நிறைய காசு வேணுமே எண்டு சைடுல ஒரு பிஸ்னஸ் செய்வம் எண்டு சொல்லி தண்ட நண்பர் ஒருத்தர் மூலமா டொங்கல் பிஸ்னஸ் ஆரம்பிச்சாரு…. ஆனா அதுலையும் ஒரு சிக்கல்..
என்னடா அப்படின்னா பார்த்தா அண்ணாத்தைக்கு பிஸ்னஸ் டெக்னிக் தெரியல. வாங்கின விலைக்கே விக்கவேண்டிய நிலம.
சரி கொஞ்சம் விலையக் குறைச்சு டொங்கல வாங்கலாம் எண்டு முடிவெடுத்த பரம் தன் நண்பர்கிட்ட சொல்லி விலைய குறச்சுக் கேட்டாரு. அதுல என்ன காமெடி அப்படின்னு பாத்தா டொங்கள் இம்ப்போர்ட் பண்றது அவர்ட நண்பனில்ல. அப்போ யாரு…? நண்பனின் நண்பனின் நண்பனின் நண்பனின் சகோதரன்.

இத்துன பேயர்களையும் சாரி பேர்களையும் தாண்டிவாற டொங்கல்ல என்னெண்டு விலயக் கொறைக்குறது… சரி விட்டுடலாம் எண்டு அதே விலைக்கே பிஸ்னஸ் நடத்த முடிவெடுத்தாரு. ஆனாலும் ஐட்டம் இன்னும் பிரசவமாகல மறுபடியும் சாறீ….. டெலிவரி ஆகல்ல எங்குறத தமிழ்ல சொல்லிப்பாத்தன். இப்போ சொந்த செலவுல சூசூனியம் வெச்சிகிட்டாரு.

சரி அப்பையாவது அடங்கவேணாமா… ஆச ஆசையோ ஆச. என்ன பண்ணினாரு. சொல்றன் கேளுங்க. ( அப்படியே அடுத்த பரகிறாஃபுக்கு ஜம்பாகுங்க)

மிகிந்தலையில பொசன் சீசன் ஆரம்பமாகுது லைட்டா ஒரு கடையப் போட்டு கொஞ்சம் பணத்த பொரட்டலாம் எண்டு கட்டில்ல பொரண்டு பொரண்டு யோசிச்சு ஒரு முடிவெடுத்து நாலு பார்ட்னச சேர்த்துகிட்டாரு. எல்லாம் பக்காவா ப்ளான் பண்ணி நடந்துட்டிருக்கும்போது பொசன் ஆரம்பமாகுறதுக்கு முன்னாடியே பார்ட்னசெல்லாரும் விலகிட்டாங்க. என்னடா இது; ஏன் திடீர்னு இப்படி விலகிட்டானுங்க எண்டு விசாரிச்சா அப்பதான் விசயம் வெளியில வந்துது. அதென்ன விசயம்..?
(வாங்க அடுத்த பந்திக்கு. பந்தின்னதும் வாயில எச்சி ஊறுதோ..? ஹி ஹி இது அது இல்ல, அடுத்த பரகிறாஃப். ஹி ஹி )

எங்கவிட்டன்..? ஆ…. அதென்ன விசயம்..?
எப்படியோ அந்த நாலு பார்ட்னசுக்கும் பரம்ட டொங்கல் பிசினஸ் சொதப்பின மேட்டர் லீக்காயிடிச்சு.
ஆஹா இப்படிப்பட்ட ஆளோடா கூட்டு சேர்ந்து மொதலுக்கே ஆப்படிக்க முடியாதுன்னுதான் அவங்க ஜூட் விட்டுடாங்க.

ஒரு மனுசனுக்கு எவ்ளோவ் எடஞ்சல் பண்றாய்ங்க…...

இதெல்லாத்தையும் பாத்து மனசொடஞ்சுபோன நம்ம பரம்.
“இனி ஒன்னும் சரிவராது உங்களால எவ்வளவு முடியுமோ அவளவுத்தையும் பண்ணுங்கப்பா” அப்படின்னு முடிவெடுத்துட்டாரு.



சரி பரம் இப்போ என்ன பன்றாருன்னு கேகிங்களா..?

இப்போ….. இப்போ….. ஃபேஸ்புக்ல தண்ட ஒரிஜினல் அக்கெளண்டுல எவனோ தனக்கு கேவலமா போட்ட ஸ்டேடஸ்ஸையும் அதுக்கு மத்தவங்க போட்ட கொமென்ஸையும் பாத்துட்டு இருக்காரு. இதுல என்ன காமெடின்னா…. யூசர்நேம், பாஸ்வேர்ட் இருந்தும் அந்த ஸ்டேடஸ்ஸ அழிக்க தெரியாம பப்பரப்பேனு குந்தின்னிருக்காரு…(கோட்டர் கோவிந்தன் வந்துதான் பரம சமாதானப்படுத்தனும்.)

இபோ கடைசியா விக்கல் வந்து அத நிறுத்த முடியாம நிறுத்த தெரியாம 2500/= குடுத்து மருந்து எடுத்துட்டு வந்திருக்காரு...

ஹி ஹி... அப்போ பாருங்களன்……

(Comments & Vote Plz)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS