RSS
நம்ம FB wall போஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம்ம FB wall போஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெருநாள் காசு இல்லனா.. அன்பாச் சொல்லிட்டு அனுப்பிடவேண்டியதுதானே.. அதுதானேய்யா ஒலக வழக்கம்


நான் சுத்தி வழைச்சுப் பேச விரும்பல
சம்பந்தப்பட்டவங்களப் பார்த்து நேரடியாவே கேக்குறன்..
பெருநாள் கொண்டாடுறீங்களா? இல்ல அராஜகம் பண்றீங்களா..?
என்ன பண்ணினான் அந்தப் பையன்? என்னையா தப்பு பண்ணீனான்?
ஏதோ ஆர்வக் கோளாறுல பெருநாள் காசு கேட்டுட்டான்...
பெருநாள் காசு இல்லனா.. சாரி காசு இல்லன்னு அன்பாச் சொல்லிட்டு அனுப்பிடவேண்டியதுதானே..
அதுதானேய்யா ஒலக வழக்கம்.
அத விட்டுப் போட்டு அம்பது பேர் முன்னாடி இந்த வயசுலையும் பெருநாள் காசு கேக்குறார்னு சொல்லி அசிங்கப்படுத்திருக்க நீயி…..
அட அசிங்கப்படுத்தினாலும் பரவால்லையா… போறவாற சின்னப் பிள்ளைங்களையெல்லாம் கூப்பிட்டு அங்கிள் கிட்ட பெருநாள் காசு கேளுங்கடான்னு கடுப்பேத்தியிருக்க நீயி...
அம்புட்டு பசங்களுக்கு பெருநாள் காசு கொடுக்குறதுக்கு இது என்ன கவர்மெண்ட் கஜானாவா இல்ல ஒலக வங்கியா?
ஏதோ அந்தப் பையன் பாடியில அவன் வீட்ல சாப்பிட்ட பலகாரம், மஸ்கட் தந்த எனர்ஜி இருந்ததனால அவன் ஓடி எஸ்கேப் ஆகிருக்கான்யா….
அப்டில்லாம அந்தப் பசங்க கிட்ட மாட்டி காசப் பறிகொடுத்திருந்தா அவன் dongle ற்கு யாரு ரீலோர்ட் பண்றது அவன் ஃபேஸ்புக் அக்கெளண்ட யாரு மெயிண்டைன் பன்றது…?
இவ்வளவு ஏன் முந்த நாள் கூட இப்டி ஒரு சம்பவம் நடந்துது.
இதே பையன் இன்னொரு சொந்தக்காரன் வீட்ட போய் பெருநாள் காசு கேட்டான்யா…
ஆனா அந்த சொந்தக்காரங்க அந்தப் பையன உன்னைய மாதிரி இம்புட்டு அசிங்கப்படுத்தல்ல..
ஒரு ஒரு மணிநேரம் ஆறுதலாப் பேசிட்டு அனுப்பிருக்காங்கையா
அதுவும் எப்டி பிள்ளைக்கு மனம் நோகக் கூடாதுங்குறதுக்காக ஃபலூடா, ஐஸ்கிறீம், அப்பிள், ஒரேஞ்னு வெராய்டி வெராய்டியா கொடுத்துட்டு. அப்புறம் பெருநாள் காசு இல்லனு நாசூக்கா சொல்லி அனுப்பிருக்காய்ங்கை..
அந்த நாகரீகம் கூட தெரியாது உனக்கு…..?
எப்டியெல்லாம் அசிங்கப்படுத்திப்போட்ட…
ஒரு பச்சத் தண்ணி கூட கொடுக்காம திருப்பி அனுப்பிருக்க நீயி…
எப்படியெல்லாம் கேட்டுப் பார்த்தான் அவன்…
கடைசிவரை ஒன்னுமே கொடுக்காம அனுப்பிருக்க..
இரக்கமில்லையா உனக்கு….?
(யாவும் கலப்படமற்ற கற்பனை )

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

VOPL உம் அண்ணனின் அட்டகாசங்களும்

** நாட்குறிப்பில் ஒரு பக்கம் ***
----- VOPL உம் அண்ணனின் அட்டகாசங்களும்.------

கடந்த வருடம் நம்ம அண்ணாத்தை ஒருவர் VOPL (Virakesari Online Primer League) விளையாட ஒரு மாதத்துக்கு முதலே ரெடியாகிட்டார். அடிக்கடி ஃபோன் பண்ணி ரூம்லதானே நிப்ப நான் கொழும்பு வந்தா உன் ரூம்லதான் தங்கணும் என்று ஒரு மாதமாக சொல்லிக்கொண்டே இருந்தார்.
ஒரு நாள் கொழும்பில் எனது ரூமில் தங்கியிருக்கிறேன் நம்ம அண்ணாத்தை ஃபோன் பண்ணினார்.

அவர் :எங்கடா கொழும்புலதானே இருக்க காலைல கொழும்புக்கு உண்ட ரூமுக்கு வாறன்.

(காலை 4.30க்கு வந்து சேர்ந்தார். நானும் அவருக்கு தூங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துகொடுத்துவிட்டு வசந்தம் டீவியின் எமது பார்வை நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தயாரானேன்.)

நான் : பாஸ் நீங்க தூங்குங்க ப்ரோகிராம் முடிச்சிட்டு 7.15க்குள்ள வந்துடுவன வந்த உடனே கிளம்பிடுவம்.

அவர் : சரிடா சரிடா உன் லெப்டொப்ப ஒன் பண்ணி தந்துட்டு போ. ஒன்லைன்ல உண்ட நிகழ்ச்சியப் பாப்பம்.

நான் : அப்போ தூங்கலையா…?

அவர் : தூங்குறதான் எதுக்கும் ஒன் பண்ணி தந்துட்டு போ…

(நானும் லெப்டொப்பை ஒன்பண்ணிக் கொடுத்துட்டு நிகழ்ச்சிக்காக கலையகம் சென்று மீண்டும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு 7.15 ற்கெல்லாம் ரூமிட்கு திரும்பிவிட்டேன். ரூமுக்கு வந்து பார்த்தால் ரூம் அப்பவே சுத்தமாத்தான் இருந்தது நம்ம பாசு மேலும் சுத்தப்படுத்திவிட்டு மெச் விளையாடப் போக தயாராக இருந்தார்.
நானும் தயாரானேன் நான் தயாராகிக் கொண்டிருக்கும் நேரம் நம்ம அண்ணாத்தை நிண்ட இடத்துல துள்ளுறார் ஓடுறார், கைய கால நீட்டுறார்.. )

நான் : என்ன பாஸ் இது

அவர் : வோம் அப்டா வோம் அப்…

நான் : ஓஹ்ஹ்ஹ் ஓகே ஓகே

நான் : சரி வாங்க போகலாம் (பைக்ல போகும்போது) பாஸ் சாப்பிட்டுட்டு போவமா..?

அவர் : இல்லடா ஏற்கனவே லேட் ஆகிட்டு கிரவுண்டுக்கு போயிட்டு அங்க பக்கத்துல ஏதும் கடையில சாபிடுவம்

(கிறவ்ண்டுக்க வந்தா சும்மா இரிப்பம்னு இல்ல பெட்ட வாங்கி ரெண்டு சொட் போளை வாங்கி ரெண்டு போள்.. ஃபுல் ப்ரக்டிஸ் )

நான் : பாஸ் சாப்பிட்டுட்டு வருவமே செம பசி

அவர் : இருடா இரு

(அப்டி சொல்லிட்டு ஏதோ சாவு வீட்டுக்கு வந்த அரசியல்வாதி அங்க இருக்கிர எல்லார்க்கிட்டையும் வாண்டட்டா போய் அளவளாவுற மாதிரி நம்ம அண்ணாத்தையும் எல்லார்கிட்டையும் சுக நலம் விசாரிக்குது. எனக்கோ பசி அகோரம். )

நான் : பாஸ் வாரீங்களா இல்ல நான் போய் சாப்பிட்டு வரட்டுமா…?

அவர் : சரி வா போவம்….

நான் : பைக்ல போவமா

அவர் : இல்ல நடந்து போவம் பக்கத்துலதான் ஒரு கடை இருக்கு குயிக்கா போய்ட்டு வந்துருவம்.

(சாப்பாட்டுக் கடையில வெறும் பொல்ரொட்டியும் கட்ட சம்பலும்தான் இருந்துது. )

நான் : பாஸ் என்ன சாப்பிடுறீங்க….?

அவர் : இல்லடா நான் ஒண்டும் சாப்பிடல; சாப்பிட்டா சரியா விளையாட முடியாது ஒரு டீ மட்டும் குடிக்கிறன்.

நான் : ஒரு பொல் ரொட்டியாவது சாப்பிடுங்க பாஸ்…

அவர் : இல்லடா பசியோட போனதான் வெறியோட விளையாடலாம்

நான் : ஓ.. ஓகே ஓகே நமக்கு அப்டியெல்லாம் இல்ல பாஸு, வயிறுதான் முக்கியம். ( சொல்லிட்டே நான் ரெண்டு பொல் ரொட்டி ஒரு டீ நம்ம பாஸு பாதி ரொட்டி ஒரு டீ சாப்பிட்டோம்.சாபிட்டுவிட்டு கிரவுண்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தோம்….
வரும்போதே நம்ம பாஸ் துள்றாரு பாயுறாரு கைய முன்னுக்கு பின்னுக்கு சுத்துறாரு… )

நான் : என்ன பாஸ் வோமப்பா….?

அவர் : ஓமடா ஓமடா…..

நான் : ஓ… இருக்கட்டும் இருக்கட்டும்….

அவர் : டேய் வாடா கொஞ்சம் ஓடுவம்… அப்பதான் உடம்பு வேருக்கும் எல்லா தசைகளும் இழுபடும்….

நான் : ஓ இதுவும் வோமப்ல வருதா பாஸ்…..

அவர் :ஓம்டா ஓடுவமா..?

நான் : ஓகே ஓடிட்டா போச்சு…..

வோமப் பில்டப் எல்லாத்தையும் முடிச்சாச்சு. அண்ணன் ஒரு டீம் நான் வேறொரு டீம்…
அண்ணண்ட டீமுக்குதான் முதல் மெச் அண்ணந்தான் ஓபனர். அண்ணன் கலக்குவார் எண்டு நானும் நம்பி உட்கார்ந்து பார்த்தன்

அண்ணனை நோக்கி வேகமாக வீசப்பட்ட பந்து ஆம் அண்ணன் ஓங்கி அடித்தார் மட்டையில் படாமல் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு அண்ணன் ஆட்டமிழந்தார்.

அடுத்த மெச்சிலும் அண்ணன் முதலாவது பந்திலேயே ஓங்கியடித்து மட்டையில் படாமல் LBW முறையில் ஆட்டமிழந்து அண்ணன் வெளியேறினார்.

3வது போட்டியில் அண்ணனுக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இப்படி ஊர்ல இருந்து சில பல ஆயிரங்கள செலவு பண்ணி கொழும்பு வந்து எல்லாப் போட்டிகளிலும் டக்-அவுட் ஆகிப்போன நம் அண்ணனை நினைத்து நினைத்து சிரித்து மகிழ்ந்தேன்.

தொடரில் நான் விளையாடிய அணி சம்பியன். அண்ணனின் அணி படு தோல்வி. எல்லா மெச்களும் முடிந்து ரூமுக்கு வரும் வரை அண்ணன் என்னருகில் வரவே இல்லை. வந்தால் ஏதும் சொல்லிடுவேனோ என்ற தயக்கம். அங்கு வந்திருந்த பிரபல அறிவிப்பாளார் ஒருவரின் குட்டி மகனோடு ஒரு ஓரமாக விளையாடிக்கொண்டிருந்தார். அந்தக் குட்டிப் பையனோடு விளையாடத்தான் தான் சரி என்பதை அவர் தாமதமாகத்தான் புரிந்துகொண்டார்…

ரூமுக்கு வந்ததும் அண்ணனின் வேண்டுகோள் கட்டாயப்படுத்தலின் காரணமாக சினி சிட்டி தியட்டரில் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம் பார்த்து அண்ணனின் சோகத்தைக் கொஞ்சம் குறைத்தோம். என்னா டைமிங்.

குறிப்பு : இதில் வரும் அண்ணாத்தை யாரென்று நான் சொல்லமாட்டேன். ஆனால் இந்தக் கதையை ஒரு குறும்படமாக இயக்கினால் @ Kanapathipillai Prapakaran அவர்தான் இந்தக் கதையின் ஹீரோ…..
காரணம் அவரால் மாத்திரமே இந்த கதையை உள்வாங்கி உயிரோட்டமாக ,யதார்த்தமாக நடிக்க முடியும்.
பாஸ் கால்சீட் கொஞ்சம் ஒதுக்கி வைங்கோ

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நகரத்துப் பையன் Vs கிராமத்துப்புப் பையன்

நகரத்துப் பையன் Vs கிராமத்துப்புப் பையன்
&
நகரத்துப் பெற்றோர் Vs கிராமத்துப் பெற்றோர்.

 காலையில் எழுந்து தயாராகி ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ் போட்டுக்கொண்டு,தோளில் துடுப்பு மட்டையைப் கொழுவிகொண்டு பெற்றோர் ஆசியோடு,அவர்களின் வழியனுப்புதலோடு கிரவ்ண்டுக்கு போறவன் - நகரத்துப் பையன்

எப்படா அப்பா வெளியில போவாரு..? எப்படா அம்மா அடுப்படியில பிசியாவானு காத்திருந்து சோர்ட்ஸுக்கு மேலால டவுசர போட்டு அல்லது ட்ரவுசருக்கு மேலால சாரன உடுத்தி மறைச்சுக்கிட்டு வீட்டின் பின்புறமா/வாசலில் எங்கேயோ ஒழித்துவைத்த துடுப்பு மட்டை, விக்கட்டுகளை மதிலுக்கு மேலால் தூக்கிப் போட்டு திருடனைப்போல் ஒழிந்து ஒழிந்து கிரவுண்டுக்குப் போனால் அவன் - கிராமத்துப் பையன்

கிரவுண்டில் மகன் விளையாடும் அழகைக் கண்டு பெருமைப்பட்டு கரகோசம் செய்து உட்சாகப்படுத்தி மகிழ்ந்தால் அது - நகரத்துப் பெற்றோர்...

கிரவுண்டில் விளையாடிக்கொண்டிருக்கும் மகனை தேடிவந்து கன்னத்தில் ரெண்டு விட்டு, காதைத் திருகி தர தரவென இழுத்துச் சென்றால் அது - கிராமத்துப் பெற்றோர்...

சில நூறு கிலோமீற்றர் நிலப்பரப்பு வித்தியாசத்தில் பெற்றோரின் மனங்களில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்......

குறிப்பு : எனது பெற்றோர் இவ்விடையத்தில் எனக்கு பூரண சுதந்திரம் தந்திருந்தமை நான் பெற்ற பாக்கியம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்டுபிடிச்சிட்டன் நான் கண்டு பிடிச்சிட்டன்

கண்டுபிடிச்சிட்டன் நான் கண்டுபிடிச்சிட்டன் காணமல் போன மலேசிய விமானத்த ஏன் இன்னும் கண்டுபிடிக்கல்ல எண்ட மேட்டர நான் கண்டுபிடிச்சிட்டன்...

இந்த ஃபோட்டோவ பாருங்க


விமானத்த தேடிட்டு இருக்கும் மலேசிய விமானப் படை வீர வீராங்கணைகளப் பாருங்க... கண்ணுக்கு விளக்கெணைய விட்டுக்கிட்டு சீரியஸா விமானத்தத் தேடாம இந்த விளக்கெண்ணைங்க ஜொல்ஸ் பண்ணிக்கிட்டு இருக்குதுக.. இப்டி இருந்தா எப்டி விமானத்தக் கண்டுபிடிக்கிறது...?

அதனால மலேசியப் பிரதமருக்கு நான் என்ன சொல்றன் எண்டால்
1. பொண்ணுங்களையும் பசங்களையும் சேர்ந்து தேடவிடாம தனித்தனியா தேட அனுப்புங்க. (இல்லன்னா தேடுற டைம்ல இப்டி ஜொல்ஸ் விட்டுட்டு விமானத்த எங்காச்சும் காட்டுக்குள்ள பார்க் பண்ணிட்டு புதருக்குள்ள இதுக ஒதுங்கிடும்)

2. இந்த மாதிரி எந்தெந்த ஏரியால பொண்ணுங்களும் பசங்களும் சேர்ந்து தேடுதல்ல ஈடுபட்டிச்சிகளோ அங்க திரும்ப வேற குரூப்ப தேட விடுங்க.... (ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்த கேப்ல விமானத்த கவனிக்காம மிஸ்பண்ணிருக்கலாம்)

மலேசியப் பிரதமரின் கவனத்திற்கு (அவருக்கு விளங்கணும் எண்டதுக்காக மலே மொழியிலையும் ட்ரான்ஸ்லேட் பண்ணிருக்கன்)

Jadi apa yang saya colran Akhir Perdana Menteri Malaysia
1. Menghantar kanak-kanak lelaki untuk mencari tetavitama gadis itu secara berasingan. ( Di mana lagi anda mencari taimla ipti jols taman liar di suatu tempat dan mempunyai putaruk vimanatta meninggalkan mengetepikan ituka yang )

2. Kanak-kanak lelaki seperti gadis-gadis dengan apa eriyala tetutalla itupatticcikalo lagi ke sana .... Mari carian kuruppa ( Romantik dan perasan kepla vimanatta )

 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அந்தப் பொண்ணு காதலில் விழுந்துவிட்டாள்

குடும்பத்தோட எல்லாரும் வெளிய போகும் போது “நீங்கெல்லாம் போங்க எனக்கு தலை வலிக்குது நான் வரல்ல” என்று ஒரு பொண்ணு சொன்னாலோ

வீட்டிற்கு சொந்த பந்தங்கள் எல்லாம் வந்து வீடு கலகலப்பாக இருக்கும் போது ஒரு பொண்ணு தன் ரூமிட்குள் ஒதுங்கிக் கொண்டாலோ அல்லது ரூமிட்குள் அடிக்கடி சென்று வந்தாலோ

குடும்பத்தோடு வாகனத்தில் வெளியில் செல்கையில் ஒரு பொண்ணு பின் சீட்டில் அதுவும் கோணர் சீட்டில் உட்கார்ந்து ஃபோனை நோண்டிக்கொண்டிருந்தாலோ

பயணங்களின் போது தன் ஃபோனை அடிக்கடி கீபேட் ஒன் பண்ணி பார்த்தாலோ அல்லது ஹேண்ட் பேக்கில் உள்ள ஃபோனை அடிக்கடி வெளியில எடுத்து எடுத்து பார்த்தாலோ...

நேரகாலத்தோடு இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு தன் ரூமிட்குள் சென்று ஒரு பொண்ணு கதவை மூடிக்கொண்டாலோ

வீட்டிற்கு உறவினர்கள் வந்திருக்கும் போது தன் வயதை ஒத்த பெண்ணோடு ரூமிட்குள் சென்று ஒரு பொண்ணு ரகசியமா பேசிக்கொண்டிருந்தாலோ

ஃபோன் இன்பொக்ஸிலுள்ள, out box இலுள்ள மெசேஜ்களை ஒரு பொண்ணு அடிக்கடி டிலீட் பண்ணி விட்டாலோ

குடும்பத்தினரோடோ அல்லது நண்பர்களோடோ அதிக நேரம் செலவிடாமல் அடிக்கடி தனிமையை நாடினாலோ அல்லது உறவினர்களோடு அதிக நேரம் செலவிட நேர்ந்தால் அசெளகரியமாக காணப்பட்டாலோ

”அந்தப் பொண்ணு காதலில் விழுந்துவிட்டாள்” என்றும் 2 Side Love கரைபுரண்டு ஓடுது என்றும் அர்த்தம்...

--- ஆய்வு : பேராசிரியர் சுஹைல் ----

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஃபேஸ்புக் நைட் (FB Night)


பசியிருக்கும் தூக்கமிருக்கும் மனமிருக்காது
பிகரு ஒன்னு சற் வந்தால் தூக்கம் வராது
பிகரு ஒன்னு சற் வந்தால் தூக்கம் வராது
தூக்கம் கண்ணைப் பறித்தாலும்  ஆசைவிடாது
தட்டிலிருக்கும் சாப்பாட்டை திண்ண நேரமிராது

பசியிருக்கும் தூக்கமிருக்கும் மனமிருக்காது
பிகரு ஒன்னு சற் வந்தால் தூக்கம் வராது

கட்டவிழந்த மனது சற்பண்ண பெண்களைத் தேடும்
பாதித் தூக்கம் வந்து வந்து கண்களை மூடும் -
கட்டவிழந்த மனது சற்பண்ண பெண்களைத் தேடும்
இருந்தும்
பாழாய்ப்போன மனதில் இன்னும் சற் பண்ணத் தோணும்
பக்கத்து வீட்டு சேவல் அதிகாலையில் கூவும்
அந்த நேரம் புத்திக்குள் சில்லூரி கத்தும்


Fb Chatku நேரமும் இல்லை காலமும் இல்லையே
அடுத்த நாளும் இந்த நிலையில் மாற்றமில்லையே
Fb Chatku நேரமும் இல்லை காலமும் இல்லையே
அடுத்த நாளும் இந்த நிலையில் மாற்றமில்லையே

தப்பு என்று மனசு சொல்லும் புத்தி கேட்பதில்லையே
அடுத்த நாளும் Face book வந்தால் இந்த நிலையே

பசியிருக்கும் தூக்கமிருக்கும் மனமிருக்காது
பிகரு ஒன்னு சற் வந்தால் தூக்கம் வராது



 (ரீமிக்ஸ் கவிஞர் : அஹமட் சுஹைல்)





Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சீ சீ இந்த பிகர் அட்டு பிகர்ர்ர்ர்

ஒரு ஊர்ல ஒரு பைய்யன் இருந்தானாம்.
அவன் ஒவ்வுருநாளும் ஃபேஸ்புக் வரும் போதும்
ஒரு அழகான ஃபிகர் People you may know பகுதியில இருக்குமாம்
இவனுக்கும் அந்த ஃபிகர் மேல ரொம்ப ஆசையாம்..
ஆஹா சூப்பர் ஃபிகருப்பா.. இத எப்படியாவது ஃப்ரெண்டாக்கி
அப்புறம் லவ் பண்ணி செட்டில் ஆகிடனும்னு ஆசையாம்,

சரி இன்னைக்கே ஆரம்பிச்சிடுவம்னு சொல்லி
அந்த பிகருக்கு Friend Request அனுப்பினானாம்
அந்த நாள் முழுதும் வெயிட் பண்ணிப் பாத்தானாம்
Friend Request accept ஆகவே இல்லையாம்.
சரின்னு அடுத்த நாளும் வந்து பாத்தானம் அப்பவும்
Friend Request accept ஆகில்லையாம்.
இப்படியே ஒரு வருசம் காத்திருந்தான் அப்பவும்
Friend Request accept ஆகில்லையாம்.

வெறுத்துப் போன அவன் “சீ சீ இந்த பிகர் அட்டு பிகர்ர்ர்ர்
எண்டு மனச தேத்திக்கிட்டு
அடுத்த பிகருக்கு Request அனுப்புறதில்ல பிசியாகிட்டானாம்.





நாங்களும் பண்ணுவோமில்ல ரீமேக்கு...
-- ரீமேக் டிரெக்டர் - சுஹைல் --

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஃபேஸ்புக் சிட்டிசன்

மைலோர்ட் ஃபேஸ்புக்ல நான் போடுற ஒவ்வொரு போஸ்ட்டும் என் இருதயக் கூட்டுக்குள்ள இன்னும் பத்திரமா இருக்கு. கொந்தளிக்குற கடல் எனக்கு வெளியில இல்ல உள்ள இருக்கு.
இந்த நீதிமன்றத்தில் ஒலிக்கும் என் குரல் பேஸ்புக்கில் பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் கடைசிக் கதறல். என்னுடைய அழுகை பேஸ்புக்கில் லைக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்களின் அழுகை. என்னுடைய ஆத்திரம் நல்ல ஸ்டேடஸ் போட்டும் லைக் கிடைக்காத ஒரு சமுதாயத்தின் ஆத்திரம்.
நான் தனி ஆள் இல்ல  நல்ல நல்ல ஸ்டேடஸ் போட்டுட்டு லைக் கிடைக்காதா கொமெண்ட் கிடைக்காதா என்று தினம் தினம் சாவும் அத்தனைபேரினதும் ஆத்மா


கணம் நீதிபதி அவர்களே என் ஸ்டேடஸ்க்கு லைக் போடதவர்கள், கொமெண்ட் பண்ணாதவர்கள் ஃபேஸ்புக் பாவிப்பதில் இருந்து இடைநிறுத்தப்படவேண்டும்.
இவர்களின் ஃபோட்டோ அல்பங்கள், போஸ்டுகள் அனைத்தும் தடைசெய்யப்படவேண்டும்..

ஃபேஸ்புக் பாவிக்க இவர்கள் அருகதையற்றவர்கள் என்று சொல்லி இவர்களின் பேஸ்புக் கணக்குகள் தடைசெய்யப்படவேண்டும்.
இவர்களுடைய மனைவி, காதலி,தாய்,தகப்பன், மாமன், மாமி, மகன், மகள், சித்தப்பன், பெரியப்பன், பேரன், பேத்தி
இவர்களுக்கு பெண் கொடுத்தோர். பெண் எடுத்தோர், பிள்ளைக்குப் பெண் கொடுத்த வேட்டகத்தார், அவர்களுக்கு பெண் கொடுத்தோர் என்று அனைவரின் பேஸ்புக் அக்கெளண்டுகளும் சேர்த்து தடைசெய்யப்படவேண்டும்.

ஃபேஸ்புக் மூலம் இவர்கள் பெற்ற நண்பர்கள் அவர்களது கணக்குகளும் தடைசெய்யப்படவேண்டும்.

இது என் ஸ்டேடஸ்க்கு லைக் அல்லது கொமெண்ட் பண்ணாத கூட்டத்திற்கு ஒரு எச்சரிக்கை....

இது உடனே நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இந்த தண்டனைகள் உடனே நிறைவேற்றப்படவேண்டும்

The citizenship of the all the acquits and the relatives should be canceled without mercy

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் ப்ரெண்ட போல யாரு மச்சான்...?

என் ப்ரெண்ட போல யாரு மச்சான்...?
என் ட்ரெண்டையெல்லாம் மாற்றி வச்சான்......

Remixxxxxxxxxxxxx..........

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
என் தூக்கத்தை தொலைய வெச்சான்
நீ எங்காச்சும் தொலஞ்சு போடா மச்சான்
என்னை நிம்மதியா இருக்க விடுடா மச்சான்
நட்பு பேசி ஆப்பு வெச்சான்
என் கண்ணில் நீர பொங்க வெச்சான்

தோழன் என்ற பெயரில் ஒரு சகுனியடி
அவன் தூரதில் வருகையில் வயிறு கலங்குதடி
என் வாழ்க்கையில் இப்படி ஒரு சனியடி
எப்படித்தான் வந்து சேர்ந்தானோ தெரியலடி

அவன் நட்பை நானும் பெற்றேன்
அதனாலே யாவும் இழந்தேன்
கீழே கீழே சென்றேன்
படு பாதாளத்தில் விழுந்தேன்

புது பாதை ஒன்றில் கூட்டி சென்றான்
ஆனால் பாதி வழியில் விட்டுச் சென்றான்

சனியனை பனியனில் போட்டவன் போலானேன்
அவன் வந்ததாலே நிம்மதி இழந்தேன்

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
என் தூக்கத்தை தொலைய வெச்சான்
நீ எங்காச்சும் தொலஞ்சு போடா மச்சான்
என்னை நிம்மதியா இருக்க விடுடா மச்சான்
நட்பு பேசி ஆப்பு வெச்சான்
என் கண்ணில் நீர பொங்க வெச்சான்

(ஆக்கமும் ஊக்கமும் : ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் அவர்கள்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஸ்னேகிதணைய் ஸ்னேகிதணைய் பணக்காற ஸ்னேகிதணைய்


No money No money
No honey No honey da…

நம்ம நிலம ரொம்ப மோசம்....
நிலம இப்படியே போனா..

அடுத்த வெள்ளிக்கிழம சில பல அதிரடியான முடிவுகள் எடுக்க வேண்டிவரும் அதனால இந்த உலகம் பல பின் விளைவுகள சந்திக்க நேரிடும் 
அதத் தவிர்க்கனும்னா இப்பவே என் அக்கெளண்ட்ல காசப் போட்டுடுங்க


******



இன்னைக்கு ஒரு கத சொல்றன்

எல்லோரும் : அரசன் கத வேண்டாம்
நான் :  அப்போ அரசிட கத
எல்லோரும் : ஆ.. சொல்லுங்க சொல்லுங்க
நான் : பார்ரா அரசின்னதும் எல்லாரும் வாயப் பொழக்குறத..?
ஒரு நாட்டுல ஒரு அரசியும் அரசனும் இருந்தாங்க. அவங்களுக்கு என்னை மாதிரியே அழகான இளவரசன். அவனுக்கு பக்கத்து நாட்டு இளவரசிய மணம் முடிச்சுக் கொடுத்தாங்க. அவங்களுக்கு அழகான பெண்பிள்ளை பிறந்தது. அவவ வளத்து பக்கத்து நாட்டு இளவரசனுக்கு மணம் முடிச்சுக் கொடுத்தாங்களா. அவங்களுக்கு அழகான மகன் பிறந்தான். அத அவங்க கஸ்ட்டப்பட்டு வளத்து அதுக்குப் பக்கத்து நாட்டு இளவரசிக்கு மணம் முடிச்சுக் கொடுத்தாங்க

எல்லோரும்: ஆஹ்…..

நான் : என்னப்பா இப்பதான் கதையே ஸ்டார்ட் அதுக்குள்ள கொட்டாவியா. சரி போய்த் தூங்குங்க மிச்சக் கதைய அப்புறம் சொல்றன்

                       ******


வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்..

REMIXxxx....

(FBல்) comment போட்டவன் comment ஐப் பெறுவான் like போட்டவன் like ஐப் பெறுவான்.

- புதுமொழிப் புலவர் அஹமட் சுஹைல் -


*********

தொழுதுவிட்டுப் பார்க்கிறேன்
(என்) செருப்பைக் காணவில்லை

தொழவந்தவன் எவனோ திருடிக்கொண்டு சென்றிருக்கிறான்
இல்லை இல்லை
திருடவந்தவன் எவனோ தொழுதுவிட்டுச் சென்றிருக்கிறான்.


******

நம்மா ஆளுங்க எல்லாம் வாங்க..

ஆ... ஆ... அவசரப்படாம, பதட்டப்படாம ,அமைதியா ,மெல்லமா வாங்க என்ன..

இன்னைக்கு பூரா நான் இங்கதான் இருப்பன்..
ஒன்னும் அவசரம் இல்ல பொறுமையா அடிகிடி பட்டுக்காம வாங்க.. சரியா..?



*******

அப்பு : குழந்தை ரொம்ம்ம்ப அழகா இருக்குதே?
சுப்பு : அவ அம்மா மாதிரி
அப்பு : குழந்தை அழகா சிரிக்குதே?
சுப்பு : அவ அம்மா மாதிரி
அப்பு : குழந்தை யார் கூப்பிட்டாலும் போகுதே?
சுப்பு : #$&% ^%$&* ^%#!@$

(சுட்டது...)


******

இவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?"

"நீதானடி சொன்னே... தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு."

(சுட்டது.......)

******



ஸ்னேகிதணைய் ஸ்னேகிதணைய்
பணக்காற ஸ்னேகிதணைய்
சின்னச் சின்னதாய் செலவு செய்ய
பணம் கொடு ஸ்னேகிதணைய்
இதே பணத்தை பணத்தை
இதே கடனை கடனை
வாழ்வு முடிவதற்குள் தருவேன் தருவேன்
வாழ்வு முடிவதற்குள் திருப்பித் தருவேன் தருவேன்

ஸ்னேகிதணைய் ஸ்னேகிதணைய்
பணக்காற ஸ்னேகிதணைய்
சின்னச் சின்னதாய் செலவு செய்ய
பணம் கொடு ஸ்னேகிதணைய்

( ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நாங்க அம்புட்டு ஃபேமஸ் ஆகிட்டோம்மா...?

பெருசா ஒன்னுமில்லீங்க.. என்னோட ஃபேஸ்புக் சுவர்ல நான் கிறுக்கியவைதாங்க....


**
மீன்காரன் கூவும் சத்தம்
மரக்கறி விற்கும் சத்தம்

சைக்கிள் பெல்லின் சங்கீதம்
சைக்கிளில் டபுள்ஸ் போகும் பேரின்பம்

நட்புகளின் நக்கல் பேச்சின் இம்சை
நட்புகளோடு ஊர் சுற்றும் சுகம்

ஹபாயா போட்டு தலை குனிந்து நடக்கும் பெண்கள்
மாலை நேர மைதானம்/லைப்ரரிக் கட்டுதரும் ஆறுதல்..

இரவு நேரக் கிழங்குக் கடை
ஓவராப் பசிச்சா கொத்து ரொட்டி

மாதம் ஒரு ”காலை”ச் சாப்பாடு
ஆற்றில் குளிக்கும் உற்சாகம்

இல்ல இவை இல்ல வெளிநாட்டில் இவை இல்ல.


**
தொண்டன் : தலைவரே எல்லாரும் நம்ம மேல செருப்பு வீசுராங்க வாங்க ஓடிடலாம்.

தலைவர் : இருடா இப்பதான் ஒரு புதுச்செருப்பு வந்திருக்கு அதுட சோடி செருப்பும் வரும் வரைக்கும் நின்னு பேசுவம். அது வந்த உடனே அதையும் எடுத்துட்டு ஓடிரலாம்..

**
பல்கலைக் கழகத்தில் ராகிங்கை (பகிடிவதையை) ஒழிப்போம் என்று கங்கனங்கட்டிய அரசாங்கம் அதில் குறித்தளவு வெற்றியும் கண்டது.

இப்போது அரசாங்கமே ராகிங்கை தமது பொறுப்பில் எடுத்துள்ளது. மாணவர்களை 3 வாரம் இராணுவ முகாமிலிட்டு அரசாங்கமே நேரடியாக மாணவர்களை ராகிங் செய்யப்போகிறது.

(ஒரே காமெடியா இல்ல...?)


**
எல்லோருக்கும் சொர்க்கத்துக்குச் செல்லும் ஆசை இருக்கிறது. 
ஆனால் யாருக்கும் மரணிப்பதற்கு விருப்பம் இல்லை.

**
பார்ரா..
நாங்க அம்புட்டு ஃபேமஸ் ஆகிட்டோம்மா...? காலங்காத்தாலையே ஜனாதிபதி நமக்கு மெசேஜ் அனுப்புறார்னா பாருங்களன்...

"Obata suba vesak Mangallayak Wewa
janadhipathi Mahinda Rajapaksa"

இவளவு நாளும் ஒபாமா, பான்கீமூன் அவங்ககிட்ட இருந்துதான் Call & Msg வந்துட்டு இருந்துது இப்போ இவரும் ஆரம்பிச்சாட்டாரு.

ஒரே கஸ்ட்டமப்பா...


**
ஓ மை கோர்ட்... கெம்பஸ்ல இருந்தவரைக்கும் நம்ம பொக்கெட் மணிக்கு பஞ்சமே இல்ல.. ஏதாச்சும் காரணத்த சொல்லி காசு வாங்கிடலாம். ஆனா ஊருக்கு வந்த பிறகு செம வரட்சி..
காசு கேட்டா வீட்ல இருக்கிற உனக்கு என்ன அடங்காத செலவுன்னு டயலாக் வேற..

இறைவா ஒரு தொழிலுக்கு போய் சம்பளம் எடுக்கும் வரை ஒரு நல்ல மனிசன எனக்கு ஸ்பொன்சராய் ஆக்குவாயாக.. இல்லன்னா ஒரு பணக்காரப் பையனாப் பாத்து எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் ஆக்குவாயாக.

**
எனக்கு ஒரு ரசிகை இப்படி கடிதம் அனுப்பியிருந்தாள்.

“நான் உங்களுக்காக எதையும் செய்யக் காத்திருக்கின்றேன். எதையும் என்றால்.. எதையும்...”

அதை நான் என் காதலியிடம் கொடுத்து இதற்கு நீயே பதிலனுப்பு என்று கூறினேன்.
அதற்கு அவள் இவ்வாறு பதிலனுப்பினாள்.

“ஏற்கனவே அவருக்காக எதையும் செய்ய நானொருத்தி காத்திருக்கிறேன். அதாவது எதையும் என்றால் எதையும்”

எப்புடி நம்மாளு?

**
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்

கொத்தடிமை கொத்தடிமைன்னு சொல்றாய்ங்களே.. அப்படின்னா யாரு பாஸ்?

கொத்து வாங்க காசில்லாம அடிமை வேல செய்றவிங்களா...??
இல்லன்னா சாப்பிட்ட கொத்துக்கு காசு குடுக்காம அடிமையா சிக்கினவிங்களா..?
அபடியும் இல்லன்னா..
உடம்பில் கொத்துகளைக் கட்டிக்கொண்டு அடிமை வேலை செய்றவிங்களா?
யாரு பாஸ்?

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எந்த போஸ்ட் போட்டார்க்கும் உய்வுண்டாம் ........



** எந்த போஸ்ட் போட்டார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
எண்ட சொந்த போஸ்ட்டை coppy பண்ணியவர்க்கு.

- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -






**நாங்கெல்லாம் நடுக் கடலிலையே ஹாயா நடந்து திரீரவிங்க..
எங்ககிட்ட போய் கடலுக்கு போறதுக்கு கப்பல் வேணுமா? தோணி வேணுமான்னு? கேட்டு அவமனாப்படுத்தப்புடாது...

போங்க தம்பி போங்க.. போய் பிடிச்ச மீன விக்கிற வழியப்பாருங்க..

(நல்லாக் கேக்குறாய்ங்கைய்யா டீட்டியலு)





**திருமணமான பெண்களைக் குறிக்கும் Mrs என்பதை தமிழ் படுத்தும் போது சிலர் “திருமதி” என்றும் சிலர் “திருவாட்டி” என்றும் பயன்படுத்துகிறார்களே..அது ஏன்?

திரு என்றால் கணவன் என்றும் பொருள்படும்.
“கணவனை மதிப்பவர்களை திருமதி” என்றும்
“கணவனை ஆட்டிப்படைப்பவர்களை திருவாட்டி”
என்றும் சொல்கிறார்கள்.

(எப்படித்தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ..?)





**தனி ஒரு மனிதனுக்கு Facebook Account இல்லை எனில்
ஜெகத்தினை எரித்திடுவோம்....

- புரட்சிக் கவிஞர் அஹமட் சுஹைல் -





**எங்க ஆத்தா
கரண்ட் கனெக்சன் எடுத்தா..
பைப்லைன் கனெக்சன் எடுத்தா
டெலிஃபோன் கனெக்சன் எடுத்தா

ஆனா ADSL கனெக்சன் எடுக்காம விட்டுப்புட்டாவே...?

ஒவ்வொரு நாளும் டொங்களுக்கு ரீ லோர்ட் பண்ணிப் பண்ணி என் சொத்துதான் அழியுது...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்







**வருக்கன் பலாப்பழத்தை தண்ட
மடியில் வளத்தாட்டி
சுள களத்தித் தின்னவந்தார் மச்சான்
வாய்க்கவில்லை போறாருகா!

(அவனுக்கு தனது மச்சி மீது ஓர் ஆசை. ஆசையை நிறைவேற்ற எண்ணி மச்சியின் வீட்டிற்கு செல்கிறான் அவன்.
அதற்கு இடம் கொடுக்கவில்லை அவள். பாவம் அவன் ஏமாந்து திரும்பிச் செல்வதைப் பார்த்து அவள் நையாண்டி செய்வதே இப்பாடல்.
இதில் ”வருக்கன் பலாப்பழமாக” அவள் உருவகிக்கப்படுகின்றாள். ”சுளை” என்பது கற்பு.) >எங்கள் பிரதேச நாட்டார் பாடல்களில் ஒன்று<





**கண்டியிலே ஒரு பொண்டாட்டி அந்தக்
கரவாகுல ஒரு வைப்பாட்டி
நானும் ஒரு பொண்டாட்டி இந்த
நாசமத்துப் போவானுக்கு!

(இன்னுமொரு நாட்டார் பாடல்)







**ஈ மெயில் அனுப்புற காலமிது நீங்க புறாவுக்கு ஓலை கட்டி அனுப்ப சொல்றீங்க..
டிஜிட்டல் இசை கேற்கும் எங்கள நீங்க க்ராமஃபோன் இசைத்தட்டு கேக்க சொல்றீங்க..
டீ.ஜேஸ் கலக்குற காலத்துல நீங்க பாகவதர் கச்சேரி பண்ண சொல்றீங்க..

இது ஜெனரேசன் கேப்.. அது புரியாத ரேப்..

சரி கம தேவையில்ல வெஸ்டேர்ன் தேவையில்ல கர்நாட்டிக் தேவையில்ல...
இருக்கவே இருக்கு ”ரெப்பூ” மாப்பு போட்டுத்தாக்கு போட்டுத்தாக்கு நீதாண்டா டாப்பூ

(பிடித்த உள்ளூர் பாடலொன்றின் வரிகள்)


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நாங்களும் பெரிய்ய்ய்ய்ய கவிஞராக்கும்....


வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா

ரீமிக்ஸ்.


பழகியதை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
அவள் அனுப்பிவைத்த (காதல்) கடிதங்களைப் பாரடா கண்ணா

காதல் கொண்ட பெண்ணை இன்று காணோமே கண்ணா
காதலித்தவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா....?
என்னைக் காதலித்தவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா

இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி பழகச்சொல் கண்ணா
அவள் இல்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா
இந்த மூஞ்சுக்கு நான் கொஞ்சம் ஓவர்தான் கண்ணா
அதனால் பில்டப் காட்டாம பேசச் சொல் கண்ணா

- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -



அவள் பறந்து போனாளே 
எனை மறந்து போனாளே..
நான் பார்க்கும் போதே
பக்கத்து வீட்டுக்காரன் காரிலேறிப் போனாளே...

என்னிடம் காறில்லை
குறைந்தது பைக்கும் இல்லை
என் உழைப்புக்கு வாங்க முடியவில்லை
என் உழைப்புக்கு கார் வாங்க முடியவில்லை

அவள் பறந்து போனாளே 
எனை மறந்து போனாளே..
நான் பார்க்கும் போதே
பக்கத்து வீட்டுக்காரன் காரிலேறிப் போனாளே...

- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -


ஓடி விளையாடு பாப்பா
No NO we want Remix. 
ok start music

CityVille விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

உன் ஃபோட்டோவை பப்லிஸ் பண்ணு பாப்பா
அதை நக்கலடிச்சால் வைய்யாதே பாப்பா

காலை எழுந்தவுடன் Facebook-பின்பு
மகிழ்ச்சி கொடுக்கும் நல்ல wall போஸ்ட்
மாலை முழுதும் Chatting -என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -



”ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்..”
நோ நோ இது பழசு. ரீமிக்ஸ் வேணும்
ஓகே ஓகே

”ஃபேஸ்புக் வராமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவருக்கும் கொமெண்ட் பண்ணாமல் இருக்க வேண்டாம்
Like பண்ணும் நண்பர்களை மறக்க வேண்டாம்
கொமெண்ட் பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம்.”

- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -


உசுரே போகுதே உசுரே போகுதே
Exam பேப்பர நீ கொண்டு தருகையில
நானும் படிக்குறன்
எழுதித்தான் பாக்குறன்.. 
Timeக்குள் எழுத முடியலயே...

Lecturer ஆக நீ(ங்க) இருந்தும் என் நிலை உங்களுக்கு புரிய்லயா
கஸ்ட்டமான பாடமென்டு தெரிஞ்சிருந்தும் டைம்ம குறக்கீங்களே அறிவில்லையா...?

(இது நமக்குள்ளையே இருக்கட்டும். Lecturer கிட்ட போட்டுக் குடுத்துடப்படாது)
- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -


எங்க ஆத்தா
கரண்ட் கனெக்சன் எடுத்தா..
பைப்லைன் கனெக்சன் எடுத்தா
டெலிஃபோன் கனெக்சன் எடுத்தா
ஆனா ADSL கனெக்சன் எடுக்காம விட்டுப்புட்டாவே...?

(ஒவ்வொரு நாளும் டொங்களுக்கு ரீ லோர்ட் பண்ணிப் பண்ணி என் சொத்துதான் அழியுது...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

-சுஹைல்-

இன்னும் வரும்...


நான் என்ன சொல்றேன்னா :
நோ நோ அப்படியெல்லாம் அக்கினிப் பார்வைய நம்ம மேல பாய்ச்சப்புடாது.

இதெல்லாம் நாங்க எங்க ஃபேஸ்புக் சுவர்ல(Wall) கிறுக்கின ரீமிக்ஸ்ஸுங்க... நம்ம ஃபேஸ்புக் நண்பர்கள் லைக் போட்டு கொமெண்ட் போட்டுத்தாக்கின இத நம்ம பதிவுலக நண்பர்களோடையும் பகிர்ந்துக்குவோமேன்னு ஒரு ஐடியா வந்துச்சுங்க.. அதனாலதான் இது...
இன்னும் வரும்...

உங்களுக் பிடிச்சிருந்தா... பிடிச்சிருக்கும் So வோட்ட கொமெண்ட பாத்துப் போட்டுக் கொடுங்க


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS