RSS

வானொலிக் குயில் விருது விழா



கடந்த சனிக்கிழமை(24/10/2009) colombo elfinston மண்டபத்தில் நடைபெற்ற அக்னியின் விருது வழங்கும் விழாவில்
இலங்கையின் மூத்த அறிவிப்பாளரும் வானொலிக் குயிலுமாகிய திருமதி ராஜேஷ்வரி சண்முகம் அம்மா அவர்களின்  கரங்களால் வானொலிக் குயில் என்னும் பட்டத்தினை நான் பெற்றதினை இட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.







என் தாய் தந்தையர்,என் சகோதரர்கள், குடும்பத்தினர், நண்பர்களோடு புகழ் பூத்த அறிவிப்பாளர்களான லோசன் அண்ணா, நவநீதன் அண்ணா, நடராஜசிவம் ஐய்யா,மற்றும் முன்னணி அறிவிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் அவையோர்கள் முன்னிலையில் அவர்களின் வாழ்த்துக்களோடு இவ்விருதினை நான் பெற்ற போது நான் அடைந்த மகிழ்ச்சியை என்னால் விபரிக்கவே முடியாது.



எல்லாப் புகழும் என்னைப் படைத்து பரிபாலித்து காத்தருளும் Allahவுக்கே!
என் திறமையையும், ஆர்வத்தையும் கண்டு எனக்கு ஆதரவு தந்து ஊக்குவித்த பெற்றோருக்கே இவ்விருது சமர்ப்பணம்,
என்னை அக்னிக்கு அறிமுகப்படுத்திய நண்பன் மோகனுக்கும், எனக்கு வாய்ப்பளித்த வசந் அண்ணா, நிஷா அக்காவிற்கும், என் இனிய நண்பர்கள் திவா, ரதினி, தாரனி மற்றும் அனைத்து அக்னி நண்பர்களுக்கும், எனக்கு உதவிய பாசித், கே.எம்.பெளசான் உட்பட எல்லா நண்பர்களுக்கும் விசேடமாக சரா (சிவசுப்ரமணியம் சரவணபவன்)அண்ணாவுக்கும் என் கோடான கோடி நன்றிகள்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS