RSS
காமடிங்கன்னா.... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமடிங்கன்னா.... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெருநாள் காசு இல்லனா.. அன்பாச் சொல்லிட்டு அனுப்பிடவேண்டியதுதானே.. அதுதானேய்யா ஒலக வழக்கம்


நான் சுத்தி வழைச்சுப் பேச விரும்பல
சம்பந்தப்பட்டவங்களப் பார்த்து நேரடியாவே கேக்குறன்..
பெருநாள் கொண்டாடுறீங்களா? இல்ல அராஜகம் பண்றீங்களா..?
என்ன பண்ணினான் அந்தப் பையன்? என்னையா தப்பு பண்ணீனான்?
ஏதோ ஆர்வக் கோளாறுல பெருநாள் காசு கேட்டுட்டான்...
பெருநாள் காசு இல்லனா.. சாரி காசு இல்லன்னு அன்பாச் சொல்லிட்டு அனுப்பிடவேண்டியதுதானே..
அதுதானேய்யா ஒலக வழக்கம்.
அத விட்டுப் போட்டு அம்பது பேர் முன்னாடி இந்த வயசுலையும் பெருநாள் காசு கேக்குறார்னு சொல்லி அசிங்கப்படுத்திருக்க நீயி…..
அட அசிங்கப்படுத்தினாலும் பரவால்லையா… போறவாற சின்னப் பிள்ளைங்களையெல்லாம் கூப்பிட்டு அங்கிள் கிட்ட பெருநாள் காசு கேளுங்கடான்னு கடுப்பேத்தியிருக்க நீயி...
அம்புட்டு பசங்களுக்கு பெருநாள் காசு கொடுக்குறதுக்கு இது என்ன கவர்மெண்ட் கஜானாவா இல்ல ஒலக வங்கியா?
ஏதோ அந்தப் பையன் பாடியில அவன் வீட்ல சாப்பிட்ட பலகாரம், மஸ்கட் தந்த எனர்ஜி இருந்ததனால அவன் ஓடி எஸ்கேப் ஆகிருக்கான்யா….
அப்டில்லாம அந்தப் பசங்க கிட்ட மாட்டி காசப் பறிகொடுத்திருந்தா அவன் dongle ற்கு யாரு ரீலோர்ட் பண்றது அவன் ஃபேஸ்புக் அக்கெளண்ட யாரு மெயிண்டைன் பன்றது…?
இவ்வளவு ஏன் முந்த நாள் கூட இப்டி ஒரு சம்பவம் நடந்துது.
இதே பையன் இன்னொரு சொந்தக்காரன் வீட்ட போய் பெருநாள் காசு கேட்டான்யா…
ஆனா அந்த சொந்தக்காரங்க அந்தப் பையன உன்னைய மாதிரி இம்புட்டு அசிங்கப்படுத்தல்ல..
ஒரு ஒரு மணிநேரம் ஆறுதலாப் பேசிட்டு அனுப்பிருக்காங்கையா
அதுவும் எப்டி பிள்ளைக்கு மனம் நோகக் கூடாதுங்குறதுக்காக ஃபலூடா, ஐஸ்கிறீம், அப்பிள், ஒரேஞ்னு வெராய்டி வெராய்டியா கொடுத்துட்டு. அப்புறம் பெருநாள் காசு இல்லனு நாசூக்கா சொல்லி அனுப்பிருக்காய்ங்கை..
அந்த நாகரீகம் கூட தெரியாது உனக்கு…..?
எப்டியெல்லாம் அசிங்கப்படுத்திப்போட்ட…
ஒரு பச்சத் தண்ணி கூட கொடுக்காம திருப்பி அனுப்பிருக்க நீயி…
எப்படியெல்லாம் கேட்டுப் பார்த்தான் அவன்…
கடைசிவரை ஒன்னுமே கொடுக்காம அனுப்பிருக்க..
இரக்கமில்லையா உனக்கு….?
(யாவும் கலப்படமற்ற கற்பனை )

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஐ.நா வே வந்தாலும் உன்னை ஒன்னும் பண்ண முடியாதுடா

---- சும்மா லொலலாயி................---

இலங்கையில் ஆட்கடத்தல் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு விசாரிக்க இலங்கை வந்திருக்கு. நம்ம மன்னர், ரணில், மங்கள உட்பட எல்லோரும் பஞ்சாயத்துக்கு வந்திருக்காங்க... மகனைத் தொலைத்த கோபாலுவிடம் விசாரணை

**** பஞ்சாயத்து ஆரம்பம். ***

ஆணைக் குழு தலைவர் : கோபாலு உன் பேச்சக் கேட்டுதான் பஞ்சாயத்தக் கூட்டிருக்கம் உன் பையன யாரு கடத்தினன்னு சொல்லு அதுக்குரிய தண்டனையக் குடுத்துடுவம்

கோபாலு : அது வந்துங்க......

மகி : டேய் குர்ரா குர்ரா… ஏகே 47அ. ஏகே 47 இப்ப தேவப்படாது தேவப்பட்டா பின்னாடி வாங்கிக்குறன். எதுக்கும் லோர்ட் பண்ணி வெச்சிக்க..

மங்கள : தலைவரே இதமாதிரி நிறைய ஆளுங்க காணாம போயிருக்காங்க. கடத்தல் காறனுகள எப்டியாவது கண்டுபிடிச்சு தூக்கில போடனும்

மகி : (ஆஹா மகிந்தா ஒவ்வொருத்தனும் இருக்குற வேகத்தப் பார்த்தா உன் அரும பெருமைக்கு ஆபத்து வந்துடுப் போல இருக்குடா…. ரொம்பக் கவனமா டீல் பண்ணி ஆட்டத்தக் கலச்சிடு ராசா)
ஆ….. ஆ.. பஞ்சாயத்து நடக்கட்டும் பஞ்சாயத்து நடக்கட்டும்… யாரா இருந்தாலும் தைரியமா சொல்லப்பா நீயி… பயப்புடாத….. ம்ம்ம்ம்ம்ம் பயப்புடாதடா…………

தலைவர் :ஏண்டா தயங்குற தைரியமா சொல்லுடா

மகி : சொல்லு நீதான் தைரியமான ஆளாச்சே சொல்லு.. ம்ம்ம்.... சொல்றா…..

தலைவர் : இதுக்குப் போயி ஏண்டா பயப்புர்ர சொல்றா

மகி: அட என்ன பெருசு வெவரமில்லாம பேசிட்டு இருக்க… நம்ம ஊர்க்காரங்க குணம் தெரியாம பேசிட்டு இருக்க…. இன்னார்தான்னு கோபாலு சொன்னான்னா பின்னால ஏதும் பிரச்சின வரும்னு யோசிக்கிறான் அவன் இல்லடா கோபாலு…? அப்டித்தானே….??

தலைவர் : என்னடா கோயில் மாடுமாதிரி தலையாட்டுற பயப்புடாம சொல்லுடா

ரணில் :
தலைவரே நான் என்ன நினைக்குறன்னா…

மகி: டேய் நீ என்ன நினைக்குறது…? அவன் நினைக்கவேணாம அவன் பொண்டாட்டி பிள்ளைங்க பற்றி என்னமோ நெனைக்குறன் நொனைக்குறண்டுட்டிருக்க…..

ரணில் : அப்ப பஞ்சாயத்துல நான் ஒன்னும் சொல்லக்கூடாதா….?

மகி : சொல்லக்கூடாதுடா சொல்லக் கூடாது உனக்கு சொல்ல உரிமை கிடையாது… நீ பாட்டுக்கு ஏதாவது சொல்லிட்டுப் போயிட்டேன்னா அனுபவிக்கிறது யாரு…. ப…. ப்ப்பாஅ அவந்தானே நீ பஞ்சாயத்துல உக்காந்து கிழிச்சது போதும் போடா போ….. பெரிய மனுசங்க பேசுறப்போ பேசின குத்திடுவன்.. நீங்க பேசுங்க பெருசு.. என்னடா மொறப்பு அவன் அவன் கஸ்ட்டம் அவ அவனுக்குத்தானேடா தெரியும்….

தலைவர் : ஏண்டா பயப்புர்ரா…..

மகி : அட என்ன தலைவரே….கோபாலு என்னைமாதிரி தைரியமான ஆளா இருந்தாலும் பரவால்ல கொஞ்சம் பயந்தவந்தானே…. ஏற்கனவே நம்ம ஊர்ல ஒரு அம்மாவும் பிள்ளையும் அண்ணன காணம் அவன ராணுவம்தான் கடத்தினன்னு சொன்னப்போ நம்ம பசங்க வீடு பூந்து அம்மாவையும் மகளையும் தூக்கி அம்மாவ ஒரு ஜெயில்லையும் மகள இன்னொரு ஜெயில்லையும் போட்டாங்களா இல்லையா…? அதெல்லாம் இவன் கண்முன்னாடி வந்து போகுமா இல்லையா…. பயப்புடதானே செய்வான்… லேசு வாக்குல கேளுங்க சொன்னா சொல்லட்டும் சொல்லலன்னா உட்ருவம்….

மங்கள : தயங்காம சொல்லுப்பா நாங்க இருக்கமில….

மகி : நீ இருப்பயா அவன் இருக்க வேணாமா….?

தலைவர் : டேய் மகி நீ தேவையில்லாம குறுக்க குறுக்க பேசுற

மகி : சம்பந்தப்பட்டவன் நாந்தான்யா பேச முடியும் அவனுக்குன்னு வேற யாரு இருக்கா….?

ரணில் : மகி வந்ததுல இருந்து நானும் பாத்துட்டு இருக்கன்… நீயே பேசிட்டு இருக்க அவனையும் பேச விடுய்யா….

மகி : எப்பிர்ரா பேசுவான் எப்பிடி பேசுவான். நீங்களே ஆளாளுக்கு பேசிட்டிருந்தா அவன் எப்பிர்ரா பேசுவான் நாய்களா…? நீங்கெல்லாம் இன்னைக்கு பஞ்சாயத்த முடிச்சிட்டு கெளம்பிடுவீங்கடா… அப்புறம் அவன் தனியாதானே இந்த ஊருக்க சுத்தனும். அவனுக்கும் அவன் உசிருக்கும் என்னடா உத்தரவாதம் இருக்கு…?

தலைவர் : டேய் மகி வந்ததுலிருந்து நானும் பாத்துட்டு இருக்கன் நீயே குறுக்க குறுக்கப் பேசிட்டு இருக்க. பஞ்சாயத்து தலைவர் நான் இருக்கன் நீயார்ரா குறுக்க குறுக்கப் பேசுறதுக்கு… அடிச்சா மீசப் பிச்சிக்கிட்டுப் போயிரும். உக்கார்ரா சும்மா.. கோபாலு நீ சொல்றா….

கோபாலு : ஐயா அது வேற யாருமில்லிங்க ….

மகி : பாத்தீங்களாய்யா இன்னும் சொல்றானில்ல பாத்தீங்களாய்யா… ஐய்யா…. குர்ரா அந்த AK47 இவன இங்கையே சுட்டுப் போட்டுர்ரன்… பெரிய மனிசன் காலையில இருந்து கேட்டுட்டு இருக்கீங்க சொல்றானா அவன்.... விடுங்கைய்யா…. டேய் சொல்றா சொல்றா நீயி சொல்றா….சரியான ஆளா இருந்தா சொல்றா…. இவளவு நேரமா கேட்டுட்டு இருக்கம் சொல்றானா பாருங்க...அயோக்கியப் பயல ராஸ்கல்….

தலைவர் : இர்ரா இர்ரா நான் கேக்குறன் நீ இர்ரா…. சொல்லித் தொலையேண்டா….

கோபாலு : ஐய்ய்ய்யா........என் பையன கடத்தினது யாருன்னு தெரியல.. யாரோ கடத்துற மாதிரி கனவு கண்டன்…. பஞ்சாயத்து கூட்டினது எனது தப்பு மன்னிச்சிடுங்க……

மகி : ஆ… போ… போ…. அவனே கடத்தினது யாருன்னு தெரியலன்னுட்டான் போ போ எந்திரிச்சுப் போ... பஞ்சாயத்துன்னா உடனே கூட்டத்தப் போட்டுர்ரது… போ போய் சோத்தப் பொங்கி கொழம்பு வெச்சு சாப்பிடுட்டு வேலையப் பாரு..ஊட்டுல யாரும் காணாமப் போனா யார்டையும் சொல்லிக் கேவலப்படாம என்கிட்ட சொல்லுங்கடா.. ஆ ஊன்னா கூடிர்ரது….

** ஐ.நா வே வந்தாலும் உன்னை ஒன்னும் பண்ண முடியாதுடா மகிந்தா இப்பிடியே மெயிண்டைன் பண்ணு… ஆ.. போ…. போ…




(கதை திரைக்கதை திரைக்குப் பின்னால் கதை உல்டா ரீமேக்கியது எல்லாம் - அஹமட் சுஹைல் .)

 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்டுபிடிச்சிட்டன் நான் கண்டு பிடிச்சிட்டன்

கண்டுபிடிச்சிட்டன் நான் கண்டுபிடிச்சிட்டன் காணமல் போன மலேசிய விமானத்த ஏன் இன்னும் கண்டுபிடிக்கல்ல எண்ட மேட்டர நான் கண்டுபிடிச்சிட்டன்...

இந்த ஃபோட்டோவ பாருங்க


விமானத்த தேடிட்டு இருக்கும் மலேசிய விமானப் படை வீர வீராங்கணைகளப் பாருங்க... கண்ணுக்கு விளக்கெணைய விட்டுக்கிட்டு சீரியஸா விமானத்தத் தேடாம இந்த விளக்கெண்ணைங்க ஜொல்ஸ் பண்ணிக்கிட்டு இருக்குதுக.. இப்டி இருந்தா எப்டி விமானத்தக் கண்டுபிடிக்கிறது...?

அதனால மலேசியப் பிரதமருக்கு நான் என்ன சொல்றன் எண்டால்
1. பொண்ணுங்களையும் பசங்களையும் சேர்ந்து தேடவிடாம தனித்தனியா தேட அனுப்புங்க. (இல்லன்னா தேடுற டைம்ல இப்டி ஜொல்ஸ் விட்டுட்டு விமானத்த எங்காச்சும் காட்டுக்குள்ள பார்க் பண்ணிட்டு புதருக்குள்ள இதுக ஒதுங்கிடும்)

2. இந்த மாதிரி எந்தெந்த ஏரியால பொண்ணுங்களும் பசங்களும் சேர்ந்து தேடுதல்ல ஈடுபட்டிச்சிகளோ அங்க திரும்ப வேற குரூப்ப தேட விடுங்க.... (ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்த கேப்ல விமானத்த கவனிக்காம மிஸ்பண்ணிருக்கலாம்)

மலேசியப் பிரதமரின் கவனத்திற்கு (அவருக்கு விளங்கணும் எண்டதுக்காக மலே மொழியிலையும் ட்ரான்ஸ்லேட் பண்ணிருக்கன்)

Jadi apa yang saya colran Akhir Perdana Menteri Malaysia
1. Menghantar kanak-kanak lelaki untuk mencari tetavitama gadis itu secara berasingan. ( Di mana lagi anda mencari taimla ipti jols taman liar di suatu tempat dan mempunyai putaruk vimanatta meninggalkan mengetepikan ituka yang )

2. Kanak-kanak lelaki seperti gadis-gadis dengan apa eriyala tetutalla itupatticcikalo lagi ke sana .... Mari carian kuruppa ( Romantik dan perasan kepla vimanatta )

 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஏன் தம்பி….? MH370 ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியா…?

விமானம் கடத்தப்பட்டது தொடர்பில் மலேசிய அரசாங்கம் தனக்குத் தெரிந்த உண்மை விடையங்களை மறைப்பதாக சீனாவுக்கு சந்தேகம்… இதனை நேரில் விசாரிக்க ஐ.நா சபையில் பான்கீமூன் தலைமையில் பஞ்சாயத்து நடத்துறாய்ங்க. ஏகப்பட்ட கேள்விகளால கடுப்படைந்த நிலையில மலேசியப் பிரதமர் விசாரனைக்குப் போறாரு

பான் கீ மூன் : என்ன பிரச்சின?

சீனப் பிரதமர் : பிளைட்ட காணாம ஆக்கிட்டு 10 நாள் ஆச்சு அவங்களுக்கு எதுவுமே தெரியாதுங்குறாங்க… ஆனா அவங்க உண்மைய கண்டுபிடிச்சிட்டு சொல்ல மாட்டேங்குறாங்க

பான் கீ மூன் : ஏற்கனவே ஆயிரம் பிரச்சின அதுல இது வேறையா…? ஏப்பா தம்பி அந்த ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியா….?

மலேசியப் பிரதமர் : என்ன கண்டுபிடிச்சிட்டியா….?

பான் கீ மூன் : ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியாப்பா…?

மலேசியப் பிரதமர் : என்ன கண்டுபிடிச்சிட்டியாப்பா….?

பான் கீ மூன் : ஏன் தம்பி….? MH370 ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியா…?

மலேசியப் பிரதமர் : என்ன ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியா…?

பான் கீ மூன் : ஏற்கனவே பத்துநாளுக்கு மேலாச்சு…..

மலேசியப் பிரதமர் : என்ன பத்துநாளுக்கு மேலாச்சு…..?

பான் கீ மூன் : ஏய்யா நான் சரியாப் பேசுறனா…?

சீனப் பிரதமர் : சரியாத்தான் தலைவரே பேசுறீங்க…

பான் கீ மூன் : இப்ப பத்து நாளுக்கு மேல ஆயிட்டதால பெரிய பிரச்சினை வரும்…

மலேசியப் பிரதமர் : என்ன பிரச்சினை வரும்…?

பான் கீ மூன் : ஏய்யா நான் சரியாத்தானே பேசுறன்...?

ரஷ்யப் பிரதமர் : ரொம்பக் கரெக்டு….

பான் கீ மூன் : கரெக்டு…. பிரச்சினைய விட்ரு..

மலேசியப் பிரதமர் : என்ன பிரச்சினைய விட்ரு..?

பான் கீ மூன் : ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியா…?

மலேசியப் பிரதமர் : என்ன கண்டுபிடிச்சிட்டியாப்பா….?

பான் கீ மூன் : ஏய்ய்ய்ய்ய்… என்னைய்யா பேசுறான் அவன்…

சீனப் பிரதமர் : ஐய்யா அவன் சரியான கல்லூரி மங்கன் புரியும்படியா கேப்பில்லாம பேசுங்க…

மலேசியப் பிரதமர் : என்ன கேப்பில்லாம பேசுங்க…?

பான் கீ மூன் : ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியாடா…?

மலேசியப் பிரதமர் : என்ன ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியாடா…?

பான் கீ மூன் : ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியா…?

மலேசியப் பிரதமர் : என்ன ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியா

பான் கீ மூன் : ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியாடா..?

மலேசியப் பிரதமர் : என்ன ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியாடா…?

பான் கீ மூன் : இந்த மாதிரி மொள்ளமாரிப் பயலுக்கெல்லாம் பஞ்சாயத்துப் பண்ணக் கூப்பிடாதீங்க.. மனிசனா இவன்…

மலேசியப் பிரதமர் : என்ன மனிசனா இவன்?

பான் கீ மூன் : டேய்ய்ய்…

சீனப் பிரதமர் : ஐய்யா…
கோவப்படாதீங்க

பான் கீ மூன் : என்ன
கோவப்படாதீங்க

சீனப் பிரதமர் : பொறுமையா இருங்க

பான் கீ மூன் : என்ன பொறுமையா இருங்க?

சீனப் பிரதமர் : வீட்டுக்குப் போங்க

பான் கீ மூன் : என்ன வீட்டுக்குப் போங்க…?

சீனப் பிரதமர் : ஐய்யா

பான் கீ மூன் : என்ன ஐய்யா….
என்ன ஐயய்யா

சீனப் பிரதமர் : ஆஹா தலைவரே குழம்பிட்டாரே…
நோக்கு சந்தோசம்தானே நல்லா இருந்த மனிசனா இப்டிப் பன்னிட்டுயே…

மலேசியப் பிரதமர் : என்ன இப்டிப் பன்னிட்டுயே…?

சீனப் பிரதமர் : திரும்பத் திரும்ப பேசுற நீ

மலேசியப் பிரதமர் : என்ன திரும்பத் திரும்ப பேசுற நீ?

சீனப் பிரதமர் : திரும்பத் திரும்ப பேசுற நீ
திரும்பத் திரும்ப பேசுற நீ
திரும்பத் திரும்ப பேசுற நீ

ரஷ்யப் பிரதமர் : ஏப்பா… தலைவரு தப்பிச்சிட்டாரு சீனா போயெ போய்டே…

மலேசியப் பிரதமர் : என்ன போயே போய்டே…

(ஐ.நா பஞ்சாயத்துக்கு வந்த அம்புட்டுப்பேரும் மயங்கி விழுந்துட்டாய்ங்க..

ஙொஙொய்யால இனி எவனாவது என்கிட்ட ப்ளைட் எங்கன்னு கேப்பீங்க மலேசியப் பிரதமர் கம்பீரமா வெளியில போறார்...)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என்ன ஒரு வில்லத்தனம்........

பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட நாடகப் போட்டி.

அந்தப் பாடசாலை மாணவர்கள் நான்கு ஐந்து தடவைகள் ஒத்திகை பார்த்தபின் சிறப்பாக தமது நாடகத்தை மேடையில் நடத்திக்கொண்டிருந்தனர். அதில் ஒரு காட்சி அயல் வீட்டவர்கள் இருவர் குப்பை கொட்டுவது தொடர்பாக வாக்குவாதப்படுவது போன்றதொரு காட்சி...

வாக்குவாதம் உக்கிரமடைந்து சென்றுகொண்டிருக்கின்றது. அதில் ஒரு மாணவன் சண்டையின் உச்சக்கட்டத்தில் அடுத்து பேச வேண்டிய வசனங்களை மறந்துவிட்டான். அந்த வசனங்கள் கோபாவேசத்துடன் பேசப்படவேண்டிய வசனங்கள் துரதிஸ்ட்ட வசமாக அவனுக்கு அது மறந்துபோய்விட்டது.
அதனை சமாளிப்பதற்காக தனக்குத் தெரிந்த தூசண வார்த்தைகளையா கலந்து பேசுவது...?? இதில் மற்றயவனின் தாயை இழுத்து வேறு பேசிவிட்டான்.

மற்றவன் சும்மா விடுவானா அவன் மாறி இவனுக்கும், இவனது தாய்க்கும் தூசண வார்த்தைகளால் ஏசிவிட்டான். சண்டை உக்கிரமடைந்து செல்கின்றது. ஏனைய பாடசாலை ஆசிரியர்கள் அதிர்ச்சியுடன் தலையில் கைவைத்தபடி மற்ற மாணவர்கள் விழுந்து விழுந்து சிரித்தபடி

நிலைமைய உணர்ந்த நாடகம் நடித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சுதாகரித்துக்கொண்டு ஒருவாறு தமது நாடகத்தை முடித்துவிட்டு கீழே இறங்கிவிட்டனர்.

பலத்த சர்ச்சை, விமர்சனங்களின் பின்னர் மாணவர்கள் மீண்டும் மேடையேறி “நாடகத்தை யதார்த்தபூர்வமாக நடிக்கவேண்டும் என்பதற்காக சில தகாத வார்த்தைகளைப் பேசிவிட்டோம் இதற்காக அனைவரிடத்திலும் மன்னிப்புக் கோருகின்றோம்” என்று மன்னிப்புக்கோரியதன் பின்னர்தான் விடயம் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்ததாம்.

(எனது பாடசாலை சக ஆசிரியர் ஒருவர் தான் முன்னர் கற்பித்த பாடசாலையில் தனக்கு நடந்த சம்பவம்பற்றிக் கூறி நான் வயிறு வலிக்கச் சிரித்த ஒரு கதை)

 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அந்தப் பொண்ணு காதலில் விழுந்துவிட்டாள்

குடும்பத்தோட எல்லாரும் வெளிய போகும் போது “நீங்கெல்லாம் போங்க எனக்கு தலை வலிக்குது நான் வரல்ல” என்று ஒரு பொண்ணு சொன்னாலோ

வீட்டிற்கு சொந்த பந்தங்கள் எல்லாம் வந்து வீடு கலகலப்பாக இருக்கும் போது ஒரு பொண்ணு தன் ரூமிட்குள் ஒதுங்கிக் கொண்டாலோ அல்லது ரூமிட்குள் அடிக்கடி சென்று வந்தாலோ

குடும்பத்தோடு வாகனத்தில் வெளியில் செல்கையில் ஒரு பொண்ணு பின் சீட்டில் அதுவும் கோணர் சீட்டில் உட்கார்ந்து ஃபோனை நோண்டிக்கொண்டிருந்தாலோ

பயணங்களின் போது தன் ஃபோனை அடிக்கடி கீபேட் ஒன் பண்ணி பார்த்தாலோ அல்லது ஹேண்ட் பேக்கில் உள்ள ஃபோனை அடிக்கடி வெளியில எடுத்து எடுத்து பார்த்தாலோ...

நேரகாலத்தோடு இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு தன் ரூமிட்குள் சென்று ஒரு பொண்ணு கதவை மூடிக்கொண்டாலோ

வீட்டிற்கு உறவினர்கள் வந்திருக்கும் போது தன் வயதை ஒத்த பெண்ணோடு ரூமிட்குள் சென்று ஒரு பொண்ணு ரகசியமா பேசிக்கொண்டிருந்தாலோ

ஃபோன் இன்பொக்ஸிலுள்ள, out box இலுள்ள மெசேஜ்களை ஒரு பொண்ணு அடிக்கடி டிலீட் பண்ணி விட்டாலோ

குடும்பத்தினரோடோ அல்லது நண்பர்களோடோ அதிக நேரம் செலவிடாமல் அடிக்கடி தனிமையை நாடினாலோ அல்லது உறவினர்களோடு அதிக நேரம் செலவிட நேர்ந்தால் அசெளகரியமாக காணப்பட்டாலோ

”அந்தப் பொண்ணு காதலில் விழுந்துவிட்டாள்” என்றும் 2 Side Love கரைபுரண்டு ஓடுது என்றும் அர்த்தம்...

--- ஆய்வு : பேராசிரியர் சுஹைல் ----

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவனுங்கள நிறுத்தச்சொல் நானும் நிறுத்துறன்.


நண்பன் : விட்ருடா இந்த ஃபேஸ்புக்க விட்டுடு

நான் : செத்துருவண்டா விட்டா செத்துடுவன்

நண்பன் : அப்போ நீ கடைசிவரைக்கும் இப்படித்தான் இருக்கப்போறியா? நிறுத்தவே மாட்டியா?

நான் : நிறுத்துறன் ஆனா அவங்களையெல்லாம் நிறுத்த சொல் நானும் நிறுத்துறன்

நண்பன் : யார?

நான் : எல்லாரையும்

நண்பன் : யார??????????????

நான் : நான் போடுற ஸ்டேடஸ் நல்லா இருந்தாக் கூட (எப்பவாச்சும் ஒரு நாளைக்கு நல்லா இருக்கும்) வந்து நக்கலா கொமெண்ட் பண்ணிப் போறானே...
 அவன நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறன்.

அப்பாவிப் பையன் (நாந்தான்) என் ஃபோட்டோவ ஃபேஸ்புக்ல போட்டதும் மெசேஜ்ல சூப்பரா இருக்குனு சொல்லிட்டு கொமெண்ட்ல வந்து நக்கலடிக்கானே...
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

கிட்னியையும் மூளையையும் பாவிச்சு கஸ்ட்டப்பட்டு ஒரு ஸ்டேடஸ் யோசிச்சு போட்டா அதக் கொப்பியடிச்சு அவண்ட சொந்த போஸ்ட் மாதிரிப் போர்ரானே துரோகி...
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

விடிய விடிய ஒன்லைன் இருந்துட்டு நம்ம கூட பேசமா பொண்ணுங்ககூட கடல போட்டுட்டு காலையில கேட்டா இல்ல மச்சான் ஒன்லைன்ல போட்டுட்டு அப்டியே தூங்கிட்டண்டானு பொய்யா அள்ளி விடுறான் பார்.....
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

நாம ஒன்லைன் இருக்கும்வரை ஒழிஞ்சு இருந்துட்டு; நாம ஓஃப்லைன் போனபிறகு ஓடிவந்து நம்ம ஏரியால நமக்கு எதிரா கொமெண்ட் போறானே....
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

English சொல் ஒண்ணுக்கு கூட ஸ்பெலிங் தெரியாம இங்லிஸ்ல Status/Comment போட்டுட்டு கேட்டா அது Face book English, shortcuts அப்படின்னு பீடர் விடுவானே... அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

பக்கத்து தெருவில இருக்குற பெட்டிக் கடைக்குப் போய் சவர்க்காரம் வாங்கினாக் கூட Status I went  shopping. Sooo Tired  னு Status போட்டு படம் காட்டுறானே....
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

பக்கத்து கட்டில்ல படுத்துக்கிட்டே மச்சான் I miss you. Where are you da னு ஸ்டேடஸ் போட்டு கடுப்பேத்துவானே ரூம் மேட்.....
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

நாம என்னதான் போஸ்ட் போட்டாலும் ஒரு லைக் கூட பண்ணாம ஒரு பொண்ணு ஹாய் னு போட்டாக் கூட முதல் ஆளாப் போய் லைக் பண்ணி ஹாய் டியர்னு ஒரு கொமெண்டும் போட்டுட்டு வர்ரானே.....
அவன நிறுத்தச்சொல் நான் நிறுத்துறன்
.

நமக்கு ஒரு மேஜர் ஒப்ரேசன் இருந்து அதை ஒரு ஸ்டேடஸா போட்டாலும் அந்த ஸ்டேடசை ஸ்கிப் பண்ணிட்டு "ltl cold" னு போட்டிருக்கிற ஒரு பொண்ணு ஸ்டேடஸ்க்கு போய் “ so sad, get well soon, tc dear " நு பாசத்த பொழியுறானே பாசக்காறன் ......
அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

நம்ம லெப்டொப்பையும் நம்ம டொங்கலையும் கடன் வாங்கி நமக்கு எதிராவே ஸ்டேடஸ், கொமெண்ட் போடுவானே துரோகி....
 அவனை நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறன்.

ஃபேஸ்புல நாங்க என்ன டைம் பாசுக்கா இருக்குறம். இல்ல அதையே தொழிலாப் பண்றம். வேற தொழில் இல்லடாக் கண்ணா

நண்பன் : நெஞ்சத் தொட்டு சொல்லுடா இதெல்லாம் டைம் வேஸ்ட்னு ஒனக்குத் தெரியல? தப்பில்ல...?

நான் : இல்லதப்பில்லடா நாம பண்ற கூத்தப் பார்த்து நாலு பேர் லைக்குறாங்கண்ணா எதுவுமே தப்பில்ல

 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS