RSS

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (SLPL)


2011ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகள் மிக விறு விறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ள நிலையில். இலங்கை கிரிக்கட் சபையினால் ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (SLPL) போட்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இது இலங்கை கிரிக்கட் முன்னதாகவே திட்டமிட்டதா இல்லை மிக அண்மையில் திட்டமிடப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனாலும் எனக்கு என்னமோ இது மிக அண்மைய நாட்களில் கேள்விப்பட்ட ஒரு விடயமாகவே இருக்கின்றது.
இலங்கை கிரிக்கட்டின் மிக துணிகர செயலாக இதைக் கருதலாம். ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (SLPL) வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

இது ஒரு புறமிருக்க…20-20 போட்டிகளின்  வருகையால் டெஸ்ட் போட்டிகளின் நிலமை பரிதாபகரமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் ஐ.பி.எல் மற்றும் SLPL இன் வருகையால் டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்லாமல் தேசிய அணிகளின் போட்டிகள் பாதிப்பிற்குள்ளாகும் அபாயம் இருக்கின்றது. எதிர்காலத்தில் வேறு நாடுகளும் இதேபோல் தங்கள் நாட்டில் ஆரம்பித்தால் பிறகுசர்வதேச கிரிக்கட்டின் நிலை பரிதாபம்தான்..

SLPL  இன் வருகையானது இலங்கையின் கிரிக்கட் வீரர்களுக்கு விசேடமாக இளம் வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே.  இலங்கை கிரிக்கட் அமைப்புக்கும் வீரர்களை இனம்கண்டு வாய்ப்பு வழங்க சிறந்த சந்தர்ப்பமாகவும் இது அமையும். வீரர்களுக்கு SLPL இல் வாய்ப்பு வழங்குவதன் மூலம் சர்வதேச தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்கி நாட்டின் கிரிக்கட்டை முன்னேற்ற முடியும். அந்த வகையில் SLPL இனை வரவேற்போம் வாழ்த்துவோம்.

SLPL அறிமுகம்:

இலங்கையின் 7 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 7 அணிகள் பங்குகொள்ளும் ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (SLPL) போட்டிகள் இலங்கையில் ஜூலை மாத இறுதி அளவில் ஆரம்பமாகவுள்ளன. உறுதியான போட்டி நிரல் வெளியிடப்படாத நிலையில் ஜூலை கடைசி முதல் ஆகஸ்ட் ஆரம்ப நாட்கள் வரை போட்டிகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

18 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் இப்போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு தடவை மாத்திரமே மோதவுள்ளன. இதில் அதிக புள்ளிகளைப் பெறும் முதல் நான்கு அணிகளும் அரைதியிறுதிப்போட்டிக்கு தெரிவாகும். இறுதிப்போட்டியில் வெல்லும் அணி சம்பியன்ஸ் லீக் 20-20 போட்டிகளுக்கு தகுதிபெறும்.

SLPL  போட்டிகளை நடத்துவதற்கான உரிமையை சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்ட Somerset Entertainment  Ventures  (Singapore based Promotion Company. )
என்ற நிறுவனம் 5 வருடங்களுக்கு வாங்கியிருக்கின்றது.

போட்டிகள் இலங்கை நேரப்படி மாலை 4 மணி  மற்றும் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும். ஒரு போட்டி மாத்திரம் நடைபெறும் நாட்களில் 8 மணிக்கு ஆரம்பமாகும்.

 இவ்வாண்டிற்கான ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்திலே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளில் கலந்துகொள்ளும் 7 மாகாணங்களும் வருமாறு:
 
 Basnahira(மேல் மாகாணம்), Kandurata(மத்திய மாகாணம்), Nagenahira(கிழக்கு மாகாணம்), Ruhuna(தென் மாகாணம்), Uthura(வட மாகாணம்), Uva (ஊவா மாகாணம்), Wayamba(வட மேல் மாகாணம்)

அணிகளின் பெயர்கள் வருமாறு:
RUHUNA RHINOS, KANDURATA KITES, UVA UNICORNS, NAGENAHIRA NAGAS, BASNAHIRA  BEARS, WAYAMBA WOLVES, UTHURA ORYXES

வீரர்களைத் தேர்வு செய்தல்:
 
ஒவ்வொரு அணிக்குமான வீரர்களை இலங்கை கிரிக்கட் அமைப்பே தேர்வு செய்யவுள்ளது. வீரர்களைத் தெரிவு செய்யும்போது முடிந்தவரை அவர்கள் சார்ந்த மாகாண அணிகளுக்கே அவ்வீரர்கள் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு அணியும் உள்நாட்டு வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கியிருக்கும். ஒரு அணியில் 16 தொடக்கம் 18 வீரர்கள் உள்ளடங்கி இருப்பார்கள்.


சர்வதேச வீரர்களை ஒவ்வொரு அணிக்கும் தேர்வு செய்யும்போது ஐ.பீ.எல் இல் இருந்து மாறுபட்ட விதத்தில் அதாவது வீரர்களை ஆடு மாடுகள் போல் ஏலம் கேற்காமல் இலங்கை கிரிக்கட் தேர்வாளர்களினால் ஒவ்வொரு அணியினது பலம் பலவீனத்தைப் பொறுத்து ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். இது வீரர்களுக்கு கெளரவமான ஒரு முடிவாக இருக்கும் என நம்பலாம்.


விழையாடும் இறுதிப் பதினொருவரையும் தேர்வு செய்யும் முறை:
 
போட்டியில் விளையாடும் இறுதிப் பதினொருவரில் கண்டிப்பாக குறைந்தபட்சம் 7 இலங்கை வீரர்களும் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களும் உள்ளடங்கியிருப்பர். அதிலும் ஒருவீரராவது 21 வயதுக்குட்பட்ட இலங்கை வீரராக இருப்பார்.

இலங்கையின் பிரபலமான முன்னாள் வீரர்கள் அணிகளுக்கான ஆலோசகர்களாக அல்லது பயிற்றுவிப்பாளர்களாக இருப்பார்கள்.


இதுவரையில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் வெளிநாட்டு வீரர்களாக இம்முறை SLPL இல் விளையாடவுள்ள வீரர்கள்:
கிரன் பொலார்ட்,க்ரிஸ் கெயில்,சஹீட் அஃப்ரிடி,டேனியல் விட்டோரி,டேனியல் க்ரிஸ்டியன், ஹேர்சல் கிப்ஸ் மற்றும் கெவின் ஓப்ரைன்

SLPL  இல் இந்திய வீரர்களின் பங்களிப்பையும் இலங்கை கிரிக்கட் எதிரிபார்த்திருக்கிறது.  இது தொடர்பில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்திய தேசிய மற்றும் உள்ளூர்ப் போட்டிகளோடு முரண்படாவண்ணம் இந்திய வீரர்கள் SLPL  இல் விளையாடுவதில் எந்தப் பிரச்சினையுமில்லைஎன்று குறிப்பிட்டிருக்கின்றது.

எனவே இனிவரும் நாட்களில் இந்திய வீரர்களும் SLPLஇல் இணைந்து கொள்வார்கள் என நம்பலாம். அத்தோடு SLPL காலப்பகுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிற்கிடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளதனால் அத்தொடரில் விளையாடாத இந்திய வீரர்கள் SLPL இல் இணைந்துகொள்ளக்கூடும்.



இலங்கையில் மொத்தம் 9மாகாணங்கள் உள்ள நிலையில் 7 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு அணிகளே இம்முறை SLPL இல் களமிறங்குகின்றன. மீதமுள்ள இரண்டு மாகாணங்களான ரஜரட்டை மற்றும் சப்ரகமுவா ஆகிய மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி எந்த அணிகளும் களமிறக்கப்படவில்லை.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கட்டின் செயலாளர் நிசாந்த ரணதுங்க தெரிவிக்கையில்

SLPLஇன் துவக்கத்திலே அதிக அணிகளை இணைப்பதைவிட அணிகளின் எண்ணிக்கையினைக் குறைத்து போட்டித்தொடரின் விறுவிறுப்பையும் போட்டித்தன்மையையும் அதிகரிக்கும் முகமாக அணிகளின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்தி இருக்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் ரஜரட்ட மற்றும் சப்ரகமுவ மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அணிகள் களமிறக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இலங்கையில் உலகத்தரம் வாய்ந்த பல மைதானங்கள் அதிலும் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்ற மைதானங்கள் பல உள்ள நிலையில் அனைத்து போட்டிகளையும் ஆர்.பிரேமதாசா மைதானத்திற்கு மட்டுப்படுத்தியமை தொடர்பில் நிசாந்த ரணதுங்க கருத்துக் கூறுகையில்


சர்வதேச ரீதியில் ஒவ்வொரு நாட்டு வீரர்களுக்கும் பல போட்டித் தொடர்கள் உள்ளன.எனவே எமது SLPL போட்டிகளை 18 நாட்களுக்குள் நடாத்தி முடிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மைதானங்களில் போட்டிகளை நடாத்தும் போது மிகக் குறைந்த காலப்பகுதிக்குள் வீரர்கள் அதிக பயணங்களை மேற்கொள்ளவேண்டி வரும். இது வீரர்களுக்கு சோர்வையும் அசெளகரியத்தையும் கொடுக்கும் இதனைக் கருத்தில் கொண்டே போட்டிகள் அனைத்தும் ஆர்.பிரேமதாச மைதானத்திற்கு மட்டுப்படுத்தினோம் என்று தெரிவித்தார்.


SLPL தொடர்பாக அதன் 5 வருட உரிமையினை வாங்கியிருக்கும்  Somerset Entertainment  Ventures  நிறுவனத் தலைவர் இவ்வாறு கூறுகின்றார்.

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (SLPL) வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அப்புக்குட்டி from அமெரிக்கா


நம்ம அப்புக்குட்டிக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. ஆ ஊ ந்னா எல்லாரும் அமெரிக்கா பத்திப் பேசுறாங்களேஅப்படி அமெரிக்காவுல என்னதான் இருக்குன்னு ஒரு முறையாவது போய்ப் பாத்துட்டு வந்துடனும்னு.

அதுக்கு என்ன பண்ணலாம்னு டீப்பா திங் பண்ணினப்போ அப்புக் குட்டி மனசுல ஒரு ஐடியா வந்துச்சு

இலங்கைக்கு உல்லாசப் பிரயாணியா வாற யாராவது ஒரு அமெரிக்கர பிடிச்சு அவர்  மூலமா அமெரிக்கா போறதுன்னு முடிவெடுத்த அப்புக்குட்டி அதுல வெற்றியும் பெற்றார்.
ஒரு மாதிரியா அப்புக்குட்டி அமெரிக்காவுக்கு வந்தாச்சு.


அமெரிக்கா வந்த அப்புக்குட்டி அமெரிக்காவ உல்லாசமா உற்சாகமா  கால் நடையாக  சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போ அப்புக்குட்டிக்கு ஒரு சிக்கல். கண்ல பட்டதையெல்லாம் வாங்கி வாங்கி குடிச்சதுல அவருக்கு சிறுநீர் கழிக்கவேண்டிய தேவை வர பொதுக்கழிப்பறையொன்றைத் தேடி அலைந்தார் அப்பு

அப்படியொன்றை எங்குமே காணமுடியல. நிலைமை பொறுத்துக்கொள்ள முடியாததாக மாறியதும் நம்ம அப்பு பாதையோரமாக ஒதுக்குப் புறமான இடத்தில் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடிவெடுத்து ஓரமா ஒதுங்கினார்..

அப்போது அங்குவந்த அமெரிக்க பொலீஸ் அதிகாரி அவரைத் தடுத்து நிறுத்தி

பொலீஸ்:  இப்படிப் பொது இடங்களை அசுத்தப்படுத்துவது குற்றம் என உமக்குத் தெரியாதா?”

அப்புக்குட்டி : ஐய்யா நான் இலங்கைல இருந்து அமெரிக்காவ சுத்திப்பாக்க வந்திருக்கன். எனக்கு மிக அவசரமாக இருக்கிறது. ஒழுங்கான இடம் எதுவும் கிடைக்கவில்லை. ஆத்திரத்த அடக்கலாம் ஆனால் மூ………. முடியுமா? கொஞ்சம் கருணை பண்ணுங்கள் ஐய்யா..


பொலீஸ்: .. அப்படியா..? எனது பின்னால் வாரும். நான் உமக்கு அதற்குரிய இடமொன்றைக் காட்டுகின்றேன்.

அப்புக்குட்டியும் பொறுமையோடு அவர் பின்னால் சென்றார். சிறிது தூரம் சென்றதும் அவர்கள் ஓர் அழகான வளவுக்குள் நுழைந்தனர். அங்கு மிக நேர்த்தியாகக் கத்தரிக்கப்பட்ட பசுமையான புற்றரையும் அழகான மலர்ச்செடிகளும் காணப்பட்டன.

பொலீஸ்: இங்கே உமது தேவையை நிரைவேற்றிக்கொள்ளலாம்

அப்புக்குட்டி : என்ன ஐய்யா சொல்றீங்க..? அங்க ரோட்டோரமா ஒதுங்கின என்னை இழுத்துட்டு வந்து.இந்த அழகான மலர்ச்செடிகளின் மீது போகச் சொல்றீங்களே? இது உங்களுக்கே ஓவரா இல்லியா..?


சரி இங்கே எனது தேவையை நான் நிறைவேற்றிக்கொள்ளலாமா..?

பொலீஸ் : ஆம் இங்கே நிறைவேற்றிக்கொள்ளும்.

அவசரமாக தனது தேவையை நிறைவேற்றிக்கொண்ட அப்புக் குட்டிக்கு பெரும் ஆறுதலாக இருந்தது
.
(”சபா…….. இப்பதான் ஃப்ரெஸ்ஸா இருக்குஅப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்ட அப்புக்குட்டி பொலீஸ்காரரைப் பார்த்து.)

அப்புக்குட்டி: எவ்வளவு பெரிய மனசு சார் உங்களுக்கு. அமெரிக்கர்களின் பெருந்தன்மை என்பது இதுதானா?  சிறுநீர் கழிக்க ஒதுங்குவதற்க்கு கூட அழகாக கத்தரிக்கப்பட்ட புற்றரையும்.மலர்ச்செடிகளும் நிறைந்த இடமா…?  அமெரிக்கா அமெரிக்காதான் சார்…….

பொலீஸ் : ஹி ஹி அப்படியெல்லாம் எதுவுமில்லை.இது உங்கள் இலங்கை தூதரக வளவு

( சொல்லிட்டு அமெரிக்க பொலீஸ் அதிகாரி தனது வழியில் சென்றுவிட்டார்.)

அப்புக்குட்டி : ?????????


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டாரா?-அமெரிக்காவின் மற்றுமொரு நாடகம்


சர்வதேச நாடுகளால் தீவிரவாதி என்ற சாயம் பூசப்பட்ட பின் லேடன்
ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும் இஸ்லாத்தினை அழித்தொழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் மேற்கத்தேயர்களுக்கெதிராகவும் போராடியவர் என்ற வகையில் எனக்கு அவர் ஒரு மாவீரனே. எனக்கு மட்டுமல்ல அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிரானவர்களுக்கும் அவர் ஒரு மாவீரனே...

பின்லேடன் உயிருடன் இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நேற்று அமெரிக்கர்களால் அவர் கொல்லப்படவே இல்லை.
அமெரிக்கர்கள் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்றோம் என்று காட்டுவதற்காக எப்படிப்பட்ட ஒரு பொய்யான நாடகத்தை அரங்கேற்றினார்களோ அதேபோன்றதொரு நாடகத்தைத்தான் இப்பொழுதும் அரங்கேற்றியிருக்கின்றார்கள்.

ராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கைது செய்யப்படும் தருணம் முதல் தூக்கிலிட்டுக் கொல்லப் படும் வரையான அத்தனையயும் ஒளிப்பதிவு செய்து வெளியிட்டவர்களுக்கு, சதாம் ஹுசைனை விடவும் முக்கியமான அமெரிக்கா அதிகம் அஞ்சி நடுங்கிய ஒசாமா பின்லேடன் ஜனாசாவையாவது ஏன்  காட்டமுடியவில்லை?

அப்படியே பின்லேடன் அமெரிக்கர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று வைத்துக்கொண்டால் கூட சர்வதேச யுத்த விதிமுறைகளின் படி ஏன் அவரது உடல் அவரது உறவினர்களிடமோ அல்லது அவர் சார்ந்தவர்களிடமோ ஒப்படைக்கப்படவில்லைபின்லேடன் இறுதிக்கிரையைகள் இஸ்லாமிய முறையில் நடைபெற்றதாகக் கூறும் அமெரிக்கர்கள் ஏன் அதை ஆழ்கடலில் புதைக்க அல்லது கடலில் தூக்கி வீசவேண்டும்.  பின்லேடனின் ஜனாசவையாவது ஒளிப்பதிவில் காட்டியிருக்கலாமே..? புகைப்படத்தினை வெளியிட்டவர்கள் ஏன் ஒளிப்பதிவை வெளியிடவில்லை? ஒசாமா பின்லேடனின் ஜனாசாவை நல்லடக்கம் செய்த இடம் தெரிந்துவிட்டால் அது தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறிவிடுமாம். நகைப்பாயிருக்கிறது.

உண்மையில் அடுதான் காரணமா? இல்லை ஒசாமா பின்லேடன் என்று கூறி புதைத்த உடலை பிறகு தோண்டியெடுத்து அது ஒசாமா பின்லேடன் இல்லை என்று நிரூபித்துவிடுவார்கள் என்ற அச்சமா?


பின்லேடன் கொல்லப்பட்ட சமயம் எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட அவரது புகைப்படத்திலும் பாரிய சர்ச்சை நிலவுகிறது. அது எடிட் செய்யப்பட்ட ஒரு புகைப்படமாகவே இருக்கிறது.
ஒருவரது புகைப்படத்தை அவர் இன்னார்தான் என்பதை மறைப்பதற்காக பொதுவாக அவரது கண்களை கறுப்பு நிறத்தினால் மறைத்து வெளியிடுவார்கள். பொதுவாக  இணையங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சிகளில் இதனை நாம் கண்டிருப்போம்.
முகம் தெளிவாகத் தெரிந்தால் கூட கண்கள் தெரியாவிட்டால் அவரை சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை.
உடல் கூட தெளிவாகக் காட்டப்படவில்லை.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட சமயம் எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் கூட அவரது இரு கண்களும்  முற்றாக சேதமுற்ற அமைப்பிலேயே வெளியிடப்பட்டுள்ளது. இதுவும் என்னுள் பலத்த சந்தேகத்தை கிளப்பிவிட்டுள்ளது.
அந்தப் புகைப்படம் இதோ



ஒசாமா பின்லேடனை நேருக்கு நேரே நின்று கண்களை இலக்கு வைத்து சுட்டதைப் போன்று இருக்கின்றது இந்த புகைப்படம். அப்படி நேருக்கு நேரே ஒசாமா பின்லேடன் சிக்கியிருந்தால் கைது செய்திருக்கலாமே? கண்களை மாத்திரம் சேதமாகிய ஒரு புகைப்படத்தை வெளியிட்ட இவர்களை என்னென்று சொல்வது…?

எது எப்படியோ பின்லேடன் என்பவர் ஒரு தனிமனிதர் ஆனால் அவர் உருவாக்கியிருக்கும் இயக்கமானது பல நாடுகளுக்கும் பரந்து ஊடுருவி இருக்கும் ஒரு பாரிய வலைப்பின்னல். அதை அவ்வளவு எளிதில் அழித்துவிட அமெரிக்கர்களால் முடியாது. அதே நேரம் அல்குவைதா இயக்கத்தில் ஒசாம பின்லேடனினால் பயிறுவிக்கப்பட்ட ஒசாமாவின் கொள்கைகளுக்கு கட்டுப்பட்ட 2ம் நிலைத் தலைவர்கள் பலர் உள்ளனர் அவர்களை என்ன செய்யப்போகிறது அமெரிக்கா…?

நான் இப்படிச் சொல்வதால் அமெரிக்காவினால் பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதை நான் ஏற்றுக்கொண்டேன் என்று அர்த்தமல்ல.
ஒரு வாதத்திற்காக கூறுகிறேன்.
ஒசாமா பின்லேடன் இன்னும் உயிருடன் இருக்கிறாரா? இல்லை ஏற்கனவே மரணித்துவிட்டாரா என்பதே மர்மமாக உள்ள நிலையில் அமெரிக்கா தனக்கு அவசியம் தேவையான ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக சந்திரனில் கால் பதித்தோம் என்று கூற நடத்திய நாடகத்தைப் போல..


இறுதியாக ஒன்று மட்டும் உண்மை. அமெரிக்காவும் மேற்குலகும் அல்குவைதா போராளிகளின் தாக்குதல்களை விரைவுபடுத்தியிருக்கிறார்கள்.

மேற்குலகும் அமெரிக்காவும் அல்குவைதாவின் தாக்குதல்களை மிக அண்மையில் எதிர்பார்க்கட்டும்

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS