RSS

கிறீஸ் மனிதனை ஒழிக்க + கட்டுப்படுத்த 25 சிறந்த வழிகள்.

 நாட்டில் கிறீஸ் கள்வர்களின் அட்டகாசம் அதிகரிக்கும் அதே நேரம் பாதுகாப்பு பிரிவினரின் செயற்பாடுகளும் திருப்திகராமக இல்லாததால் மக்கள் பாரிய குழப்பத்தில் இருக்கின்றனர். எனவே இனி அரசையும் பாதுக்காப்புப் பிரிவினரையும் நம்பாமல் மக்கள் தாமாகவே கிரீஸ் கள்வர்களைக் கட்டுப்படுத்த முன்வரவேண்டும்.
அதற்காக டீப்பா திங்பண்ணி சில பல வழிகளை நான் இங்கு சீரியசா சொல்லிருக்கன்.

எனவே இதனை மக்கள் கடைப்பிடித்து பயன்பெற வாழ்த்துக்கள்
    1. நாட்டில் எல்லா ஊர்களிலுமுள்ள கடைகள் & தனிநபர்களிடம் உள்ள கிறீஸ்களை மொத்தமாக பறிமுதல் செய்து அழித்துவிடலாம்.
    2.கடைகளில் யார் யாருக்கெல்லாம் கிறீஸ் விற்பனை செய்தார்களோ அவர்களின் பெயர் பட்டியல்களை பெற்று அவர்களை ரகசிய விசாரனைகளுக்கு உற்படுத்தலாம்.
    3. கிறீசின் விலையை கன்னாபின்னாவென்று உயர்த்துவிடலாம்.
  1. கிறீஸ் பாவனை மற்றும் இறக்குமதிக்கு முற்றாக தடைவிதிக்கலாம்.
  2. உடலில் கிறீஸ் பூசிய பின்னர் அதனை அகற்றுவதற்கு பாவிக்கும் சோப் மற்றும் ஏனைய பொருட்களையும் தடை செய்யலாம்.( அப்பதான் கிறீஸ் மனிதன் பூசிய கிறீச அகற்ற முடியாம அவதிப்படுவான். )
  3. உடலில் கிறீஸ் பூசியிருக்கும் மனிதர்களை பிடிக்கும்போது கை வழுக்காமல் இருக்க போடும் விசேட வகை கையுறைகளை உடனடியாக இறக்குமதி செய்து விநியோகிக்கலாம்.
  4. இரவு நேரங்களில் ஆண்கள் பெண்களின் ஆடைகளையும் பெண்கள் ஆண்களின் ஆடைகளையும் அணிந்துகொள்ளலாம்.(கிரீஸ் மனிதன் கன்ஃபியூஸ் ஆயிடுவானில்ல.. அதுக்குதான்)
  5. பெண்கள் ஒவ்வொருவரிடமு அசிட் போத்தல்களைக் கொடுத்துவைக்கலாம்.. (கிரீஸ் மனிசன் வந்தானெண்டால் அவன் மீது அசிட் அடிச்சுவிட்டால் சரிதானே…)
  6. பொலீஸ் மற்றும் இராணுவ முகாம்களில் இருந்து ஊருக்குள் போகும் வழிகளில் இரவு வேளைகளில் மின்சார வேலிகளை அமைத்துவிடலாம்… (கிரீஸ் மனிதன் அப்படியே சாக்காயிடுவானில்ல..)
  7. பொலீஸ் மற்றும் இராணுவ முகாம்களை சுற்றி இளைஞர்களை வலம் வரவைக்கலாம்… (ஒருவேளை பொலீஸ் மற்றும் இராணுவ முகாம்களில் இருந்துதான் கிரீஸ் மனிதன் வந்தா அலாட்டாகிடலாமில்ல…)
  8. ஒவ்வொரு வீட்டிலும் பார்த்தால் பயம் வாறமாதிரி பயங்கர பொம்மைகள், பேய்ப் படங்களை கொழுவி வைக்கலாம். உங்கள் ஃபோட்டோக்களையும் கொழுவிவைக்கலாம் (கிரீஸ் மனிதன் பீதியாகிடுவானில்ல…)
  9. வீட்டிற்கு நள்ளிரவில் வரும் கிரீஸ் மனிதனை வரவேற்று சாப்பாடு போட்டு பேச்சுவார்த்தை நடத்தலாம். (ஒருவேளை உண்டவீட்டுக்கு ரெண்டகம் செய்ய விரும்பாத பாசக்காற கிறீஸ் மனிதர்களும் இருப்பார்கள் தானே?)
  10. கிரீஸ் மனிதன் வீட்டுக் கதவைத் தட்டும் போது சந்திரமுகி ராரா பாடலையும் சந்திரமுகியின் டெரர் பேச்சுக்களையும் Sub Boofer இல் சத்தமாக போட்டுவிடலாம்…..
  11. கிரீஸ் மனிதன் வீட்டிற்கு வந்தவுடன் டாக்டர் விஜய் மற்றும் கெப்டன் விஜயகாந் படங்களை அவன் பார்க்கும்படி போட்டுவிடலாம்..(அப்புறம்  உங்க வீட்டுப் பக்கம் நீங்களா கூப்பிட்டாலும் அவன் வரமாட்டான்.)
  12. இரவு வேளைகளில் வீட்டைச் சுற்றி கன்னி வெடி, மிதிவெடிகளைப் புதைத்து விடலாம்..
  13. வீட்டு வாசலில் பாரிய குளிகளை வெட்டிவைத்து அதன் மேலால் கடதாசி, குச்சிகள் வைத்து அதன் மேலால் மண்ணை போட்டுவிடலாம்.(கிரிஸ் மனிதன் வந்தால் அந்தக் குழிக்குள் விழுந்துவிடுவான்.)
  14. 4, 5 வெறி நாய் சொறி நாய்களைப் பிடித்துவந்து கொலைப் பட்டினி போட்டு இரவு வேளைகளில் வாசலில் உலவ விடலாம்.
  15. கிறீஸ் மனிதனுக்கு விளங்கும் படி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் எயிட்ஸ் இருக்கு எங்க ரத்தம் உனக்கு பட்டுவிட்டால் உனக்கும் எயிட்ஸ் வந்துவிடும்என்று பொய்யாக எழுதிவைத்துவிடலாம்.
  16. வீட்டினுள்ளே எல்லோரும் இருந்துகொண்டு வெளியே பூட்டு போட்டுவிடலாம்.(வீட்ல யாருமில்ல என்று கிரீஸ் மனிதன் ஏமாந்து போய்விடுவான்.)
  17. கிரீஸ் மனித வீட்ட வந்த பிறகு குடும்பத்திலுள்ள உள்ள எல்லாரும் சேர்ந்து கோரசா..
    டேய் கிரீசு,
    நீ ஒரு டம்மி பீசு
     இங்க எதுக்குடா வந்த லூசு
    இப்போ ஓடிடுடா பிசாசு
    இல்லன்னா செத்துடுவடா மெண்டல் கேசு
    டண்டனக்கா.. டனக்குநக்கா………”

    என்று TR ஸ்டைலில் பாடிவிட்டால் அப்புறம் என்ன ? நான் சொல்லவா வேண்டும்.
  18. வீட்டைச் சுற்றி மின்சார வேலி அமைத்துவிடலாம். & கிரீஸ் மனிதன் தடுக்கி விழும்படி கறுப்பு நூல்களைக் கட்டிவைக்கலாம்.
  19. நம்ம வீட்டு அட்ரசையும் வீட்டிலக்கத்தையும் மாற்றி எழுதிவிடலாம்.(உதாரணத்துக்கு இல.4 சம்மாந்துறை என்றதுக்கு பதிலா. இலக்கம் 8 கொழும்பு என்று எழுதிவிட்டால் கிரீஸ் மனிசன் கன்ஃபியூஸ் ஆகிடுவானில்ல…)
  20. கிரீஸ் மனிதன் வீட்டுக்கு வந்தது தெரிந்ததும் யானை வெடி போன்ற பயங்கர சத்தத்தோடு வெடிக்கும் வெடிகளை  கொழுத்தி அவன் மீது போட்டுவிடலாம். மலை உடைக்கும் வெடிகளும் சிறந்தது.
  21. கிரீஸ் மனிதன் எம்மைத் தாக்காத வண்ணம் தாக்கினாலும் காயமோ வலியோ வராமல் இருக்க ரோபோ போன்ற இரும்புக் கவசங்களை வாங்கி அணிந்துகொள்ளலாம்.

    25. கிரீஸ் மனிதன் இரவில் நம் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி கூச்சல் போட்டுக்கொண்டிருக்கும் போது அவனது சத்தத்தை விட சத்தமாக வீட்டில் உள்ளவர்களோ அல்லது வானொலி ,தொலைக்காட்சியின் சத்தத்தையோ கூட்டிவிட்டால் கிரீஸ் மனிதன் அவனது சத்தம் கேக்கவில்லை என்பதை தெரிந்து இன்னும் சத்தமாக கூச்சலிடுவான் நாமும் இன்னும் சத்தத்தை கூட்டிவிட்டால் அவனுக்கே எரிச்சல் அலுப்பு வந்து வந்த வழியே போய் விடுவான்

    எப்புடீ....? நாங்களும் யோசிப்போமில்ல..

    (இந்த ஆலோசனைகளை வழங்கியவர்: ஐ.நா பாதுகாப்புச் சபையின் சிரேஸ்ட்ட ஆலோசகரும், பெண்டகனின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவின் தலைவருமான அஹமட் சுஹைல்  <நாந்தானுங்கோ நாந்தானுங்கோ>)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

21 comments:

Mohamed Faaique சொன்னது…

மரண மொக்கை`ங்குரது இதுதானா????
உங்க பதிவ எழுதி முன் வாசல்`அ மாட்டி வச்சா ஓ.கே`யா???

கிரீஸ் மனிதன் பற்றிய என் பதிவு

http://faaique.blogspot.com/2011/08/sri-lankan-super-hero.html

Mohamed Rizad M.B. சொன்னது…

hehehe//கிரீஸ் மனித வீட்ட வந்த பிறகு குடும்பத்திலுள்ள உள்ள எல்லாரும் சேர்ந்து கோரசா..
“டேய் கிரீசு,
நீ ஒரு டம்மி பீசு
இங்க எதுக்குடா வந்த லூசு
இப்போ ஓடிடுடா பிசாசு
இல்லன்னா செத்துடுவடா மெண்டல் கேசு
ஏ… டண்டனக்கா.. டனக்குநக்கா………”// supera sollidinga ponga bass

Admin சொன்னது…

உங்களது 11 ஆலோசனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதச் செயற்படுத்த உங்களது புகைப்படம் உடனடியாக தேவை.. அனுப்பவும்

aiasuhail.blogspot.com சொன்னது…

@Mohamed Faaique
சீரியசா எழுதின பதிவ மொக்கைன்னு சொல்லி அசிங்கப்படுத்தப்புடாது..


உங்க ஏரியாவுக்கும் ஏற்கனவே வந்துட்டம். பாருங்க நாங்க வந்துபோன தடையங்கள் இருக்கும்

aiasuhail.blogspot.com சொன்னது…

@Mohamed Rizad M.B.
ஆமா பாஸ்...

நன்றி பாஸ்

aiasuhail.blogspot.com சொன்னது…

@Farhathஹி ஹி அதை உங்கள மனசுல வெச்சுட்டுதான் சொன்னன்..

ட்ரை பண்ணிப் பாருங்க

Unknown சொன்னது…

என்னே ஐடியா!!சப்பா,,,

aiasuhail.blogspot.com சொன்னது…

@மைந்தன் சிவா

ஹா ஹா நன்றி... சகோ....

Shafraz Buhary சொன்னது…

I want to add 26th one Hang this ideas on you door. If Grease Yaka read this He will ROFL and get injured then you can catch him easy.

இலங்கேஸ் சொன்னது…

boss neenga engeyooooo poiteenga............

Ashwin-WIN சொன்னது…

ஐடியா 14 சூப்பர் அப்பு..

பெயரில்லா சொன்னது…

///இரவு நேரங்களில் ஆண்கள் பெண்களின் ஆடைகளையும் பெண்கள் ஆண்களின் ஆடைகளையும் அணிந்துகொள்ளலாம்.(கிரீஸ் மனிதன் கன்ஃபியூஸ் ஆயிடுவானில்ல.. அதுக்குதான்)// அட இது நல்லாய் இருக்கே )

aiasuhail.blogspot.com சொன்னது…

@Shafraz Buhary

Ha Ha Ha thnk u shafraz brthr.

i missd it.

aiasuhail.blogspot.com சொன்னது…

@இலங்கேஸ்

Ha Ha
Vidunga baass.... aduththa murai ungalaiyum koottip poran.

ippo sari thaane?

aiasuhail.blogspot.com சொன்னது…

@Ashwin-WIN

Aaaha neengalum namma sangaththalaa?

rmba paathikkap pattiruppeenga pola..?

Thnk u bosss

aiasuhail.blogspot.com சொன்னது…

@கந்தசாமி.

yes boss...

itha try panninavangaloda feedback innum varalla athaiththa ethirpaathutu irukkan.


Nandry Nandry

அம்பாளடியாள் சொன்னது…

இந்த முகமூடிய பாத்ததும் முழுசா படிக்காமல் போகமுடியாது .ஆனால் படிச்சதில நீங்க அதி புத்திசாலீன்னு புரியுது .அதுவும் ஐநா சபயால
நியமிக்கப்பட்ட ஆளுவேற.இன்னும் றீலு உண்டா சகோ???.....இருந்தா அதையும் விட்டுடுங்க .பதிவு
அருமையாத்தான் இருக்கு போனா போகுது .
உங்களுக்கும் எனது பாராட்டுகள் வாழ்த்துகள்.நன்றி பகிர்வுக்கு .

அம்பாளடியாள் சொன்னது…

ஓட்டுக்கள் போட்டாச்சு............

rajamelaiyur சொன்னது…

அருமையான வழிகள் .. என்னும் எதிர்பர்கேறேன்

aiasuhail.blogspot.com சொன்னது…

@அம்பாளடியாள்
என்ன நீங்க பாராட்டுறீங்களா? இல்ல திட்டுறீங்களா? இல்ல திட்டுற மாதிரி பாராட்டுறீங்களான்னே புரியிதில்ல..

ஆனாலும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

aiasuhail.blogspot.com சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா
நன்றி சகோ....

இன்னும் எதிர் பார்க்குறீங்களா......??????????????????????????????????????????????????