RSS

லண்டனில்ல மாப்பிள்ளையாம் பெண்ணு கேக்குறாங்க




லண்டனிலே மாப்பிள்ளையாம் பெண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சம்பளமாம் என்று சொல்லுறாங்க
எத்தனையோ பொம்பளைங்க ஊர் பார்த்து வந்தாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஊர் பார்ர்க்கப் போறாங்க
ஐயயோ வெற்கக் கேடு யாருக்குத் தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப் புரியும்

நல்ல நல்ல மாப்பிளையாம் பெண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சீதனத்தை அள்ள நினைக்குறாங்க..
எத்தனையோ பொம்பளைங்க ஏமாந்து போனாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஏமாறப் போறாங்க..

ஐயயோ வெற்கக் கேடு யாருக்குத் தெரியும்..
இந்த நாட்டுக்குள்ளே நரிகள் உண்டு யாருக்குப் புரியும்?

அன்றொரு நாள் நடந்ததொரு அவசரக் கலியாணம்
ப்ளேனிலேதான் பறந்துவந்தார் மாப்பிள்ளை சிவஞானம்
மாப்பிளையும் பெண்ணுமாக வெளியூர் பிரயாணம்
போன பிளேனில் திரும்பி வந்தாள் போச்சுது அவள் மானம்

ஐயயோ வெற்கக் கேடு யாருக்குத் தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப் புரியும்

லண்டனில்ல மாப்பிள்ளையாம் பெண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சம்பளமாம் என்று சொல்லுறாங்க
எத்தனையோ பொம்பளைங்க ஊர் பார்த்து வந்தாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஊர் பார்ர்க்கப் போறாங்க
ஐயயோ வெற்கக் கேடு யாருக்குத் தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப் புரியும்

எஞ்சினீயர் என்று சொல்லி புழுகித் தள்ளினாராம்
லண்டனிலே ஹோட்டலில் ஓர் வெயிட்டர் வேலைதானாம்
கொண்டுபோன காசிலேதான் காரும் வாங்கினாராம்
என்று அந்தப் பெண்ணும் வந்து சொல்லி அழுதாழாம்

லண்டனில்ல மாப்பிள்ளையாம் பெண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சம்பளமாம் என்று சொல்லுறாங்க
எத்தனையோ பொம்பளைங்க ஊர் பார்த்து வந்தாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஊர் பார்ர்க்கப் போறாங்க
ஐயயோ வெற்கக் கேடு யாருக்குத் தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப் புரியும்


** என்னைக் கவர்ந்த நம்ம நாட்டு பொப் இசைப் பாடகர் நித்தி கனகரத்தினத்தின் பாடல்.



Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS